JUST IN ரூ 15 கோடி சம்பளத்தை பதுக்கிய விஜய்.; அபராதம் விதித்தது ஐடி.; கோர்ட் தடை

JUST IN ரூ 15 கோடி சம்பளத்தை பதுக்கிய விஜய்.; அபராதம் விதித்தது ஐடி.; கோர்ட் தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016-17ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்து இருந்தார் நடிகர் விஜய்.

அப்போது அந்த ஆண்டிற்கான வருமானமாக ரூ.35 கோடி 40 லட்சம் பெற்றதாக குறிப்பிட்டு இருந்தார்.

எனவே அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளது.

அதன்படி, ‘புலி’ படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாயை வருமானத்தை நடிகர் விஜய் கணக்கில் காட்டவில்லை என தெரிய வந்தது.

எனவே வருமானத்தை மறைத்த காரணத்திற்காக ஜூன் மாத இறுதியில் ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்தது வருமான வரித்துறை.

இதனையடுத்து தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் விஜய்.

மேலும் அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019ம் ஆண்டிலேயே உத்தரவிட்டு இருக்க வேண்டும் என்றும், காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார் விஜய்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்தார் நீதிபதி அனிதா சுமந்த்.

அவரது உத்தரவில்.. நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 16க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Tax evasion case: Interim stay on penalty imposed on Actor Vijay by IT

ஒரே மேடையில் 3 படங்களின் விழாவை நடத்திய சசிகலா புரொடக்ஷன்ஸ்

ஒரே மேடையில் 3 படங்களின் விழாவை நடத்திய சசிகலா புரொடக்ஷன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் புதிய உதயமாக துவக்கப்பட்டிருக்கிறது சசிகலா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம். ஒரு படத்தை உருவாக்குவதற்கான அனைத்து நிலைகளையும் ஒருங்கே சொந்தமாக கொண்டிருக்கும் இந்நிறுவனம் ஏவிஎம் அரங்கினுள் தற்போது செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியா நடிப்பில் “கா”, கிஷோர் நடிப்பில் “ட்ராமா” மற்றும் புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள லாகின் படங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இப்படைப்புகளின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும், இந்நிறுனத்தின் துவக்கவிழாவும் நேற்று இனிதே நடைபெற்றது.

ட்ராமா

இவ்விழாவினில்

சசிகலா புரடக்சன்ஸ் சார்பில் சலீம் பேசியதாவது…

இங்கு எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்நிறுவனத்தை புதிய நல்ல படைப்புகளை உருவாக்கும் எண்ணத்தில் உருவாக்கியுள்ளோம். படைப்புகளை பற்றி குழுவினர் கூறுவார்கள். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

“கா” பட இயக்குநர் நாஞ்சில் பேசியதாவது…

நான் கா படத்தின் இயக்குநர். இந்தப்படம் ஒரு ஹைபர்லிங் கதை. ஒரு காட்டில் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் படம். இந்தப்படத்திற்கு நடிகர் சலீம் கௌஷல் மிகப்பெரும் உதவியாக இருந்தார். அவர் இப்போது இல்லாதது பெரிய வருத்தம். எனக்கு வாய்ப்பளித்த ஜான் மேக்ஸ் அவர்களுக்கும், படத்தை வெளியிடும் ஆண்டனி தாஸ் அவர்களுக்கும் நன்றி.

“கா” பட இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு பேசியதாவது…

ரொம்பவும் சென்ஸிடிவான ஒரு கதை. இதில் பாடல்கள் இல்லை. பின்னணி இசை தான். நான் தான் இசையமைக்க வேண்டும் என்றார்கள். நான் சில காலமாக இசையமைக்கவில்லை.

லாக்டவுன் வந்ததால் இதில் நிறைய உழைக்க முடிந்தது. மொத்த படத்தில் 3 பக்கம் தான் வசனம். கமல் சாரின் பேசும் படத்திற்கு பிறகு நிறைய மௌனம் இருக்கும் படம். என் முழு உழைப்பை தந்துள்ளேன். ஜான் மேக்ஸ் இதனை முழு அர்ப்பணிப்புடன் எடுத்தார். அவரின் எண்ணத்திற்கு பலனாக ஆண்டனி தாஸ் வந்துள்ளார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் நன்றி.

