தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினியின் தர்பார் படத்தில் இருந்து சும்மா கிழி என்ற பாடல் வெளியான போதே அது ஐயப்பன் பாடல் காப்பி என கூறப்பட்டது.
இதனால் இசையைமப்பாளர் அனிருத்தை பலரும் சும்மா கிழித்தனர்.
தற்போது மீண்டும் அதுபோன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளார் அனிருத்.
ஓரிரு தினங்களுக்கு முன் விஜய்யின் மாஸ்டர் படத்திலிருந்து ஒரு குட்டி கதை என்ற பாடல் வெளியானது.
இந்த பாடல் வடிவேலு நடித்த ராஜகாளியம்மன் படத்தில் வரும் சந்தன மல்லிகை… பாடலை காப்பியடித்துள்ளார் என கிண்டல் அடித்துள்ளனர்.
இந்த நிலையில் அனிருத் அடுத்து கமலின் இந்தியன் 2 படத்தில் இசையமைக்கவுள்ளர்.
ரஜினி, மற்றும் விஜய் இருவரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்.
ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளர் கமல்.
அவருக்கு என்ன செய்வார் அனிருத்? என கிண்டலடித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இவ்வாறு இணையத்தில் பதிவிட்டுள்ளனர்…
தலைவருக்கு ஒரு பாட்டு குடுத்தமாதிரி, அம்மன்கிட்ட இருந்து இன்ஸ்பயர் ஆகி தளபதிக்கு ஒரு பாட்டு குடுத்துருக்காரு..
இத போயி தப்பா பேசிக்கிட்டு…
ஆமா கமல் நாத்திகராச்சே… அவருக்கு என்ன பாட்டுனு தெரிலயே?
Anirudhs copy songs in Rajini and Vijay movies What about Kamal movie