விவசாய ஜனங்களின் நண்பன் ஜனநாதன்.. : லாபம் விமர்சனம்

விவசாய ஜனங்களின் நண்பன் ஜனநாதன்.. : லாபம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்

பெருவயல் என்றொரு கிராமம். அந்த கிராமத்திற்கு வருகிறார் பக்கிரி என்ற விஜய்சேதுபதி. அவரின் நண்பர்களும் ஊர் மக்களும் கொண்டாடுகின்றனர்.

அந்த கிராமத்தில் விவசாய நிலங்களை அபகரித்து, விவசாயிகளை விவசாய சங்கத் தலைவர் என்ற பெயரில் அடிமையாக்கி வைத்திருக்கிறார் வில்லன் ஜெகபதி பாபு.

எனவே அவரை எதிர்க்கவும் விவசாயத்தின் பலன்களை மக்களுக்கு சொல்லவும் முற்படுகிறார் விஜய் சேதுபதி. அதன்படி ஜெகபதி பாவுவுவை எதிர்த்து விவசாய சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவர் ஆகிறார்.

இதனால் கோபமடையும் ஜெகபதி பாபு, விஜய் சேதுபதியை அழிக்க நினைக்கிறார்.

அந்த பகுதியில் உள்ள பல கிராமங்களை இணைத்து எல்லோருக்கும் வேலை வாய்ப்பளிக்கும் வகையில் கூட்டு பண்ணை திட்டத்தை செயல்படுத்துகிறார்.

மேலும் தன் விளைச்சலுக்கு தானே விலையை நிர்ணயம் செய்கிறார் விஜய் சேதுபதி. இதனால் பல பிரச்சினைகளை உருவாக்குகிறார் வில்லன். கூட்டு பண்ணை திட்டம் நிறைவேறியதா? மக்கள் என்ன செய்தார்கள்? விவசாயம் வளம் பெற்றதா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

மக்களின் செல்வன் இந்த படத்தில் விவசாயிகளின் நண்பனாக வாழ்ந்திருக்கிறார். படத்தின் விவசாயம் பற்றிய பாடங்கள் அதிகமாகவே இருந்தாலும் விவசாயத்தில் இவ்வளவு இருக்கிறதா? என வியக்க வைக்கிறது.

ஒரு விவசாய சங்கத்திற்கு அரசிடம் இருந்து எவ்வளவு பணம் வருகிறது. அதில் எவ்வளவு கையாடல் நடக்கிறது என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ஜனநாதன்.

விஜய்சேதுபதி உடலை குறைத்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும்.

இவருடன் கலையரசன், ராம்திலக் என பல நண்பர்கள் உள்ளனர். நாம் மறந்து போன தந்தி முறையை சொல்லியிருப்பது சிறப்பு.

ஸ்ருதிஹாசன் மற்றும் தன்ஷிகா என 2 நாயகிகள் இருந்தாலும் இவருக்கும் பெரிதாக காட்சிகள் இல்லை. தன்ஷிகா நிலைமை மோசம்.

விலை நிலங்கள், விவசாயிகளின் நிலைமை, விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் எப்படி சுரண்டப்படுகிறது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஆனால் கொஞ்சம் கமர்சியல் மசாலா சேர்த்து இருக்கலாம். நிறைய காட்சிகள் பொறுமையை சோதிக்கிறது.

விஜய்சேதுபதி ஊரை விட்டு செல்வதும் பின்னர் வருவதும் சரியான காரணம் சொல்லப்படவில்லை.

இமான் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை சில இடங்களில் ரசிக்க வைக்கிறது.

ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். எடிட்டர் இன்னும் சில காட்சிகளை வெட்டியிருந்தால் ரசிகர்களுக்கு லாபம் தான்.

ஆக மறைந்த இயக்குனர் ஜனநாதன் இதில் விவசாய நண்பனாக தன்னை காட்டியிருக்கிறார்.

