தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2021ம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா’.
தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி பான் இந்தியா படமாக வெளியானது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்து இருந்தது.
ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் பஹத் பாசில் கன்னட நடிகர் தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஊ.. சொல்றியா மாமா… ஊஹூம் சொல்றியா மாமா…. & ஹே.. மாமா..ஹே சாமி.. ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.
அதுவும் ஆன்ட்ரியா பாடிய பாடலுக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் சமந்தா ஆடிய “ஊ சொல்றீயா மாமா…” பாடலுக்கு தமிழக தியேட்டர்களில் ரசிகர்கள் ஆட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது.
செம்மரக் கடத்தலை மையப்படுத்தி இந்த படம் உருவானது.
மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்த நிலையில் ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல்வாரம் தொடங்கும் என கூறப்படுகிறது.
சீனா, ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட வெளிநாடுகளை கதையின் பின்னணியாக கொண்டு ‘புஷ்பா 2’ உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Allu Arjun – Rashmika Join ‘Pushpa 2’ Latest Update