தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கி தயாரித்துள்ள படம் கடுகு.
இதில் டைரக்டரும் நடிகை தேவயாணியின் கணவருமான ராஜகுமாரன் நாயகனாக நடித்துள்ளார்.
முக்கிய கேரக்டரில் பரத், சுபிக்ஷா மற்றும் ஏ.வெங்கடேஷ் நடித்துள்ளனர்.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள சூர்யா, இதன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது பேசும்போது…
நிறைய படங்களில் நாம் பணிபுரிந்தாலும் சில படங்கள் நம் மனசுக்கு பிடித்த படமாக இருக்கும்.
கதாபாத்திரத்தை முன் வைத்து கதை சொல்வது எனக்கு பிடிக்கும்.
அப்படி சொன்னால் எனக்கு உடனே ஈர்ப்பு வரும். அப்படித்தான் நந்தா. வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்தேன்.
தற்போது இந்த கடுகு படமும் நிச்சயம் அந்த வரிசையில் சேரும்.
படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.