SP Jhananathan’s laabam movie review and rating

ஆணாதிக்கத்தை அழித்த அரசியல் அம்மா.. தலைவி விமர்சனம் 3.5/5

ஆணாதிக்கத்தை அழித்த அரசியல் அம்மா.. தலைவி விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தலைவி படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்த படமானது 1965 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த இன்ப துன்ப சம்பவங்களை மையப்படுத்தி படத்தை இயக்கியுள்ளார் விஜய்.

அதாவது நடிகையான தன் பயணத்தை தொடங்கியது முதல் தமிழக முதல்வராக அரியணையில் அமரும் வரை படமாக்கியிருக்கிறார்.

கேரக்டர்கள்…

ஜெயலலிதா என்பது ஒரு இரும்பு பெண்மணியின் கனமாக பாத்திரம் அதை ஏற்று நடிப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அதற்கு டிரெஸ் எடுத்த தைத்தது போல செம பிட்டாகி இருக்கிறார் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத்.

திமிர்த்தனம், வெகுளி, பாசம், காதல், அழுகை, ஏக்கம், கம்பீரம், ஆணவம் என அசால்ட்டாக செய்துள்ளார் கங்கனா.

எம்.ஜி.ஆர்.ஆக நடித்திருக்கிறார் அரவிந்த் சாமி. சில நேரங்களில் இவர் எம்ஜிஆரா? என கேட்க வைத்தாலும் பார்த்துக் கொண்டிருக்கும் போது பொருந்திப் போகிறார்.

ஆனால் ஒரு காட்சியில் சுத்தமாக ஒட்டவில்லை. எம்ஜிஆரை எம்ஆர். ராதா சுட்ட பிறகு எம்ஜிஆர் குரலில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஆனால் இங்கே அரவிந்த்சாமி குரலில் எந்த மாற்றமுல் இல்லை. அது முக்கியமான நிகழ்வு ஆச்சே.. அதை இயக்குனர் ஏனோ கவனிக்கவில்லை.

கருணாநிதி கேரக்டரில் நாசர். அசல் கருணாநிதியின் குரல் போலவே உள்ளது. நாசருக்கும் கங்கனாவும் சந்திக்கும் காட்சிகளில் தான் படமே தொடங்குகிறது. அதில் கங்கனா விடும் சவால்கள் பெண்களை உயர்த்தும்.

இதில் முக்கியமாக பாரட்டப்பட வேண்டியவர் ஆர்.என்.வீரப்பன் (அதாவது ஆர்.எம். வீரப்பன்). அந்த கேரக்டரில் மிரட்டி இருக்கிறார் சமுத்திரகனி. பேசும் பேச்சிலும் பார்க்கும் பார்வையிலும் 1000 அர்த்தங்கள் கொடுத்திருக்கிறார்.

நான் எம்ஜிஆரின் கேடயம் என சொல்லும்போதே செம கெத்தாக இருக்கிறார். அந்த கேடயம் வார்த்தை ஜெயா ஒருமுறை பயன்படுத்துவது செம சீன்.

எம்.ஆர்.ராதாவாக வரும், ராதாரவி சசியாக பூர்ணா. ஜெயாவின் அம்மாவாக பாக்யஸ்ரீ, பெரிதாக வேலையில்லை. ஆனால் காட்சிகள் கச்சிதம். ஜானகியாக மதுபாலா. மாதவனாக தம்பி ராமையா. இவரின் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

விஜேந்திர பிரசாத்தின் வசனங்கள் சூப்பர். மனதை விட்டு அகலவில்லை.

ஆர்ட் டைரக்டர் மற்றும் ஒளிப்பதிவாளரை நிச்சயம் பாராட்டனும். விஷால் விட்டலின் ஒளிப்பதிவு அருமை. படத்தின் கலை இயக்குனர் ராமகிருஷ்ணா, மோனிகா நிகோட்ரிக்கு அதிக வேலை

ஜிவி.பிரகாஷின் இசையில் பாடல்கள் பெரிதான கவரவில்லை என்றாலும் பின்னணி இசையில் அதிகமாகவே ஸ்கோர் செய்துவிடுகிறார்.

