தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத், நாசர், ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், வேல ராமமூர்த்தி மற்றும் பலர்
இயக்கம் : கிருத்திகா உதயநிதி
இசை : விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு: ராஜீவ் ரவி
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆண்டனி
கதைக்களம்…
அமெரிக்காவில் மிகப்பெரிய டாக்டர் விஜய் ஆண்டனி. இவரே சொந்தமாக பரத் ஆஸ்ப்பிட்டல் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.
இவருக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. ஒரு பாம்பு ஒரு காளை மாட்டை துரத்த, அந்த காளை மாடு ஒரு 2 வயது சிறுவனை துரத்துகிறது.
இது எதனால் வருகிறது என்று குழப்பத்தில் இருக்கிறார். ஒரு சூழ்நிலையில் தன்னுடன் இருக்கும் பெற்றோர் தன்னை பெற்றவர்கள் இல்லை என்பது இவருக்கு தெரிய வருகிறது.
எனவே தன் ஒரிஜினல் தாய் தந்தையை பற்றி தெரிந்துக் கொள்ள தமிழகத்தில் உள்ள ஒரு கிராமம் தேடி வருகிறார்.
அங்கு தன் தாயை ஏமாற்றிய தந்தை யார்? என்பதை கண்டறிய முற்படுகிறார்.
அங்கு அறிமுகமாகும் யோகிபாபு அவருக்கு துணை புரிகிறார்.
இறுதியாக அவர் தன் தந்தை கண்டு பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
ஒரிஜினல் டாக்டர் ஒரு கேரக்டர். இது தவிர 3 கேரக்டர்களில் வருகிறார் விஜய் ஆண்டனி. அனைத்திலும் தன் யதார்த்த நடிப்பில் கவர்கிறார்.
ஆனால் மொத்தம் உள்ள நான்கு கெட் அப்புக்கும் சின்ன சின்ன வித்தியாசங்களே காட்டியுள்ளார். டைரக்டர் இன்னும் முயற்சித்திருக்கலாம்.
நாட்டு மருத்துவராக அஞ்சலி அழகாக வருகிறார். சின்ன சின்ன முகபாவனைகளில் ரசிக்க வைக்கிறார்.
நான்கு நாயகிகளில் தன் அழகிய நடிப்பால் சுனைனா சுண்டி இழுக்கிறார்.
அமிர்தா மற்றும் ஷில்பா தங்களுக்கு கொடுத்த கேரக்டர்களில் பளிச்சிடுகின்றனர்.
யோகி பாபு இந்த படத்திற்கு கிடைத்த யோகம் என்றுதான் சொல்ல வேண்டும். கிடைத்த கேப்பில் எல்லாம் சிரிக்க வைத்து விடுகிறார்.
இவர்களுடன் மதுசூதனன், வேல ராமமூர்த்தி, நாசர், ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும் உண்டு.
விஜய் ஆண்டனியே 4 கேரக்டர்களில் வருவதால், மற்றவர்களுக்கு அதிகம் வேலையில்லாமல் போய்விட்டது.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
விஜய் ஆண்டனியில் இசையில் அரும்பே பாடல் ஆயிரம் முறை கேட்க வைக்கும். ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் படத்துடன் ஒன்றாக வைக்கிறது.
எடுத்துக் கொண்ட கதைக்களத்திற்கு கிருத்திகாவுக்கு சபாஷ் சொல்லலாம்.
க்ளைமாக்ஸில் சாதி வேற்றுமையை ஒழிக்கும் காட்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று
காளி… கவனிக்கப்பட வேண்டியவன்