தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
உயர் ஜாதி ஹீரோயின்.. கீழ் ஜாதி ஹீரோ ஆகியோருக்கு இடையே நடைபெறும் வழக்கமான காதல் மோதல் தான் இந்த படத்தின் கதை.
ஆனால் படத்தின் க்ளைமாக்ஸ் வித்தியாசம்..
கதைக்களம்…
கபடி ஆட்டத்தில் ஆர்வம் மிகுந்தவர் சரண்யா பொன்வண்ணன்.. ஒரு கபடி ஆட்டத்தில் தன் கணவரை பறிகொடுக்கிறார்.. ஆனாலும் தன் கணவர் சாதிக்காததை தன் மகன் ராஜா சாதிக்க வேண்டும் என நினைக்கிறார்.
அதன்படி தன் மகனையும் பயிற்சி கொடுத்து தயார் செய்து வருகிறார். இவருக்கு ஒரு கட்டத்தில் உதவி செய்கிறார் நாயகி மாளவிகா.. இதனை பிடிக்காத அவளது முறை மாமன் சௌந்தர்ராஜா எதிர்ப்பு தெரிவிக்கிறார்..
கபடியிலும் சாதி.. காதலிலும் சாதி.. பார்க்கும் பிரமுகராக ஆடுகளம் நரேன்.
இவர்களுக்குள் நடக்கும் போராட்டமே இந்த அருவா சண்டை… இறுதியில் காதல் கைகூடியதா? கபடி போட்டியில் வென்று அம்மாவின் இலட்சியத்தை காப்பாற்றினாரா ஹீரோ? என்பதே படத்தின் கதை.
கேரக்டர்கள்…
நடிகர், நடிகைகள்:
V. ராஜா ( முத்து)
மாளவிகா மேனன் ( ரம்யா)
சரண்யா பொன்வண்ணன் ( வள்ளியம்மா )
ஆடுகளம் நரேன் ( மாயாண்டி )
சௌந்தர்ராஜா ( பாண்டி )
கஞ்சா கருப்பு ( மைனர் )
காதல் சுகுமார் ( சொக்கு )
ஹீரோ ராஜா காதல் காட்சிகளை விட ஆக்ஷன் காட்சிகளில் அடித்து துவம்சம் செய்து உள்ளார். நாயகிக்கு ரொமான்ஸ் காட்சிகளில் இவரால் ஈடு கொடுக்க முடியவில்லை.
சரண்யா பொன்வண்ணன் அருமையான நடிப்பை கொடுத்துள்ளார். முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் இவரது நடிப்பு போற்றப்படும் வகையில் உள்ளது.
வில்லனாக சௌந்தரராஜா.. கிராமத்து இளைஞனாக முறுக்கிக் கொண்டு மிரட்டி இருக்கிறார்..
டெக்னீஷியன்கள்….
ஒளிப்பதிவாளர் – சந்தோஷ் பாண்டி.
இசை – தரண்குமார்.. எடிட்டர் – வி.ஜே.சாபுஜோசப்.. ஆகியோர் தங்கள் பணிகளில் கச்சிதம்..
பாடல்களை வைரமுத்துவும் இயக்குனர் ஆதிராஜனும் எழுதியுள்ளனர்.. பாடல் வரிகள் சிறப்பு சேர்க்கின்றன.. பாடல் காட்சிகளை படமாக்கிய விதத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்… பாடல்கள் அடிக்கடி வந்து போவது கதையின் ஓட்டத்தை தாமதம் செய்கிறது..
வழக்கமாக சாதி கதை தான் என்றாலும் கிளைமாக்ஸில் ஒரு முக்கியமான கருத்தை சொல்லி வித்தியாசப்பட்டு நிற்கிறார் ஆதிராஜன்..
ஆக.. அருவா சண்ட… சாம்பலானது சாதீ