‘தமிழர்கள் மீது கோர்ட்டுக்கு அக்கறை இல்லை..?’ அசோக்செல்வன் ஆவேசம்

‘தமிழர்கள் மீது கோர்ட்டுக்கு அக்கறை இல்லை..?’ அசோக்செல்வன் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Ashok Selvanதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என தமிழகத்தின் பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

கிட்டதட்ட ரஜினி, விஜய், அஜித் தவிர எல்லாரும் இதற்கான களத்தில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் அசோக்செல்வன் தனது சமூக வலைத்தளத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடிதம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த கடிதம் பின்வருமாறு:

“வணக்கம், இந்த விஷயத்தை பற்றி என் உணர்வுகளை பதிவு செய்ய வேண்டும் என்று பல நாட்களாக எண்ணம். அதனால் ஏதேனும் பயன் இருக்குமா, இது தேவையா என்று ஒரு சிந்தனை.

தமிழ் என்ற உணர்வு என் தயக்கத்தை உடைத்ததால் இந்தப் பதிவு.

என் வயது குறைவாக இருக்கலாம். நான் சாதாரண ஆளாக இருக்கலாம். என் கருத்துகள் உண்மையானவை. இன்று சொல்லாவிட்டால் எப்போது சொல்வது?

பரம்பரை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் என்பதில் பெருமைப்படுபவன் நான். இளம்பருவத்தில் காலையில் கண்விழித்ததும் பார்ப்பது கம்பீரமான காங்கேயம் காளைகளைத்தான்! நாட்டுப்பசுக்களும் காளைகளும் எருதுகளும் குடும்பத்தில் ஒருவராய் கொண்டாடப்பட்டதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

பாரம்பரிய காளைகளுக்கு செய்யப்படும் மரியாதையே ஜல்லிக்கட்டு. குலதெய்வம் போல காளைகளை கொண்டாடி மகிழும் இடத்தில் அதைக் கொடுமைப்படுத்துவதாக ஒப்பாரி வைக்கிறது PETA. அதையும் நம்பி நீதிமன்றங்கள் தடை விதிக்கின்றவே அதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை.

நமது பாரம்பரியம், கலாச்சாரம் மேல் நமது அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் அக்கறை இருக்க வேண்டாமா?

மிருகங்களை வதை செய்யும் மிருகக்காட்சி சாலைகளை மூடப்போகிறார்களா? அல்லது மிருகங்களை வதை செய்து பணம் சம்பாதிக்கும் சர்க்கஸை மூடப்போகிறார்களா? மிருகத்தோலை பதனிட்டு ஏற்றுமதி செய்வதை தடை செய்யப் போகிறார்களா? காலணி, பர்ஸ், கைப்பை தடை செய்யப்படுமா?

நேற்று கிரிக்கெட் விளையாட்டில் மாணவர் மரணம். இனி கிரிக்கெட் தடை செய்யப்படுமா? குத்துச் சண்டையில் ஒரு மாணவி மரணம். குத்துச் சண்டை தடை செய்யப்படுமா? தினசரி விபத்துகள் பலர் மரணம். எதை நம்மால் தடுக்க முடியும்? ஜல்லிக்கட்டில் தான் ஆபத்தா? பின் ஜல்லிக்கட்டை மட்டும் தடை செய்வது ஏன்?

PETAவின் முதலைக்கண்ணீருக்கு மயங்கிவிட்டதா அரசு? அவர்களின் பணவலையில் விலை போய்விட்டார்களா? ஜல்லிக்கட்டுக்குத் தடை என்ற பெயரில் நாட்டுக்காளைகளை ஒழித்துவிட்டால், கோடி கோடியாக பணம் புரளும் இந்திய சதையை கைப்பற்றிவிடலாம் என்று PETAவுக்கு தெரியும். இது ஏன் அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் புரியாமல் போனது?

நண்பர்களே! காளைகளை தனது குழந்தைகளைப் போல் வளர்க்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம். நாட்டுப்பால் கொடுத்து நமது எதிர்கால சந்ததியினரை ஆரோக்கியமாக வளர்ப்போம்.

பாரம்பரியம் நமது பெருமை!
அதைக் காப்பது நமது கடமை!

ஒன்று சேர்வோம்! உரிமைக்குக் குரல் கொடுப்போம்!”

இவ்வாறு அசோக்செல்வன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Actor Ashok Selvan letter to support Jallikattu

‘அரசியல் சாக்கடை; கெட்டவனுக்குத்தான் அதிகாரம் தேவை..’ – சிம்பு

‘அரசியல் சாக்கடை; கெட்டவனுக்குத்தான் அதிகாரம் தேவை..’ – சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu press meetஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அதற்காக போராடும் மாணவர்களுக்காகவும் சிம்பு பத்திரிகையார்களை சந்தித்தார்.

அவர் பேசும்போது…

“தமிழனை எல்லாரும் நசுக்கிறார்கள்.

தமிழக மீனவர்கள் இலங்கையிடம் மாட்டிக் கொண்டால் தமிழக மீனவர்கள் என்கிறார்களே தவிர அவர்களை இந்தியன் என்று சொல்ல மறுக்கிறார்கள்.

இன்று பொங்கல் விடுமுறை இல்லை என்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு அனுமதியில்லை.

தமிழர்கள் என்ன அநாதைகளா? அவர்களுக்காக நான் கேட்பேன்.

