First on Net ஹாலிவுட்டுக்கு சவால்… 2.0 திரை விமர்சனம்

First on Net ஹாலிவுட்டுக்கு சவால்… 2.0 திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன் மற்றும் பலர்.
இயக்கம் – ஷங்கர்
இசை – ஏஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவு – நீரவ் ஷா
படத்தொகுப்பு – ஆண்டனி
பாடல்கள் – பாஸ்கர் பத்லா, மதன் கார்க்கி, நா.முத்துக்குமார்,
கலை – டி.முத்துராஜ்
சண்டைபயிற்சி – ஸ்டண்ட் சில்வா
ஒலி வடிவமைப்பு – ரசூல் பூக்குட்டி
தயாரிப்பு – சுபாஷ்கரன் லைகா நிறுவனம்
பிஆர்ஓ.. – டைமண்ட் பாபு, ரியாஸ் அஹ்மது, நிகில் முருகன்

கதைக்களம்…

இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமில்லை. அனைத்து உயிரினங்களும் சொந்தமானது. ஆனால் 6 அறிவு படைத்த மனிதன் மட்டும் தன் ஆதிக்கத்தால் அனைத்து உயிரினங்களையும் அழித்து இந்த உலகத்தை ஆட்சி செய்து வருகிறான்.

மனிதனை மிஞ்ச எந்த சக்தி இங்கில்லை. எனவே அவன் ஆணவத்தோடு அலைகிறான். பெரிய பெரிய விலங்குகள் இருந்தாலும் அதனை அழிக்க ஆயுதங்களையும் வைத்துள்ளான்.

மேலும் தொழில்நுட்ப என்ற பெயரில் நாட்டின் இயற்கை வளங்களையும் அழித்து வருகிறான். கம்ப்யூட்டர், ரோபோட் முதல் செல்போன்களை வரையும் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறான்.

செல்போன் கதிர் வீச்சுக்களால் பல்லாயிரக்கணக்கான பறவை இனமும் அழிந்து வருகிறது.

ஒரு நாள் மனிதனை மிஞ்சும் ஒரு ராட்சச பறவை வந்தால் என்னாகும்? அது மனிதர்களை எப்படி அழிக்கும்.

ஒருவேளை அதற்கும் மனிதன் எதையாவது கண்டு பிடித்து அதை அழித்தால் என்னாகும்?

மனிதனுக்கும் அந்த ராட்ச பறவைக்கும் நடக்கும் யுத்தமே 2.0 படத்தின் மையக்கரு.

கதைக்களம்…

நாம் நடந்து செல்ல, பயணம் செல்ல சாலைகளில் வழிகாட்டிகள் இருப்பதை பார்த்திருக்கிறோம்.

ஆனால் ஆகாயத்தில் பறக்கும் பறவைகளுக்கு எந்த வழிகாட்டலும் இல்லை. ஆனாலும் அவை சரியாகவே பயணிக்கிறது.

தற்போது நவீன தொழில்நுட்பத்தாலும் செல்போன் டவர்களாலும் அதில் எழும் ரேடியசன்ஸால் பறவைகளின் திசை மாறி பறக்கிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

சிட்டுக் குருவி இனமே அழிந்து போகிறது.

எனவே பறவை இனத்தை காக்க ஐந்தாம் திசை பூமிக்கு வருகிறது. (நெகட்டிவ் வைப்ரேசன்ஸ்)

இதனால் சிட்டி ரோபோவை மீண்டும் கொண்டு வருகிறார் சயின்டிஸ்ட் வசீகரன். அந்த பயங்கர சக்தியை அழிக்க முயற்சிக்கிறார்கள்.

அதன் பின்னர் 2 சக்திகளுக்கும் பனிப்போர் நடக்கிறது.

செல்போன்களிடமிருந்து அந்த ராட்ச்ச பறவை தன் இனத்தை எப்படி காக்கிறது..? மனிதர்கள் என்ன செய்தார்கள்? மனிதர்களுக்கு ரோபோ எப்படி உதவியது..? இதுவே 2.0 படத்தின் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்….

ஒரு ரஜினி என்றாலே நம் மகிழ்ச்சிக்கு அளவு இருக்காது. இதில் குறிப்பிட்டு 4 ரஜினிகள் உள்ளனர்.

இது தவிர எத்தனை ரோபோ ரஜினிக்கள் என கணக்கிட முடியாது.

ஒவ்வொரு ரஜினியும் ஒவ்வொரு வகை. ரவுண்ட் கட்டி அடித்திருக்கிறார் ரஜினி. குக்கூ என்று இவர் சொன்னால் அதுவே தனி ரகம்தான்.

ரெட் சிப் சிட்டி ரோபோ வந்த பிறகு படம் வேற லெவலில் எகிறுகிறது. பறவை மாதிரி பறக்கும் ஸ்டைலை ரோபோ காட்டும் அழகே தனி அழகுதான்.

