தமிழகத்தில் மனிதக் கறி.. ‘பவுடர்’ ட்ரைலர் நீக்கம்.; வீழ்த்த நினைத்தவர்களுக்கு விஜய்ஸ்ரீ பதிலடி

தமிழகத்தில் மனிதக் கறி.. ‘பவுடர்’ ட்ரைலர் நீக்கம்.; வீழ்த்த நினைத்தவர்களுக்கு விஜய்ஸ்ரீ பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கி தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் ‘பவுடர்’.

இந்த படத்தில் நிகில் முருகன், வித்யா பிரதீப், மொட்ட ராஜேந்திரன், சிங்கம் புலி, ஆதவன், அனித்ரா நாயர், வையாபுரி, ஒற்றன்துரை, சதீஷ், முத்து, ராமராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த வருகின்றனர்.

லீயாண்டர் லீ மார்ட்டி இசையமைக்க, ராஜபாண்டி & பிரஹத் ஒளிப்பதிவு செய்ய குணா எடிட்டிங் செய்து வருகிறார்.

இந்த படத்தை மோகன்ராஜ் என்பவர் இணை தயாரிப்பாளராக தயாரித்து வருகிறார்.

விரைவில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு சென்சாரில் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த படத்தின் டிரைலர் & இசை வெளியீட்டு விழா அக்டோபர் 1ஆம் தேதி சென்னையில் பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது.

அன்றைய தினம் மாலை பவுடர் படத்தின் டிரைலர் இணையதளங்களில் வெளியானது.

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயமாக இந்த படத்தில் இடம் பெற்றது மனிதக்கறி வேட்டை.

வட இந்தியாவில் அகோரிகள் மத்தியில் மனிதக்கறி என்பது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் இது தமிழகத்திற்கு ஊடுருவி வருவதாக இந்த படத்தில் காட்சிகள் வைத்துள்ளார் விஜயஸ்ரீ.

இதற்கு சில நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த ட்ரெய்லர் யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டது.

பின்பு விஜய் ஸ்ரீ இதற்கான விளக்கம் அளித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் பவுடர் படத்தின் டிரைலர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து விஜய் ஸ்ரீஜி.யிடம் பேசியபோது.. “என்னை வீழ்த்த நினைப்பவர்களுக்கு… சிறிது நேரம் வீழ்ந்தேன் பின்பு மலையேற உயர்ந்தேன் என ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்தார்.

Here’s #Powder official trailer

https://www.filmistreet.com/video/powder-official-trailer/

Human Meat issue Powder Trailer removed Vijay Sri Statement

தல ரசிகர்கள் மீது விஜய் சேதுபதி கோபம்

தல ரசிகர்கள் மீது விஜய் சேதுபதி கோபம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அவர் தனது உரையின் போது கேட்கும் திறனின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, “செல்வத்தில் செல்வம் செவி செல்வம்…” என்று மேற்கோள் காட்டினார், இது “செல்வத்துள் எல்லாம் தலை” என்று முடிவடைகிறது.

“தலை” என்ற வார்த்தையைப் பற்றிக் கொண்ட மாணவர்கள் சிலர், “தல” என்று கத்த ஆரம்பித்தனர்.

சைகை மூலம் வெளிப்படையாக வருத்தப்பட்ட விஜய் சேதுபதி பேச்சைத் தொடர்வதற்கு முன், அவரது விரக்தியைக் காட்டினார்.

கதை திரைக்கதை வசனம் எழுதி நடிக்கும் யோகி பாபு

கதை திரைக்கதை வசனம் எழுதி நடிக்கும் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகி பாபு.

இவர் ரஜினியுடன் ‘தர்பார்’, அஜித்துடன் ‘விஸ்வாசம்’, விஜய் உடன் ‘சர்க்கார்’ சிவகார்த்திகேயனுடன் ‘ரெமோ’ உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.

மைக் மோகன் உடன் ஹரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இவையில்லாமல் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்த வருகிறார்.

இவர் நடித்த ‘மண்டேலா’ படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த அவதாரமாக கதை திரைக்கதை வசனம் எழுதி ஒரு படத்தில் நடிக்க உள்ளார் யோகி பாபு.

இந்த படத்தை ரமேஷ் சுப்ரமணியன் என்பவர் இயக்குகிறார். லெமன் லீஃப் நிறுவனத்தின் இது மூன்றாவது படைப்பாகும்.

