தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
செப். 19 நேற்றிரவு அபுதாபியில் நடந்த ஐ.பி.எல். 2020 தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி & நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு அறிவித்த பின், முதன் முறையாக டோனி நேற்று ஐபிஎல் போட்டியில் களம் கண்டார்.
அதில் சென்னை அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த வெற்றியைக் குறிப்பிடும் வகையில் சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளரும், தென் ஆப்பிரிக்க வீரருமான இம்ரான் தாஹிர் தனது ட்விட்டரில்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ பட வசனத்தைப் பதிவிட்டுள்ளார்.
அதில், “திரும்பவும் நீ எங்களை(சென்னை சூப்பர் கிங்ஸ்) தொட்டிருக்கக் கூடாது. தொட்டுட்டா தொட்டவன நாங்க விட்டதே இல்லை.
இப்ப தானே காளியோட ஆட்டமே ஆரம்பமாகி இருக்கு. இன்னும் நிறைய சிறப்பான தரமான சம்பவங்கள் காத்துகிட்டு இருக்கு #எடுடா வண்டிய போடுடா விசில்” என்று பதிவிட்டுள்ளார்.
இது CSK ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Thirumbavum nee yengala @ChennaiIPL thoturukka koodadu.Thotutey thottavana nanga vittadey illai.Ippa thane kaliyoda attame arambamagi irukku.
innum neraya sirappana tharamana sambhavangal kathukittu irukku #eduda vandiya poduda whistle — Imran Tahir (@ImranTahirSA) September 19, 2020
Imran Tahir tweets on CSKs first victory