JUST IN OFFICIAL 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் அமிதாப்

JUST IN OFFICIAL 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் அமிதாப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடிப்பில் உருவாக உள்ள ‘தலைவர் 170’ படத்தில் இந்தியாவின் மிக பிரபல நட்சத்திரங்கள் இணைந்து வருவது திரையுலகை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

கடந்த ஓரிரு தினங்களில் ரஜினியுடன் நடிக்கும் கலைஞர்களை லைக்கா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

ஞானவேல் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் தெலுங்கு நடிகர் ரானா, மலையாள நடிகர் பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர்.

மேலும் நடிகைகள் மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங் முதன்முறையாக ரஜினியுடன் இணைகின்றனர்.

இந்த நிலையில் ஹாலிவுட் உச்ச நட்சத்திரமான அமிதாப்பச்சன் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான அமிதாப் பச்சனின் பல படங்களில் தமிழில் ரீமேக் செய்த ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மேலும் கடந்த 1991-ம் ஆண்டு இந்தியில் வெளியான ஹம் என்ற படத்தில் ரஜினிகாந்த் அமிதாப்பச்சன் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி அமிதாப்பச்சன் இணைந்து நடிக்க உள்ளநீர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் 170

Amitabh Bachchan on board for Thalaivar170 with Rajini

JUST IN பகத் & ராணா கூட்டணி.; ‘தலைவர் 170’ டைட்டில் – ஷூட்டிங் அப்டேட் தந்த ரஜினி

JUST IN பகத் & ராணா கூட்டணி.; ‘தலைவர் 170’ டைட்டில் – ஷூட்டிங் அப்டேட் தந்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

ஓரிரு தினங்களாக ‘தலைவர் 170’ படத்தின் நடிக்கும் கலைஞர்கள் அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த படத்தை தயாரிக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க ஞானவேல் இயக்க அனிருத் இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தில் ரஜினியுடன் பகத்பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் 170

இப்பட சூட்டிங்கில் பங்கேற்க ரஜினிகாந்த் விமானம் மூலம் கேரளா திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது..

’ஜெயிலர்’ திரைப்படம் நான் எதிர்பார்த்தைவிட பெரும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது (ரஜினி 170) படப்பிடிப்பில் பங்கேற் செல்கிறேன். படத்துக்கு தலைப்பு பின்னர் அறிவிக்கப்படும்.

என்னுடைய 170-வது படம் நல்ல கருத்துள்ள, பிரம்மாண்டமான ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். இதனை ஞானவேல் இயக்குகிறார்.”

என்றார் ரஜினிகாந்த்.

தலைவர் 170

Thalaivar 170 Title and Shooting update

தெய்வமே என்னை தேர்ந்தெடுத்தது.; நாரிபூஜையில் பங்கேற்ற குஷ்பூ நெகிழ்ச்சி

தெய்வமே என்னை தேர்ந்தெடுத்தது.; நாரிபூஜையில் பங்கேற்ற குஷ்பூ நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரள மாநிலத்தில் திருச்சூர் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது பூரம் திருவிழா. மேலும் திருச்சூரில் விஷ்ணு மாயா என்ற கோயில் பிரபலமானது. இந்த கோயிலில் வருடாவருடம் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து கோயில் நிர்வாகம் சிறப்பு பூஜை செய்வது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருடம் நடிகை குஷ்புவை கோயில் நிர்வாகம் தேர்ந்தெடுத்துள்ளது.

விஷ்ணுமாயா கோயிலின் சிறப்பு பூஜைக்காக சென்றுள்ளார். அவரை கோயில் நிர்வாகம் அழைத்து சிறப்பு செய்துள்ளது.

இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

’திருச்சூரில் உள்ள விஷ்ணுமாயா கோயிலில் நடைபெற்ற நாரிபூஜை செய்ய நான் அழைக்கப்பட்டதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே இங்கு அழைப்பார்கள்.

தெய்வமே அந்த நபரைத் தேர்ந்தெடுப்பதாக மக்கள் நம்புகிறார்கள். இந்த பெருமையை எனக்கு வழங்கிய அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.