இந்த படத்தின் பூஜை இன்று அக்டோபர் 3ல் நடைபெற்றது.

அடுத்தது என்ன இயக்குனர் தானே யோகி பாபு.?

யோகி பாபு

.@iYogiBabu is all set to star in #LemonLeafProductions ‘Production No.3’ for which he has written the story, screenplay and dialogues!

Directed by
#RameshSubramaniam kickstarted with a pooja that took place at a #MuruganTemple yesterday!

#YogiBabu
@RIAZtheboss l #filmistreet https://t.co/OOiRkpma95

Yogi Babu writes story screenplay dialogue and acts

சூரியா மற்றும் ஜோதிகாவின் பிள்ளைகள் தேவ் மற்றும் தியா ஃபேமிலி கிளிக் வைரல்

சூரியா மற்றும் ஜோதிகாவின் பிள்ளைகள் தேவ் மற்றும் தியா ஃபேமிலி கிளிக் வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

68 வது தேசிய திரைப்பட விருது விழாவில், சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இருவரும் இணைந்து தயாரித்த சூரரைப் போற்று சிறந்த திரைப்படத் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.

விழாவின் புகைப்படங்களை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நட்சத்திர ஜோடி தங்களது பெரிய வெற்றியை தங்கள் மகள் தியா மற்றும் மகன் தேவுடன் கொண்டாடினர்.
“பெருமையும் ஆசீர்வாதமும்” என்று ஜோதிகா அந்த பதிவிற்கு தலைப்பிட்டுள்ளார்.

சூர்யா, ஜோதிகா வீட்டில் இரட்டைக் கொண்டாட்டங்கள் நடக்கும் நேரம் இது.

அன்பையும் பெருமையையும் பொழிந்த ரசிகர்களே…; வானில் மிதக்கும் வந்தியதேவன்

அன்பையும் பெருமையையும் பொழிந்த ரசிகர்களே…; வானில் மிதக்கும் வந்தியதேவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கியிருந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியதேவனாக நடித்திருந்தார் கார்த்தி.

இந்த படம் வெளியாகி ஓரிரு தினங்களே ஆன நிலையில் உலகம் முழுவதும் ரூ 150 கோடியை வசூலித்து வெற்றி நடைப் போட்டு வருகிறது.

இந்த நிலையில் இப்பட வெற்றி குறித்தும் தன் அனுபவம் குறித்தும் நடிகர் கார்த்தி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது…

வந்தியத்தேவனாக நடித்த அனுபவம், அற்புதமான பயணம். அந்த மகத்தான உணர்வை நன்றி என்ற வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.

பொன்னியின் செல்வன் என்றொரு மாயாஜால காவியம் படைத்த அமரர் கல்கிக்கு முதலில் ஒரு பெரிய வணக்கமும் மரியாதையும் சொல்லிக் கொள்கிறேன்.

இத்தனை வருடங்களாக இதைப் பின்பற்றி மறக்க முடியாத தலைசிறந்த படைப்பை வடிவமைத்த எங்கள் மணிரத்னம் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். இதுவரை பார்த்திராத பிரமிக்க வைக்கும் காட்சிகளைக் கொடுத்து செட்டில் உந்து சக்தியாக இருந்த ரவிவர்மன் அவர்களுக்கு நன்றி.

எங்களின் பொக்கிஷம் ஏ ஆர் ரஹ்மான் தனது இசையால் நம்மை பரவசப்படுத்தியதற்காக நன்றி. இந்த பொற்காலத்தை மீண்டும் உருவாக்கியதற்காக தோட்ட தரணி க்கு நன்றி. இவரைத் தவிர வேறு யாரும் இந்தளவுக்கு உருவாக்கி இருப்பார்களா என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

ஜெயமோகன் சார் எழுதிய அருமையான வசனம் மற்றும் ஒரு வரியின் மூலம் அழியாத கல்கி சாரின் எழுத்தின் உணர்வை வெளிப்படுத்திய ஸ்ரீகர் பிரசாத் சாருக்கு நன்றி.

தனிச்சிறப்பு மிக்க கதாபாத்திரங்களை மிகவும் நிஜமாக காட்டியதற்காக ஏகா மற்றும் விக்ரம் கெய்க்வாட் சாருக்கு நன்றி. டவுன்லி, ஆனந்த் மற்றும் குழுவினர் உற்சாகமான மற்றும் செழுமையான ஒலிகளுக்காக நன்றி. திரைக்குப் பின்னால் தங்களுடைய முழு உழைப்பையும் கொடுத்த சினிமாவை காதலிக்கும் எண்ணற்றோர்களுக்கு நன்றி.

