சிரிப்பு… சிறப்பு… சிக்சர் விமர்சனம்

சிரிப்பு… சிறப்பு… சிக்சர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்தம்பி படத்தில் மாலை கண் நோய் உள்ளவராக நடித்திருப்பார் கவுண்டமணி.

அந்த நோய் உள்ளவராக படம் முழுவதும் நடித்திருக்கிறார் வைபவ்.

ஒரு நாள் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தபேராசிரியை விமலா ராணியை கைது செய்யக்கூறி போராட்டம் நடைபெறுகிறது.

அப்போது எதிர்பாரா விதமாக பைவர் இருக்கும் இடத்தில் போராட்டம் தொடரவே, இவருதான் அதன் காரணமானவர் என மீடியா செய்திகளை வெளியிடுகிறது.

இதனால் இவருக்கும் அரசியல்வாதி என்.ஆர்.மனோகருக்கும் பகை முட்டுகிறது.

அதன்பின்னர் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கலைஞர்கள்..

ஆக்சன், காமெடி என கலந்தடிக்கிறார் வைபவ். தன் மாலை கண் பிரச்சினையை இவர் சமாளிக்கும் காட்சிகள் சிரிப்பு மழை.

இவருக்கும் பாலக் லவ்வாணிக்கும் ரொமான்ஸ் பெரிதாக இல்லை. பாலக் லவ்வாணி ஓரளவுக்கு நடிப்பிலும் அழகிலும் பாஸ் மார் பெறுகிறார்

படத்தில் முக்கியமாக சதீஷ், ராதாவி, ஸ்ரீரஞ்சனி, இளவரசு நல்ல தேர்வு. இவர்களின் காமெடியும் நன்றாக ஒர்க் அவுக் ஆகியுள்ளது.

ராதாரவியின் குடிகார காமெடி சூப்பர். படத்தின் ஹைலைட்டே அதுதான்.

என்.ஆர்.மனோகர் தேவையான அளவுக்கு வில்லனாக மிரட்டியிருக்கிறார். ஏ.ஜே. நடிப்பு கச்சிதம்.

டிவி புகழ் ராமரின் காமெடியும் படத்தின் ப்ளஸ் ஆக அமைந்துள்ளது.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓகே ரகம்.

பி.ஜி.முத்தையாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து.

சாக்சி என்ற புதுமுக இயக்குனர் படத்தை இயக்கியுள்ளார். லாஜிக் இல்லாமல் படத்தை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

ஏதாவது ட்விஸ்ட் வைத்திருந்தால் சிறப்பாக இருக்கும். பார்த்த கதை மற்றும் கேட்ட ஜோக்குகள் படத்தின் பலவீனம்

ஆக சிக்சர்… சிரிப்பு.. சிறப்பு

மயூரன் திரை விமர்சனம்

மயூரன் திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பாலாவின் பட்டறையைச் சேர்ந்தவர் நந்தன் சுப்பராயன். இவரது இயக்கத்தில் வந்துள்ள படம் மயூரன்.

ஒரு கல்லூரியில் இணையும் மூவர் நண்பர்களாகிறார்கள். ஜான் என்கிற ஜானகிராமன். எதற்காகவும் துணிந்து போராடும் சேகுவரா. இவர்களுடன் விஜய் டிவி புகழ் அமுதவாணன்.

ஒரு நாள் ஜானகிராமன் ஆஸ்பத்திரிக்கு செல்கிறார். அப்போது கேன்சர் நோயாளியின் மெடிக்கல் ரிப்போர்ட் இவருக்கு வந்துவிடுகிறது.

இதனால் இவருக்கு நோய் என நினைக்கிறார். மேலும் ஒரு பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு போதை பொருளை விற்க முற்படுகிறார்.

தன் நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்லாமல் போதை பொருளை எடுத்துக் கொண்டு புறப்படுகிறார்.

அதன்பின்னர் இவர் எங்கு சென்றார்? என யாருக்கும் தெரியவில்லை. எங்கே சென்றார்? என்ன ஆனார்? நண்பர்கள் என்ன செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.

மயூரன்

கலைஞர்கள்…

அஞ்சன், ஆனந்த்சாமி, அமுதவாணன் 3 பேரும் நண்பர்கள். இதில் ஆனந்த்சாமி அப்பாவியாக நடித்திருக்கிறார்.

அஞ்சன் இன்னும் நிறைய உழைக்க வேண்டியிருக்கும். சில காட்சிகளில் பாஸ் மார்க் பெறுகிறார்.

