தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கு திரையுலகில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோரது படங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
எனவே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிக எண்ணிக்கையில் தியேட்டரில் இவர்களின் படத்தை வெளியிடுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற தெலுங்கு தயாரிப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வருகிற பொங்கல் சமயத்தில் (தெலுங்கு சங்கராந்தி பண்டிகை) தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் தமிழ் படங்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ என்பவர் தான் தயாரித்து இருக்கிறார்.
இதனால் விஜய் படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட முடியாமல் தவித்து வருகிறாராம் தில்ராஜு. மேலும் நிறைய தெலுங்கு படங்களும் சங்கராந்தி பண்டிகையை குறிவைத்து தயாரித்து வருகிறார்களாம்.
2019 ஆம் ஆண்டில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தை சங்கராந்தி சமயத்தில் வெளியிடும்போது இதே மறுப்பு ஆலோசனையை தான் தெரிவித்தாராம் தில் ராஜூ.
தற்போது விஜய்யின் ‘வாரிசு’ மூலம் அவருக்கு அதே பிரச்சனை திரும்பி வந்துள்ளது.
ஓ.. இதை தான் கர்மா என்பார்களோ.??
Varisu facing release issue at Andhra and Telugana states