தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : கார்த்தி, ரகுல்ப்ரித்தி சிங், போஸ் வெங்கட், சத்யன், மனோபாலா, வர்கீஸ் மேத்யூ, ரோகித் பதாக், சுரேந்தர் தகூர், நரசீனிவாஸ் மற்றும் பலர்.
இயக்கம் : வினோத்
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு: சத்யன் சூரியன்
எடிட்டிங்: சிவநந்தீஸ்வரன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு: எஸ்ஆர்.பிரபு (ட்ரீம் வாரியர்ஸ்)
கதைக்களம்…
தீரன் திருமாறன் என்ற கார்த்திக் ஒரு டி.எஸ்.பி. போலீஸ் டிரெய்னிங் சமயத்திலேயே அவரது பேட்சிசில் முதல் மாணவனாக வந்தவர்.
தன் எதிர் வீட்டில் இருக்கும் பிரியா (ரகுல் பிரித்தீ சிங்)வை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்.
சிறுவயதிலேயே தன் போலீஸ் தந்தையை இழந்தவர் தீரன். தன் தந்தையை போல் தானும் உத்யோகத்தில் இருக்கும்போதே தன் உயிரே போனாலும் பரவாயில்லை என நேர்மையாக பணியாற்றி வருகிறார்.
இதனால் அடிக்கடி உயர் அதிகாரிகளால் டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார்.
ஒரு சூழ்நிலையில் ஊர் எல்லையில் ஒதுக்கு புறமாக இருக்கும் வீடுகளை குறிவைத்து அந்த குடும்பத்தினரை கொடூரமாக கொன்று ஒரு கும்பல் கொள்ளையடிக்கின்றனர்.
இது அடிக்கடி தமிழகத்தில் தொடர்கிறது. ஆனால் ஒரு தடயமும் இல்லாமல் அந்த கும்பல் கொள்ளையடிப்பதால் போலீஸ் செய்வதறியாமல் தவிக்கின்றனர்.
ஆனால் அங்குள்ள பான்பராக், நாட்டு வெடிக்குண்டு மற்றும் இதர பொருட்களால் அவர்கள் வடநாட்டை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வருகிறது.
இதனையடுத்து வட இந்தியாவுக்கு தன் அணியுடன் செல்கிறார் தீரன். அதன்பின் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை.
வட இந்தியாவுக்கு சென்ற அவர் அந்த கும்பலை பிடித்தாரா? அவர்கள் யார்? எப்படி கண்டுபிடித்தார்? என்பதே இந்த தீரனின் தீவிர வேட்டை.
கேரக்டர்கள்…
இதில் கார்த்திக் நடித்திருக்கிறார் என்பதை தீரனாக உருமாறியிருக்கிறார் என்றே சொல்லலாம். காஸ்ட்யூம், கடமை, கம்பீரம், கட்டுடல் என அனைத்திலும் கவனம் செலுத்தியிருக்கிறார் கார்த்தி.
பருத்தி வீரன் கார்த்தி என்ற பெயர் இனி தீரன் கார்த்தி என்று மாறினாலும் ஆச்சரியமில்லை.
ராஜஸ்தான் சென்று, அங்கு கஷ்டப்படும் போலீஸ் டீம் என தன் முழு உழைப்பை கொடுத்திருக்கிறார். காக்கியில் மட்டுமல்ல காதலிலும் அடி பின்னியிருக்கிறார். ரகுல்பிரித்தியிடம் செமயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
இதுநாள் வரை ச்சும்மா ஹீரோயின் என்று வந்த ரகுல் பிரித்தி சிங் இதில் கதைக்கு ஏற்ற நாயகியாக வாழ்ந்திருக்கிறார்.
இவரது கன்னத்தில் கார்த்தி விரல் வைத்து சாப்பாட்டு சுவையை சொல்லும் போது அவர் காட்டும் முகபாவனைகள் ரசிக்க வைக்கிறது. இனி இவருக்கான வாய்ப்புகள் வந்து குவியும்.
மனோபாலா இதில் சீரியஸான அப்பாவாக வந்து நன்றாக நடித்திருக்கிறார்.
சத்யன் ஒரு சில காட்சிகள் மட்டுமே வருகிறார். இந்த சீரியஸான சப்ஜெட்டுக்கு காமெடி தேவையில்லை என்பதை சரியாக செய்திருக்கிறார் இயக்குனர் வினோத்.
போஸ்வெங்கட் உள்ளிட்ட அந்த காவலர்கள் அனைவரும் கம்பீரம். தீரன் போன்ற போலீஸை பார்த்தால் நம்மை அறியாமல் நாமே சல்யூட் அடிப்போம்.
நிஜத்தில் கணவன் – மனைவியான போஸ் வெங்கட் – சோனியா இருவரும், படத்திலும் கணவன் – மனைவியாக நடித்துள்ளனர்.
வட இந்திய வில்லன்களாக வரும் அனைவரும் செம டெரர்ர் லுக். வர்கீஸ் மேத்யூ, ரோகித் பதாக், சுரேந்தர் தகூர், நரசீனிவாஸ் ஆகியோர் கொள்ளையர்களாகவே வந்து நம் மனதையும் நடிப்பால் கொள்ளையடிக்கிறார்கள்.
அவர்கள் பகுதியில் கார்த்தி சென்று மாட்டிக் கொள்ளும் அந்த காட்சி கைத்தட்டலை அள்ளும்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
செவத்த புள்ள பாடல் ரொமான்டிக் என்றால் தீரன் டா பாடல் அதிரடி. ஜிப்ரானின் இசையில் பின்னணி இசை பெரிதாக பேசப்படும்.
சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், வடஇந்தியாவின் அந்த அழுக்கான புழுதிக்காட்டையும் அப்படியே பதிவு செய்துள்ளது.
வறண்டு போன வட இந்தியாவை ஒரு சினிமா டிக்கெட்டில் பார்த்த முழு திருப்தி கிடைக்கும் அளவுக்கு கொடுத்திருக்கிறார்.
படத்தில் கத்திரிக்கு வேலையே இல்லை. எடிட்டர் கச்சிதம்.
இயக்கம் பற்றிய அலசல்…
வினோத்.. கார்த்தி வினோத் வெற்றிக்கூட்டணி அமைத்துள்ளனர். இனியும் இந்த கூட்டணி தொடர வாழ்த்துக்கள்.
வெறுமனே போலீஸ் ஸ்டோரி என்று சொல்லாமல் அதற்கு சில 100 ஆண்டுகள் பின்னோக்கி சென்று அந்த கொள்ளையடிக்கும் கும்பல் யார்? அவர்களின் பலம் என்ன? என்பதை ஆராய்ந்து ஒரு டாக்டரேட் பட்டம் வாங்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் டைரக்டர்.
இண்டர்வெல் மற்றும் க்ளைமாக்ஸ் சீன் தமிழ் சினிமா பார்க்காத ஒன்று.
நேர்மையாக வாழும் போலீஸ் அதிகாரிகளின் கடைசி கால நிலைமை என்னவாக இருக்கும்? என்பதையும் யதார்த்தமாக சொல்லி மனதை கலங்கவைக்கிறார் வினோத்.
தீரன் காக்கி சட்டைக்காரர்கள் இனி காலரை நேர்மையாக தூக்கிவிட்டு கொள்ளலாம்