அண்ணா கருணாநிதி எம்ஜிஆர் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. ஆனால் அதில் இயக்குனர் நிறைய ரகசியத்தை மறைத்துவிட்டதாக சீனியர்கள் சொல்லி கேட்டோம். அதை சரி செய்திருக்கலாம். (நாளைய தலைமுறை இதையே உண்மை என நம்பிவிடும்)

அதுபோல் ஜெயலலிதாவின் சினிமா காட்சிகளை குறைத்துவிட்டு இன்னும் கொஞ்சம் அரசியல் பயணத்தை காட்டியிருக்கலாம்.

அரசியலில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையிலும் ஒரு பெண் எப்படி தைரியமாக நடந்துக் கொண்டாள் என்பதை ஆணித்தரமாக சொன்ன விஜய்க்கு நன்றிகள். சிங்கப்பெண் ஜெயாவின் வாழ்க்கை ஒரு சரித்திரம்தான்.

Jayalalithas biopic Thalaivi movie review rating

விமர்சனம் : ஷாங்க் சி – த லெஜெண்ட் ஆஃப் த டென் ரிங்ஸ் – எப்படி இருக்கிறார்.?

விமர்சனம் : ஷாங்க் சி – த லெஜெண்ட் ஆஃப் த டென் ரிங்ஸ் – எப்படி இருக்கிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) 25-வது படம்.

ஒரு புதிய சூப்பர் ஹீரோவை மீண்டும் தன் தங்கள் பி்ரம்மாண்ட திரையுலகுக்கு அழைத்து வந்திருக்கிறது மார்வெல்.

சக்தி வாய்ந்த 10 (ரிங்ஸ்) வளையங்களை வைத்துக் கொண்டு சாம்ராஜ்யத்தை வீழ்த்தி சாதனை படைத்த தந்தையை எதிர்க்கிறான் அவரது மகன்.

யார் வெற்றி அடைந்தார்.? என்பதே ஒன்லைன்.

அவெஞ்சர்ஸ் – எண்ட் கேம் என்ற படத்தின் கதையின் தொடர்ச்சியாக இந்தக் கதை தொடங்குகிறது.

டென் ரிங்க்ஸ் அமைப்பின் தலைவனான வென்வூ, தன்னிடம் உள்ள வளையங்களின் சக்தியால் ஆட்சி செய்ய நினைக்கிறான்.

அற்புத சக்திகள் கொண்ட மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சிறிய மர்ம கிராமத்தைக் கைப்பற்றி அதை ஆள நினைக்கிறார்.

ஆனால், அந்த கிராமத்தைச் சேர்ந்த லெய்கோ வு என்ற பெண் மீது காதல் கொண்டு தன் லட்சியத்தை மறந்து அவளை திருமணம் செய்து கொள்கிறார்.

இவர்களுக்கு ஷாங்க் சி என்ற மகனும், மெங்கர் சாங் என்ற மகளும் பிறக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் மீண்டும் (டோனி லியுங்) அந்த 10 ரிங்ஸ் கொண்டு அந்த மர்ம கிராமத்தைப் பிடிக்க நினைக்கும் போது அவருக்கு எதிராக அவரின் மகன் ஷாங் ச்சி, மகள் மெங்கர் சாங் திடீரென திரும்புகின்றனர்.

இதன்பின்னர் இவர்களுக்குள் நடக்கும் அமிரனியான சாகசங்களே ‘ஷாங் சி’ – தி லெஜெண்ட் ஆப் தி டென் ரிங்ஸ்’ படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஷாங்க் சி யாக வரும் சிமு லியு ஆக்சன் காட்சிகளில் தெறிக்கவிட்டுள்ளார்.

இவரின் தோழியாக நடிகை ஆவ்க்வாஃபினா. காமெடி காட்சிகளில் வேற லெவல்.

டோனி லியுங் மனைவியான ஃபலா சென் ரசிகர்களின் அனுதாபத்தையும் அள்ளிவிடுகிறார்.

மந்திர சக்திகள், காஸ்ட்யூம் என பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்த படத்தில் விலங்குகள் பேசுவது குழந்தைகளை வெகுவாக கவரும்.