நாயகி அஸ்மிதாவுக்கு பெரிதாக வேலையில்லை. கடைசியில் இவர்களின் காதல் என்ன ஆனது? என்பதும் தெரியவில்லை.

கிராமத்து ஆள் போல கம்பீரம் காட்டி நடித்திருக்கிறார் பெரியவர் வேல.ராமமூர்த்தி. இவரின் நடிப்பும் இவரின் அடியாள் ஜான் நடிப்பும் நச்.

பாடல்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை. அதுபோல் பின்னணி இசையும் ஏனோ தானே என இருக்கிறது. ஒளிப்பதிவு சில காட்சிகளில் மட்டுமே ஓகே.

mayuran movie

பாலாவின் சீடர் என்று படத்திற்கு சென்றால் நம்மை ஏமாற்றியிருக்கிறார் நந்தன்.

ஏழை குடும்பம், படிப்பு, போதை கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் மாணவர்கள், நண்பனுக்காக போராடும் காட்சி என அருமையாக கதைக்களத்தை கொண்டு செல்ல முடியாமல் தடுமாறியிருக்கிறார் டைரக்டர்.

க்ளைமாக்ஸ் நன்றாக இருந்தாலும் அது திடீரென சட்டென முடிவது சரியில்லை.

கெத்து கிளப்.. கென்னடி கிளப் திரைவிமர்சனம் (3/5)

கெத்து கிளப்.. கென்னடி கிளப் திரைவிமர்சனம் (3/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

எத்தனையோ கபடி விளையாட்டு படங்களை பார்த்திருப்போம். இதில் கபாடி போட்டியை பெண்களை மையப்படுத்தி எடுத்துள்ளார் சுசீந்திரன். ஆனால் அந்த பெண்களுக்கு பயிற்சியாளர்கள் ஆண்கள் தான்.

வழக்கமான விளையாட்டு போட்டி.. அதில் நடக்கும் அரசியல் விளையாட்டு இதுதான் படத்தின் கதைக்களம்.
கென்னடி கிளப்பை நடத்தும் பாரதிராஜா பெண்கள் அணிக்கு பயிற்சி கொடுக்கிறார். இவருக்கு உதவியாக ரெயில்வேயில் வேலை பார்க்கும் சசிகுமாரும் வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து பயிற்சி கொடுக்கின்றனர்.

ஒரு நல்ல வீராங்கனை இந்திய அணிக்கு தேர்வாகும்போது ரூ. 30 லட்சம் பணத்தை லஞ்சமாக கேட்கிறார் ஆபிசர்.
இதனால் அந்த பெண் தற்கொலை செய்கிறார். அதன்பின்னர் அந்த அணி என்னானது.? பாரதிராஜா மற்றும் சசிகுமார் என்ன செய்தார்கள்? என்பதை படத்தின் கதை.

கலைஞர்கள் பணி..?

பாரதிராஜா மற்றும் சசிகுமார் இருவரும் மெச்சுரியாட்டியான நடிப்பை கொடுத்துள்ளனர். தலைமுடியை ஒட்ட வெட்டி சசிகுமார் ஸ்மார் குமாராக வருகிறார்.

தன் பண்பட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவிடுவார் பாரதிராஜா.

சசிகுமாருக்கு நாயகி இருந்தாலும் முருகா முருகா என கூப்பிடுவதோடு அவரது வேலை முடிகிறது. அடிக்கடி க்ளோசப் ஷாட்டில் வருகிறார்.

ஆனால் இவரை தவிர அந்த இரட்டை வீராங்கனைகள் ரசிகர்களை கவர்கிறார்கள். இதில் நடித்த அனைவரும் நிஜ விளையாட்டு வீராங்கனைகள் என்பது பெரும் ஆறுதல். நடிகைகளாக தெரியாமல் கேரக்டர்களாக தெரிகிறார்கள்.

சுசீந்திரனின் நன்றிக் கடனுக்காக சூரி இந்த படத்தில் நடித்துள்ளார் என நன்றாகவேத் தெரிகிறது. ஆபிசர் கேரக்டர் வரும் வில்லன் நல்ல பெர்மான்ஸ்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையில் பின்னணி இசை மிரட்டல். கபடியை விட இவரது இசை பெரிதாக பேசப்படும். பாடலும் சரி பாடல் வரிகளும் சூப்பர். பொம்பள சடுகுடு… வீரத்தமிழன் கபடி என்ற வரிகள் எனர்ஜியாக உள்ளது.

ஆர் பி குருதேவ் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கபடி காட்சிகள் அருமை. க்ளைமாக்ஸ் காட்சி நிச்சயம் சீட் நுனியில்தான் படத்தை பார்ப்பீர்கள். செம கலக்கலான காட்சி.