அக்‌ஷய்குமார் கேரக்டர் தான் படத்தின் ஆணிவேர். பறவை இனத்துக்காக இவர் படும் பாடு நம்மை அழ வைக்கும்.

நம்மை அறியாமல் நாம் பறவை இனத்துக்கு எப்படி எல்லாம் தீங்கு இழைக்கிறோம் என்பதை உணர வைத்துள்ளார். இவரே வில்லனாக மாறி மாறி வரும்போது அதை காண ஆயிரம் கண் வேண்டும்.

ப்யூட்டிப்புல் ரோபோ எமி ஜாக்சன். நிலா கேரக்டரில் நெஞ்சில் நிறைகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஏஆர். ரஹ்மானின் இசையில் ராஜாளி பாடல் அதிரடி. இந்திரலோகத்து சுந்தரி என்ஜாய் ரகம். புல்லிநங்கால் பாடல் பூரிப்பு.

பின்னணி இசையில் மிரள வைத்துள்ளார். ரோபோக்கள் & பக்‌ஷி சண்டை காட்சிகள் பட்டைய கிளப்பும்.

இந்திய சினிமாவுக்கு தமிழ் சினிமா தந்த பொக்கிஷம் ஷங்கர்.

செல்போன்கள் மாயமாவது முதல் தன் அதிரடியை அரங்கேற்றியுள்ளார். இது அக்மார்க் ஷங்கர் படம்.

கிராபிக்ஸ் கிங் என்பதை நிரூபித்து உள்ளார் ஷங்கர்.

2.0 ஹாலிவுட்டுக்கு சவால்

2pointO movie review and rating

செயல் மிகக்குறைவு… செய் விமர்சனம்

செயல் மிகக்குறைவு… செய் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: நகுல், நாசர், பிரகாஷ்ராஜ், தலைவாசல் விஜய், ஞ்சால் முஞ்சால் மற்றும் பலர்.
இயக்கம் – ராஜ்பாபு
இசை – நிக்ஸ் லோபஸ்
ஒளிப்பதிவு – விஜய் உலகநாதன்
தயாரிப்பு – ட்ரிப்பி டர்ட்டில்
பிஆர்ஓ. – யுவராஜ்

கதைக்களம்…

படத்தின் ஆரம்பத்தில் ஒரு மனநல காப்பகம் தீப்பற்றி எரிகிறது. இந்த தீ விபத்துக்கு அமைச்சர் தலைவாசல் விஜய் தான் காரணம் என அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர். இதனையடுத்து அவர் பதவி விலக வலியுறுத்துகின்றனர்.

அமைச்சரின் உதவியாளரும் பத்திரிகையாளருமான அஸ்கர் அலியிடம் இது தொடர்பாக ஒரு வீடியோ ஆதாரம் இருக்கிறது.

வீடியோ ஆதாரத்தை கைப்பற்றும் முயற்சியில் இருவரையும் வில்லன் கும்பல் கொலை செய்துவிடுகிறது.

இது ஒரு புறம் இருக்க. மற்றொரு சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்டு அலைகிறார் நகுல். விளம்பரங்கள் செய்து தன்னை அந்த ஏரியாவில் பில்டப் ஆசாமியாக காட்டிக் கொள்கிறார்.

இவரின் குறும்பு தனத்தால் இவரை நாயகி ஆஞ்சல் முஞ்சால் காதலிக்க ஆரம்பிக்கிறார். இதனால் ஒழுங்கா வேலை போக சொல்கிறார்.

ஒரு கட்டத்தில் மனநல காப்பக தீ விபத்துக்கும் நகுலுக்கும் ஒரு கனெக்சன் ஏற்படுகிறது. அது என்ன?

அந்த வீடியோ ஆதாரத்தை நகுல் என்ன செய்தார்? அவர் செஞ்சி முடிச்சாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

வழக்கமாக தன்னை துறுதுறு காட்டிக் கொள்ளும் நகுல் இதிலும் அதையே செய்துள்ளார். ஆனால் இதில் கொஞ்சம் ஓவராகவே காட்டிக் கொண்டுள்ளார்.

ஆம்புலன்சில் ஒரு பிணம் இருக்கும்போது அவர் செய்யும் ஓவர் ஆக்டிங் எல்லாம் சகித்துக் கொள்ள முடியவில்லை. எந்தவொரு மனிதனாக இருந்தாலும் அந்த நேரத்தில் அப்படி எல்லாம் நடந்துக் கொள்ள மாட்டார்கள்.

நாசர் படத்தில் என்ன வேலை என்றே தெரியவில்லை. லாரியில் அடிப்பட்டு சாகிறார். அவரின் கேரக்டரை நாசம் செய்து விட்டார் டைரக்டர்.

பிரகாஷ்ராஜ் படத்தில் சின்ன வேடத்தில் வந்துவிட்டார். அவரின் கேரக்டரிலும் வலுவில்லை. பயங்கர பில்டப் இன்ட்ரோ வேற அவருக்கு.