சீட் நுனியில் உட்கார வைக்கும் திரில்லர் காட்சிகள் உள்ளன. கிராபிக்ஸ் காட்சிகள் பிரம்மிக்கும் வகையில் அமைந்துள்ளன.

மொத்தத்தில் ஷாங் சீ அண்ட் த லெஜெண்ட் ஆஃப் த டென் ரிங்ஸ் படத்தை குடும்பத்துடன் ரசிக்கலாம்.

Shang Chi And The Legend Of The Ten Rings movie Review

சார் அவார்ட் பட்டா போட்டுக்கலாம்..; சார்பட்டா பரம்பரை விமர்சனம் – 4/5

சார் அவார்ட் பட்டா போட்டுக்கலாம்..; சார்பட்டா பரம்பரை விமர்சனம் – 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் – ஆர்யா, பசுபதி, கலையரசன், துஷாரா விஜயன், அனுபமா, ஜான்விஜய், காளி வெங்கட், தங்கதுரை

இசை – சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு – முரளி

இயக்கம் – பா.ரஞ்சித்

தயாரிப்பு – கே 9 ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்ஷன்ஸ்

ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி & காலா’ படங்களுக்கு பிறகு ரஞ்சித் இயக்கியுள்ள படம் சார்பட்டா பரம்பரை. எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகளவில் இருந்தது.

கதைக்களம்..

1950 முதல் 1970களில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

சார்பட்டா பரம்பரை என்ற குத்துச்சண்டை அணிக்கும், இடியப்பா பரம்பரை என்ற குத்துச்சண்டை அணிக்கும் இடையே கிட்டத்தட்ட 30-40 வருடங்களாக பகை இருக்கிறது. சார்பட்டா பரம்பரையின் வாத்தியார் ரங்கன்.

பாக்ஸிங் போட்டியில் இறங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் அம்மாவின் கண்டிப்பால் போட்டியிட முடியாமல் சார்பட்டா பரம்பரை அணி மீது தீவிர ரசிகராகவே இருக்கிறார் ஆர்யா (கபிலன்).

ஒரு கட்டத்தில் வாத்தியார் ரங்கனுக்கு இடியப்ப பரம்பரையால் பெரிய சவால் வருகிறது.

இதனால் தன் ரசிக சிஷ்யன் கபிலனையே இடியப்ப பரம்பரைக்கு எதிராக களமிறக்குகிறார் ரங்கன்.

இடியப்ப பரம்பரையைச் சேர்ந்த ஜாம்பவான் வேம்புலியை வீழ்த்தி காட்டுவேன் என போட்டியே போடாத கபிலன் சவால் விடுகிறார்.

கபிலன் ஜெயித்தாரா.? ரங்கன் என்ன செய்தார்.? வென்றது இடியப்ப பரம்பரை..? சார்பட்டா பரம்பரை.? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்...

ஆர்யா நீ வேற லெவல்ய்யா… நான் கடவுள், மதராசப்பட்டிணம், அவன் இவன், மகாமுனி படங்களுக்கு பிறகு ஆர்யா அசத்திய படம் இது. பாகுபலி பாணியில் இவரது பாடிகட்டு.

ரசிகர்களை ஆக்சனில் மிரள வைத்துள்ளார். தன் தாய் அனுபமாவிடம் அடங்கும் போது நம்மை அழவைக்கிறார். அந்த காலகட்டத்தில் பெற்றோர்கள் எவ்வளவு கண்டிப்பானவர்கள் என்பதும் இதற்கு ஒரு சாட்சி.

வாத்தியார் ரங்கனாக பளிச்சிடுகிறார் பசுபதி. அதே நேரத்தில் திமுகவின் வெறித்தனமான தொண்டராகவும் பலே.

பசுபதியின் மகனாக கலையரசன். இவர் நல்லவரா? கெட்டவரா? என கன்ப்யூசன் செய்கிறார். இரண்டிலும் ஸ்கோர் செய்கிறார்.

வேம்புலி ஆக ஜான் கொக்கேன். டான்சிங் ரோஸ் பாக்சராக ஷபீர் கல்லரக்கல் இருவருமே யார்? என கவனிக்க வைப்பார்கள். பேட்ட படத்தில் நடித்த ஓரிரு கலைஞர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

காளி வெங்கட் & தங்கதுரை இருவரும் ரசிக்க வைக்கின்றனர்.