பாரதிராஜா பயிற்சியில் ஆண்களுடன் பெண்கள் மோதும் கபடி போட்டியை தெறிக்க விட்டுள்ளனர். ஆனால் பெண்கள் தொட்டவுடன் ஆண்கள் பறந்து செல்வது எல்லாம் ரொம்பவே ஓவர்.

பெண்கள் கபடியை மையப்படுத்தி இதுவரை எந்த படமும் வரவில்லை. அரைக்கால் சட்டை போட்டு வந்தால் பெண்களை தவறாக நினைப்பார்கள் என்பதை எல்லாம் தாண்டி வசனங்களும் கைகொடுத்துள்ளது.

பாரதிராஜா சசிகுமார் மோதிக் கொள்ளும் காட்சியில் ட்விஸ்ட் வைத்திருந்தால் ஏதாவது சுவாரசியம் இருந்திருக்கும். அதுவும் இல்லாமல் போச்சு.

ஆக மொத்தம்.. கென்னடி கிளப்… கெத்து கிளப்

ஏமாளியா? அறிவாளியா..? கோமாளி விமர்சனம்

ஏமாளியா? அறிவாளியா..? கோமாளி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1986 ஆண்டில் கதை பயணிக்கிறது. இதனையடுத்து ஸ்கூல், காலேஜ் என ஜெயம் ரவியும் கூடவே செல்கிறார்.

1999ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தன் பள்ளி தோழியிடன் காதலை சொல்ல நினைக்கிறார். தன் அப்பா கொடுத்த ஒரு அபூர்வ சிலையை அவளிடம் கொடுக்க நினைக்கிறார்.

ஆனால் அன்றைய தினம் ஒரு விபத்தில் சிக்கி கோமா ஸ்டேஜ்க்கு செல்கிறார் ரவி. அந்த சிலையை வில்லன் கே.எஸ். ரவிக்குமார் எடுத்து சென்றுவிடுகிறார்.

இதன்பின்னர் 16 ஆண்டுகள் கழித்து 2016ல் நினைவு திரும்புகிறார் ரவி. அதன் பின்னர் என்ன ஆனது? காதலி கிடைத்தாளா? சிலை கிடைத்து விட்டதா? என்பதே க்ளைமாக்ஸ்.

நடிகர்கள்…

தன் உடல் எடையை 20 கிலோ குறைத்து பள்ளி மாணவனாக மாறிய ஜெயம் ரவியை பாராட்டியே ஆக வேண்டும். அத்தனை பொருத்தம். அதுபோல் க்ளைமாக்ஸில் இவர் சொல்லும் மெசேஜ் சூப்பர்.

ஜெயம் ரவிக்கும் சம்யுக்தாவுக்கும் உள்ள காதல் காட்சிகள் 90S கிட்ஸ் மிகவும் பிடிக்கும். செம ஜாலியாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.

அதற்கு தகுந்த போல யோகிபாபுவும் செம கலாய். இவரும் பள்ளி மாணவனாய் போல் தலை முடியை மாற்றியிருப்பதும் ரசிக்க வைக்கிறது.

படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் இருப்பதே தெரியவில்லை.

டாக்டராக வரும் சாரா சபாஷ் போட வைக்கிறார். இவரின் மனைவிதான் ஜெயம் ரவியின் காதலி என்ற காட்சிகள் சிரிப்புக்கு கியாரண்டி.

பொன்னம்பலம் காட்சிகள் வேண்டாத ஒன்று. ஜெயம் ரவியின் தங்கையாக நடித்தவரும் சூப்பர். அவர் பேசும் வசனங்கள் நச்.

கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் வினோதினி காட்சிகள் அருமை. வினோதினி நிச்சயம் கண் கலங்க வைப்பார். கே.எஸ்.ரவிக்குமாரும் வில்லன் வேடத்தில் ரசிக்க வைத்துள்ளார்.

டெக்னீஷியன்கள்…

30 வருட காட்சிகள் அனைத்திலும் நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் பைசா நோட்டு, ஒளியும் ஒலியும் பாடல்கள் நன்றாக இருந்தாலும் இவர் பாடாமல் இருப்பது நல்லது.

இவரின் குரல் இருப்பதால் கேட்ட பாடலையே கேட்பது போல் உள்ளது. க்ளைமாக்ஸில் பின்னணி இசை பேசப்படும்.

