தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்ணாதுரை, காளி படங்களை தொடர்ந்து திமிரு புடிச்சவன் என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.
இப்படத்தையும் வழக்கம் போல அவரது சொந்த நிறுவனமான விஜய்ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பாக அவரது மனைவி பாத்திமா தயாரிக்கிறார்.
இதில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இதில் நாயகியாக இணைந்துள்ள நிவேதா பெத்துராஜீம் போலீஸாக நடிக்கவிருக்கிறாராம்.
இதற்காக அவர் தற்போது புல்லட் ஓட்டி பழகி வருகிறாராம்.
கணேஷா இயக்கவுள்ள இதன் சூட்டிங் இன்று பிப்ரவரி 7 முதல் ஆரம்பமாகியுள்ளது.
எஸ்.எஸ்.ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணிபுரிந்த கணேஷா, இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
மேலும், இப்படத்திற்காக ஆக்ஷன் காட்சிகளுக்காக பிரத்யேகமாக சிலம்பம் கற்று வருகிறாராம் விஜய் ஆண்டனி.