தயாரிப்பாளர் அம்மா T சிவா பேசியதாவது…

திடீரென என்னை இந்த விழாவிற்கு அழைத்தார்கள் மூன்று சின்ன படங்களை ஒருத்தர் வாங்குகிறார் என்றார்கள் கண்டிப்பாக வருகிறேன் என்றேன். இப்போது தான் சின்ன படங்கள் என்று ஒதுக்குகிறார்கள். பெரிய படங்கள் இந்த காலத்தில் பிரேக் ஈவன் என்று தான் போய்க்கொண்டுள்ளது. திட்டமிட்டு செய்தால் சின்னப்படங்கள் பெரிய வெற்றியை பெறும்.

ஜான் மேக்ஸ் எடுத்த முதல் படம் மிகப்பெரும் வெற்றி ஆனால் அவர் ஏன் ஜெயிக்கவில்லை. அவர் இடையில் நிறைய சின்ன படங்கள் செய்தார். அவர் கண்டிப்பாக ஜெயிப்பார். சின்ன படங்களுக்கு ஆதரவு தரும் ஆண்டனி தாஸ் அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இந்தப்படங்கள் உங்களுக்கு பெரிய வெற்றியை தருமென வாழ்த்துகிறேன்.

தேர்தலில் ஜெயித்தாலும் எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலை தான் தமிழ் சினிமா இருக்கிறது. இது மாற வேண்டும். சின்ன படங்கள் ஜெயிக்க வேண்டும். இந்த படங்கள் அனைத்தும் ஜெயிக்க வாழ்த்துகிறேன் நன்றி.

ட்ராமா இயக்குநர் அர்ஜூன் திருமலா பேசியது…

தமிழில் இது எனது முதல் படம். இது சிங்கிள் ஷாட் படம். எல்லாப்படமும் எடுப்பது மிகவும் கஷ்டம் தான் ஆனால் இது சிங்கிள் ஷாட் என்பதால் இன்னும் கொஞ்சம் கஷ்டம் அதிகமாக இருந்தது. இது ஒரு கமர்ஷியல் படம். சிங்கிள் ஷாட்டில் மூன்று பாடல்கள், ஃபிளாஷ்பேக், என அனைத்து கமர்சியல் அம்சங்களும் உள்ளது.

படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி

ட்ராமா பட நடிகை காவ்யா வெல்லு பேசியதாவது

இது எனது முதல் படம் இந்தப்படத்தின் மூலம் தமிழ் கற்றுக்கொண்டேன். இது ஒரு சிங்கிள் ஷாட் மூவி என்பதால் பிராம்ப்டிங் அஸிஸ்டெண்ட் இருக்க மாட்டார்கள், ரீடேக் போக முடியாது. ஆனால் நிறைய கற்றுக்கொண்டேன். மதுரை பெண்ணாக நடித்திருக்கிறேன். உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் ஆண்டனி ராஜ் பேசியதாவது

சசிகலா புரடக்சன்ஸ் ஆண்டனி தாஸ் மற்றும் சலீம் அவர்களுக்கு தான் நன்றி கூற வேண்டும். உண்மையில் படம் ஆரம்பித்து 3 வருடங்களாக அநாதையாக இருந்தோம். எங்கள் படத்திற்கு உயிர் கொடுத்தார்கள் அவர்களுக்கு நன்றி.

லாகின் திரைப்பட இயக்குநர் ராஜேஷ் வீரமணி பேசியதாவது…

எங்கள் தயாரிப்பாளர் ஜேகே மற்றும் சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. 2 மணி நேரம் உங்களை சுவாரஸ்யப்படுத்தும் ஒரு கதையை உண்மையாக அர்ப்பணிப்புடன் சொல்லியுள்ளோம்

நடிகர் வினோத் கிஷன் பேசியதாவது…

லாகின் லாக்டவுன் முடிந்து ஷீட் போன படம், நாம் தெரியாமல் செய்யும் சின்ன தப்பு எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளக்குவது தான் இந்தப்படம் மிக சுவாரஸ்யமாக இருக்கும். இப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் ஜேகே மற்றும் வெளியிடும் சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனத்திற்கும். பெரிய நன்றிகள்.