பிரதீப் என்பவர் இயக்கியுள்ளார். செம ஜாலியாக படத்தை கொண்டு சென்று சோஷியல் மேசேஜ் சொன்ன விதம் அருமை.

ஆனால் வீட்டு லோன், அபூர்வ சிலை, சென்னை வெள்ளம் என நிறையவே க்ளைமாக்ஸில் தடுமாறியிருக்கிறார். ஒரு எம்எல்ஏ வீட்டில் ஜெயம் ரவி சென்று அங்கு ஏமாற்றுவது நம்பும்படியாக இல்லை.

நிலாவை காட்டி சோறு ஊட்டினோம். இன்று மொபைல் போனை காட்டி சோறு ஊட்டுகிறோம். ஆனால் பாசம் அன்றிலிருந்து இன்றுவரை ஒன்றுதான் என்கிறார். இதுபோன்ற வசனங்கள் கைத்தட்டல்களை அள்ளுகிறது.

வாட்ஸ் அப், இண்டர்நெட் வந்த பின்புதான் பாசம் எல்லாம் போச்சு என்கிறார் ஜெயம் ரவி. ஆனால் இவர் சம்பாதிக்க மட்டும் கோமாளி யூட்டிப் சேனல் நடத்துவது ஏன்..? இது ஓவரா இல்லையா..?

இதுபோன்ற லாஜிக்கை மறந்தால் படத்தை ரசிக்கலாம்.

கோமாளி… ரசிக்கலாம்..

மெகா கொ(கு)ளறுபடி… கொளஞ்சி விமர்சனம் (2/5)

மெகா கொ(கு)ளறுபடி… கொளஞ்சி விமர்சனம் (2/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சமுத்திரக்கனி, சங்கவி, ராஜாஜி, நைனா சர்வார், கிருபாகரன், நசாத் (குட்டி பையன்), பிச்சைக்காரன் மூர்த்தி
இசை : நடராஜன் சங்கரன்
ஒளிப்பதிவு : விஜயன் முனுசாமி
இயக்கம் : தனராம் சரவணன்
தயாரிப்பு : நவீன் (மூடர் கூடம்)
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

கதைக்களம்…

தன் விருப்பத்திற்கு ஏற்ப பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என நினைக்கும் சமுத்திரக்கனி. அதெல்லாம் முடியாது என அடம் பிடிக்கும் பையன் (கொளஞ்சி). இவர்களின் இடையே நடக்கும் பாசப் போராட்டம் தான் இந்த படத்தின் ஒன்லைன் கதை.

எப்போதும் கறுப்பு சட்டை அணியும் பெரியாரிஸ்ட் சமுத்திரக்கனி. ஊருக்குள் அடிக்கடி அட்வைஸ் செய்து வருகிறார். ஆனால் இவரது பையனோ எல்லா பிரச்சினையும் செய்கிறான். இதனால் தன் மகனை அடிக்கடி திட்டுகிறார்.

ஒரு நாள் சமுத்திரக்கனிக்கும் இவரது மனைவி சங்கவிக்கும் குடும்ப பிரச்சினை வரவே சங்கவி பிரிந்து செல்கிறார். இதனை பயன்படுத்திக் கொள்ளும் கொளஞ்சி அம்மாவுடன் செல்கிறான்.

தன் தாய் தந்தையுடன் சேரவே கூடாது என திட்டம் போடுகிறார். அதன்பின்னர் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கலைஞர்கள்…

சமுத்திரக்கனிக்கு ஏற்ற அட்வைஸ் கேரக்டர்தான். ஆனால் மானப்பாடம் செய்துவிட்டு பேசுவது போல சில காட்சிகளில் செய்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் சங்கவி. ஒரு அம்மாவாக அன்பாக வந்து போகிறார்.

இளம் காதலர்களாக ராஜாஜி மற்றும் நைனா சர்வார். நைனா தன் நடிப்பிலும் அழகிலும் நைசாக நம்மை கவர்ந்துவிடுகிறார்.

ராஜாஜி இன்னும் நடிப்பில் மெச்சுரிட்டி தேவை. இவரை ஒன் சைட்டாக காதலிக்கும் ஜெயந்தியும் (நிஜப் பெயர் ரஜினி) அழகாக வருகிறார்.

படத்தின் மெயின் பில்லரே கொளஞ்சியும் நசாத்தும். இருவரும் அடிக்கும் ரகளைகள் படத்திற்கு பெரிய பலம்.

