தனுஷை அடுத்து அதர்வாவுடன் இணையும் கொடி நாயகி

தனுஷை அடுத்து அதர்வாவுடன் இணையும் கொடி நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)பிரேமம் என்ற மலையாளப் படத்தில் நடித்து தமிழக ரசிகர்களையும் கவர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன்.

தனுஷ் நடித்த கொடி படத்தில் நாயகியாக அறிமுகமானார் இவர்.

அதன்பிறகு எந்த தமிழ்ப் படத்திலும் அவர் நடிக்கவில்லை.

தற்போது அதர்வாவுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்.

இப்படத்தை பூமராங் புகழ் கண்ணன் இயக்கவுள்ளார்.

இந்த ஜுலை மாதம் சூட்டிங்கை ஆரம்பித்து வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

குடிக்க தண்ணி இல்ல இதுல நீச்சல் குளமா.? சௌந்தர்யா ரஜினியின் சர்ச்சை ட்வீட்

குடிக்க தண்ணி இல்ல இதுல நீச்சல் குளமா.? சௌந்தர்யா ரஜினியின் சர்ச்சை ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 Soundarya Rajini Deletes Pool Pic With Son after controversy சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌவுந்தர்யாவின் 2வது திருமணம் அண்மையில் நடைபெற்றது.

இவர் தற்போது பொன்னியின் செல்வன் வெப்சீரிஸ் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் ட்விட்டரில் தன் குடும்ப புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தனது மகன் வேத் கிருஷ்ணாவுடன் நீச்சல் குளத்தில் நீந்தும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.
குழந்தைகள் நீச்சல் அடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் கூறியிருந்தார்.

தமிழக மக்கள் குடிக்க, குளிக்க தண்ணீர் இன்றி சிரமப்படும் நேரத்தில் இப்படி பதிவிடுவது சரியா? என பலர் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

இதனையடுத்து அந்த போட்டோவை நீக்கிவிட்டார்.

இதன்பின்னர் மற்றொரு ட்வீட்டில்…

தண்ணீர் பிரச்சினைக்கு நடுவே அந்த நீச்சல் குளம் போட்டோ பதிவிடுவது சரியில்லை என்பதால் நீக்கி விட்டேன்.

குழந்தைகள் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதன் அவசியத்தை சொல்வதே அந்த பதிவின் நோக்கமாக இருந்தது. தண்ணீரை சேமியுங்கள்” என விளக்கம் அளித்துள்ளார்.

Soundarya Rajini Deletes Pool Pic With Son after controversy

கமலை கழட்டி விட்டுட்டு விஜய்யுடன் இணையும் ஷங்கர்

கமலை கழட்டி விட்டுட்டு விஜய்யுடன் இணையும் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shankar will direct Vijay for Thalapathy 65ரஜினி நடித்த 2.0 படத்தை அடுத்து கமல் நடிக்கவுள்ள இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார் ஷங்கர்.

இப்படத்தை லைகா தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளதாக அறிவிப்புகளும் வந்தன.

ஆனால் கமலின் அரசியல் அவதாரம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளிட்ட பல சம்பவங்களால் இந்தியன்2 படம் நிறுத்தப்பட்டது.

மேலும் கமலின் மேக்அப் சரியில்லை என்ற பிரச்சினையும் சொல்லப்பட்டது.

இதனால் வெறுத்துப்போன டைரக்டர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை அப்படியே டீலில் விட்டுவிட்டு அடுத்த படத்தில் கவனம் செலுத்தவுள்ளாராம்.

இந்த படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகவும் அது விஜய்யின் 65வது படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Shankar will direct Vijay for Thalapathy 65

கிரிக்கெட் வீரர் பிராவோவுக்கு வேலம்மாள் பள்ளியில் பாராட்டு விழா

கிரிக்கெட் வீரர் பிராவோவுக்கு வேலம்மாள் பள்ளியில் பாராட்டு விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bravo felicitated at Velammalமாங்காடு வேலம்மாள் பள்ளி பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியினை செவ்வனே செய்துவருகிறது.

இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், அவர்களைப் பாராட்டும் வகையிலும் 01.07.2019 அன்று உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் விளையாட்டு வீரர் திரு. ட்வைன் ஜான் பிராவோ அவர்களைப் பள்ளிக்கு அழைத்துப் பாராட்டு விழா நிகழ்த்தியது.

மிகப் பிரம்மாண்டமான வரவேற்புகளுக்கிடையி ல் பள்ளிக்கு வருகை தந்த திரு.பிராவோ அவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் சாதனை புரிந்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டும் நிகழ்ச்சி முதலில் நடைபெற்றது.

