தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2011ம் ஆண்டு வெளியான ‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களை கவர்ந்தவர் தெலுங்கு நடிகரான ஷர்வானந்த்.
சாப்ட்வேர் என்ஜினீயர் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிச்சயதார்த்தம் சில காரணங்களால் நின்று போனதாக தெலுங்கு இணைய தளங்களில் கடந்த சில நாட்களாக பரபரப்பு தகவல் பரவி வந்தது.
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் திருமண தேதியை சர்வானந்த் அறிவித்து இருந்தார்.
ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலசில் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி சர்வானந்த், ரக்ஷிதா ரெட்டி திருமணம் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு 2 மணி அளவில் ஹைதராபாத்தில் இருக்கும் ஃபிலிம் நகர் ஜங்க்ஷனில் தனது ரேஞ்ச் ரோவர் காரில் சென்றிருக்கிறார் ஷர்வானந்த்.
காரை அவரே ஓட்டிச் சென்றிருக்கிறார். அப்பொழுது தவறான பாதையில் வந்த பைக்குடன் மோதுவதை தவிர்க்க முயற்சி செய்தாராம் ஷர்வானந்த். அந்த நேரத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதியது.
ஷர்வானந்த் சென்ற கார் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தக்க சமயத்தில் ஷர்வானந்தை மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
மேலும், நடிகர் ஷர்வானந்துக்கு விபத்தின் போது காயம் எதுவும் இல்லை. ஷர்வானந்த் நலமாக இருக்கிறார். அவரை பற்றி வதந்தி பரப்ப வேண்டாம் என்று ஷர்வானந்தின் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
Actor Sharwanand mets with car accident in Hyderabad