ஆங்கிலோ இந்தியனாக ஜான் விஜய். தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசும் ஸ்டைல் சூப்பர்.

ஆர்யாவிற்கு மனைவியாக துஷாரா விஜயன். முதலில் கணவருக்கு பணிந்து போவதும் பின்னர் எகிறி வாடா போடா என்பதும் துஷாரா தூள் கிளப்புகிறார்.

இதில் வேம்புலி மற்றும் டான்ஸிங் ரோஸ் ஆகிய கேரக்டர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

படத்தின் இயக்குனர் ரஞ்சித்துக்கு பிறகு மெயின் பில்லரே ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம். 1970 காலக்கட்டத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து வைத்திருக்கிறார்.

பாக்ஸிங் போட்டி நடக்கும் மைதானம், மணிக்கூண்டு, மைக்கில் பேசுபவர், தெருக்கள், சைக்கிள், உடைகள், வீட்டில் உள்ள பொருட்கள் என அந்தக் காலத்தை கண்முன் கொண்டு வந்துள்ளார்.

படத்தின் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவு. இந்த படத்தை பார்த்தால் நமக்கும் பாக்ஸிங் பயில ஆர்வம் வரும். அப்படி ஒரு நேர்த்தியான சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் ஓரிரு பாடல்கள் தான். தனியாக இல்லாமல் படத்தின் கதையோட்டத்துடன் வருவதால் அதை இண்டர்நெட்டில் ஓட்டிப் பார்க்க தோன்றவில்லை.

பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

ஒளிப்பதிவாளர் முரளி ஜி.. சூப்பர் ஜீ.. சூப்பர் ஜீ… பகல் இரவு காட்சிகளும் சரி.. பாக்ஸிங் காட்சிகளும் சரி அருமையான ஒளிப்பதிவு.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை பாக்ஸிங் தான்.. ஆனாலும் படத்தின் மீதான ஆர்வத்தை ஊட்டியிருக்கிறார் ரஞ்சித்.

தன் சாதீய குறியீடுகளை இனியாவது ரஞ்சித் கொஞ்சம் தவிர்க்கலாம்.. இதில் பெரிதாக சொல்லவில்லை என்றாலும் குறியீடுகளை கவனிக்க வைக்கிறார்.

பாக்ஸிங் விட்டு ஆர்யா வேறு தொழில் செய்வது படத்தை வேறு ட்ராக்கில் எடுத்து செல்வது கொஞ்சம் சோர்வைத் தருகிறது. அதில் சில காட்சிகளை எடிட்டர் வெட்டியிருக்கலாம்.

படத்தின் ஹீரோ, கேரக்டர்கள், திரைக்கதை ஆர்ட் ஒளிப்பதிவு .. இவற்றில் எதற்காவது நிச்சயம் அவார்ட் உறுதி. வாழ்த்துக்கள்.

காங்கிரஸ் திமுக ஆட்சிக் காலத்தில் நடந்தவற்றை அப்படியே காட்டிய ரஞ்சித்தின் தைரியத்தை நிச்சயம் பாராட்டலாம்.

ஆக… சார்பட்டா பரம்பரைக்கு .. சார் அவார்ட் பட்டா போட்டுக்கலாம்.

படத்தில் ‘மிசா’ குறித்து பேசப்பட்டுள்ளது. எனவே அதுபற்றிய ஒரு பார்வை..:

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக இந்திய அரசியலமைப்பின் 352வது விதியின்படி 1975 ஜூன் 25 ஆம் தேதி நெருக்கடி நிலை அறிவித்து அவசரநிலை பிரகடனம் செய்தார். இந்த நெருக்கடி நிலை 1977 மார்ச் 21 ஆம் தேதி வரை 19 மாதங்கள் நீடித்தது.

