பாஜக கட்சியில் இணைந்தார் விஜய்யின் ‘வாரிசு’ பட நடிகை

பாஜக கட்சியில் இணைந்தார் விஜய்யின் ‘வாரிசு’ பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த ஆண்டு ஜனவரி 11-ம் தேதி விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகை ஜெயசுதா.

இவர் கமல், ரஜினி உட்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்தவர் நடிகை ஜெயசுதா.

குறிப்பாக இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’அரங்கேற்றம்’, ’சொல்லத்தான் நினைக்கின்றேன்’, ’அபூர்வ ராகங்கள்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஜெயசுதா கடந்த 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைத்து செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஜெயசுதா

இதனை அடுத்து அவர் 2016 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.

பிறகு, 2019 ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

இந்த நிலையில், நடிகை ஜெயசுதா தற்போது நான்காவது கட்சியாக பாஜகவில் இணைந்து உள்ளார்.

நேற்று தெலுங்கானா மாநில பாஜக பொறுப்பாளர் தருண் சுக் முன்னிலையில் அவர் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.

மேலும், தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நடிகை ஜெயசுதா மீண்டும் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

ஜெயசுதா

Vijay’s ‘Varisu’ actress jayasudha joins BJP party

நடிகை ஸ்ருதி ஷண்முகப்ரியாவின் கணவர் திடீர் மரணம்

நடிகை ஸ்ருதி ஷண்முகப்ரியாவின் கணவர் திடீர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை சன் டிவியில் வெளியான ‘நாதஸ்வரம்’ தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஸ்ருதி ஷண்முகப்பிரியா.

இதை தொடர்ந்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா போன்ற பல தொடர்களில் நடித்து வந்தார்.

இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஸ்ருதி ஷண்முகப்பிரியா கடந்த ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு 2022 போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசை வென்ற அரவிந்த் சேகர் என்பவரை கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு ஸ்ருதி ஷண்முகப்பிரியா சின்னத்திரையில் இருந்து விலகி இருந்தார்.

இந்நிலையில், ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

30 வயதான அரவிந்த் சேகரின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் மறைவிற்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து, இவர் மனைவிக்கு ஸ்ருதிக்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Tamil TV actress Shruti Shanmuga Priya’s husband Arvind dies

‘குட் நைட்’ ரசிகர்களுக்கு குட் நியூஸ்.; மீண்டும் மணிகண்டனுடன் கூட்டணி

‘குட் நைட்’ ரசிகர்களுக்கு குட் நியூஸ்.; மீண்டும் மணிகண்டனுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரிய ஹீரோக்களின் படம் மட்டுமே தியேட்டர்களில் பெரிய வசூல் செய்யும் என்பதை மாற்றி விமர்சன ரீதியான வரவேற்பு மட்டுமின்றி நல்ல வசூலையும் பெற்று தமிழ்சினிமாவுக்கு நம்பிக்கையூட்டும் படமாக அமைந்தது ‘குட்நைட்’.

அப்படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் அடுத்தபடம் தயாராகிறது.

குட் நைட்

இந்தப் படத்திலும் ஒரு புது இயக்குநர் அறிமுகமாகிறார்.

பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கும் இந்தப் புதியபடத்தில் குட்நைட் மணிகண்டனே கதாநாயகனாக நடிக்கிறார். மாடர்ன் லவ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். கண்ணாரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இசை ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா,படத்தொகுப்பு பரத் விக்ரமன், கலை ராஜ்கமல் பாடல்கள் மோகன்ராஜன் என வலிமையான கூட்டணி அமைந்துள்ளது.

குட் நைட்

தயாரிப்பு – நசரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன்

தற்காலக் காதல் அதில் நடக்கும் நிகழ்வுகள் ஆகியன குறித்த விவாதத்தை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லக் கூடிய படமாக இது இருக்கும் என்கிறார் இயக்குநர் பிரபு ராம்வியாஸ்.

