தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா இயக்குனராகி படங்களை இயக்கி வருகிறார்.
வை ராஜா வை படத்தை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு முன்பு ”சினிமா வீரன்” என்ற ஆவணப்படத்தை ஐஸ்வர்யா இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.
இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரஜினி வர்ணனை (வாய்ஸ் ஓவர்) கொடுக்கவிருக்கிறார்.
இப்படம் புகழ் வெளிச்சத்திற்கு வராத ஸ்டண்ட் கலைஞர்களை பற்றிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சற்றுமுன் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்துள்ளார்.
இதுகுறித்து தன் ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது…
“தேசிய விருது பட்டியலில் சினிமா ஸ்டண்ட் கலைஞர்களை சேர்க்க வலியுறுத்த வேண்டும்” என கடிதம் மூலம் கேட்டுக் கொண்டேன் என பதிவிட்டுள்ளார்.
சினிமாவில் ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.