குஷ்பு

தினமும் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி இருப்பதாக நம்புபவர்களுக்கும் இது இன்னும் பல நல்ல விஷயங்களைக் கொண்டு வரும் என நம்புகிறேன்’ என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் குஷ்பூ.

Divine blessing from the God at Naari Pooja Khushboo emotion

Divine blessing from the God!
Feel so lucky to have been invited by #VishnumayaTemple in Thrissur to do #NaariPooja .

Only chosen ones are invited. They believe the Goddess herself chooses the person. My humble gratitude to everyone at the temple for blessing me with such an honor.

I am sure this will bring many more good things to all those who pray everyday and believe there is a super power to protect us.. Prayed for my loved ones and the world to be a better, happier & a peaceful place.
#OmShivayaNamaha
#naarishakti

குஷ்பு

என் கேரியரில் ‘ரத்தம்’ வித்தியாசமானது.. 100% திருப்தி… – விஜய் ஆண்டனி

என் கேரியரில் ‘ரத்தம்’ வித்தியாசமானது.. 100% திருப்தி… – விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாக வெற்றியை தரக்கூடிய நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கும் கதாநாயகனாக விஜய் ஆண்டனி உள்ளார்.

அவருடைய இந்த வெற்றி, அடுத்து வரும் அவரது படங்கள் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது வர்த்தக வட்டாரத்திலும் அதிகரித்துள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியிட தயாராகவுள்ள அவரது ‘ரத்தம்’ படத்தின் முன்னோட்டங்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

சி.எஸ்.அமுதனின் முந்தைய படங்களான ‘தமிழ்ப் படம்’ மற்றும் ‘தமிழ்ப் படம் 2’ ஆகியவற்றை பார்த்து சிரித்து மகிழ்ந்த ரசிகர்களுக்கு ‘ரத்தம்’ நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். முற்றிலும் வேறுபட்ட ஜானரில் சி.எஸ். அமுதன் இந்தப் படத்தில் பயணித்து இருக்கிறார்.

படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து விஜய் ஆண்டனி பகிர்ந்து கொண்டதாவது…

“சி.எஸ்.அமுதனின் திறமை குறித்து எனக்கு பல வருடங்களாக தெரியும். அவர் ஸ்பூஃப் அடிப்படையிலான திரைப்படங்கள் எடுப்பதில் பிரபலமானவர் என்றாலும், வெவ்வேறு ஜானர்களில் கதையை படமாக்குவதிலும் அவர் திறமையானவர்.

‘ரத்தம்’ படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னபோது எனக்கு உடனே பிடித்துப் போனது மற்றும் ​​அந்தக் கதையை காட்சிப் படுத்துவதும் மிகவும் எளிதாக இருந்தது. என் கேரியரில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்று நான் நம்பினேன்.

மேலும், இது உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை நிச்சயம் ஈர்க்கும். படத்தின் இறுதி வடிவத்தைப் பார்க்கும் போது திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்” என்றார்.

இந்த படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்கள் பற்றி விஜய் ஆண்டனி மேலும் கூறுகையில்…

“இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. முழு கதையும் அவர்களால் தான் நகரும். தீவிரமான அர்ப்பணிப்புடன் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் என எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் கூட படத்திற்கு வலு சேர்க்கும். ‘ரத்தம்’ படம் பார்த்து விட்டு பார்வையாளர்கள் திரையரங்குகளை விட்டு வெளியே வரும்போது நிச்சயம் அவர்களுக்கு 100% திருப்தியைத் தரும்” என்றார்.

இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி. லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்திருக்க, ‘ரத்தம்’ படத்தை சி.எஸ்.அமுதன் எழுதி இயக்கியுள்ளார்.

கண்ணன் நாராயணன் இசையமைத்திருக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை டி.எஸ். சுரேஷ் கையாண்டுள்ளார்கள்.

