தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சின்னத்திரையின் நட்சத்திர நடிகர் ஸ்ரீ குமார் (Shreekumar )கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஈடாட்டம்’ (EDATTAM ) எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
இதனை மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன் (K.Rajan ), இயக்குநர்கள் பேரரசு (Director Perarasu ), எழில் (Director Ezhil ), இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹைனா (Music Director A.R.Reihana ) தயாரிப்பாளரும், தொழிலதிபருமான என்.ஆர். தனபாலன் (N.R.Dhanapalan )ஆகியோர் இணைந்து வெளியிட, படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.
அறிமுக இயக்குநர் ஈசன் (Director ESAN ) இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘ஈடாட்டம்’ (EDATTAM ). இதில் ஸ்ரீகுமார், நடிகர் ராஜ சூர்யா (RAJA SURYA) நடிகைகள் வெண்பா (VENBA), அனு கிருஷ்ணா (ANU KRISHNA), தீக்ஷிகா(DHIKSHIKA), விஜய் விசித்திரன் (VISITHIRAN ), ‘காதல்’ சுகுமார் (KADHAL SUKUMAR ), பவர் ஸ்டார் (POWER STAR ), ‘பூவிலங்கு’ மோகன்(POOVILANKU MOHAN ), புலிக்குட்டி, விஜய் சத்யா, சாந்தி ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க மேற்பார்வையை கஜபதி (GAJABATHI ) மேற்கொள்ள, ஒளிப்பதிவை ஜேசன் வில்லியம்ஸ் ( JASON WILLIAMS ) கையாள, ஜான் பீட்டர் (JOHN PETER ) இசையமைத்திருக்கிறார்.
கலை இயக்கத்தை செந்தில் (SENTHIL ) கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஜென் முத்துராஜ் (ZEN MUTHURAJ ) மேற் கொண்டிருக்கிறார். அதிரடியான சண்டைக் காட்சிகளை சுரேஷ் ஹார்ஸ் பாபு (SURESH HARSE BABU )அமைத்திருக்கிறார்.
சைபர் கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஈசன் மூவிஸ் (ESAN MOVIES ) எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சக்தி அருண் கேசவன் (SAKTHI ARUN KESAVAN )தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் கவனத்தை கவர்ந்த நிலையில், தற்போது படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர்கள் பேரரசு, எழில், தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான என். ஆர். தனபாலன், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹைனா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஈசன் பேசுகையில்,…
‘ கலை தாய்க்கு என்னுடைய முதல் வணக்கம். கலையை மதித்தவர்கள் யாரும் கெட்டுப் போனதில்லை. கலையை நிஜமாக நேசித்தவர்கள் அனைவரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
13 வயதில் எனக்கு சினிமாவின் மீது ஆசை ஏற்பட்டது. அப்போது முதல் கோடம்பாக்கத்தில் வாய்ப்புகளைத் தேடி நான் சைக்கிளில் அலைந்திருக்கிறேன்.
எனக்கு தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தான் பூர்வீகம். அங்கிருந்து 90களில் சென்னைக்கு வந்தேன். நான் சைக்கிளில் அலைந்த போது சினிமா எங்கிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய மாமா ஏ. சி. சந்திரகுமார் திரைப்பட இயக்குநர். ‘செவத்த பொண்ணு’ எனும் படத்தை இயக்கியிருக்கிறார். என்னுடைய தாத்தா ஆறுமுக நாடார் நாடக மன்றம் என்று ஒரு கலைக்குழுவை வைத்து நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார்.
என்னுடைய மாமா, ’20 ஆண்டுகளாக போராடுகிறேன். எனக்கே சினிமா கை வரவில்லை. அதனால் பேசாமல் ஊர் பக்கம் சென்று விடு’ என எச்சரித்தார். ஆனால் நான் அவருக்குத் தெரியாமல் சென்னையில் வாய்ப்புக்காக சுற்றி இருக்கிறேன்.
சினிமாவிற்காக சிலம்பம், கராத்தே, பரதநாட்டியம் ஆகியவற்றைக் கற்றுக் கொண்டேன். இன்று சிலம்பம் என்றால் அனைவருக்கும் தெரியும் வகையில் ஆண்டவன் அருளால் பிரபலமாகி இருக்கிறேன்.
