தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரால் சினிமாவில் அறிமுகமானவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.
இதன் பின்னர் படிப்படியாக இசையமைப்பாளராக வளர்ந்தார்.
அதன்பின்னர் கதையின் நாயகனாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
நான், சலீம், பிச்சைக்காரன், எமன், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட படங்கள் இவருக்கு ஹீரோ அந்தஸ்தை உருவாக்கியது.
ஒரு கட்டத்தில்
தான் நடிக்கும் சினிமா படங்களை தயாரிக்கும் ஆரம்பித்தார்.
அவ்வப்போது தன் டிவிட்டர் பக்கத்தில் சமூக கருத்துக்களை கூறி வருகிறார் விஜய் ஆண்டனி.
சில தினங்களுக்கு முன் அவரின் ட்விட்டர் பதிவில்…
“உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க?
அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க???
கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க?
எனப் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தற்போது இன்று…
தன் முன்னாள் காதலி சத்யா என்பவரை ரயிலில் தள்ளி விட்டு கொலை செய்த சதீஷ் என்பவர் குறித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்…
சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்? https://t.co/b8h5CPb4hg
கூடுதல் தகவல்…
கடந்த ஏழு வருடங்களாக சத்யா மற்றும் சதீஷ் காதலித்து வந்தனர். ஒரு கட்டத்தில் சதீஷிடம் ஆறு மாதங்களாக பேசாமல் இருந்துள்ளார் சத்யா. இதனையடுத்து இருவருக்கும் மோதல் உருவானது.
தன் காதலியை சந்திக்க சென்ற சதீஷ் அவரிடம் வாக்குவாதம் செய்யவே அது முற்றி சத்யாவை திடீரென ரயில் முன்பு தள்ளிவிட்டு உள்ளார் சதீஷ். இதனால் சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சத்யாவின் தந்தை மகள் இறந்த காரணத்தால் அதிர்ச்சி தாங்க முடியாமல் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்யாவை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய சதீஷை காவல்துறையினர் இன்று அக்டோபர் 14ஆம் தேதி கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.