மேலும், இந்த மாபெரும் படைப்பை உருவாக்குவதற்காக ஒருவரையொருவர் மற்றும் சினிமா கலையின் மீது மிகுந்த அன்புடன் கூடிய அற்புதமான நடிகர்கள், மரியாதைக்குரிய மூத்தவர்கள் மற்றும் எனது அன்பான சக ஊழியர்கள். ஒவ்வொரு நாளும் கணக்கைப் பார்த்த சிவாவுக்கும், இந்த ஒட்டுமொத்த குழுவின் மீது நம்பிக்கை வைத்த சுபாஸ்கரன் சாருக்கும், இறுதியாக இப்படிப்பட்ட அன்பையும் பெருமையையும் எங்களுக்கு பொழிந்த அன்பான ரசிகர்களே, நண்பர்களே, சினிமா ஆர்வலர்களே, உங்கள் எல்லா அன்பையும் பெறுவது மிகவும் மகத்தானது.

நன்றி
நன்றி
நன்றி!

– கார்த்தி. இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

‘விக்ரம்’ & ‘பொன்னியின் செல்வன்’ மெகா ஹிட்.; இந்த வெற்றிகள் சொல்வது என்ன? ஓர் அலசல்

‘விக்ரம்’ & ‘பொன்னியின் செல்வன்’ மெகா ஹிட்.; இந்த வெற்றிகள் சொல்வது என்ன? ஓர் அலசல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாகவே தமிழ் சினிமாவை குறித்து பேசும்போது.. “முன்னணி ஹீரோக்கள் இணைந்து நடிப்பதில்லை” என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது’.

எம்ஜிஆர் – சிவாஜி ‘கூண்டுக்கிளி’ என்ற ஒரே ஒரு படத்தில் இணைந்து நடித்தனர்.

ரஜினி – கமல் பல படங்களில் இணைந்து நடித்தாலும் அது நடந்து 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. விஜய் – அஜித் ‘ராஜாவின பார்வையிலே’ என்ற ஒரே ஒரு படத்தில் தான் இணைந்து நடித்தனர். அதுவும் வெளியாகி 20 வருடங்கள் ஆகிவிட்டது.

‘பிதாமகன்’ என்ற ஒரே படத்தில் விக்ரம் – சூர்யா இருவரும் இணைந்து நடித்தனர்.

சிம்பு – தனுஷ் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை. அது போல சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவில்லை.

இவர்களின் ரசிகர்களும் ஏட்டிக்கு போட்டியாக நினைக்கின்றனர். மேலும் சண்டைகள் தான் அடிக்கடி நடக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி பகத்பாசில் சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலும் சூப்பர்.

அதுபோல ஓரிரு தினங்களுக்கு முன் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமும் ஒரு மல்டி ஸ்டார் படம் தான்.

இதில் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி விக்ரம் பிரபு சரத்குமார் பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

அது போல நடிகைகள் ஐஸ்வர்யா ராய் த்ரிஷா ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இது உலகளவில் ரூ. 150 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடி வருகிறது.

மலையாளம் தெலுங்கு ஹிந்தி சினிமாக்களில் இதுபோல மல்டி ஸ்டார்ஸ் அடிக்கடி இணைந்து நடிப்பது உண்டு.

ஆனால் தமிழ் சினிமாவில் இதுபோல நடைபெறுவது மிக அரிதான ஒன்றாகும்.

தற்போது விக்ரம் & பொன்னியின் செல்வன் ஆகிய இரு படங்களும் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளதால் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய மாற்றம் உண்டாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

எனவே நம் கோலிவுட் நட்சத்திரங்கள் இணைந்து நடித்தால் அதன் வெற்றி பல மடங்காக உயர்ந்து நிற்கும் என்பதையே இந்த இரு படங்களின் வெற்றி நமக்கு உணர்த்துகிறது.

இனியாவது இது போன்ற பிரம்மாண்ட வெற்றிகள் தமிழ் சினிமாவுக்கு கிடைக்குமா? நம் ஹீரோக்கள் மனது வைப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More Articles
Follows