‘புஷ்பா 2’ படத்தில் சமந்தாவுக்கு பதிலாக பாலிவுட் நடிகை

‘புஷ்பா 2’ படத்தில் சமந்தாவுக்கு பதிலாக பாலிவுட் நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் நடித்து 2021 டிசம்பரில் வெளியான படம், ‘புஷ்பா’.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய பல மொழிகளில் ரிலீசாகி இந்த படம் இந்தியளவில் வசூல் வேட்டையாடியது.

இந்தப் படத்தில் சமந்தா ஒரு ஒரே பாடலுக்கு ஆடியிருந்தார். தமிழில் இந்தப் பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியிருந்தார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் சூப்பர் ஹிட்டாகி பட்டையை கிளப்பியது.

தற்போது இதன் 2ம் பாகம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் சமந்தா ஆடிய “ஊ…. சொல்றியா மாமா..” என்ற பாடலைப் போல ஒரு ஐட்டம் சாங் இந்த படத்திலும் வைக்கப்பட உள்ளதாம்.

ஆனால் சமந்தாவுக்கு பதிலாக பாலிவுட் நடிகை மலைகா அரோராவை ஒரு பாடலுக்கு ஆட்டம் போட படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.

மலைகா அரோரா

‘புஷ்பா’ முதல் பாகத்தை சமந்தாவுக்காகவே அந்தப் படத்தை திரும்பத் திரும்ப பார்த்து ரசிகர்கள் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.

Bollywood Actress will play item song in Pushpa 2

ஒரே ஷாட்.. 6 மாசம் ரிகர்சல் ப்ளான்.; ஒரே வாரத்தில் முடித்துக் கொடுத்த கிஷோர்

ஒரே ஷாட்.. 6 மாசம் ரிகர்சல் ப்ளான்.; ஒரே வாரத்தில் முடித்துக் கொடுத்த கிஷோர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள இயக்குனர் அஜு குளுமலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “டிராமா”.

இந்த படத்தில் கிஷோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜெய்பாலா நாயகனாகவும் காவ்யா பெல்லு நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இந்த படமானது ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழு படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து சுமார் 180 நாட்கள் ரிகர்சல் நடத்த திட்டமிட்டிருந்தது.

நடிகர் கிஷோர் இந்த ரிகர்சலை வெறும் 7 நாட்களில் முடித்து, படக்குழுவினர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், இரவு இரண்டு மணிக்கெல்லாம் அடுத்த காட்சிக்கான வசனங்களை படித்து படப்பிடிப்பு தளத்தில் தூங்காமல் ரிகர்சல் செய்து கொண்டிருந்தாராம் கிஷோர்.

மேலும், படப்பிடிப்பு தளத்தில் தனக்கான உணவை தானே சமைத்தும் சாப்பிட்டிருக்கிறார் கிஷோர்.

சக நடிகர்களிடம் எப்போதும் நட்போடு பழகும் பழக்கம் கொண்ட கிஷோர், இப்படத்தில் நடித்த சக நடிகர்களுக்கும் நடிப்பைக் கற்றுக் கொடுத்து படப்பிடிப்பில் ஒரு ஆசானாக விளங்கியிருக்கிறார்.

டிராமா படத்தை தனது சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக இருக்கும் எனவும் நம்பிக்கை கொண்டிருக்கிறார் கிஷோர்.

சசிகலா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடும்
இந்த படமானது வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

கிஷோர்

Drama will be milestone in my life says Kishore

சூர்யாவுக்கு ET.. சிம்புவுக்கு VTK.. தனுஷுக்கு T.; அஜித் 61 படத்துக்கு TT

சூர்யாவுக்கு ET.. சிம்புவுக்கு VTK.. தனுஷுக்கு T.; அஜித் 61 படத்துக்கு TT

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேர்கொண்ட பார்வை & வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் அஜித் நடித்து வரும் அவரின் 61வது படத்தை இயக்கி வருகிறார் வினோத்.

இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இதில் நாயகியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ள நிலையில் இந்தப் படத்தில் டைட்டில் என்ன என ரசிகர் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘துணிவே துணை’ என டைட்டில் வைக்கப்படலாம் என தகவல்கள் வந்துள்ளன.

துணிவே துணை படத்தை ஆங்கிலத்தில் சுருக்கமாக டிடி என்று கூறலாம். இதை எழுத்து உடைய சில படங்கள் சமீபத்தில் வந்தன. சூர்யாவுக்கு எதற்கும் துணிந்தவன் (ET).. விஜய்க்கு துள்ளாத மனமும் துள்ளும் (TMT).. சிம்புவுக்கு வெந்து தணிந்தது காடு (VTK) தனுஷுக்கு திருச்சிற்றம்பலம் (T) ஆகியவை குறிப்பிடத்தக்கது.

துணிவே துணை

Ajith 61 movie title may be Thunivae Thunai

JUST IN – 100 கோடியானாலும் என்கிட்ட நடக்காது; PART 2 படம் எடுப்பவர்களை கிழித்தெடுத்த ராமராஜன்

JUST IN – 100 கோடியானாலும் என்கிட்ட நடக்காது; PART 2 படம் எடுப்பவர்களை கிழித்தெடுத்த ராமராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980-களில் கமல் – ரஜினி படங்களின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்தன. ஆனால் அவர்களுக்கே பயத்தை ஏற்படுத்தும் அளவிற்கு நடிகர் மோகன் மற்றும் ராமராஜன் ஆகியோரது படங்களின் வெற்றி உருவானது.

