தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்ரீலங்காவை (இலங்கை) பூர்வீகமாக கொண்டவர் நடிகர் போண்டா மணி.
இவர் 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இவரை சினிமாவில் பாக்யராஜ் தான் அறிமுகப்படுத்தினார்.
வடிவேலுடன் போண்டா மணி நடித்த *அடிச்சு கூட கேட்பாங்க… சொல்லிடாதீங்க.. டேய் எதைடா சொல்ல கூடாது* என்ற காமெடி படு பிரபலம்.
தனுஷின் ‘படிக்காதவன்’ படத்தில் விவேக் உடன் இணைந்து காமெடி செய்திருப்பார். இதுவரைக்கும் யாருக்குமே ஒன்னுமே பண்ணல..” என்ற காமெடியும் படுபிரபலம்.
மேலும் ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இதயக் கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் போண்டா மணி அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
தற்போது பூரண குணம் அடைந்துள்ளார் நடிகர் போண்டாமணி.
இந்த நிலையில் நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி எஸ் முருகனை இன்று காலை காமெடி நடிகர் போண்டாமணி நேரில் சந்தித்து தனது மருத்துவ சிகிச்சைக்கு உதவியதற்காக நன்றி தெரிவித்தார்.
மேலும் உடல் நலம் பெற்ற காமெடி நடிகர் போண்டாமணி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி அவர்களையும் இன்று சந்தித்து, நன்றி தெரிவித்தார். அப்போது போண்டா மணி மகன் சாய்ராம் உடனிருந்தார்.
மேலும் இதே போல் சமீபத்தில் மருத்துவ சிகிச்சையில் இருந்த அங்காடித்தெரு சிந்து அவர்களும் நலம் பெற்று வீடு திரும்பியதும் சிகிச்சைக்கு உதவியதற்காக நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் அவர்களுக்கு போனில் நன்றி கூறினார்.
Bonda Mani meets Tamil Nadu Minister & Vice President of Actors Association