சிவகார்த்திகேயன் தயாரிக்கும் *கனா*-வில் அனிருத்தின் நாட்டுப்புற பாட்டு

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் *கனா*-வில் அனிருத்தின் நாட்டுப்புற பாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anirudh to Enthrall Folk number for Sivakarthikeyans Kanaaமரகத நாணயம் படத்தின் இசை மூலம் எல்லோருடைய இதயத்தையும் கவர்ந்த இளம் இசை அமைப்பாளர் திபு நினன் தாமஸ்.

இவர் இசையமைப்பாளர் அனிருத்தின் குரலில் “கனா” படத்தில் ஒரு பாடலை பதிவு செய்து உள்ளார்.

“அனிருத்தின் ஸ்டுடியோவில் ஒரு நள்ளிரவில் முறையான அமைப்பு இல்லாமல் அந்த பாடலை பதிவு செய்தோம். அவருடன் வேலை செய்வது அவ்வளவு எளிதானது.

அந்த பாடல் பதிவின் முழு அமர்விலும் எங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் தோன்றியது, அதுவே பாடல்கள் மிகச்சிறப்பாக வரவும் உதவியது “என்கிறார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கனா’ படத்திற்காக ஒரு புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை உருவாக்கியிருக்கிறார் திபு.

“நாங்கள் நாட்டுப்புற வகையில் புதிய பாணியில் ஏதாவது ஒன்றை உருவாக்க முயற்சித்தோம். வழக்கமாக, பியானோ மற்றும் ஸ்ட்ரிங்க்ஸ் போன்ற கருவிகள் மெல்லிய ரொமாண்டிக் பாடல்களில் தான் அதிகம் உபயோகப்படுத்தப்படும்.

ஆனால் நாங்கள் அதை பாரம்பரியமான தவில் மற்றும் நாதஸ்வரத்துடன் கலந்து இந்த பாடலை உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார் திபு.

மேலும், அனிருத் பல நாட்டுப்புற பாடல்களை பாடியிருந்தாலும் இது அவரது லிஸ்டில் புதியதாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார்.

இந்த அழகான நாட்டுப்புற பாடல் வரிகளை பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இது ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தர்ஷன் ஆகியோர் நடிக்க படமாக்கப்படுகிறது.

தர்ஷன் ஐஸ்வர்யாவை காதலிக்கிறார், அவர் தனது காதலி ஐஸ்வர்யாவை நேசிப்பதை சொல்லும் பாடலாக இது அமைந்திருக்கிறது.

புதிதாக துவங்கப்பட்டுள்ள சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கனா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் கனா படத்தின் இசை வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி மிகப்பிரமாண்டமாக வெளியிடப்பட இருக்கிறது.

தனது சினிமா வாழ்க்கையின் மூன்று முக்கிய தூண்களான இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் டி இமான் ஆகியோர் இந்த படத்தின் இசையை வெளியிடுவார்கள் என அறிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா இந்த விழாவிற்கு கௌரவ விருந்தாளியாக அழைக்கப்பட்டு இருக்கிறார்.அவரே இசையை வெளியிட போகிறார்.

இயக்குனர் அருண்ராஜா காமராஜின் கனா ஒரு உண்மைக்கதை அல்ல. ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக சாதிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணின் கனவை சொல்லும் ஒரு கற்பனையான படம்.

Anirudh to Enthrall Folk number for Sivakarthikeyans Kanaa

தேர்தல் தள்ளி வைப்பு; நடிகர் சங்க கட்டிடம் முடிந்த பிறகுதான் திருமணம்; விஷால் அதிரடி

தேர்தல் தள்ளி வைப்பு; நடிகர் சங்க கட்டிடம் முடிந்த பிறகுதான் திருமணம்; விஷால் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nadigar Sangam election will be postponed for 6 months says Nassarதென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.

கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, நடிகை ஸ்ரீதேவி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் பொதுக்குழுவில் விஷால் பேசியதாவது:-

‘நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 19 கிரவுண்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த இடத்தை ரூ.26 ஆயிரத்துக்கு வாங்கினார்கள்.

இப்போது அதன் மதிப்பு ரூ.150 கோடியில் இருந்து ரூ.200 கோடி வரை இருக்கும். கட்டிடம் கட்டுவதை எதிர்த்து பல தடைகள் ஏற்படுத்தினார்கள்.

கோர்ட்டுக்கு சென்றார்கள். அதையெல்லாம் மீறி கட்டிட வேலைகள் நடந்து வருகின்றன. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆத்மா நமக்கு துணையாக இருக்கிறது.

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு தான் எனது திருமணம் நடைபெறும். வேங்கட மங்கலத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தை விற்றது தொடர்பாக முந்தையை நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.” இவ்வாறு விஷால் பேசினார்.

கூட்டம் முடிந்ததும் நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

‘நடிகர் சங்க பொறுப்பில் 3 வருடங்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளோம். உறுப்பினர்களுக்கு பல நலப்பணிகள் செய்துள்ளோம். வாக்குறுதி அளித்தபடி சங்க கட்டிடத்தையும் கட்டி வருகிறோம்.

உறுப்பினர்கள் பட்டியலில் உள்ள குறைகளை சரி செய்வதற்காக நடிகர் சங்க தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று 10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சங்கத்துக்கு கடிதம் கொடுத்துள்ளனர். எனவே தேர்தலை 6 மாதத்துக்கு தள்ளிவைத்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

அனைத்து உறுப்பினர்களுமே தேர்தலை தள்ளி வைக்க ஆதரவு தெரிவித்தனர். அடுத்த மார்ச் மாதம் கட்டிட வேலைகளை முடித்து திறப்பு விழா நடத்த முடிவு செய்துள்ளோம்.