நாயகி ஆஞ்சல் முஞ்சால் நம்மை கவரை முயற்சித்துள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் ஆரம்பத்தில் பரபரப்பை ஏற்றி, பின்னர் வேகம் குறைத்து, இண்டர்வெல்லில் வேகம் ஏற்றி, பின்னர் வேகம் குறைத்து நம்மை சோதித்து விட்டார் இயக்குனர் ராஜ் பாபு.

உடல் உறுப்பு தானத்தையும் அதன் பின்னணியில் நடைபெறும் கடத்தலையும் அருமையாக சொல்ல முயற்சித்துள்ளார். அதற்காக மனநல காப்பகத்தையும் அவர் பயன்படுத்தியுள்ள விதம் அருமை. ஆனால் அதை திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டி சொல்லிருந்தால் இன்னும் செமயாய் செஞ்சி முடிச்சிருக்கலாம்.

நிக்ஸ் லோபஸின் பின்னணி இசை பேசப்படும் வகையில் உள்ளது. தேவையில்லாத பாடல்கள் நிச்சயம் ரசிகர்களை சோதிக்கும்.

விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு காட்சிகள் ரசிக்கும் ரகமே.

செய்.. செயல் மிகக்குறைவு

உத்தமராஜா… உத்தரவு மகாராஜா விமர்சனம்

உத்தமராஜா… உத்தரவு மகாராஜா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: உதயா, பிரபு, ஸ்ரீமன், கோவை சரளா, குட்டி பத்மினி, எம்எஸ். பாஸ்கர், ஆடம்ஸ் மற்றும் பலர்.
இயக்கம் – ஆஷிப் குரேஷி
இசை – நரேன் பாலகுமார்
ஒளிப்பதிவு – பாலாஜி ரங்கா
தயாரிப்பு – உதயா
பிஆர்ஓ. – நிகில் முருகன்

கதைக்களம்…

சிறுவயது முதலே கோட் சூட் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பவர் உதயா. ஆனால் இவருடைய ஏழ்மையால் அது கிடைக்காமல் போகிறது.

எனவே நிறைய சம்பாதித்து கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து மிகப்பெரிய கோடீஸ்வரனாக ஆக வேண்டும் என்பதை லட்சியமாக வைத்துக் கொண்டே வளர்கிறார்.

இவர் அடிக்கடி இவரை பற்றி பில்டப் கொடுப்பதால் இவரை நண்பர்கள் கூட நம்புவது கிடையாது. ஆனால் இவரை ஒரு நாயகி சின்சியராக காதலிக்கிறார்.

ஒரு நாள் இவர் ஓவர் மப்பில் எங்கோ சென்று படுத்து உறங்கி விடுகிறார். இவர் ஒரு நாள் மட்டும் எங்கோ சென்றதாக நினைக்கிறார். ஆனால் இவரின் நண்பர்கள் 30 நாட்கள் இவரை காணாமல் தேடுகின்றனர்.

அப்படியிருந்தால் தான் 30 நாட்கள் வரை எங்கிருந்தேன்.? தன் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது புரியாமல் குழம்பி போகிறார்.

இவரை அறியாமல் இவருக்குள் ஒரு ஓசை கேட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த கட்டளைகளை இவர் செய்யவிட்டால் இவரை டார்ச்சர் செய்கிறது.

அதன்படி இவர் உத்தரவு மகாராஜா… உத்தரவு மகாராஜா என செய்துக் கொண்டே இருக்கிறார்.

அப்படியென்றால் தன் மூளைக்குள் என்ன நடக்கிறது? என்ன ஆனது? என்பதை புரியாமல் தவிக்கிறார்.

ஒரு மருத்துவ பரிசோதனையில் அதில் ஒரு மைக்ரோ சிப் இருப்பது தெரிய வருகிறது, அப்படி என்றால் இவரை இயக்குவது யார்? அவரின் நோக்கம் என்ன? இதனால் அவர் அடையும் லாபம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

படத்தில் முதல் பாதிவரை நமக்கே பைத்தியம் பிடித்துவிடும் என்கிற அளவுக்கு ஒரு குழப்பக்காரனாய் உதயா அசத்தியுள்ளார்.

சில காட்சிகள் அது ஓவராய் தெரிந்தாலும் அந்த கேரக்டருக்கு அப்படியான ஒரு நடிப்பு தேவை என்பதை 2ஆம் பாதியில் உணர்த்தியுள்ளார் டைரக்டர்.

இப்படத்தை உதயாவே தயாரித்து நடித்துள்ளார். இதுநாள் வரை வெறுமனே வந்து செல்லும் கேரக்டர்களில் வந்திருந்தாலும் அதை எல்லாம் சேர்த்து வைத்து இதில் அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

உதயாவுக்கு ஒரு கேரக்டர்தான் என்றாலும் 3 கட்டங்களில் வருவதால் 3 நாயகிகள் உள்ளனர். ஒரு நாயகியின் கேரக்டர் இவருக்கு தொடர்பு இல்லாமல் பிரபு உடன் பயணிக்கிறது.

விண்வெளிக்கு செல்ல ஆசைப்படும் அந்த ப்ரெண்ட் கேரக்டர் நாயகி நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். டிரைவர் ப்ளாக்பேக்கில் வரும் ஹீரோயினும் நல்ல தேர்வு.

இதில் 2வது ஹீரோ ரேஞ்சுக்கு நடித்திருக்கிறார் பிரபு. டாக்டராகவும் போட்டோகிராபராகவும் என கச்சிதம்.

ஆனால் அந்த இளம் பெண் உடன் நட்பில் அழுத்தம் இல்லாத காரணத்தால் ப்ளாஷ்பேக் காட்சிகள் சுவாரஸ்யம் இல்லை.

நடிகர் சங்கத்தில் தனக்கு நன்கு பரிட்சயமான நடிகர்களை இதில் அதிகளவில் நடிக்க வைத்துள்ளார் உதயா.
காவல்துறை அதிகாரிகளாக கோவை சரளா, ஸ்ரீமன் நடித்துள்ளனர். காமெடிதான் எடுபடவில்லை.

எம்.எஸ்.பாஸ்கர், குட்டி பத்மினி நல்ல தேர்வு. குட்டி பத்மினிக்கு அந்த லோக்கல் குரல் கொடுத்தவர் யாரோ? இவருக்கு பொருத்தமாக இல்லை.

நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை மிரட்டல்.

பிரபு பாடும் அந்த பாடல் நன்றாக இருந்தாலும் அந்த நாயகி மீது பிரபு கொண்ட நட்பு நம்பும் படியாக இல்லை. குறுகிய காலத்தில் அப்படியொரு நட்பில் அழுத்தம் இல்லை. பாலாஜி ரங்காவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

உதயா பைத்தியம் பிடித்து ஓடும் காட்சிகளில் பின்னால் வரும் குதிரைகள் கிராபிக்ஸ் ரசிக்கும்படி உள்ளது.

முதல் பாதியில் கதை கடுப்பாக ஆனாலும் 2ஆம் பாதியில் அதை சரி செய்து நமக்கு புரிய வைத்துள்ளார் டைரக்டர் ஆஷிப் குரேஷி.

தாம் பணத்துக்கு ஆசைப்பட்டு ஏதாவது ஒரு தவறு செய்தால், அதன் விளைவு நம்மை என்றாவது ஒருநாள், ஏதாவது ஒரு வழியில்பாதிக்கும் என ஆணித்தரமாக சொன்ன குரேஷிக்கு ஒரு பொக்கே கொடுக்கலாம்.

வித்தியாசமான கதைக்களம் இருந்தும் ஒரு வலுவில்லாத நட்புக்காக இந்த பழிவாங்கல் இந்த கதை பயணிப்பதுதான் நம்பும் படியாக இல்லை.

கோடீஸ்வரான இருக்கும் உதயா உடையில் கூட கஞ்சத்தனம் செய்வது ஏன்? கோடீஸ்வரனாக அவரை காட்டியிருக்கலாமே. அவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு அவர் என்ஜாய் கூட செய்யவில்லையே.

உத்தமராஜா… உத்தரவு மகாராஜா

Utharavu Maharaja review

சமூக காவலன்… திமிரு புடிச்சவன் விமர்சனம்

சமூக காவலன்… திமிரு புடிச்சவன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ், சாய் தீனா, சம்பத்ராம், லட்சுமி ராமகிருஷ்ணன், முத்துராமன் மற்றும் பலர்.
இயக்கம் – கணேசா
இசை – விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம் நாதன்
தயாரிப்பு – பாத்திமா விஜய் ஆண்டனி
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

போலீஸ் விஜய் ஆண்டனிக்கு ஒரு தம்பி இருக்கிறார். தன் தம்பி மீது அதிகம் பாசம் வைத்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் ஓடி போகும் தம்பி. இளைஞராகி பிரபல ரவுடி மீசை பத்மா உதவியால் நிறைய தவறுகளை செய்கிறார்.

இதனால் வேறு வழியின்றி தன் தம்பியை என்கௌண்டர் செய்து விடுகிறார் விஜய் ஆண்டனி.

நீ என்னை அழித்துவிடலாம். ஆனால் என்னைப் போன்ற நிறைய ரவுடிகளை மீசை பத்மா உருவாக்கி வைத்திருக்கிறார். அவர்களை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. முடிந்தால் ஒரு ரவுடியை நீ திருத்திவிடு என்று சவால்விடுகிறார்.

தன் தம்பி ஆத்மா இதை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பதல் உறக்கம் இழந்து தவிக்கிறார் விஜய் ஆண்டனி.

18க்கு வயதுக்குட்பட்ட சிறுவர்களை கூறிவைத்தே மீசை பத்மா தன் காரியங்களை செய்து வருவதால், அவர்களை அழிக்கவும் முடியாமல் திருத்தவும் முடியாமல் குழம்பி வருகிறார் விஜய் ஆண்டனி.

இதனால் மீசை பத்மாவுக்கும் விஜய் ஆண்டனிக்கும் மோதல் முற்றுகிறது.

இளைஞர்களின் மத்தியில் மீசை பத்மாவிற்கு இருக்கும் ஹீரோ இமேஜ்ஜை கொஞ்ச கொஞ்சமாக காலி செய்ய திட்டமிடுகிறார்.

இதனிடையில் ஊழல் மற்றும் லஞ்சத்தால் வளர்ந்துள்ள தன் காவல் துறையே தன் நேர்மைக்கு எதிராக செயல்படுவதால் அதையும் எதிர்கொள்கிறார்.

காவல் துறை அதிகாரிகளை எப்படி திருத்தினார்? சிறார் குற்றவாளிகளை எப்படி நல்வழிக்கு கொண்டு வந்தார்? மீசை பத்மாவை எப்படி காலி செய்கிறார் இந்த திமிரு புடிச்சவன் என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

போலீஸ் ஸ்டோரியில் புதிய கதைக்களத்தை தேர்ந்தெடுத்துள்ள கணேசாவை முதலில் பாராட்ட வேண்டும். அதுபோல் முதன்முறையாக மிடுக்கான அதே சமயம் அமைதியான போலீஸ் அதிகாரி நடித்துள்ள விஜய் ஆண்டனியை பாராட்டலாம்.

தம்பி மீது பாசம், சமூகம் மீது நேசம், ரவுடி மீது ரோசம் என மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார் விஜய் ஆண்டனி.

ஆனால் ரொமான்ஸ்தான் இவருக்கு சுட்ட போட்டாலும் வருவதில்லை. நிவேதா போல ஒரு பிகர் இருந்தும் விஜய் ஆண்டனி முறுக்கிக் கொண்டே இருப்பது நெருடலை தருகிறது.

மருத்துவ முத்தம் காட்சி இருந்தும் டூயட் இல்லாமல் இருப்பது காதலர்களுளுக்கு சோதனை.

பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு படம் முழுக்க வரும் காட்சிகள் இருக்காது. ஆனால் இதில் நிவேதா பெத்துராஜீக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நிவேதாவும் கிடைத்த கேப்பில் எல்லாம் தன் கவர்ச்சியாலும் காமெடியாலும் ரசிக்க வைத்து விடுகிறார். நன்றாக முயற்சித்தால் காமெடியிலும் கலக்க வாய்ப்புள்ளது.

மீசை பத்மா கேரக்டரில் சாய் தீனா. சிறார்களை வைத்து குற்றம் செய்வதற்கு இவர் சொல்லும் காரணங்கள் மிரள வைக்கிறது. நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார்

போலீஸ் ஏட்டாக சம்பத்ராம். நடிப்பில் நம் கவனம் ஈர்க்கிறார். ஏட்டு என்றாலே ஏளனமாக பார்ப்பவர்களை இன்ஸ்பெக்டர் விஜய் ஆண்டனி கௌரவப்படுத்தும் சீன் செம.

லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் முத்துராமன் இருவரும் சில காட்சிகளில் வந்தாலும் நிறைவான நடிப்பை தந்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ரிச்சர்ட்எம் நாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை. பகல் இரவு என லைட்டிங்கிலும் கவனம் ஈர்த்துள்ளார். எடிட்டர் தான் நம்மை பொறுமையை சோதித்து விட்டார். கோழிச்சண்டை போன்ற காட்சிளை நீக்கியிருக்கலாம்.

அந்த காட்சியை வைத்து மீசை மாதவனை கைது செய்தாலும் அதற்கு கோழி திருட்டு காரணம் மட்டுமே போதுமே.

நாயகன் விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன.

அருண் பாரதி வரிகளில் பாடல் வரிகள் அனைத்தும் அருமை. நக…நக… பாடல்.. திமிருக்கே புடிச்சவன் பாடல்கள் தாளம் போட்டு ரசிக்க வைக்கிறது. நீ உன்னை மாற்றிக் கொண்டால் பாடல் நிச்சயம் வரவேற்பை பெறும்.

கம்பீரமான போலீஸ் அதிகாரி சில நேரங்களில் அட்வைஸ் செய்துக் கொண்டே இருப்பது போரடிக்கிறது.

படத்தின் நீளமும் திரைக்கதை அமைப்பும் பலவீனமாக உள்ளது.

விஜய் ஆண்டனிக்கு உறக்கமின்மை மற்றும் பிளட் பிரசர் உள்ளிட்ட நோயை கொடுத்து அதை சொன்ன விதத்தில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார் டைரக்டர் கணேசா.

படத்தில் தெலுங்கு சாயல் அதிகமாகவே உள்ளது. தமிழ் மக்களை விட ஆந்திரா ரசிகர்களை நிச்சயம் அதிர வைப்பான் இந்த திமிரு புடிச்சவன்.

ரவுடி மற்றும் திருடன் திருந்தினால் மட்டுமே குற்றத்தை முழுமையாக ஒழிக்க முடியும் என்பதையும் அதை போலீஸே செய்ய துணிவதையும் ஆணித்தரமாக சொன்ன கணேசாவை கட்டி அணைத்து பாராட்டலாம்.

சமூக காவலன்… திமிரு புடிச்சவன்

Thimiru Pudichavan review rating

இல்லத்தரசிகளின் இனிய மொழி… காற்றின் மொழி விமர்சனம்

இல்லத்தரசிகளின் இனிய மொழி… காற்றின் மொழி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு, எம்எஸ் பாஸ்கர், மனோபாலா, குமரவேல், யோகிபாபு, சிம்பு, மதுமிதா மற்றும் பலர்.
இயக்கம் – ராதாமோகன்

இசை – காசிப்
ஒளிப்பதிவு – முத்துசாமி
தயாரிப்பு – தனஞ்செயன்

பிஆர்ஓ – ஜான்சன்

கதைக்களம்

கணவன் மற்றும் ஒரு பையன் என்ற சின்ன வளையத்திற்குள் குடும்பத்தலைவியாக விஜயலட்சுமி (ஜோதிகா).

இவருக்கும் நவீன பெண்களை போல் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் +2 பெயில் என்பதால் தயக்கத்துடன் வாழ்கிறார்.

அப்பாவின் மட்டந்தட்டம், இரட்டை சகோதரிகளின் கிண்டலுக்கு பயந்து அந்த ஆசையை மனதிற்குள் அடக்கி வைத்து இருக்கிறார்.

இந்நிலையில் ஒரு ரேடியோ பரிசுப் போட்டியில் வென்று ஹலோ எப்.எம் வானொலியில் ஆர்ஜே வேலை கிடைக்கிறது.

மனதுக்கு பிடித்த வேலையை சந்தோஷமாக செய்கிறார். ஆனால் அது இரவு வேலை என்பதால் குடும்பத்தில் பல சிக்கல்களை சந்திக்க, வேலையை விடும் சூழ்நிலை ஏற்படுகிறது.

அதை எப்படி சமாளித்தார்? இந்த விஜயலட்சுமி என்பதுதான் மீதிக்கதை

கேரக்டர்கள்

இல்லத்து அரசி அப்பாவி விஜயலட்சுமி, ரேடியோ ஜாக்கி அசத்தல் மது என இரண்டிலும் கலக்கியிருக்கிறார் ஜோதிகா.

தனக்கே உரித்தான துறுதுறுப்பு, காமெடி, செண்டிமெண்ட் கலந்து விஜயலட்சுமி கேரக்டரை அருமையாக செய்துள்ளார்.

உங்கள மாதிரி பெண்கள்தான் எங்களுக்கு இன்ஸ்பிரேசன் என லட்சுமி மஞ்சுவிடம் ஜோதிகா சொல்லும் ஒரு வார்த்தையிலேயே மாடர்ன் கேர்ள்ஸ் மீது இல்லத்தரசிகளுக்கு உள்ள கிரேஸ் தெரிகிறது.

ஜோதிகாவின் பாஸ் ஆக நடித்துள்ள லட்சுமி மஞ்சு பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார்.

ஆபிஸ் டென்சன் கணவராக விதார்த். ஒரு கட்டத்தில் நிம்மதியை இழந்து நிற்கும் காட்சியில் கணவன்மார்களையும் கண் கலங்க வைத்து விடுகிறார்.

என்னதான் ஒரு கணவர் சமையலறைக்கே செல்லாமல் இருந்தாலும், கடுகு மற்றும் டீத்துள்க்கு கூடவா வித்தியாசமல் தெரியாமல் இருப்பார்.?? இது எல்லாம் ரொம்ப ஓவரூ…

ராதாமோகன் படங்களில் மட்டும் குமரவேலுக்கு எப்படி தான் இந்த நடிப்பு வருகிறதோ? எந்த கேரக்டர் என்றாலும் கைத்தட்டல்களை வாங்கிவிடுகிறார்.

சில காட்சிகளில் வந்தாலும் மயில்சாமி. சூப்பர் சிரிப்பு சாமி.

இவர்களுடன் சிறப்பான நடிப்பில் எம்எஸ். பாஸ்கர் மற்றும் மனோபாலா.

கெஸ்ட் ரோலில் யோகிபாபு. அவர் காட்சிகளில் தியேட்டர்களில் சிரிப்பலை தான். படம் முழுவதும் வரும் அப்பார்ட்மெண்ட் வாசி கேரக்டக்ராக அவருக்கு கொடுத்திருக்கலாம்.

