தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள்: மெட்ரோ சிரிஷ், சாந்தினி, கல்லூரி வினோத், ஜெயக்குமார், சத்யா
இசை – யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு – யுவா
எடிட்டிங் – ஷபீக் முகம்மது
மக்கள் தொடர்பாளர் – சுரேஷ் சந்திரா
எழுத்து இயக்கம் – தரணிதரன்
தயாரிப்பு – வாசன் சக்திவாசன்
இணை தயாரிப்பு – தரணிதரன்
கதைக்களம்…
முதலில் ராஜா ரங்குஸ்கி என்றால் என்ன? என்று சொல்லிவிடுகிறோம்.
படத்தின் நாயகன் பெயர் ராஜா. நாயகியின் பெயர் ரங்குஸ்கி. (எந்திரன் படத்தில் ஒரு கொசு வருமே. அதே பெயர் தான்)
நாயகன் ராஜா போலீஸ் கான்ஸ்டபிள். இவர் எழுத்தாளர் ரங்குஸ்கியை காதலிக்கிறார். முதலில் அவரை கவர வேறு ஒரு போனில் ராஜாவுடன் பழகாதே என்ற வேறு ஒருவர் பேசுவது போல் பேசுகிறார்.
இதனையடுத்து நான் அப்படிதான் பழகுவேன் என ராஜாவுடன் நெருக்கம் காட்டுகிறார் ரங்குஸ்கி.
ஒரு சூழ்நிலையில் ரங்குஸ்கியும் காதலிக்க ஆரம்பிக்கிறார். அதன் பின்னரும் அந்த போன் குரல் தொடர்கிறது ரங்குஸ்கியை மிரட்டுகிறது.
தான் விளையாட்டாக செய்ய போய், வினையாகிவிட்டதே. அப்படி என்றால் அவரை யார்? மிரட்டுகிறார் என குழம்பி போகிறார் ராஜா.
எனவே ரங்குஸ்கியை சந்திக்க செல்கிறார் ராஜா. அப்போது அந்த வில்லாவில் ஒரு கொலை நடக்கிறது. அந்த பழி ராஜா மீது விழுகிறது.
இவை எல்லாம்? அந்த மர்ம குரல் நபர்தான் செய்கிறார் என நினைக்கிறார் ராஜா. அதன்படி தன் தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கிறார்.
யார் அந்த மர்ம குரல் நபர்? அவரின் நோக்கம் என்ன? சிரிஷை மிரட்டுவது ஏன்? என பல திருப்பங்களுக்கு க்ளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
கேரக்டர்கள்…
மெட்ரோ பட நாயகன் சிரிஷின் 2வது படம் இது. இதிலும் நல்ல ஸ்மார்ட்டாக இருக்கிறார். பெண்களை நிச்சயம் கவருவார்.
ஆனால் முகபாவனைகள் சுத்தமாக இல்லை. எல்லா காட்சியிலும் ஒரே போலவே பதட்டமாக இருக்கிறார். கொலை காட்சிக்கு முன்பு கூட முகத்தில் சிரிப்பே இல்லை.
சாந்தினி முதலில் சாந்தமாக வந்து பின்னர் க்ளைமாக்ஸில் சரவெடி கேரக்டர். வர வர அழகிலும் நடிப்பிலும் மெச்சுரிட்டி வருகிறது.
சிரிஷ் உடன் வரும் கல்லூரி வினோத் நடிப்பில் கெட்டி. மாரி படத்திலேயே இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதில் களைகட்டியிருக்கிறார்.
சிபிஐ. ஆபிசராக ஜெயகுமார். மிரட்டலாக வருவார் என்று பார்த்தால் அவரையும் டம்மியாக்கி விடுகிறார்கள்.
இவருடன் சத்யா தன் கேரக்டரில் கச்சிதம். மிகையில்லாத நடிப்பில் சபாஷ்.
தொழில்நுட்ப கலைஞர்கள்….
யுவன் இசையில் பட்டு குட்டி பாடல் மட்டும் மனதோடு பச்சக் என்று ஒட்டிக் கொள்கிறது. ஷேடோ தீம் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. பின்னணி இசையில் வழக்கம்போல் யுவன் ராஜ்யம்தான்.
யுவாவின் ஒளிப்பதிவில் அந்த வில்லா காட்சிகள் அனைத்தும் அருமை. லாங் ஆங்கிளில் நம்மை அதிகம் கவர்கிறார். இப்படி ஒரு வில்லா இருந்தா நல்லா இருக்குமே என ஏங்க வைக்கிறார்.
பர்மா மற்றும் ஜாக்சன் துரை படங்களை இயக்கி தரணிதரன் தான் இப்படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார்.
ஒரு கொலை அதை யார் செய்தார்? என்ற ட்விஸ்ட் உடன் நகரும் கதையை கடைசியாக ரங்குஸ்கி பக்கம் திருப்பி அதில் பைபிள் சர்ச் என கொடுத்திருப்பது நச் ரகம்.
கொலையாளி இவரா? இவரா? என ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி ட்விஸ்ட் வைத்திருப்பது சிறப்பு.
I can Feel the Killer என்று கூறி விட்டு சிபிஐ ஆபிசர் ஓடி சிசிடிவி கேமராவை கண்டுபிடிப்பது எல்லாம் ரொம்ப ஓவர்.
ஒரு வீட்டிற்குள் சிரிஷ் சென்று கம்ப்யூட்டரை ஓப்பன் செய்து சிசிடிவி காட்சிகளை டெலிட் செய்வது எப்படி? கம்யூட்டர் பாஸ்வேர்ட் இல்லையா..?
சிரிஷ் சாந்தினி ஒன்றாக இருக்கும்போது சாந்தினி யார் போன் செய்கிறார்? எப்படி இவரது குரல் ஒலிக்கிறது என்பதற்கு எல்லாம் பதில் இல்லை.
இதில் நாயகன் போலீஸ். ஆனால் அவருக்கான மிடுக்கு இல்லை. கொலையாளியை தேடுவதில் கூட விவேகம் இல்லை. சிபிஐ ஆபிசரும் சரியாக செயல்படவில்லை என்பதால் விறுவிறுப்பு குறைந்து விடுகிறது.
பர்மா படத்தில் நாம் பார்த்த தரணிதரனை இதில் பார்க்க முடியவில்லை.
ராஜா ரங்குஸ்கி.. கொசு தொல்லை தாங்கல…
Raja Ranguski review rating