தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
1990-களில் கொடி கட்டிப் பறந்தவர் டாப் ஸ்டார் பிரசாந்த்.
முன்னணி நடிகைகள் இவருடன் ஜோடியாக நடிக்க காத்திருந்தனர்.
ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராய் பிரசாந்த்துடன் நடித்திருந்தார்.
தமிழ், வின்னர், சாக்லேட், விரும்புகிறேன் உள்ளிட்ட தரமான படங்களை கொடுத்திருக்கிறார்.
தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு தன் தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் நடித்துள்ளார் பிரசாந்த்.
இந்த படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி உள்ளிட்டோர் பிரசாந்துடன் நடித்துள்ளனர்.
இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில் சூப்பர் ஹிட்டான வின்னர் திரைப்படத்தை பிரசாந்த் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு நடிகர் பிரசாந்த் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது பிரசாந்த் கூறுகையில், “அந்தகன் விரைவில் வெளியாகும். வின்னர் 2-ஆம் பாகம் முதல் பாகத்தை விட மிக பிரமாண்டமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
சுந்தர் சி இயக்கிய வின்னர் படத்தில் பிரசாந்த், கிரண், வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் காமெடி காட்சிகள் படுபிரபலம்.
‘Top Star’ Prashanth gave an update on ‘Winner 2’