நடிகர் சங்க தேர்தலும் புதிய கட்டிடத்திலேயே நடைபெறும். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க மேலும் ரூ.20 கோடி தேவைப்படுகிறது.

எனவே நட்சத்திர கலைநிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். சர்வதேச தரத்தில் இந்த கட்டிடமும் அரங்குகளும் கட்டப்பட்டு வருகிறது என்றார்கள்.

பொதுக்குழுவில் நடிகர்கள் விஜயகுமார், பாக்யராஜ், எஸ்.வி.சேகர், விஜய்சேதுபதி, ஜீவா, ஐசரி கணேஷ், பூச்சி முருகன், நந்தா, ஸ்ரீமன், கே.ராஜன், சரவணன், உதயா, ஆனந்தராஜ், நடிகைகள் லதா, சரோஜா தேவி, பூர்ணிமா, சச்சு, காஞ்சனா, சோனியா, சங்கீதா, குட்டி பத்மினி, ஷீலா, ரோகிணி, கோவை சரளா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Nadigar Sangam election will be postponed for 6 months says Nassar

Nadigar Sangam meeting 65th meeting

*அக்னிதேவ்* படத்தில் பாபி சிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்

*அக்னிதேவ்* படத்தில் பாபி சிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ramya Nambessan to romance with Bobby Simha in Agni Devசென்னையில் ஒரு நாள்-2’ படத்தை இயக்கிய JPR என்ற ஜான்பால் ராஜ் மற்றும் அறிமுகம் ஷாம் சூர்யாவும் இணைந்து ‘அக்னிதேவ்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகின்றனர்.

இப்படத்தில் பாபி சிம்ஹா, சதீஷ் இருவரும் நாயகர்களாக நடிக்கின்றனர்.

தற்போது பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவலை தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

‘சியாண்டோ ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘ஜெய் ஃபிலிம்ஸ்’ இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Ramya Nambessan to romance with Bobby Simha in Agni Dev

கோலமாவு கோகிலா-வை சிரிச்சு சிரிச்சு ரசித்த ரஜினி-ஷங்கர்

கோலமாவு கோகிலா-வை சிரிச்சு சிரிச்சு ரசித்த ரஜினி-ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Shankar praises Kolamaavu Kokila movie and teamநெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு, சரண்யா, ஜாக்குலின், முதலானோர் நடித்திருந்த படம் ‘கோலமாவு கோகிலா’.

இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

திரையுலக பிரபலங்களி பலரும் இதை பாராட்டி வருகின்றனர்.

‘கோலமாவு கோகிலா’வை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை இயக்கிய நெல்சனை ஃபோனில் அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து, ‘கோலமாவு கோகிலாவை சிரிச்சு சிரிச்சு ரசித்து பார்த்தேன்’ என்று கூறியுள்ளார்.

அதைப் போல இயக்குனர் ஷங்கரும் ‘கோலமாவு கோகிலா’வுக்கு பாராட்டியுள்ளார்.

காமெடி கலந்த கிரைம் டிராமா கோலமாவு கோகிலா, நயன்தாராவின் கேரக்டர், நடிப்பு சூப்பர்! நெல்சனின் புதிய முயற்சி மற்றும் அனிருத்தின் இசை ஆகியவற்றை மிகவும் ரசித்தேன் என ட்வீட் செய்துள்ளர் இயக்குனர் ஷங்கர்.

Rajini and Shankar praises Kolamaavu Kokila movie and team

பெண்கள் கபடி-யை படமாக்கும் சுசீந்திரன்; சசிகுமார் நடிக்கிறாரா.?

பெண்கள் கபடி-யை படமாக்கும் சுசீந்திரன்; சசிகுமார் நடிக்கிறாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suseenthiran teams up with Sasikumar for Womens Kabadi based movieஒரே சமயத்தில் 3 படங்களை இயக்கி வைத்துள்ளார் சுசீந்திரன்.

‘ஜீனியஸ்’, ‘ஏஞ்சலினா’ மற்றும் ‘சாம்பியன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவை மூன்றும் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தனது அடுத்த படத்தையும் ஆரம்பிக்கவுள்ளார்.

பொதுவாக இவரது படங்கள் ஏதாவது ஒரு விளையாட்டை மையப்படுத்தி இருக்கும்.

தற்போது இயக்கவுள்ள படத்தில் பெண்கள் கபடியை பின்னணியாக வைத்துள்ளாராம்.

இதில் சசிகுமார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் எனவும் மற்ற நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடக்கிறது என கூறப்படுகிறது.

இப்படத்தின் சூட்டிங் வருகிற அக்டோபரில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

Suseenthiran teams up with Sasikumar for Womens Kabadi based movie

குஷ்பூ-சிம்பு கூட்டணியில் ரஜினி-தனுஷ் பட நாயகி

குஷ்பூ-சிம்பு கூட்டணியில் ரஜினி-தனுஷ் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

str and khushbooசிம்புவின் அரசியல் படமாக மாநாடு உருவாகுகிறது.

இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெங்கட்பிரபு இயக்கவுள்ளார்.

இப்படத்தை அடுத்து லைகா தயாரிப்பில் சுந்தர். சி இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு.

இது பவன் கல்யாண், சமந்தா நடித்த ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும்.

இந்த படத்தில் பவன் கல்யாணின் மாமியாராக நதியா நடித்திருந்தார்.

எனவே இந்த தமிழ் ரீமேக்கில் குஷ்பு நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

ரஜினியின் 165வது படம், தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் மேகா ஆகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows