தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழில் பெயர் வைத்தால் தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கும் என்பதால், தமிழக இயக்குனர்கள் புதிய பெயர்களை தேடி வருகின்றனர்.
ஒரு பக்கம் ரசிகர்களை கவருவதற்காக நீண்ட தலைப்புகளை வைத்து வருகின்றனர்.
மற்றொரு புறம் இதுவரை நாம் கேள்விபடாத வார்த்தைகளை படத் தலைப்பாக வைத்து விடுகின்றனர்.
ஜெயம் ரவியின் படத்திற்கு மிருதன் என பெயரிட்டனர். மிருகமும் மனிதனும் கலந்த கலவைதான் இது என கூறப்பட்டது.
எஸ் ஜே சூர்யா, விஜய்சேதுபதி நடித்த படத்திற்கு இறைவி என பெயரிட்டனர். இறைவி என்பது பெண் கடவுளை குறிக்கும் என்றனர்.
இவர்களைத் தொடர்ந்து தனுஷ் படத்திற்கு தொடரி எனப் பெயரிட்டுள்ளனர். இதற்குமுன் நாம் புகைவண்டி என்பதை கூற கேட்டிருக்கிறோம்.
இதுபோல் தெகிடி, ஆகம் என்ற தலைப்புகளிலும் படங்கள் வெளியாகியுள்ளது.
இதனால் தமிழ் அகராதியே படிக்காத தமிழர்களுக்கு தற்போது புதுப்புது அர்த்தங்கள் கிடைத்து வருகிறது என்பதே நிதர்சன உண்மை.