ஆனால் 1990 களில் இறுதியில் இருந்து இருவரும் அவ்வளவாக சினிமாவில் நடிக்கவில்லை.

இந்த நிலையில் நடிகர் ராமராஜன் தற்போது ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த புதிய படத்தில் எம் எஸ் பாஸ்கர், ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சிம்பு, ஹன்சிகா நடித்த மகா படத்தை தயாரித்த மதியழகன் இந்த படத்தை தனது 14வது படைப்பாக தயாரிக்கிறார். இந்தப் படத்தை ராகேஷ் என்பவர் இயக்குகிறார்

இந்தப் படத்திற்கு ‘சாமானியன்’ என்று தலைப்பு வைத்துள்னர். இன்று இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில் மிகப் பிரம்மாண்டமாக படகுழு நடத்தியது.

இந்த விழாவில் ராதாரவி பேசும் போது…

” 30 வருடங்களுக்கு முன்பு நானும் ராமராஜனும் இணைந்து நடித்தோம். தற்போதும் அதே அழகுடன் உள்ளார். ஒருமுறை ராமராஜன் தலைமுடியை ஒரிஜினலா என்று பரிசோதனை செய்தார் கமல்ஹாசன்.

ஆனால் தற்போதும் அதே அழகான முடியுடன் வலம் வருகிறார் ராமராஜன். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”

இறுதியாக ராமராஜன் பேசியபோது…

“என்னை இத்தனை வருடங்களாக வாழ வைத்துக் கொண்டிருப்பது என்னுடைய ரசிகர் மன்றங்கள் தான்.

திடீரென இந்த விழா ஏற்பாடு நடந்ததால் சில மன்றங்களை மட்டுமே அழைத்தேன். மற்றொரு விழாவை மதுரையில் நடத்தலாம் என்று நினைக்கிறோம். அந்த விழாவில் என் ரசிகர் மன்றங்களை அழைப்பேன்.

ஒரு தம்பதிக்கு முதலில் ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு பெயர் வைப்பார்கள். இரண்டாவது குழந்தை பிறந்தால் அதற்கு வேறு ஒரு பெயர் தான் வைப்பார்கள். நம்பர் 2 என்று வைக்க மாட்டார்கள். அதுபோல தான் சினிமாவிற்கு பெயர் வைப்பதும். இப்போது பார்ட் 2.. நம்பர் 2 என்று வைக்கிறார்கள். அது சரியில்லை.

இந்த படத்திற்கு சாமானியன் என்று பெயர் வைத்துள்ளார்கள். நான் மக்களோடு கலந்திருப்பவன். இந்த டைட்டில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

இப்போ 100 கோடி நடிகர்களுக்கு கொடுக்கிறார்கள். ஆனால் எனக்கு 100 கோடி கொடுத்தாலும் நான் தாய்மார்களை இழிவு படுத்துமாறு நடிக்க மாட்டேன். என் படங்களில் தீய பழக்கங்கள் காட்சிகளை காட்ட மாட்டேன்” என பரபரப்பாக பேசினார் ராமராஜன்.

ராமராஜன்

100 கோடி கொடுத்தாலும் அது நடக்காது; PART 2 படம் எடுப்பவர்களை கிழித்தெடுத்த ராமராஜன் Saamaniyan
https://www.youtube.com/watch?v=BSsSIjIHkAw

Ramarajan mass speech at Saamaniyan Teaser launch

OFFICIAL தனுஷுக்கு ஜோடியாகும் சூர்யா – சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்

OFFICIAL தனுஷுக்கு ஜோடியாகும் சூர்யா – சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த ஒருவர் பிரியங்கா மோகன்.

இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘டாக்டர்’ & ‘டான்’ உள்ளிட்ட படங்களின் நடித்திருந்தார்.

சூர்யாவுக்கு ஜோடியாக ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்திருந்தார்.

இந்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

மேலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார் பிரயங்கா.

இந்த நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கம் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் ஒப்பந்த செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

1930களின் பின்னணியில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகி வருகிறது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இப்படத்தில் சந்தீப் கிஷன் முக்கிய வேடத்தில் நடிக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

பிரியங்கா மோகன்

Priyanka Mohan teams up with Dhanush for Captain Miller

நாலு நாட்களில் ரூ 50 கோடியை அசால்ட்டாக அள்ளிய சிலம்பரசன்

நாலு நாட்களில் ரூ 50 கோடியை அசால்ட்டாக அள்ளிய சிலம்பரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் ‘வெந்து தணிந்தது காடு’.

உடல் எடையை குறைத்து வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு நடித்திருந்த இந்த படத்தை கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கியிருந்தார்.

சித்தி இத்னானி நாயகியாக நடிக்க ராதிகா, மலையாள நடிகர் சித்திக், அப்புக்குட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படம் ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவானதாக சொல்லப்படுகிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஐசரி கணேசன் தயாரித்து இருந்தார்.

செப்டம்பர் 15ல் திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

முதல் நாளில் ரூ.11 கோடி வசூலை ஈட்டியதாகவும் 2வது நாளில் ரூ.8 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் நான்கு நாட்களைக் கடந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் ரூபாய் 50 கோடியை வசூலித்துள்ளதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

VTK collected  Rs 50 crore in four days

More Articles
Follows