சிம்பு ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் சிறப்பு. ‘லேட்டா வந்ததுக்காக எங்கிட்ட ஸாரி கேட்ட ஒரே ஆள் நீங்கதான்’ என்று ஜோதிகாவிடம் சிம்பு கேட்பது செம. புரிந்தவர்கள் நிச்சயம் கை தட்டி ரசிப்பார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளர் காசிப் இசையில்… கிளம்பிட்டாளே விஜயலட்சுமி, போ உறவே, டரட்டி பொண்டாட்டி பாடல்கள் மன நிறைவைத் தருக்கின்றன. ஜிமிக்கி கம்மல் பாடல் ஏற்கெனவே ஹிட்டான பாடல். அதை சரியான இடத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

முத்துசாமி ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. படத்தை ரசிக்க அவை கை கொடுக்கிறது.

முதல் பாதியில் கொஞ்சம் எடிட்டிங் செய்திருக்கலாம்.

என்ஜின் டிரைவருக்கு ஜோதிகா சொல்லும் ஆலோசனை… அட அட சூப்பர்யா… என்ற அசை போட வைக்கிறது. வசனங்கள் நச். ரகம்.

நதியெங்கே போகிறது… கடலைத் தேடி… என்ற பாடல் சேர்க்கப்பட்ட இடம் அருமை. ஆர்.ஜே. கேரக்டருக்கு மது ஒரு கிக் ஏற்றியுள்ளார்.

ராதாமோகன் படங்கள் என்றாலே குடும்பத்துடன் ரசிக்கலாம். அதை மீண்டும் ஜோதிகாவுடன் இணைந்து கொடுத்திருப்பது மிகச்சிறப்பு.

வேலைக்கு போகும் பெண்கள் எல்லாருக்கும் பல பிரச்சினைகள் இருக்கும். அதை மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள்? என்பதை விட தன் கணவன் மற்றும் வீட்டார்கள் எப்படி பார்க்க வேண்டும் என்பதை சொன்ன ராதாமோகனுக்கு ராஜமரியாதை கொடுக்கலாம்.

ஒரு தாய் எந்த சூழ்நிலையிலும் தன் பிள்ளைகளை விட்டுக் கொடுக்க மாட்டாள் என்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார். அதை புருசன் புரிந்துக் கொண்டு க்ளைமாக்ஸில் கொடுக்கும் வேலைக்கான அனுமதி ரசிக்க வைக்கிறது.

காற்றின் மொழி… இல்லத்தரசிகளின் இனிய மொழி

தளபதி ராஜ்ஜியம்…; சர்கார் திரை விமர்சனம்

தளபதி ராஜ்ஜியம்…; சர்கார் திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகிபாபு மற்றும் பலர்.
இயக்கம் – ஏஆர். முருகதாஸ்
இசை – ஏஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவு – கிரிஷ் கங்காதரன்
எடிட்டர் – ஸ்ரீகர் பிரசாத்
தயாரிப்பு – சன் பிக்சர்ஸ்
பிஆர்ஓ – ரியாஸ் கே அஹ்மது

கதைக்களம்…

வெளிநாட்டில் ஒரு மிகப்பெரிய கம்பெனியில் CEOவாக இருக்கிறார் சுந்தர் ராமசாமி (விஜய்). இவர் ஒரு கார்ப்பரேட் கிரிமினல். இவர் நினைத்தால் தனக்கு எதிரியான அனைத்து கம்பெனிகளையும் காலி செய்துவிடுவார்.

இவர் இந்தியா வருவதால் இந்தியாவில் உள்ள கம்பெனிகளே பயந்து நடுங்குகின்றன.

பின்னர்தான் தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்காக மட்டுமே இவர் வந்துள்ளார் எனத் தெரிகிறது.

ஆனால் விஜய்யின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டுவிட்டார்கள். இவர் உலகளவில் பிரபலமான நபர் என்பதால் இது ஒட்டு மொத்த தமிழகத்திற்கே தெரிந்து விடுகிறது.

என் ஓட்டை பதிவு செய்ய நான் 3500 கிலோ மீட்டர் கடந்து வந்துள்ளேன்

என் ஒரு ஓட்டை பதிவு செய்யாமல் நான் வெளிநாடு செல்ல மாட்டேன் என கோர்ட்டுக்கு செல்கிறார்.

கோர்ட் உத்தரவுப்படி அவருக்காக ஒரு ஓட்டு போடும் தேர்தல் நடைபெறவுள்ளது.

49P என்ற சட்ட பிரிவின் படி நம் ஓட்டை வேறு யாராவது பதிவு செய்திருந்தால் நாமே பதிவு செய்ய உரிமை உள்ளது. எனவே விஜய் அந்த சட்டம் வழியாக செல்ல, நாட்டு மக்களிடையே விழிப்புணர்வு வருகிறது.

இதனால் பலரும் கோர்ட் வரை செல்ல, ஆட்சி அமைப்பதில் பிரச்சினை நீடிக்கிறது. இதனால் மறு தேர்தல் வேண்டும் என விஜய்யைப் போல பலரும் கேட்கின்றனர்.