இதை நான் செய்வதால், நான் அரசியலில் இறங்க போகிறேன் என்று அர்த்தமில்லை.

அரசியல் சாக்கடை. நான் ஒருபோதும் அதுக்கு வரமாட்டேன்.

கெட்டவனுக்குதான் அதிகாரம் தேவை. நல்லது செய்ய நினைப்பவருக்கு பவர் தேவையில்லை. நல்ல மனசு போதும்” என்றார்.

I wont enter into politics says Simbu

‘மாணவர்கள் அஜித்-விஜய்-தனுஷுக்காக போராடவில்லை…’ – சிம்பு

‘மாணவர்கள் அஜித்-விஜய்-தனுஷுக்காக போராடவில்லை…’ – சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuபொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் அவர்கள் சார்ந்த மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதில் போலீஸ் அவர்களின் மீது லத்தி சார்ஜ் நடத்தினர்.

எனவே மாணவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கிய பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது ஆவேசமாக பேட்டியளித்தார்.

நான் தமிழன். தமிழ் உணர்வுள்ளவன். என் மக்களுக்காக என் மண்னுக்காக போராடுவேன்.

ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினால் லத்திசார்ஜ் செய்வார்கள்.

எல்லாரும் ஒவ்வொரு இடத்திலும் போராடுகிறார்கள்.

ஆனால் நான் என் வீட்டின் முன்பு ஜனவரி 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு கறுப்பு சட்டை அணிந்துக் கொண்டு, பத்து நிமிடம் மௌனமாக நிற்கப் போகிறேன்.

போலீஸ் என்னை ஒன்றும் செய்ய முடியாது. முடிஞ்சா என்னைய அடிடா பார்க்கலாம்.

மாணவர்கள் அஜித், விஜய் தனுஷ்க்காக போராடவில்லை. நம் கலாச்சாரத்திற்காக போராடுகிறார்கள்.

உங்களுக்கும் தமிழ் உணர்வு இருந்தால் நீங்கள் அப்படி செய்யுங்கள்.

எல்லாரும் தங்கள் எதிர்ப்பை 10 நிமிடம் செலவழித்து இப்படி தெரிவிப்போம்.

எதற்கெல்லாமோ காத்திருக்கும் நீங்கள் இதை செய்ய மாட்டீர்களா?

நீங்கள் எங்கிருந்தாலும் இப்படி செய்யுங்கள்.

எல்லாருக்கும் தமிழ் உணர்வு உள்ளதா? என்று பார்ப்போம்.

ஒருவேளை போதுமான ஆதரவு இல்லையென்றால் இனி தமிழர்களின் எந்த பிரச்சினைக்கும் நான் வரமாட்டேன்.

அமெரிக்க விசா உள்ளது. அங்கு சென்றுவிடுவேன்” என தெரிவித்தார்.

ரிலீசுக்கு முன்பே வசூலில் பட்டைய கிளப்பும் ‘பைரவா’

ரிலீசுக்கு முன்பே வசூலில் பட்டைய கிளப்பும் ‘பைரவா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Danceவிஜய் நடித்துள்ள பைரவா படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

தமிழகத்தின் பெரும்பாலான தியேட்டர்களை இப்படத்திற்கு ஒதுக்கியுள்ளனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

இதனால் மற்ற படங்கள் கூட இன்று வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் வியாபாராம் மட்டும் ரூ. 78 கோடியை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது தமிழகத்தில் மட்டும் ரூ. 45 கோடியும் மற்றவைகளை சேர்த்து ரூ. 33 கோடியும் என சொல்லப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்திற்கு வந்த ‘பைரவா’ படத்தின் முக்கிய காட்சிகள்

இணையத்திற்கு வந்த ‘பைரவா’ படத்தின் முக்கிய காட்சிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaa action vijayவிஜய்யின் பைரவா படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்று மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பிரிமீயர் ஷோ நடத்தப்பட்டு வருகிறது.

இப்படத்தை பார்த்த சில விஷமிகள் முக்கியமான காட்சிகளை படம்பிடித்து இணையங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதனால் படக்குழுவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் செய்வது அறியாமல் திகைத்து வருகின்றனர்.

‘பைரவா’ ரிலீஸ் ஆகலேன்னா அவ்வளவுதான்… மிரட்டும் விஜய் ரசிகர்கள்

‘பைரவா’ ரிலீஸ் ஆகலேன்னா அவ்வளவுதான்… மிரட்டும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bairavaa Vijayவிஜய் நடிப்பில் பரதன் இயக்கியுள்ள பைரவா படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

ஆனால் கேரளாவில் இப்படம் வெளியாவதில் சிச்கல் எழுந்துள்ளது.

கேரளாவில் தியேட்டர் உரிமையாளர்கள் எக்ஸிபிட்டர்ஸ் ஃபடரேஷன் (The Kerala Film Exhibitors’ Federation) நடத்தி வரும் போராட்டம் காரணமாக புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை.

மேலும் இது தொடர்பான நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ‘பைரவா’ ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது.

ஆனால் செய்துக் கொண்ட ஒப்பந்தம்படி விநியோகஸ்தர்கள் இப்படத்தை வெளியிட வேண்டும் என அதிரடியாக தெரிவித்துள்ளனர்.

மேலும், கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் இவர்களுக்கு ஆதரவாக இறங்கியுள்ளனர்.

More Articles
Follows