இந்த நிலையில் இரண்டு பேர் தூண்டுதலின் பேரில் நானும் இணைந்து படத்தை தயாரிக்க தொடங்கினோம்.
ஒரு கோடியில் தயாரிக்கலாம் என்றும், ஒவ்வொருவரும் தலா முப்பது லட்சத்தை முதலீடு செய்யலாம் என்றும் திட்டம் போட்டு படத்தின் பணிகளைத் தொடங்கினோம். முதலில் என்னுடைய பணத்தை செலவழிக்க தொடங்கினேன். ஆர்வத்தில் செலவுகளை செய்யத் தொடங்கினேன். 20 லட்ச ரூபா செலவு செய்த பிறகு.. இரண்டு நண்பர்களும் வெளியேறி விட்டார்கள்.
படத்தை நிறைவு செய்ய தெரியாமல் தடுமாறி நின்ற போது, என்னை வளர்த்த தாய் ரங்கநாயகி…, அவருடைய வீட்டை விற்று கொடுத்த பணத்தில் படத்தை நிறைவு செய்திருக்கிறேன்.
இந்த செயலை என்னைப் பெற்ற தாய் கூட செய்ய மாட்டார்கள். என்னை வளர்த்த தாய் என் மீது வைத்த பேரன்பின் காரணமாகத்தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. அவர்கள் இல்லையென்றால்… இந்த ஈசன் மூவிஸ் இல்லை. இந்த ‘ஈடாட்டம்’ திரைப்படமும் இல்லை.
இன்னொரு விசயத்தை குறிப்பிட வேண்டும். எனக்கு சினிமா ஆசை இருந்ததே தவிர… சினிமாவை முறையாக கற்றுக் கொள்ளவில்லை.
என்னுடைய ஆசையை படமாக உருவாக்கியதற்கு.., இப்படத்தில் பணியாற்றிய கஜபதி தான் காரணம். நான் இந்த படத்தில் இயக்குநர் என்று பெயரை மட்டும் தான் போட்டிருக்கிறேன். ஆனால் அனைத்து பணிகளையும் செய்தது கஜபதி தான்.
இந்த திரைப்படத்தில் பணியாற்றிய ஜேசன் வில்லியம்ஸ், ஜென் முத்துராஜ் என ஒவ்வொருவரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். இசைத்துறையில் ஒருவரால் லட்சக்கணக்கில் ஏமாற்றப்பட்டேன். அதன் பிறகு தான் ஜான் பீட்டரைச் சந்தித்தேன். அவர் எனக்கு பேருதவி செய்தார்.
சினிமாவை நிஜமாக நேசிப்பவர்கள்.. சினிமாவிற்கு உதவி செய்கிறார்கள் என்பதை ஜான் பீட்டர் மூலமாக உணர்ந்தேன்.
என்னிடம் சிலம்பம் கற்ற மாணவி பிரியா என்பவர் ஐந்து லட்ச ரூபாய் உதவி செய்ததால் இந்த படம் சரியான நேரத்தில் நிறைவடைந்தது. அதற்கும் இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..
13 வயதில் சினிமா ஆசையுடன் சென்னைக்கு வந்த நான் 43 வயதில் இயக்குநராகியிருக்கிறேன். 30 வருஷ தவம் நிறைவேறி இருக்கிறது. இதில் நான் மட்டும் வெற்றி பெறவில்லை. அனைவரும் ஒன்றிணைந்துதான் வெற்றி பெற்றிருக்கிறோம்.
சினிமாவில் தொடர்ந்து போராடி வெற்றி பெறுவேன். ஏனெனில் என்னுடைய குடும்பம் கலை குடும்பம். இந்த சின்ன படத்திற்காக நான் 20 லட்சம் ரூபாய் வரை ஏமாந்திருக்கிறேன். சினிமாவில் ஏமாற்றுபவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த திரைப்படத்தை வாழ்த்த வேண்டும் என அழைப்பு விடுத்தவுடன் வருகை தந்து வாழ்த்திய கே ராஜன், பேரரசு, எழில், ஏ ஆர் ரஹைனா தனபாலன் சிலம்பாட்ட கலைஞர் சண்முகம் சிலம்பாட்ட கழகத் தலைவர் ஆகியோர்களுக்கு நன்றி. ” என்றார்.
Director Easan emotional speech at Edattam trailer launch