தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : அர்ஜீன், பிரசன்னா, வரலட்சுமி, சுகாசினி, சுமன், வைபவ், கிருஷ்ணா, போஸ்டர் நந்தகுமார், உமாரியாஸ் மற்றும் பலர்.
இயக்கம் : அருண்வைத்யநாதன்
இசை : நவீன்
ஒளிப்பதிவாளர் : அரவிந்த் கிருஷ்ணா
எடிட்டர்: சதீஷ் சூர்யா
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : அருண்வைத்யநாதன் (பேஷன் ஸ்டூடியோஸ்)
கதைக்களம்…
அர்ஜீன் ஒரு சிபிஐ ஆபிசர். இவரின் டீமில் இவருடனே இருக்கும் இருவர் பிரசன்னா மற்றும் வரலட்சுமி.
சிட்டியில் நடக்கும் ஒரு கொலையை துப்பறிய சொல்லி இவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.
அந்த கொலையாளி ஒரு கொலையை செய்துவிட்டு, அடுத்த கொலையை எப்போது செய்ய போகிறேன் என ஒரு அறிகுறியை வைத்தே செல்கிறான்.
இப்படி ஒவ்வொரு கொலையாக செய்து சிபிஐக்கே சவால் விடும் சீரியல் கில்லராக இருக்கிறார்.
எதற்காக கொல்கிறான்? யார் அவன்? கொலைக்கான காரணம் என்ன? என்பது புரியாமல் அர்ஜீன் டீமே குழம்புகிறது.
அதன்பின்னர் அவனை கண்டுபிடிக்க அர்ஜீன் போடும் திட்டம் என்ன? அவனை கண்டுபிடித்தாரா? யார் அவன்? என்ன காரணம்? உள்ளிட்டவைகளை க்ளைமாக்ஸில் சீட் நுனியில் உட்கார வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் அருண்வைத்யநாதன்.
கேரக்டர்கள்…
தமிழ் சினிமாவில் அர்ஜீனுக்கென்றே ரெடிமேடாக போலீஸ் டிரெஸ் இருக்கும். ஆனால் இதில் ஒரே உடையில் கலர் கலராக சிபிஐ கேரக்டரில் வருகிறார்.
வெறும் ஆக்சன் என்றில்லாமல் நிதானமாக விளையாடியிருக்கிறார். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வந்தாலும் எனர்ஜிட்டிக்காய் இருக்கிறார்.
இவரது மனைவியாக வரும் சுருதிஹரி ஹரன் நல்ல தேர்வு. செக்ஸியான கண்களால் கவர்கிறார்.
இவர்களின் செல்லக்குழந்தையும் நம் மனதில் இடம் பிடிப்பாள்.
கொலை, துப்பறியும் சீன் என சீரியஸாக படம் சென்றாலும் பிரசன்னா கலகலப்பூட்டுகிறார். குற்றவாளியின் ஜட்டிக்குள்ள பாம் வைக்கனும் என அடிக்கடி சொல்கிறார்.
வரலட்சுமி கம்பீரமாக வந்தாலும் கவர்ச்சியாகவே தெரிகிறார். (நமக்கு மட்டும்தான் அப்படி தெரிகிறாரா?)
வைபவ் கேரக்டரில் இன்னும் வலு சேர்த்திருக்கலாம். ஆனால் இவர் சீரியல் கில்லராக இருப்பாரோ? என சந்தேகப்பட வாய்ப்புள்ளது.
சுமன், சுகாசினி ஆகியோர் பெற்றோரின் தவிப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவும் எடிட்டர் சதீஷ் சூர்யாவும் படத்திற்கு இரு தூண்கள். தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
நவீன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பேசப்படும்.
இயக்கம் பற்றிய அலசல்…
சீரியல் கில்லர் யார்? என க்ளைமாக்ஸ் வரை ட்விஸ்ட் வைத்து, அதில் முக்கியமான ஹீரோவை காட்டியிருப்பபது அருண்வைத்யநாதனின் அருமையான முயற்சி.
ஆனால் அந்த சுவாரஸ்யத்தை கொஞ்சம் கூட்டி, கொன்றதற்கான காரணத்தை வலுவாக சொல்லியிருக்கலாம்.
வயசு பெண் இருக்கும் வீட்டில் மற்ற ஆண்களை விடுவதால் என்ன பிரச்சினை என்பதையும், மகளுக்காக பணத்தை செலவழிக்கும் நாம் நேரத்தையும் செலவழிக்கனும் என சொல்லியிருப்பது சபாஷ் போட வைக்கிறது.
குற்றவாளியை கண்டுபிடித்தபின் இது போன்று கதையை வைத்து தேச விரோதிகளை கொன்றால் என்ன? என அர்ஜீன் கேட்பது போலீஸ் தந்திரம்.
நிபுணன்… நிம்மதி