தமிழகத்தில் அப்போது கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி, சிற்றரசு, சிட்டி பாபு, பாண்டியன் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது மிசா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டமான (The Maintenance of Internal Security Act) மிசா சட்டம் 1977-இல் ஜனதா கட்சி அரசால் ரத்து செய்யப்பட்டது.

sarpatta parambarai movie review and rating in Tamil

சோழர் பரம்பரையில் ஒரு கிண்டல் சாதா..; ஜகமே தந்திரம் விமர்சனம் 2.25/5

சோழர் பரம்பரையில் ஒரு கிண்டல் சாதா..; ஜகமே தந்திரம் விமர்சனம் 2.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

மதுரையில் பரோட்டா கடை நடத்தி வருகிறார் சுருளி (எ) தனுஷ்.

பணம் கொடுத்தால் கொலையும் செய்வார். ஒருமுறை ஒரு கொலை செய்துவிட்டு தலை மறைவாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

அப்போது தனுஷின் நண்பர் ஒருவர் லண்டனில் அடியாள் வேலை இருக்கிறது. இங்கிலாந்து தாதா பீட்டர் (ஜேம்ஸ் காஸ்மோ) க்கு ஆள் தேவைப்படுகிறது என்கிறார்.

அந்த நாட்டில் மற்றொரு தாதா ஜோஜு ஜார்ஜ் என்ற ஒரு இலங்கை தமிழனை எதிர்க்க ஆளில்லை.

அவனை தீர்த்து கட்டினால் லட்சணக்கணக்கில் பணம் கிடைப்பதாக நண்பர் கூற தனுஷும் லண்டன் செல்கிறார்.

அதன் பின்னர் என்ன ஆனது? லண்டனில் தாதாவாக மாறினாரா..? கொலை பழியில் இருந்து தப்பினாரா தனுஷ்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

பெரும்பாலான படங்களில் வேலையில்லாமல் சுற்றும் தனுஷ் இதில் பிசியாகவே இருக்கிறார். டான் கெட்டப்புக்காக முறுக்கு மீசை எல்லாம் வைத்திருக்கிறார்.

தன் கேரக்டர் ஆரம்ப காட்சியிலே (மதுரையில்) கொலை செய்ய ஒரு ரயிலையே நிறுத்துகிறார் தனுஷ்.

ஓடும் ரயிலில் ஏறி கொலை செய்யும் ஹீரோவை பார்த்திருப்போம். டிரெய்ன் டிரைவரும் டிரெயினை நிறுத்தி கொலை செய்ய சொல்வதும் எல்லாம் ரொம்ப ஓவர்.

தனுஷ் லண்டன் புறப்படுவதற்கு முன்னரே “சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா” என்கிறார். (ஒன்னும் சொல்றதுக்கில்ல)

லண்டன் சென்ற சில தினங்களிலேயே எதிரணியின் (ஜோஜு ஜார்ஜ் + கலையரசன்) தொழில் ரகசியங்களை புட்டு புட்டு வைக்கிறார்.

இலங்கைத் தமிழ்ப் பெண்ணாக வரும் நாயகி ஐஸ்வர்யா லட்சுமியுடன் ரொமான்ஸ் செய்ய முயற்சித்துள்ளார்.

எதிரிகளை துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு சரமாரி சுடுகிறார் இந்த சுருளி. அசுரன் நடிகர் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நாயகி ஐஸ்வர்யா லட்சுமி தான் இலங்கையில் இருந்தபோதும் அகதிகளாக திரிந்த போதும் பட்ட கஷ்டங்களை சொல்லும்போது தமிழர்களின் கண்களில் கண்ணீர் நிச்சயம்.

படத்தில் கிட்டத்தட்ட 2 வில்லன்கள். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ & மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்.

இருவரும் தங்கள் நடிப்பில் சிறப்பு. அதிலும் ஜோஜு ஜார்ஜ் கேரக்டர் மனதில் நிற்கும்.

இவர்களுடன் கலையசரன், சவுந்தரராஜா, ஷரத் ரவி, வடிவுக்கரசி, கஜராஜ் (இயக்குனரின் தந்தை) ஆகியோரும் உள்ளனர். இவர்களின் பங்களிப்பு நன்று.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

“என்னை மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி” பாடல் படத்தில் மிஸ்ஸிங்.. ரசிகர்களுக்கு வருத்தம்.

