‘வாரிசு’ பட விநியோகத்தில் வரி ஏய்ப்பு.; என்ன செய்யப் போகிறார் விஜய்.?

‘வாரிசு’ பட விநியோகத்தில் வரி ஏய்ப்பு.; என்ன செய்யப் போகிறார் விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘வாரிசு’.

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், எஸ் ஜே சூர்யா, பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 11-ம் தேதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், ‘வாரிசு’ பட விநியோகத்தில் நடந்த வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக தகவல்கள் வந்ததுள்ளன. இதோ அது தொடர்பான ஆதாரங்கள்…

வாரிசுவாரிசு

Tax fraud in Vijays Varisu movie distribution

3 மாநிலங்களில் ‘சுப்ரமணியபுரம்’ ரீ-ரிலீஸ்.; சசிகுமார் – சமுத்திரக்கனி கேக் வெட்டி கொண்டாட்டம்

3 மாநிலங்களில் ‘சுப்ரமணியபுரம்’ ரீ-ரிலீஸ்.; சசிகுமார் – சமுத்திரக்கனி கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி சசிகுமார் இயக்கத்தில் வெளியான படம் ‘சுப்ரமணியபுரம்’.

இப்படத்தில் ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, சுவாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பில் உருவான படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

‘சுப்ரமணியபுரம்’ படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ரீ-ரிலீசாக உள்ளது என படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் ‘சுப்ரமணியபுரம்’ படம் தமிழகம், கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் செய்யப்பட்டது.

வடபழனி கமலா தியேட்டரில் இன்று காலை திரையிடப்பட்ட ‘சுப்ரமணியபுரம்’ படத்தை பார்ப்பதற்கு சசிகுமார், சமுத்திரக்கனி, ஜெய் ஆகியோர் வந்தனர்.

அதன்பின்னர் ‘சுப்ரமணியபுரம்’ படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

சுப்ரமணியபுரம்

The crew of ‘Subramaniapuram’ re release celebrated by cutting a cake

ஜோதி எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமானவள்.. – ரவீனா ரவி

ஜோதி எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமானவள்.. – ரவீனா ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், ரவினா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

‘மாமன்னன்’ படம் கடந்த ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், ‘மாமன்னன்’ படத்தில் ரத்னவேலுவாக நடித்த ஃபகத் பாசிலின் மனைவியாக ஜோதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த ரவினா ரவி.

ரவினா ரவி தற்போது அந்த பாத்திரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அன்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை; ஜோதி எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருப்பாள். நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரவீனா ரவி

raveena ravi tweet about maamannan movie his character

கொல்கத்தா திரைப்பட விழாவில் ‘கள்வா’வுக்கு விருது பெற்ற ஜியா

கொல்கத்தா திரைப்பட விழாவில் ‘கள்வா’வுக்கு விருது பெற்ற ஜியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவின் மாபெரும் இயக்குனர்கள் சத்யஜித் ரே, ரித்விக் காட்டக், மிருணாள் சென். இந்த மூன்று பெங்காலி இயக்குனர்களின் பெயரில் ஆண்டு தோறும் சத்யஜித் ரித்விக் மிருணாள் சர்வதேச திரைப்பட விழா கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான விழா நிறைவு நிகழ்ச்சியில் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் ஜியா எழுதி, இயக்கியுள்ள கள்வா குறும்படத்துக்கு சிறந்த ரொமான்டிக் திரில்லர் படத்துக்கான விருது வழங்கப்பட்டது.

இதை ஜியா பெற்றுக் கொண்டு பேசும்போது…

“எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி, எனது குடும்பத்தாருக்கும், கள்வா படக்குழுவினருக்கும் சத்யஜித் ரித்விக் மிருணாள் திரைப்பட விழா குழுவினருக்கும் நன்றிகள்’ என்றார்.

தனது பேச்சை முடிக்கும்போது, ‘எல்லா புகழக்கும் இறைவனுக்கே’ என தமிழில் ஜியா கூறும்போது, கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் 643 படங்கள் போட்டியிட்டன.

இதில் விருதுக்காக 85 படங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் இந்தி, பெங்காலி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, மராத்தி, உருது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்கள் அடங்கும்.

இதில் ஒரு படமாக ‘கள்வா’ தேர்வானது குறிப்பிடத்தக்கது.

கிங் பிக்சர்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள ‘கள்வா’ படம், இதுவரை 35 ஆயிரம் பார்வையாளர்களை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது. திரையுலகை சேர்ந்த பலர், இந்த குறும்படத்தை பார்த்து பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Kalwa won award at Kolkatta film festival

தமன் இசையில் அர்ஜுன்தாஸ் – தன்யா இணையும் படம்.; இயக்குநர் இவரா.?

தமன் இசையில் அர்ஜுன்தாஸ் – தன்யா இணையும் படம்.; இயக்குநர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மெளனகுரு’, ‘மகாமுனி’ படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் கவனம் பெற்றவர் இயக்குனர் சாந்தகுமார்.

இவர் இயக்கவுள்ள மூன்றாவது படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க, ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், ஜிஎம் சுந்தர், எஸ்.ரம்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தை ‘டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி’ தயாரிக்கிறது.

தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு சிவா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அர்ஜுன்தாஸ் - தன்யா

arjun das’s new movie first look poster release in tomorrow

விஜய் – ரஜினிக்குப் பிறகு பிரபல நடிகரை இயக்கும் நெல்சன்

விஜய் – ரஜினிக்குப் பிறகு பிரபல நடிகரை இயக்கும் நெல்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2018-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘கோலமாவு கோகிலா’.

இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலிப்குமார்.

இயக்குனர் நெல்சன் திலிப்குமார் முதன் முதலில் சிம்புவை வைத்து ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தை இயக்கினார்.

சில மாதங்கள் படப்பிடிப்பு நடைப்பெற்ற நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் தடைப்பட்டு வெளியாகாமல் போனது.

அன்றைய பொழுது அப்படத்தில் இடம்பெற்ற சிம்புவின் போஸ்டர்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இன்றளவும் சிம்பு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களில் வேட்டை மன்னனும் ஒன்று.

அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். இதன்மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, விஜய்யை வைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார்.

தற்போது ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ஷோ கேஸ் வீடியோ நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ படத்தை மீண்டும் கையில் எடுக்க நெல்சன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் வெளியீட்டிற்கு பிறகு சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ படத்தின் பணிகளில் நெல்சன் இறங்கவுள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Director Nelson’s next after ‘Jailer’

More Articles
Follows