அதுவும் குட்டி பையன் நசாத் செய்யும் அலப்பரைகள் தாங்க முடியாது. நல்ல தேர்வு. இவர்களும் இல்லை என்றால் தியேட்டரில் அமரவே முடியாது.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவு ஒரு சில காட்சிகளை தவிர மற்ற காட்சிகள் மோசம். இதுவே நம்மை படம் பார்க்க முடியாமல் செய்துவிடுகிறது.

நடராஜன் சங்கரன் இசையில் பாடல்களும் பெரிதாக கைகொடுக்கவில்லை.

ஒரு காட்சியில் தயாரிப்பாளர் நவீன் அவர்கள் மூடர் கூடம்2 என்ற படத்தை இயக்குவதாக காட்சிகள் உள்ளது.

சென்ட்ராயன் நடிக்கும் ஒரு பாடல் தமிழன்டா பச்சை தமிழன்டா என்ற பாடல் மட்டும் சூப்பராக உள்ளது. அந்த ஸ்பீட் படம் முழுதுவம் இருந்தால் படம் நன்றாக இருக்கும்.

பின்னணி இசை என்ற பெயரில் கொடுமையே நடந்துள்ளது. சமுத்திரக்கனி ஒரு கோயில் காட்சியில் தன் மகனை பாசமாக பார்ப்பார். அதில் தேவையில்லாத வேகமான இசை ஏனோ..?

இதில் நடுவே நடுவே கொளஞ்சி கொளஞ்சி என்ற வாய்ஸ் ஓவர் என்ற சத்தம் வேற பெரிய இம்சையாக உள்ளது.

நன்றாக கொடுக்கவேண்டிய கதையை நாடகமாக கொடுத்துள்ளார் இயக்குனர் தனராம் சரவணன். அப்பா மகன் பாசத்திலும் அழுத்தம் இல்லை. காதலும் சொதப்பல். காமெடி பெயரில் இம்சை இதுவே திரைக்கதையின் பலவீனங்களாக அமைந்துள்ளது-

ஆக.. கொளஞ்சி.. மெகா கொ(கு)ளறுபடி

Kolanji review rating

உணர்வு விமர்சனம்

உணர்வு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுப்பு என்பவர் இயக்கத்தில் அருள் டி ஷங்கர், அன்கிதா நவ்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள படம் ‘உணர்வு’.

பாமர மனிதர்களின் உணர்வுகளை அரசியல் களத்தில் முதலீடாக்கி சமூகத்தில் உயர நினைப்பவர்கள் அரசியல்வாதிகள்.

அதுபோன்ற மனிதர்கள் பற்றிய கதையே இப்படத்தின் கதைகரு.

வேலை தேடி அலையும் இளைஞன் அருள். நாயகி அன்கிதா ஒரு பத்திரிகையாளர்.

சீக்கிரமாக நிறைய சம்பாதித்து உயர வேண்டும் என நினைக்கும் நாயகன் பயன்படுத்தும் ஆயுதமே உணர்வு.

எனவே நாயகியும், நாயகனும் ஒரு சமூக செயற்பாட்டாளரை தேர்வு செய்கிறார்கள். அதன்பின் பிச்சைகாரர்களை அழைத்து வந்து வேலை கொடுத்து அவர்களை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள்.

அந்த சமூக செயற்பாட்டாளருக்கு தடையாக ஒரு எம்.எல்.ஏ இருக்கிறார்.

படத்தின் நாயகர்களுக்கு உதவ நாட்டின் முதல்வர் இருக்கிறார். அவருக்கு எதிராகவும் எம்.எல்.ஏ. இருக்கிறார்.

எம். எல். ஏ என்னவானார்.? முதல்வர் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீசியன்கள்..

நாயகனும், நாயகியும் புதுமுகங்கள். எனவே அவர்களிடம் பெரிய நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. ஜஸ்ட் பாஸ் மார்க் பெறுகிறார்கள்.

முதல்வராக வரும் அனுபவ நடிகர் சுமன் முதல்வர் வேடத்துக்கு பொருத்தமாக இருக்கிறார்.

சமூக சேவகராக இயக்குனர் சுபு நடித்துள்ளார்.

படத்தின் திரைக்கதை சரியாக அமையவில்லை.

எந்தவொரு ட்விஸ்ட்டும் இல்லை படத்தில் இல்லை என்பது குறை.

நம் பாட புத்தகத்தில் படித்த பல சம்பவங்கள் உள்ளது. பழைய கதையை போல் உள்ளது.

மொத்தத்தில் படம் பார்க்க பொறுமையாக உள்ளது.

உணர்வு ரீதியாக சில காட்சிகளை வைத்திருந்தால் உணர்வுகளை தொட்டு இருக்கலாம்.

More Articles
Follows