மக்கள் பிரச்சனைக்கு ஏன் நடிகர்களை இழுக்குறீங்க..? – சௌந்தரராஜா

மக்கள் பிரச்சனைக்கு ஏன் நடிகர்களை இழுக்குறீங்க..? – சௌந்தரராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சியோன் ராஜா எழுதி இயக்கி ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘சமூக விரோதி’ .இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் வெளியிடப்பட்டன.

இவ்விழாவில் பல்வேறுபட்ட அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்

இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், திராவிட இயக்க அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி,ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வசீகரன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த குணாஜி, தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன், நடிகர்கள் லொள்ளு சபா ஜீவா, இமான் அண்ணாச்சி, விஜய் விஷ்வா, சௌந்தரராஜா, சந்திரசேகரா, சிங்கப்பூர் தொழில் ஆலோசகர் ஜவஹர் அலி, படத்தின் இயக்குநர் சியோன் ராஜா, கதாநாயகன் பிரஜின், கலை இயக்குநர் முஜிபுர் ரகுமான், நிர்வாகத் தயாரிப்பாளர் வினோ ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர்.

படத்தைப் பற்றி இயக்குநர் சியோன் ராஜா பேசும்போது…

“இந்தச் சமூக விரோதி படம் உண்மையில் சமூக விரோதிகள் யார்? சமூக விரோதிகளை யார் உருவாக்குகிறார்கள்? என்பதை மக்களிடம் அடையாளப்படுத்தி வெளிக்காட்டும் முயற்சியாக உருவாகியுள்ளது. இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் தேவை என்ற நோக்கில் இந்தப் படம் உருவாகி உள்ளது.
இங்கே இத்தனை அரசியல் ஆளுமைகள் வந்துள்ளது அந்த நோக்கத்திற்கு ஆதரவு தருவதற்காகத்தான் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தப் படத்திற்காகப் பலரையும் நாம் அணுகிக் கேட்டபோது அனைவரும் இந்தக் கதைக்காக நடித்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

நாஞ்சில் சம்பத் அவர்களிடம் கேட்டபோது முதலில் மறுத்தவர், பாத்திரத்தைக் கேட்டதும் அரை மனதாக ஒப்புக்கொண்டார். ஆனால் படப்பிடிப்பில் கேமராவை ஆன் செய்ததும் ருத்ரதாண்டவமே ஆடிவிட்டார். அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

தயாரிப்பாளர் ராஜன் அவர்களைக் கேட்டபோது ஒரு காட்சியில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்றார். மூன்று காட்சிகள் என்றேன். கதையைக் கேட்ட பிறகு நடித்துக் கொடுத்ததுடன் சம்பளமே வாங்கவில்லை. அந்த அளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

நாயகன் பிரஜின் கொடுத்த ஒத்துழைப்பு சாதாரணமானதல்ல. கேரவான் இல்லாமல் படப்பிடிப்பு முடித்த நாயகன் அவர்தான்.அவர் மேலும் வளர்வார். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் பேசப்படுவார்.

நான் பொழுதுபோக்குக்காகப படம் எடுப்பவன் அல்ல. கலையை அரசியல் படுத்த நினைக்கிறேன். அந்த வகையில் தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். மக்கள் ஆதரவு தர வேண்டும் “என்றார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த குணாஜி பேசும்போது,

” இந்த நாட்டின் சமூக விரோதிகள் யார் தெரியுமா ?” என்று தொடங்கியவர் ரஜினி, கமல், விஜய் என்று அனைத்து நடிகர்களையும் குற்றம் சாட்டினார்.

மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுக்காத இவர்கள் சமூக விரோதிகள் தான் என்று அவர் பேசினார்.

அவரைத் தொடர்ந்து நடிகர் சௌந்தரராஜா பேசினார்.

அப்போது “எதற்கெடுத்தாலும் திரைப்பட நடிகர்களைக் குற்றம் சாட்டுவதை முதலில் நிறுத்துங்கள். அவர்கள் மக்களை மகிழ்ச்சியூட்டுவதற்காகப் படங்களில் நடிக்கிறார்கள். சம்பளம் பெறுகிறார்கள். எதற்கெடுத்தாலும் ஏன் அவர்களை உள்ளே இழுத்துக் கொண்டு வருகிறீர்கள்?” என்றார்.

அதன் பிறகு இந்த நிகழ்ச்சி வாதப்பிரதிவாதங்களால் வெப்பமடைந்து பரபரப்பாகி சூடேறியது.

