இசைப் புயல் ரஹ்மான் இசையில் பாடிய வைகைப் புயல் வடிவேலு

இசைப் புயல் ரஹ்மான் இசையில் பாடிய வைகைப் புயல் வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

“மாமன்னன்” படத்திற்காக யுகபாரதி வரிகளில் உருவான ஒரு பாடலை, ‘இசைபுயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வைகை புயல்’ வடிவேலு பாடியுள்ளார். இப்பாடல் விரைவில் வெளியாகும் என இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன் “மாமன்னன்” படத்தின் First Look போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. தற்போது இப்பாடல் பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் “மாமன்னன்” திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவீஸ்
இயக்கம் – மாரி செல்வராஜ்
இணை தயாரிப்பு – M. செண்பகமூர்த்தி, R.அர்ஜுன் துரை
இசை – ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர்
கலை – குமார் கங்கப்பன்
படத்தொகுப்பு – செல்வா Rk
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்
பாடல் – யுகபாரதி
நடனம் – சாண்டி
நிர்வாக மேற்பார்வை – E.ஆறுமுகம்
விநியோக நிர்வாகம் – ராஜா.C
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Actor Vadivelu has sung a song in Rahman’s music

லியோ படத்தில் இணைந்த அட்வகேட் நடிகை

லியோ படத்தில் இணைந்த அட்வகேட் நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்தின் புதிய ஷெட்யூல் சிறிய இடைவெளிக்குப் பிறகு சென்னையில் தொடங்கியது.

மிகவும் பரபரப்பான கேங்ஸ்டர் படத்தில் ஏற்கனவே பெரிய பெரிய நட்சத்திர நடிகர்கள் உள்ளனர்.

வக்கீலாக இருந்து நடிகையாக மாறிய சாந்தி மாயாதேவி லியோ வில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

லோகேஷ் கனகராஜுடன் ‘லியோ’ படத்தின் ஷூட்டிங்கின் தற்போதைய ஷெட்யூலில் தான் இருப்பதை உறுதிப்படுத்தும் புகைப்படத்தை சாந்தியே பகிர்ந்துள்ளார்.

மோகன் லால் மற்றும் மீனா நடித்த ‘த்ரிஷ்யம் 2’ மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advocate turned actress joins Thalapathy Vijay’s ‘Leo’

JUST IN ‘லால் சலாம்’ படத்தில் ரஜினி கேரக்டர் லுக் ரிலீஸ்.; ‘பாட்ஷா’ பாய்-க்கு நிகராகுமா.?

JUST IN ‘லால் சலாம்’ படத்தில் ரஜினி கேரக்டர் லுக் ரிலீஸ்.; ‘பாட்ஷா’ பாய்-க்கு நிகராகுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.

இந்த படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்க நாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கின்றனர்.

ரஜினியின் தங்கையாக முன்னாள் நடிகை ஜீவிதா ராஜசேகர் நடிக்கிறார். 1980-90-களில் ஜீவிதா பல படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும் ரஜினி படத்தில் இணைந்து நடிக்கவில்லை.

தற்போது தான் முதன்முறையாக ரஜினியுடன் ஜீவிதா நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் லைக்கா நிறுவனம் நேற்று மே 7 ஞாயிறு தங்களது ட்விட்டர் பக்கத்தில் லால் சலாம் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

அதில் ” நமது பாய் மும்பைக்கு திரும்பியுள்ளார்” என குறிப்பிட்டு இன்று நள்ளிரவு லால் சலாம் படத்தில் ரஜினி கதாபாத்திரம் மற்றும் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகும்” என தெரிவித்து இருந்தது.

ரஜினி நடிப்பில் வெளியான ‘பாட்ஷா’ திரைப்படத்தில் மும்பை மாநகரம் இடம்பெற்று இருக்கும். அதில் பாட்ஷா பாய் பாம்பே நகரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. எனவே ‘லால் சலாம்’ படத்திலும் இந்த கேரக்டர் பவர்ஃபுல்லாக இருக்கும் என எதிர்பார்க்கலாம் என தெரிவித்து நம் FILMISTREET தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்த நிலையில் லால் சலாம் படத்தில் ரஜினியின் கேரக்டர் மொய்தீன் பாய் என தெரிவித்து ரஜினியின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இவர் நாம் எதிர்பார்த்த மாதிரி பாட்ஷா பாய்க்கு நிகராக வருவாரா என படம் வரும்போது காத்திருந்து பார்ப்போம்..

Rajinikanth as Moideen Bhai in Lal Salaam

JUST IN நல்லா இல்லன்னு சொன்னாலும் 1000 கொடுக்குறாங்க.; என் படத்தைப் பார்த்து அப்பனை தேடி ஓடுவீங்க – தங்கர் பச்சான்

JUST IN நல்லா இல்லன்னு சொன்னாலும் 1000 கொடுக்குறாங்க.; என் படத்தைப் பார்த்து அப்பனை தேடி ஓடுவீங்க – தங்கர் பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’.

இந்த படத்தில் பாரதிராஜா, அதிதி பாலன், கௌதம் வாசுதேவன் மேனன், யோகி பாபு, மஹானா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வைரமுத்து பாடல்களை எழுத ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை வீரசக்தி என்பவர் தயாரித்திருக்கிறார்.

விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழா மேடையில் இறுதியாக தங்கர்பச்சான் பேசினார். அவர் பேசும்போது தன் படத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது குறித்தும் தன் படைப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்காததும் குறித்து ஆதங்கத்துடன் பேசினார்.