குட் நைட்

சென்னை மற்றும் கோவா அருகேயுள்ள கோகர்ணா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. முதல்நாள் படப்பிடிப்பை கிளாப் அடித்துத் தொடங்கிவைத்தார் விஜய் சேதுபதி. இப்போது படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுவருகிறது.

குட் நைட்

Good Night Makers Announce Their 2nd Production Venture

ஒற்றுமைக்கான முயற்சியில் பப்லு – ஜேம்ஸ்வசந்தன் – ரேகா நாயர் பங்கேற்பு.; Eternal Gift First look Release

ஒற்றுமைக்கான முயற்சியில் பப்லு – ஜேம்ஸ்வசந்தன் – ரேகா நாயர் பங்கேற்பு.; Eternal Gift First look Release

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கண்டறி… மீட்பு… புத்தாக்கம் ( Find.. Rescue… Recover..) எனும் கொள்கைகளை இலட்சியமாகக் கொண்டு இயங்கி வரும் ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு (UNITED SAMARITAN INDIA FOUNDATION) இந்தியா அறக்கட்டளை‌ சார்பில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு, புத்தக வெளியீடு, கண் தான சான்றளிப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்று திறனாளிகளை கௌரவப்படுத்தும் நிகழ்வு மற்றும் கலை நிகழ்ச்சிகள் ‘ஒற்றுமைக்கான புது முயற்சி’ ( ‘The Togetherness Initiative ) எனும் பெயரில் சோழிங்கநல்லூரில் உள்ள முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Mohamed Sathak college Arts and science ,Sholinganallur) வளாகத்தில் நேற்று ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பப்லு - ஜேம்ஸ்வசந்தன் - ரேகா நாயர்

முன்னாள் மிஸ் தமிழ்நாடு டாக்டர் ஷீபா லூர்தஸ் (Dr.Sheeba Lourdhes ) தலைமையில் இயங்கிக் கொண்டு இருக்கும் ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு ஒருங்கிணைக்கும் இவ்விழாவிற்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. ராகுல் நாத் (Thiru.A.R.Rahul Nath IAS-District collector chengalpattu )இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாட்டு துணைத்தலைவரான திரு சங்கர் நாகநாதன் (Thiru.Sankar Naganathan ) ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.

இவர்களுடன் தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திர நடிகரான பப்லு பிருத்விராஜ் (Actor Babloo Prithiviraj ), இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் (Music Director James vasantham ), நடிகை ரேகா நாயர் (Actress Rekha Nair ) உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பப்லு - ஜேம்ஸ்வசந்தன் - ரேகா நாயர்

இந்நிகழ்வில் I AM TOUGH… BECAUSE I AM GOOD & MAGIC OF QUIET EGO எனும் இரண்டு உளவியல் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

முகமது சதக் கலை & அறிவியல் கல்லூரிகள் (Mohamed sathak college of arts &science), ஆசான் மெமோரியல் கலை & அறிவியல் கல்லூரி(Adan Memorial college of arts &sciene)), சென்னை கிறிஸ்தவ கல்லூரி (Madras christian college)., காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி(the Quaide Milleth college for men ) ஆகிய நான்கு கல்லூரியைச் சேர்ந்த 2500 மாணவ மாணவிகள் தங்களுடைய கண்களை தானமாக பெறுவதற்கு ஒப்புதல் அளித்திருந்தனர். அதற்கான‌ சான்றிதழ் கல்லூரிகளுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

பப்லு - ஜேம்ஸ்வசந்தன் - ரேகா நாயர்

தனி திறமைகளால் ஜொலிக்கும் 25-க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு கௌரவப்படுத்தும் வகையில் விருது வழங்கப்பட்டது.

ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு (UNITED SAMARITAN INDIA FOUNDATION) இந்தியா அறக்கட்டளை அமைப்பின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான டாக்டர் ஷீபா லூர்தஸ் (Dr.Sheeba Lourdhes ) இயக்கத்தில் உருவான ‘ எடனர்ல் கிஃப்ட் ‘(Eternal Gift ) எனும் குறும்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. ETERNAL GIFT என்கிற ஷார்ட் பிலிம் ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பின் மூலம் 25க்கும் மேற்பட்ட உலக திரைப்பட விழாக்களில் இந்தியா சார்பாக பங்கேற்க உள்ளது.

இதைத் தவிர்த்து வருகை தந்திருக்கும் பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

பப்லு - ஜேம்ஸ்வசந்தன் - ரேகா நாயர்

Babloo James Vasanthan Rekhanair participated in Togetherness Initiative

‘டிமான்ட்டி காலனி 2’ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் அப்டேட்

‘டிமான்ட்டி காலனி 2’ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2015-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’.

‘டிமான்ட்டி காலனி’ முதல் பாகம் வரவேற்பை பெற்றதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வருகிறது.

இப்படத்தில் அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

இப்படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவந்ததையடுத்து சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் (03-08-2023) மாலை 5.01-க்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘டிமான்ட்டி காலனி -2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மேலும், ‘டிமான்ட்டி காலனி -2’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிமான்ட்டி காலனி 2

Arulnithi’s Demonte Colony 2 first look poster released

இளையராஜாவின் வாழ்க்கை கதையில் தனுஷ்.; இயக்குனர் யார் தெரியுமா.?

இளையராஜாவின் வாழ்க்கை கதையில் தனுஷ்.; இயக்குனர் யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவின் மிகப் பெரிய ஆளுமை என்றால் அதில் இளையராஜாவை சொல்லலாம்.

50 ஆண்டுகளாக இசை உலகை தன்னுடைய இசை தாலாட்டால் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

கிட்டத்தட்ட சுமார் 1500 படங்களுக்கு மேல் இவர் இசையமைத்துள்ளார். தமிழக ரசிகர்களை பொறுத்தவரை அவர்களது வாழ்வில் இன்பம் துன்பம் என எல்லா உணர்வுகளிலும் தன் இசையால் கலந்திருப்பவர் இளையராஜா.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இவர் இசையமைத்திருக்கிறார்.

இசைஞானி மேஸ்ட்ரோ என அழைக்கப்படும் இளையராஜாவின் வாழ்க்கையை திரைப்படமாக முயற்சித்து வருகின்றனர்.

இளையராஜா வேடத்தில் நடிகர் தனுஷை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷை வைத்து இளையராஜாவின் பயோபிக்கை உருவாக்கவுள்ளதாக பாலிவுட் இயக்குனர் ஆர்.பால்கி என்ற ஆர்.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆர்.பால்கி

ஹிந்தியில் அமிதாப்பச்சன், தனுஷ் நடிப்பில் ரிலீசான ‘ஷமிதாப்’ என்ற படத்தை இயக்கியவர் தான் ஆர்.பால்கி.

அவரின் சமீபத்திய பேட்டியில்…

“என் வாழ்நாள் கனவு என்பது, இளையராஜாவின் வாழ்க்கையை படமாக்குவது. அதில் தனுஷை நடிக்க வைத்து இயக்குவதுதான்.

அப்படி மட்டும் நடந்தால், அது நான் தனுஷுக்கு கொடுக்கக்கூடிய பெரிய பரிசாக இருக்கும்.

என்னைப்போல் தனுஷும் இளையராஜாவின் ரசிகர். இவ்வாறு ஆர்.பால்கி கூறினார்.

இவர் ஹிந்தியில் இயக்கிய ‘சீனி கம்’, ‘பா’, ‘ஷமிதாப்’, ‘கி அன்ட் கா’ ஆகிய படங்களுக்கு இளையராஜா இசை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்போம்.

ஆர்.பால்கி

Dhanush will act in ilaiyaraaja biopic

More Articles
Follows