தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நான் ஈ மற்றும் புலி ஆகிய படங்களில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கிச்சா சுதீப்.
தற்போது தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகி வரும் முடிஞ்சா இவன புடி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் சுதீப்பின் சமீபத்திய பேட்டியில்…. அஜித்து;ம் நானும் நண்பர்கள் என்றாலும் அவர் படத்தில் இதுவரை நடிக்கவில்லை.
அட்லீஸ்ட் அவருக்கு வில்லனாக நடித்து விட ஆசை என தெரிவித்துள்ளார்.
சிலநாட்களுக்கு முன்பு நடைபெற்ற முடிஞ்சா இவன புடி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சுதீப்புடன் நடிக்க தனக்கு ஆசை என தனுஷ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.