தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
சுந்தர் சி மற்றும் தம்பி ராமையா இருவரும் இணைந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகின்றனர். தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார் சுந்தர்.
தன் மகள் ஐயிராவை டாக்டருக்கு படிக்க வைக்கிறார் தம்பி ராமையா. இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம்…
தென்சென்னை தாதா – நஞ்சுண்டா (பிரபாகர்)… மத்திய சென்னை தாதா – வம்சி (விஷால் ராஜன்)… வடசென்னை தாதா – மாறன் (ஜெய்ஸ் ஜோஸ்).. இவர்கள் மூவரின் கீழ்தான் சென்னை நகரமே இயங்குகிறது.
ஆனால் ஒருவருக்கொருவர் மோதலில் ஒட்டுமொத்த சென்னை நகரத்தை தன் கன்ட்ரோலில் கொண்டு வர நினைக்கின்றனர்.
இந்த நிலையில் வம்சியின் காதலியான நடிகையை ஒரு கும்பல் கடத்தி கற்பழிக்கின்றனர்.
இது செய்தவர் யார் என வம்சி குழம்பிய நிலையில் ஒரு போலீஸ் அதிகாரி பழைய ரவுடி ரைட் (சுந்தர் சி) மீது பழியை போடுகிறார்.
இதற்கு முன்பே நடிகைக்கும் தம்பி ராமையாவுக்கும் பிசினஸ் கொடுக்கல் வாங்கல் தகராறு இருக்கிறது.
இதனால் சுந்தரை போட்டுத் தள்ள நினைக்கிறார் வம்சி. அதன் பின் ஒன்றோடு ஒன்றாக பின்னப்பட்ட திரைக்கதையில் 3 ரவுடிகளையும் எதிர்க்கிறார் சுந்தர் சி.
இந்த நிகழ்கால கேங்ஸ்டர்கள் எப்படி பழைய ரவுடியை எதிர்கொண்டார்கள் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
சுந்தர் சி நீண்ட இடைவெளிக்குப் பிறகு டான் வேடத்தில் மிரட்டி இருக்கிறார். ஒரு பக்குவப்பட்ட தாதாவின் கேரக்டரை அசால்டாக செய்து இருக்கிறார்.
தம்பி ராமையா வழக்கம்போல ஓவர் ஆக்டிங்.. இவரது மகளாக ஆயிரா. அழகான இஸ்லாமிய பெண்ணாக தன் கேரக்டரை நிறைவாக செய்து இருக்கிறார்.
இதிலும் சினிமா நடிகையாகவே வந்துள்ளார் பாலக் லால்வானி. அதுவும் டூ பீஸ் உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
மூன்று வில்லன்களில் பாகுபலி பிரபாகரன் மட்டுமே நமக்கு தெரிந்த அடையாளம். மூன்று வில்லன்களும் மிரட்டலாகவே தோன்றியுள்ளனர். அது போல மாறனுக்கு 3 மனைவிகள். மூவருமே அதகளம் செய்துள்ளனர்.
அதுவும் பணத்தை திருடி பாவாடைக்குள் ஒளித்து வைப்பது பல திருட்டுப் பெண்களுக்கு ரூட் போட்டு கொடுத்துள்ளது.
டெக்னீஷியன்கள்…
‘தலைநகரம் 2’ படத்தை பார்த்த பிறகு விதவிதமாக கொலை செய்வது எப்படி? என்பதை ரவுடிகள் தெரிந்து கொள்வார்கள். அப்படி நிறைய டெக்னிக்கை அறிமுகப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் துரை.
ஸ்டன்ட் மாஸ்டர் டான் அசோக்.. வாங்கிய கூலிக்கு அதிகமாகவே உழைத்திருக்கிறார்.
பில்டப் காட்சிகளில் ஜிப்ரானின் பின்னணி இசை மிரட்டல்.. ஆனால் பின்னணி இசை சில இடங்களில் மட்டும் பாட்ஷா படத்தின் ஃப்ளாஷ் பேக் இசையை நினைவுப்படுத்துகிறது. அது ஏனோ.?
கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவில் அனைத்தும் அருமை. எடிட்டர் ஆர்.சுதர்சன் முதல் பாதியை நிறைவாக செய்து இரண்டாம் பாதியில் நீளமான காட்சிகளை வைத்து விட்டார்.
பொதுவாக ரவுடிகளுக்கு எப்போதுமே மற்ற ரவுடிகளின் வரலாறு பின்னணி தெரிந்து இருக்கும். ஆனால் இந்த மூன்று ரவுடிகளுக்குமே பழைய ரவுடி சுந்தர்.சி பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்பது வேடிக்கையானது.
படத்தின் ஆரம்பத்தில் 3 வில்லன்களுக்கு காட்டப்படும் பில்டப்கள் கிட்டத்தட்ட 15 நிமிடம் செல்கிறது. ஒவ்வொரு வில்லனும் எப்படி உருவானார்கள்? என்பதை சொத்து பட்டியல் விவரத்தோடு சொல்லி இருக்கிறார்.
அதுபோல நாயகன் சுந்தர்.சி-க்கு கொடுக்கும் பில்டப்பும் சிறப்பாகவே உள்ளது. முதல் பாதியை மிரட்டலாகவே கொடுத்த இயக்குனர் VZ துரை இரண்டாம் பாதியில் சறுக்கி விட்டார்.
முக்கியமாக படத்தில் பெண்கள் வந்த பிறகு சென்டிமென்ட் தூக்கலாகவே உள்ளது. இரண்டாம் பாதியில் தான் கதையின் வேகத்தை அதிகப்படுத்தி இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வில்லன் முடிவும் மிரட்டலாகவே உள்ளது. முக்கியமாக பாகுபலி பிரபாகரின் முடிவு கொடூரமானது.. படம் முடியும்போது தலைநகரம் 3 அடித்தளம் போட்டு முடித்திருக்கிறார் இயக்குனர் VZ துரை.
ஆக.. தலைநககரம் 2… தலை எடுக்கும் நரகம்
Thalainagaram 2 movie review and rating in tamil