தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
கூத்துக் கலை கலைஞர்கள் வைபவ் மற்றும் ஆத்தங்குடி இளையராஜா.
இந்த தொழிலில் வருமானம் இல்லாத காரணத்தினால் வெளிநாடு செல்ல நினைக்கின்றனர்.
ஆனால் வெளிநாடு செல்லவும் பணம் இல்லாத காரணத்தினால் கிடைத்த டிரைவர் வேலையை செய்கின்றனர்.
அப்பொழுது ஒரு லாரியில் சரக்கு ஏற்றிக் கொண்டு டெலிவரி செய்ய போகும்போது அதில் 20கிலோ போதை பொருள் இருப்பது தெரிய வருகிறது.
இவர்கள் சுதாரிப்பதற்குள் போலீஸ் இவர்களை கைது செய்கிறது. அதன் பின்னர் என்ன ஆனது? வெளிநாடு சென்றார்களா? குற்றத்திலிருந்து தப்பித்தார்களா? என்பதே மீதி கதை.
கேரக்டர்கள்…
வைபவ் படம் என்றால் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இதில் சீரியஸ் கேரக்டர் செய்துள்ளார். இவருக்கு பதிலாக காமெடி சாரல்களை தூவ விட்டுள்ளார் நிஜ நாட்டுப்புறக் கலைஞர் இளையராஜா.
இவருக்கு இனி சினிமாவில் நல்ல நல்ல வாய்ப்புகளை எதிர்ப்பார்க்கலாம்.
படத்தின் நாயகி அனகா. ஆர்ப்பாட்டம் இல்லாத அழகான நடிப்பை கொடுத்துள்ளார்.
படம் முழுவதும் உச்சரிக்கப்படும் கேரக்டர் பெயர் தனபால்.. தனபால் யார்? தனபால் யார்? என கிளைமாக்ஸ் வரை நீண்டு கொண்டே செல்கிறது..
ஆனால் தனபாலாக நடித்துள்ள ஜோஜூ ஜார்ஜ் கேரக்டரில் வலுவில்லை. காட்சிக்கு காட்சி பில்டப் மட்டுமே இருக்கு.
ஆனால் திரையை அழுத்தமாக ஆக்கிரமித்துவிட்டார் ஜோஜு ஜார்ஜ். இவரை வைத்து பபூன் பார்ட் 2 எடுக்கலாம்.
போலீஸ் அதிகாரியாக தமிழ் சிறப்பாக நடித்துள்ளார். கம்பீரமான நடிப்பு. மூணார் ரமேஷ் நடிப்பும் ஓகே.
ஆடுகளம் நரேன் மற்றும் வ.ஐ. ச. ஜெயபாலன் உள்ளிட்டோர் அரசியல்வாதிகளாக அனுபவ நடிப்பை கொடுத்துள்ளனர்.
டெக்னீஷியன்கள்…
சந்தோஷ் நாராயணனின் இசையில் கூத்துப் பாடல் அருமை. ஆனால் வைபவ் அதுக்கு பொருந்தவில்லை. பின்னணி இசை ஓகே ரகம்.
போதை கடத்தல், அரசியல் களம், பாலிடிக்ஸ் ஈகோ, இலங்கை அகதிகள், போலீசில் சிக்கும் அப்பாவி என அனைத்தையும் அலசியிருக்கிறார் இயக்குனர் அசோக் வீரப்பன்.
போலீசால் தேடப்படும் குற்றவாளி வைபவ் கேரளாவில் இருந்து தமிழகம் வருகிறார். அவர் எப்படி வருகிறார்? என்று தெரியவில்லை. ஊருக்குள் எங்கும் ஓடுகிறார். போலீசிடம் சிக்கவில்லை. இதுபோன்ற லாஜிக் குறைகளை தவிர்த்து இருக்கலாம்.
ஆக இந்த பபூன்… பரவாயில்லை ரகமே..