Don’t pull actors for all public issues says Soundararaja

ரஜினியுடன் இணைந்து நடிக்க அமிதாப்பச்சனுக்கு இத்தனை கோடி சம்பளமா.?

ரஜினியுடன் இணைந்து நடிக்க அமிதாப்பச்சனுக்கு இத்தனை கோடி சம்பளமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர் 170’ படத்தில் நடித்துவருகிறார்.

‘ஜெய்பீம்’ பட இயக்குனர் ஞானவேல் இயக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

32 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘தலைவர் 170’ படத்துக்காக அமிதாப் பச்சன் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் இதற்காக அவருக்கு ரூ.12 முதல் ரூ.15 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Will Amitabh Bachchan be paid so many crores to act with Rajini’s thalaivar 170

JUST IN நடிகர் நாசர் தந்தை மொகபூப் பாட்ஷா காலமானார்

JUST IN நடிகர் நாசர் தந்தை மொகபூப் பாட்ஷா காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர் நாசர். இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்கள் நடித்துள்ளார்.

நடிகர் என்பதையும் தாண்டி இயக்குனர் தயாரிப்பாளர் என பெயர் பெற்றவர். இவர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக உள்ளார்.

இந்த நிலையில் நாசர் தந்தை மொகபூப் பாட்ஷா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

செங்கல்பட்டு தட்டான்மலை தெருவை சேர்ந்த நடிகர் நாசரின் தந்தை மொகபூப் பாஷா (94) உடல் நலக்குறைவு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார். நாசரின் சகோதரர் ஜவஹர் தந்தை இல்லத்தில் உள்ளார்.

நாசர்

Actor Nassers Father Mehaboob Basha Passed Away

‘லியோ’ ட்ரைலர் வெளியிட்ட தியேட்டர்களுக்கு நோட்டீஸ்.; சென்சாரில் 13 கட்

‘லியோ’ ட்ரைலர் வெளியிட்ட தியேட்டர்களுக்கு நோட்டீஸ்.; சென்சாரில் 13 கட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’.

இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30-ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த நிலையில் திடீரென ரத்தானது.

இதைத்தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், “நிகழ்ச்சியை காண வரும் ரசிகர்களின் பாஸ் கோரிக்கைகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக வருகின்றன. எனவே பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல” என்று அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ‘லியோ’ இசை வெளியீட்டு விழா ரத்தானது தொடர்பாக சென்னை மாநகர போலீசாருக்கு தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தில், “செப்டம்பர் 30-ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவிருந்த ‘லியோ’ இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு அதிக பாஸ்கள் கோரிக்கை வந்ததால் பாதுகாப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், அதில் சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Vijay starrer ‘leo’ movie Gets 13 Changes to Censor Board orders

தமிழில் இதான் முதன்முறை.? ‘ரஜினி 171’ படத்திற்காக லோகேஷ் எடுக்கும் புதிய முயற்சி

தமிழில் இதான் முதன்முறை.? ‘ரஜினி 171’ படத்திற்காக லோகேஷ் எடுக்கும் புதிய முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படம் இன்னும் 9 தினங்களில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் ‘கைதி 2’ படத்தை இயக்குவார் எனக் கூறப்பட்டது.

ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ‘ரஜினி 171’ படத்தை இயக்க உள்ள லோகேஷ். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க அன்பறிவு சண்டை பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.

லியோ படத்தில் பணிபுரிந்த மனோஜ் பரஹம்ஸா என்பவர் தான் ‘தலைவர் 171’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

அதன்படி இந்த படத்தின் முக்கியமான காட்சிகளை ஐமேக்ஸ் கேமராவில் படமாக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படம் ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Lokesh plans for Imax Camera in Thalaivar 171 movie

சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாகும் நடிகை காஜல் அகர்வால்

சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாகும் நடிகை காஜல் அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால்.

இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் கமலுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இவருக்கு சமீபத்தில் திருமணம் ஆன நிலையில் வாய்ப்புகள் குறைந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.

காஜல் அகர்வால்

இந்த நிலையில் ராஜமௌலி இயக்கம் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவிற்கு வில்லியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ராஜமௌலி இயக்கத்தில் உருவான ‘மகதீரா’ படத்தில் ராம்சரண் மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடித்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மகேஷ்பாபு

Kajal agarwal plays negative role in Rajamouli direction

More Articles
Follows