தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
3′ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா தனுஷ்.
இவர் ரஜினிகாந்தின் மூத்த மகள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
தற்போது ஐஸ்வர்யா தனுஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்த குடும்பம் சார்ந்த த்ரில்லர் படக்கதையை சஞ்சீவ் எழுதியுள்ளார்.
இந்தப் பட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார்? என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
கூடுதல் தகவல்.. :
2016ஆம் ஆண்டில் ‘சினிமா வீரன்’ என்ற ஆவணப் படத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவித்தார் ஐஸ்வர்யா தனுஷ்.
சினிமாவின் உண்மையான ஹீரோக்களே ஸ்டண்ட் மாஸ்டர்களும், கலைஞர்களும்தான். அவர்களின் உழைப்பு வெளியுலகிற்கு தெரிவதில்லை.
எனவே அவர்களைச் சிறப்பிக்க இந்த படம் எடுக்கப்படவுள்ளதாக அறிவித்தார்.
இந்த ஆவணப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுக்கவுள்ளார் என அப்போது பேசப்பட்டது. ஆனால் அது என்னாச்சு..?
அதுபோல கடந்த 2017 ஆண்டில் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘மாரியப்பன்’ என்ற பெயரில் படமாக்கவுள்ளதாக அறிவித்தார் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்.
(இந்தாண்டும் 2021ல் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பது வேறுக்கதை)
ஆனால் ஐஸ்வர்யாவின் 2 படங்கள் அறிவிப்பு என்ன ஆச்சு? என்பதே இப்போதைய கேள்வி.
Aishwarya Dhanush announced her next project