அவர் பேச்சில்.. “அழகி படத்தை வியாபார நோக்கத்திற்காக திரையிட்டு காட்டினேன். கிட்டத்தட்ட 100 காட்சிகள் திரையிட்டு இருப்பேன். ஆனால் ஒருவரும் வாங்க வரவில்லை. ஆனால் அதன் பிறகு மக்கள் அந்த படத்தை கொண்டாடினார்கள்.

மக்களை நம்பி தான் என் படைப்புகளை நான் கொடுக்கிறேன்.. நிறைய படங்களை பிளாக் டிக்கெட் வாங்கி பார்க்கிறார்கள்.

விமர்சனங்களில் நல்லா இல்லை என்று சொன்னாலும் அப்படி என்ன இருக்கு என்று படத்தை சென்று பார்க்கிறார்கள். ஆனால் என்னுடைய கருமேகங்கள் கலைகின்ற படம் உங்கள் அனைவரையும் அழ வைக்கும்.

இந்த படத்தை பார்த்தபின் ஒவ்வொருத்தரும் தங்கள் அப்பாவை தேடி ஓடுவார்கள். இந்த படத்திற்காக நான் அனைவரையும் கஷ்டப்படுத்தி இருக்கிறேன்.

யோகி பாபு என்னை எத்தனை முறை திட்டினார் என்று தெரியாது. அவரால் பத்து நிமிடம் கூட நிற்க முடியாது. அத்தனை படங்களில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் எனக்காக நடித்துக் கொடுத்தால் அவருக்காக மூன்று மாதங்கள் டப்பிங் செய்ய காத்திருந்தேன். பாரதிராஜாவும் என்னை இப்போது கூட திட்டிக் கொண்டிருப்பார்.. அவர் இங்கு வரவில்லை அவர் வந்திருந்தால்.. அவர் காலில் விழுந்து இருப்பேன்.. அதுபோல அதிதி பாலன் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ஒரு காட்சி ஆறு நிமிடங்கள் ஏழு நிமிடங்கள் இருக்கும் அப்படி அசத்தியிருக்கிறார் இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும்” என்றார்.

Thankar Bachan speech at Karumegangal Kalaigindrana

‘மார்க் ஆண்டனி’ படத்திற்காக 3 மொழிகளில் விஷால் டப்பிங்

‘மார்க் ஆண்டனி’ படத்திற்காக 3 மொழிகளில் விஷால் டப்பிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் விஷால், எஸ்.ஜே சூர்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.

இப்படத்தை ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

இதில் நாயகியாக ரித்து வர்மா நடிக்க, தெலுங்கு நடிகர் சுனில் வர்மா மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

‘மார்க் ஆண்டனி’ படத்தின் டீசரை படக்குழு ஏப்ரல் 27ஆம் தேதி வெளியிட்டது.

டீசரில் விஷாலும், எஸ்.ஜே.சூர்யாவும் வித்தியாசமான கெட்டப்பில் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஷால் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் டப்பிங்கின் போது தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் பேசி உள்ளார்.

விஷால் டப்பிங் செய்யும் வீடியோ காட்சியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும், விஷால் பேசும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Vishal dubs in 3 different languages for ‘Mark Antony’

JUST IN ‘லியோ’ சூட்டிங்கை விட்டுட்டு அண்ணனுக்காக வந்தேன் – லோகேஷ் கனகராஜ்

JUST IN ‘லியோ’ சூட்டிங்கை விட்டுட்டு அண்ணனுக்காக வந்தேன் – லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’.

இந்த படத்தில் பாரதிராஜா, அதிதி பாலன், கௌதம் வாசுதேவன் மேனன், யோகி பாபு, மஹானா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வைரமுத்து பாடல்களை எழுத ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை வீரசக்தி என்பவர் தயாரித்திருக்கிறார்.

விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழா மேடையில் சிறப்பு விருந்தினராக லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அவர் மேடையில் பேசும்போது..

“தங்கர்பச்சான் படங்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும். அவரது ஒன்பது ரூபாய் நோட்டை நான் பார்த்து இருக்கும்..

தம்பி இந்த படத்தை கூட நீங்க பார்த்திருக்கீங்களா என்று என்னிடம் கேட்டார். அவருக்காக தான் இந்த விழாவிற்கு நான் வந்தேன்.

தற்போது லியோ சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் அந்த இடைவெளியில் அவருக்காக நான் வந்தேன். கருமேகங்கள் கலைகின்றன படம் வெற்றி பெற வேண்டும்” என வாழ்த்தி பேசினார் லோகேஷ்.

அதன் பின்னர் மேடை ஏறிய தங்கர் பச்சன் அவருக்கு பலாப்பழமும் பாதாம் முந்திரி பருப்பும் கொடுத்தார். அதற்கான காரணத்தை தொகுப்பாளர்கள் மோகன் மற்றும் அனிதா கேட்டபோது.. “நான் உழவன் என் விவசாய நிலத்தில் விளைந்தது.்அவருக்கு கொடுத்தேன் வேறு ஒரு காரணமும் இல்லை என்றார்.

தற்போது விஜய் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.. அந்த இடைவெளியில் இங்கே வந்திருக்கிறார்.. கண்டிப்பாக நானே அதுபோல ஒரு சூழ்நிலை வந்திருப்பேனா என்று தெரியாது அவர் வந்தமைக்கு நன்றி ” என தெரிவித்தார்.

Lokesh Kanagaraj speech at Karumegangal Kalaigindrana

More Articles
Follows