ரகிட ரகிட.. பாடல் மட்டும் தாளம் போட வைக்கிறது. தியேட்டர் ரிலீஸ் என்றால் ரசிகர்கள் ஆடியிருப்பார்கள்.

சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை பெரிதாக இல்லை. இவர் இசையமைத்த கபாலி & காலா பட லெவலுக்கு பின்னணி இசையில்லை.

ஒளிப்பதிவாளர் தன் பணிகளில் சிறப்பு. குறையில்லை.

கார்த்திக் சுப்பராஜ் இதற்கு முன்பு இயக்கிய பேட்ட பட சாயல் அதிகளவில் உள்ளது.

க்ளைமாக்ஸ் காட்சியில் பேட்ட நினைவில் வருகிறது. லுங்கி + ஸ்வட்டர் உடையில் தனுஷ் வரும்போது ரஜினியே நினைவுக்கு வருகிறார்.

ஹாலிவுட் நடிகர் வில்லன் ஜேம்ஸ் காஸ்மோ, படம் முழுக்க கெட்ட வார்த்தைகள் பேசிக்கொண்டு இருக்கிறார். FCUK … இதை சொல்லாமல் அவர் ஒரு டயலாக் கூட பேசவில்லை.

படத்தின் ஆரம்ப காட்சியில் வரும் டிரெய்ன் போல படத்தின் நீளம் ஓடிக்கொண்டே இருக்கிறது. எடிட்டர் தூங்கிட்டாரா?

தனுஷ் & ஐஸ்வர்யா சந்தித்து முத்தமிடும் காட்சியில் மரம் வானத்தை காட்டி பொறுமையாக கேமராவை கொண்டு செல்வது ஏனோ..? இதுபோல பல காட்சிகள் நீளம்.

எவராக இருந்தாலும் பிறப்பிடம் மற்றும் வாழ்விடம் மாறலாம். எனவே அவர்கள் வாழும் இடம் தான் அவர்களுடைய சொந்த மண், தாய் நாடு என்ற கருத்தை வலியுறுத்த முயற்சித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

எவ்வளவு காசு கொடுத்து பார்த்தாலும் தேடினாலும் இயக்குனர் கா.சு. வை காணவில்லை..

*ஆக மொத்தம்… சோழர் பரம்பரையில் ஒரு கிண்டல் சாதா.. ஜகமே தந்திரம் 2.25/5*

Dhanushs Jagame Thandhiram review rating

உரிமை மீட்ட உத்தமன்..; கர்ணன் விமர்சனம் – 4/5

உரிமை மீட்ட உத்தமன்..; கர்ணன் விமர்சனம் – 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : தனுஷ், ரஜீஷா விஜயன், லால், அழகம் பெருமாள், லட்சுமிப்ரியா சந்திரமெளலி, யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், கெளரி கிஷன்

ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர்

இயக்கம் : மாரி செல்வராஜ்

தயாரிப்பு : கலைப்புலி எஸ் தாணு

இசை : சந்தோஷ் நாராயணன்

முன்னோட்டம்

1990கள் இறுதியில் தமிழக அரசுப் பேருந்துகளுக்கு தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டன.

அப்போது தென் மாவட்டங்களில் சில தலைவர்கள் பெயரை வைக்க எதிர்ப்பு உருவானது. ஆங்காங்கே கலவரங்களும் நடந்தன.

இதனால் சில ஊர்களில் பேருந்து வசதிகள் இல்லை. இந்த பின்னணியை வைத்து பொடியன்குளம் கிராமத்தை நம் கண்ணுக்கு விருந்தாக கொடுத்துள்ளனர்

கதைக்களம்..

கர்ணன் (தனுஷ்) கைது செய்து அடித்து துவைத்து ரத்த காயங்களுடன் அழைத்து செல்கின்றனர் போலீசார்.

அத்துடன் ப்ளாஷ்பேக் ஸ்டார்ட்…

பொடியன்குளம் கிராமத்திற்கு பேருந்து வசதியும் பேருந்து நிறுத்தமும் இல்லை.