இதனால் விஜய்க்கும் 2 முறை முதல்வராக இருந்த பழ கருப்பையாவிற்கும் பிரச்சினை எழுகிறது.

அதன்பின்னர் இருவரும் சவால் விட சர்கார் என்ன ஆனது? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

சர்கார் முழுவதும் விஜய்யின் ராஜ்ஜியம்தான். வெறுமனே மாஸ் மட்டும் காட்டாமல் க்ளாஸ் ஆகவும் நடித்திருக்கிறார்.

சமூகத்தில் வெற்றிப் பெற்ற ஒருவன் தன் ஒவ்வொரு முடிவையும் நிதானமாகத்தான் எடுப்பார். அதை சரியாக செய்திருக்கிறார் விஜய். ஆக்சன் காட்சிகளில் சரவெடியாய் வெடித்திருக்கிறார்.

பாடல்களுக்கு மட்டுமே வந்து செல்லும் நாயகி போல கீர்த்தி சுரேஷ். இவரது கேரக்டரில் வலுவில்லை. லிவிஸ்டனின் மகளாக வந்து செல்கிறார்.

இரண்டு அரசியல்வாதிகளாக ராதாரவி மற்றும் பழ கருப்பையா. இருவரும் நல்ல அனுபவ நடிப்பை கொடுத்துள்ளனர். ஆன்னால் அரசியல்வாதி எவ்வளவு மோசமானவர் என்பதை இன்னும் ஆணித்தரமாக காட்டி ஹீரோவுக்கு மாஸ் சேர்த்திருக்கலாம்.

சில காட்சிகளிலேயே வந்தாலும் யோகி பாபு அசத்துகிறார். இவரைப் பார்த்தாலே தியேட்டரில் சிரிப்பலை சத்தம் அடங்க வெகு நேரமாகிறது.

வரலட்சுமி தீபாவளி லட்சுமி வெடியாய் பட்டைய கிளப்பியிருக்கிறார். ஆனால் இவரது கேரக்டரை இன்னும் பலப்படுத்தியிருந்தால் படம் மரண மாஸாக இருந்திருக்கும்.

ஏஆர். ரஹ்மானின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். ஆனால் பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பின்னணி இசையில் கை கொடுத்துள்ளார்.

கவனிக்க வைத்த வசனங்கள்…

கொசு கடிச்சு 87 பேர் டெங்குல சாகுற கொடுமை வேறு எங்காவது நடக்குமா?
“எதிர்க்க ஆளே இல்லன்னு நினைக்கிறது தான் ஜனநாயகத்தோட பெரிய எதிரி”
கக்கனையும், காமராஜரையும் நாமதான் கண்டுபிடிக்கனும்… உள்ளிட்ட பல வசனங்கள் செம.

ப்ளஸ்…

நிதானமான நடிப்பில் நின்று அடித்திருக்கிறார் விஜய்
49 ஓ நோட்டா மாதிரி, தேர்தலில் 49 பி என்ற சட்டம்
வசனங்கள் மற்றும் பர்ஸ்ட் ஆஃப் மாஸ் காட்சிகள்

மைனஸ்….

கதை திருட்டு பிரச்சினையால் டைட்டில் கார்டு முருகதாஸின் பெரிய விளக்கக் கடிதம்.
சிம்டாங்காரன் மற்றும் OMG பொண்ணு தேவையில்லாத பாடல்கள்.
பாடல்களுக்காகவே கீர்த்தியை நாயகியாக வைத்திருக்கிறார்கள்
அட்வைஸ்கள் நிறைந்த செகன்ட் ஆஃப் ஸ்லோ

இயக்கம் பற்றிய அலசல்…

விஜய் என்றாலே மாஸ் காட்டிவிட்டு நாலு பைட், நாலு டான்ஸ் வைத்திருக்கலாம். அவை இல்லாமல் அவரை போன்ற ஒரு ஸ்டாரை நன்றாக நடிக்க வைத்து ஒரு சூப்பர் மெசேஜ் கொடுத்துள்ள முருகதாஸை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

கார்ப்பரேட் முதல் பாலிடிக்ஸ் வரை விஜய்யை வைத்து செம ட்ரீட் கொடுத்துள்ளார். இடையில் மீனவர் வாழ்க்கை மற்றும் டயலாக்குகளை வேண்டுமென்ற திணித்தது போல உள்ளது.

ஆனால் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பை 2ஆம் பாதியில் மெய்ண்ட் செய்யாமல் கோட்டை விட்டுவிட்டார்.

லாஜிக் பார்க்காமல் சில கமர்சியல் ஐட்டங்களை சேர்த்துவிட்டதால் இரண்டாம் பாதியில் சில விஷயங்கள் நம்பும்படியாக இல்லை.

சர்கார்.. தளபதி ராஜ்ஜியம்

Vijay Sarkar review rating

More Articles
Follows