பின்னர் பள்ளி மாணவர் தலைவர்கள் பதவியேற்கும் நிகழ்வினைத் துவக்கி வைத்த திரு.பிராவோ மாணவர்களுக்குப் பதவிகள் வழங்கிப் பாராட்டினார். விழாவில் பேசிய திரு.பிராவோ அவர்கள் மனித வாழ்வில் விளையாட்டு பெறும் முக்கியத்துவத்தையும் விளையாட்டுத் துறையில் சாதிக்கும் மாணவர்களுக்கு அமையவிருக்கும் சிறப்பான எதிர்காலம் பற்றியும் சுவைபடப் பேசினார்.

மாணவர்களே எழுச்சியூட்டும் வகையில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வு விளையாட்டுத் துறை மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்தது.

மேற்கண்ட நிகழ்ச்சி வேலம்மாள் வித்யாலயா பூவிருந்தவல்லி பள்ளியில் நடைபெற்றது.

Bravo felicitated at Velammal

 

மாயபிம்பம் – மகன் படம் எடுப்பதற்காக தங்கள் முழு சொத்தை விற்றுக் கொடுத்த பெற்றோர்

மாயபிம்பம் – மகன் படம் எடுப்பதற்காக தங்கள் முழு சொத்தை விற்றுக் கொடுத்த பெற்றோர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)‘மாயபிம்பம்’ படத்தில் அனைவருமே புதுமுகம் என்பதால் அப்படத்தைத் தயாரிக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. அதனால் சோர்வடைந்த தங்கள் மகனைப் பார்த்த டைரக்டர் சுரேந்தரின் பெற்றோர், தங்களது ஓய்வூதிய தொகை, அம்மாவின் நகைகள் மற்றும் அவர்களின் வாழ்நாள் சேமிப்புவரை அனைத்தையும் இப்படம் எடுக்கக் விற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு கதை தெரியாது, எப்படியும் தன் மகன் தவறாகப் போகமாட்டான் என்ற நம்பிக்கையில் உதவியிருக்கிறார்கள். படம் முழுவதும் எடுத்து முடித்த பிறகு திரையில் பார்த்த அவரது பெற்றோர்களும், குடும்பத்தாரும் மற்றும் நண்பர்களும் மகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்கள். பெரிய டைரக்டர்களான பாலாஜிசக்திவேல், சுசீந்திரன், பாண்டிராஜ் , வெற்றிமாறன் போன்றவர்கள் பார்த்து பிரமித்துள்ளார்கள். காதலின் வலியை யதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள் என்று பாராட்டியுள்ளார்கள். படத்தை பார்த்த டைரக்டர் சுசீந்திரனின் தம்பி தாய்சரவணண் இப்படத்தை வெளியிட உதவி செய்துள்ளார்.

ஜூலை மாதம் 2-ம் வாரத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

ப்ரித்வி பாண்டியராஜன் – சாந்தினி நடித்த “ காதல் முன்னேற்ற கழகம் ஜூலை 5 ம் தேதி உலமெங்கும் வெளியாகிறது

ப்ரித்வி பாண்டியராஜன் – சாந்தினி நடித்த “ காதல் முன்னேற்ற கழகம் ஜூலை 5 ம் தேதி உலமெங்கும் வெளியாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்.’

இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விபாண்டியராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர், ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – ஹாரிஸ் கிருஷ்ணன்

இசை – பி.சி.சிவன்

பாடல்கள் – யுகபாரதி, மோகன்ராஜ், உமாசுப்ரமணியம், மாணிக்கசத்யா

எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்

நடனம் – அசோக்ராஜா

சண்டை பயிற்சி – அம்ரீன் பக்கர்

கலை – பிரகதீஸ்வரன்

தயாரிப்பு நிர்வாகம் – முத்தையா,விஜயகுமார்.

மக்கள் தொடர்பு – மௌனம்ரவி

தயாரிப்பு – மலர்க்கொடி முருகன்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மாணிக்க சத்யா.

படம் பற்றி இயக்குநர் மாணிக்க சத்யா பேசும்போது…

“இந்தப் படம் 1985களில் நடக்கின்ற கதை. கதாநாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர்.

அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது ,இது என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக நடித்துள்ளார்.

துரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப்படுவது நம்பிக்கை துரோகம் தான்.

அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிக கொடூரமானது. அதைத் தான் இதில் சொல்லி இருக்கிறோம். படம் ஜூலை 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது என்றார் இயக்குனர் மாணிக்க சத்யா.

More Articles
Follows