எனவே அவ்வழி செல்லும் லாரி & இதர வாகனங்களை மக்கள் பயன்படுத்த ஒரு கட்டத்தில் தகராறு வரவே பேருந்து தாக்கப்படுகிறது.

அந்தப் பிரச்சனையைக் கிராம மக்கள் கர்ணன் துணையுடன் எப்படி எதிர்கொண்டனர் என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கீழ் சாதி மக்களின் காவலனாக தனுஷ் வாழ்ந்திருக்கிறார். கெஞ்சி கொண்டிருந்தால் உரிமை கிடைக்காது. தைரியமாக எதையும் எதிர் கொண்டு போராடினால் மட்டுமே வெற்றி என்பதை தன் உடல்மொழியால் உணர்த்திருக்கிறார் தனுஷ்.

உரிமைக்காக போராடிய போராடும் ஒவ்வொரு இளைஞர்களின் உணர்வுகளை கண்முன் பிரதிபலிக்கிறார். இந்த கர்ணன் பல விருதுக்கு தகுதியானவன் தான்.

கர்ணனின் காதலி திரௌபதையாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன். தன் கேரக்டரில் சிறப்பு.

காவல்துறை அதிகாரியாக நட்ராஜ் (நட்டி), கர்ணனின் அக்காவாக லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி, அரசியல்வாதியாக அழகம்பெருமாள் ஆகியோரும் கச்சிதம்.

இவர்களுடன் தாத்தா லால், யோகிபாபு, சண்முகராஜன், கௌரி கிஷன், ஜி.எம்.குமார், ‘பூ’ ராமு எனப் பலரும் சரியான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

இவர்களுக்கு இணையாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள் அந்த கிராமத்து மனிதர்கள். அந்த ஊர் மக்களையே சிறப்பாக நடிக்க வைத்திருப்பதால் கதையோடு நம்மால் இணைந்து விடமுடிகிறது.

‘கோழிக் குஞ்சு’ பாட்டி, குதிரை சிறுவன், தனுஷுடன் நிற்கும் இளைஞர்கள், பஸ் மேல் கல் எறியும் அந்த பையன் என எல்லா கேரக்டர்களும் மனதை விட்டு நீங்காதவை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

‘கண்டா வரச்சொல்லுங்க’, ‘மஞ்சணத்திப் புராணம்’, ‘தட்டான் தட்டான்’ ஆகிய பாடல்களின் ஒளிப்பதிவில் இத்தனை அழகா? என வியக்கும் வண்ணம் உள்ளது.

இயக்கம் பற்றிய அலசல்…

தலையில்லா புத்தர் & ஓவியம், கழுதை – யானை – குதிரை என பல குறியீடுகளை அடிக்கடி காட்டுகிறார். அது போதும் போதும் என்றளவில் உள்ளது.

இறுதியில் வரும் கலவர காட்சியும் நீளமாக உள்ளது. படத்தின் பெரிய குறை நீளம்.

அந்த கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை நீளமாகப் பதிவு செய்திருப்பதும் பெரும் குறை.

ஆனால் இரண்டாம் பாதியில் அதனை சரி செய்துவிட்டார்.

தனுஷின் நடிப்பு படத்தின் ஒரு பாதி பலம் என்றால் இயக்குனர் ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் படத்தின் மீதி பலம்.

வசனங்கள் நச்…

‘எப்படியாவது பொழச்சுக்கணும்னு நாம நினைக்கறதாலதான், அவன் ஏறி மிதிக்கிறான்”,

“அவன் பஸ்ச அடிச்சதுக்காக அடிக்கல, நிமிந்து பாத்ததுக்காக அடிச்சான்” ஆகிய வசனங்களில் மாரி செல்வராஜ் மாஸ் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

‘பரியேறும் பெருமாள்’ படத்தை போல சமூக பிரச்சனைகளை மையப்படுத்தி நல்ல திரைக்காவியத்தை கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ்.

ஆக… உரிமை மீட்ட உத்தமன் இந்த ‘கர்ணன்’

Karnan movie review and rating in tamil

More Articles
Follows