ட்ராமா

இயக்குநர் தயாரிப்பாளர் திருமலை பேசியதாவது…

சசிகலா புரடக்சன்ஸ் யார் என்பது தான் தமிழ் சினிமாவின் பரபரப்பு கேள்வியாக இருந்து கொண்டிருந்தது. வெளியாகுமா என்ற நிலையில் மூன்று சின்ன படங்களை வாங்கி அதன் வெளியீட்டை உறுதி செய்து வெற்றி கொடி நாட்டியிருக்கிறது சசிகலா புரடக்சன்ஸ். மூன்று படைப்புகளையும் தரமான படைப்புகளாக தேர்ந்தெடுத்துள்ளார்கள். நல்ல படைப்பாளிகள் இதன் மூலம் வெளிவருவார்கள். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் பேசியதாவது…

சினிமாவில் சின்னப்படம் பெரிய படம் என பிரிக்க தேவையில்லை. ரிலீஸுக்கு பின் தான் ஒரு படம் சின்னப்படமா பெரிய படமா என தெரியும். மைனா ரிலீஸான பிறகு தான் பெரிய படமாக மாறியது. எப்போதும் வெற்றிக்கு பிறகு தான் அதை முடிவு செய்ய வேண்டும். கா படம் மிக நன்றாக இருக்கிறது. ஆண்டனி தாஸ் இந்தப்படங்களை பார்த்து வாங்கியிருக்கிறார் அவருக்கு இந்தப்படங்கள் பெரிய லாபத்தை தரும் நன்றி.

சசிகலா புரடக்சன்ஸ் சார்பில் ஆண்டனி தாஸ் பேசியதாவது…

சசிகலா புரடக்சன்ஸ் சார்பில் பல தமிழ்ப்படங்களுக்கு நாங்கள் போஸ்ட் புரடக்சன்ஸ் செய்து வருகிறோம். நான் பல படங்களை பார்த்து வந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் பலர், நம் படத்தை வாங்குவார்களா? நாம் ஜெயிப்போமா ? என கனவுகளோடு இருக்கிறார்கள். சசிகலா புரடக்சன்ஸ் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். 2 மணி நேரம் ரசிகனை மகிழ்விக்கும் அனைத்து படமும் பெரிய படம் தான். எங்கள் நிறுவனம் மூலம் நல்ல படைப்புகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு அளிப்போம்.

இந்த மூன்று படங்களை எப்படி வெற்றி படமாக மாற்ற வேண்டும் என்ற ரகசியம் தெரியும் இந்தப்படங்கள் கண்டிப்பாக வெற்றியை பெறும். இப்படங்களுக்கு பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

இத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

ட்ராமா

Sasikala Productions hosted 3 films event on one stage

ரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட் ஆடும் அசோக்செல்வன் சாந்தனு கீர்த்தி திவ்யா

ரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட் ஆடும் அசோக்செல்வன் சாந்தனு கீர்த்தி திவ்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ், மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கும்
படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது.

கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட இந்தபடத்தில்
அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் கீர்த்திபாண்டியன் , திவ்யா துரைசாமி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.

O2 , தம்மம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தமிழழகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

அரக்கோணம் சுற்றுவட்டாரபகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. தமிழகத்தின் நகரங்கள் , ஊர்களின் கிரிக்கெட் விளையாட்டின் உணர்வுப்பூர்வமான ஒரு வாழ்வியலையும் , நட்பு , கொண்டாட்டங்களையும் ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும் படியான கதையமைப்பில் உருவாக்கி இன்று முதல் படப்பிடிப்பை துங்குகிறார்கள்.

திரைக்கதை வசனம், – தமிழ்பிரபா மற்றும் ஜெய்குமார்..

இயக்கம் – ஜெய்குமார்.

தயாரிப்பு-
லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி,
நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித்.

கலை – ரகு
எடிட்டிங் – செல்வா RK
உடைகள்- ஏகாம்பரம் .
ஸ்டில்ஸ் – ராஜா

பி ஆர் ஓ – குணா

ரஞ்சித்

Neelam Productions Ranjith presents new movie based on cricket

நடிகரும் ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் கைது.; பிடிப்பட்டது எப்படி.?

நடிகரும் ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் கைது.; பிடிப்பட்டது எப்படி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீரங்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஹிந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா சண்டை பயிற்சியாளரும் நடிருமான கனல் கண்ணன் பங்கேற்றார்.

அவர் பேசும்போது.. “கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்’ என்று பேசியிருந்தார் கனல் கண்ணன்.

அவர் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று புகார்கள் போலீசில் வந்தன.

மேலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலர் குமரன் புகார் அளித்தார்.

எனவே இரு பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனால் தலைமறைவான கனல் கண்ணனை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் தங்கியிருப்பதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் வரவே அங்கு விரைந்து சென்ற போலீசார் கனல் கண்ணனை கைது செய்தனர்.

இந்து முன்னணி நிர்வாகியும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணனுக்கு ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீதிமன்றக் காவல் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.

Periyar remark Actor Stunt director Kanal Kannan arrested

தேசிய கொடி ஏற்றிய சூரி.; அடுத்த சர்ச்சையில் சிக்கினார்.. நெட்டிசன்கள் விளாசல்

தேசிய கொடி ஏற்றிய சூரி.; அடுத்த சர்ச்சையில் சிக்கினார்.. நெட்டிசன்கள் விளாசல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் ‘விருமன்’ பட இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது.

இந்த படத்தில் நடித்திருந்த சூரி அந்த விழா மேடையில் பேசும்போது… ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட பள்ளிக்கூடங்கள் கட்டலாம் என நடிகர் சூர்யாவின் கல்வி சேவையை பாராட்டி பேசி இருந்தார்.

இது இந்துக்களிடையே சில பிரிவினர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எப்போதும் கோயில்களை கூறி வைத்தே சிலர் பேசி வருகின்றனர். ஆனால் மசூதி & சர்ச்சைகளைப் பற்றி யாரும் பேசுவது இல்லை என கருத்து தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து மற்றொரு பிரஸ்மீட்டில் அதற்கு மன்னிப்பு கேட்டார் சூரி.

நான் இந்து கடவுளை வணங்குபவன் என பேசி இருந்தார்.

இந்த நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பாரத பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் விஜய் ஆகியோரது வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சூரி தன் வீட்டில் தேசியக்கொடியை ஏற்றி உள்ளார். ஆனால் அது இப்போது சர்ச்சையாகி உள்ளது.

வீடுகளை துடைக்கும் மாப்பிள் இருக்கும் கம்பை கழற்றி அதில் தேசியக் கொடியை ஏற்றி இருக்கிறார்.

இந்திய தேசியக்கொடி ஏற்றிய புகைப்படத்தை நடிகர் சூரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீட்டை சுத்தம் செய்யும் குச்சியில் தேசிய கொடியை கட்டுவது தேசியக்கொடியை அவமதிப்பதாகும் என நெட்டிசன்கள் சூரியை விளாசி வருகின்றனர்.

தற்போது அடுத்த சர்ச்சையில் சிக்கி விட்டார் சூரி.

Actor Soori hoists National flag at home made controversy

இணைவதற்கு முன்பே முட்டி மோதும் நடிகர் விக்ரம் & இயக்குனர் ரஞ்சித்

இணைவதற்கு முன்பே முட்டி மோதும் நடிகர் விக்ரம் & இயக்குனர் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சீயான் விக்ரம் & இயக்குனர் ரஞ்சித் இணைகின்றனர்.

எனவே இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆனால் இந்த கூட்டணிக்கு முன்பே இவர்களின் 2 படங்கள் ஒரே நாளில் ரிலீசாகி மோதவுள்ளன.

அதுபற்றிய விவரம் வருமாறு…

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘கோப்ரா’.

இந்த படத்தில் மதியழகன், கோப்ரா, பிளாக் ஹோப்ரா உள்ளிட்ட வித்தியாசமான வேடங்களில் நடித்திருக்கிறாராம் விகரம்.

கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்க பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இந்த படத்தின் மூலம் கோலிவுட்டில் நுழைகின்றனர்.

இவர்களுடன் மியா ஜார்ஜ், ரோஷன் மேத்யூ, பத்மபிரியா, முகமது அலி பெய்க், கனிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக கே எஸ் எஸ் லலித்குமார் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.

இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகிறது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதுபோல…

பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமன் நடித்துள்ள படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’.

இந்தப் படத்தில் நாயகியாக துஷாரா விஜயன், ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர், கலையரசன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

கிஷோர் குமார் ஒளிப்பதிவில் டென்மா இசையமைத்துள்ளார். இப்படத்தை யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படமும் ஆகஸ்ட் 31-ம் தேதியான விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள ‘பிசாசு 2’ படமும் இதே ஆகஸ்ட் 31ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor Vikram and Director Ranjith Clash

More Articles
Follows