ரத்தம்

Vijayantonys 100% confidence on Raththam movie

‘ஜவான்’ ரெக்கார்ட் : 25 நாட்களில் 600 கோடியை தாண்டிய முதல் ஹிந்திப்படம்

‘ஜவான்’ ரெக்கார்ட் : 25 நாட்களில் 600 கோடியை தாண்டிய முதல் ஹிந்திப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜவான்’ படம் அதிக வசூல் செய்த SRK இன் இரண்டாவது படம் மட்டுமல்ல, 25 நாட்களில் 600 கோடியை தாண்டிய முதல் இந்தி படமாகும், மேலும் நான்காவது வாரத்தில் படம் இன்னும் வசூலில் நிலையான சாதனை படைத்து வருகிறது.

ஜவான் இந்தியில் 547.79 கோடிகள் மற்றும் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் 607.21 கோடிகளை ஈட்டியுள்ளது, அதே நேரத்தில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில், படம் 1000 கோடிகளை வசூலித்து அனைத்து சாதனைகளையும் முறியடித்து, உலகம் முழுவதுமாக 1043.21 கோடியை வசூலித்து சாதனை செய்துள்ளது.

இந்த மகத்தான சாதனைகள் அனைத்தும் வெறும் 25 நாட்களில் முறியடிக்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.

ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த இந்திப் படமாக மாறியுள்ளது.

மேலும் அவர் ஏற்கெனவே செய்த சாதனைகளை முறியடித்து, திரைத்துறை வசூல் வரையறைகளை மாற்றி அமைத்ததன் மூலம் மீண்டும் சரித்திரம் படைத்திருக்கிறார்.

‘ஜவான்’ படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

புதிய பட வெளியீடுகளால் ஜவானின் வசூல் பாதிக்கப்படவேயில்லை, மேலும் நான்காவது வாரத்தில் கூட ரசிகர்கள் கூட்டமாக படத்தை ரசிக்கிறார்கள் மற்றும் அதைப் பாராட்டுகிறார்கள் என்பது இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு எடுத்துக்காட்டாகும்.

NEW ACHIEVEMENT UNLOCKED Shah Rukh innaugrates the Rs 600cr Club

தாய் – மகன் பாசத்தில் ‘ஆராராரி ராரோ..’ பாட்டு.; ‘ஜவான்’ ரசிகர்கள் ஜாலீ

தாய் – மகன் பாசத்தில் ‘ஆராராரி ராரோ..’ பாட்டு.; ‘ஜவான்’ ரசிகர்கள் ஜாலீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜவான்’ படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான ‘ஆராராரி ராரோ’ இசை வீடியோ இறுதியாக உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில், விவேக்கின் இதயப்பூர்வமான வரிகளில், இந்த பாடல் தாய்-மகன் பாசத்தின் அழுத்தமான சித்தரிப்புடன் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது.

தீப்தி சுரேஷின் அழகான குரலில் இந்த வீடியோ, தீபிகா படுகோன் மற்றும் இளம் ஆசாத் ஆகியோரின் அற்புதமான சித்தரிப்பில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்கிறது.

‘ஆராராரி ராரோ’ வெறும் பாடல் அல்ல; இது ஒரு தாய் மற்றும் அவரது மகனுக்கு இடையே இருக்கும் ஒப்பற்ற பாசத்தின் அன்பின் வெளிப்பாடு. இந்த மியூசிக் வீடியோ இந்த புனிதமான உறவினை அதனுடன் வரும் தியாகங்கள் மற்றும் உணர்ச்சிகளை, ஆழமாக காட்சிப்படுத்தியுள்ளது.

தீபிகா படுகோன், அர்ப்பணிப்புள்ள தாயின் பாத்திரத்தை தன் அசாத்திய நடிப்பில், திரையில் உயிர்ப்பித்துள்ளார். மியூசிக் வீடியோவில் தீபிகா படுகோன் பார்வையாளர்களிடம் பெரும் மாற்றத்தை கொண்டு வருகிறார்.

இந்தப்பாடல் உலகம் முழுதும் ரசிக நெஞ்சங்களை கொள்ளை கொண்டு வருகிறது.

“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

The highly anticipated music video for Aararaari Raaro from Jawan

More Articles
Follows