ராஜா மந்திரி விமர்சனம்

ராஜா மந்திரி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கலையரசன்-ஷாலின், காளி வெங்கட்-வைஷாலி, பாலசரவணன், நாடோடிகள் கோபால், ஜெயந்தி, சரவணசக்தி மற்றும் பலர்.
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு : பிஜி முத்தையா
படத்தொகுப்பு : ஆர் கே செல்வா
இயக்கம் : உஷா கிருஷ்ணன்
பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : மதியழகன், ரம்யா, பிஜி முத்தையா

கதைக்களம்…

காளிவெங்கட் மற்றும் கலையரசன் இருவரும் அண்ணன்-தம்பி. காளி வெங்கட் வைஷாலியை காதலிக்க, கலையரசன் ஷாலின் ஸோயாவை காதலிக்கிறார்.

அண்ணன் தம்பி இருவரும் காதலை வெளியில் சொல்லாமல் மறைத்து வாழ்கின்றனர். ஒரு சூழ்நிலையில் காளியின் காதல் சில பிரச்சினைகளால் முறிந்து போகிறது.

 

Raja manthiri 4

 

எனவே காளிக்கு வேறு ஒரு பெண்னை பார்க்க குடும்பத்துடன் செல்ல, அங்கே பெண்ணாக வந்து நிற்கும் நாயகியால் இவர்களின் வாழ்வில் பெரும் பிரச்சினை எழுகிறது.

அதன்பின்னர் இவர்களின் காதல் என்னவானது? என்பதே படத்தின் கதை.

கதாபாத்திரங்கள்…

இதில் தனி நாயகனாக களம் இறங்கியிருக்கிறார் கலையரசன். பெயருக்கு ஏற்ற போல், காட்சிகளில் கவர்கிறார்.

காதலியுடன் ரொமான்ஸ் செய்வதும், அண்ணனுக்காக காதலை உதற நினைப்பதும், காதலிக்காக ரிஸ்க் எடுப்பதும் என ரசிக்க வைக்கிறார்.

அண்ணன் காதலியிடம் ஆங்கிலம் பேசி அவரை வெறுப்பேற்றுவது ரசிக்க வைக்கும் ரகம்.

வெறும் காமெடியனாகவே பார்த்து வந்த காளிவெங்கட்டை இதில் ஒரு சிறந்த நடிகராக பார்க்கலாம். கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்.

 

raja manthiri still 1

 

ஒவ்வொரு பெண்ணாக தட்டிக் கொண்டு போக, இந்த திருமணமாவது நடக்குமா? என் ஏங்கும் காட்சிகளில் கலங்க வைக்கிறார்.

தம்பியிடம் செல்லமாக சண்டை போடுவதும், பின்னர் கூடுவதும் குடும்பத்து உறவுகளை இந்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும்.

பாலசரவணனுக்கு காட்சிகள்தான் குறைவு. காமெடியோ அப்ளாஸ். கிடைக்கும் சின்ன சின்ன கேப்பில் எல்லாம் கிடா வெட்டுகிறார் மனிதர்.

 

??????????????????????????????????????????????????

 

காலி ப்ளவர் வைஷாலிக்கு இருக்கமான காட்சிகள்தான் அதிகம். ஆனால் அமைதியான முகம் கொண்டு வசீகரிக்கிறார்.

ஷாலின் அறிமுக காட்சிமுதல் க்ளைமாக்ஸ் வரை ரசிக்க வைக்கிறார்.

நான் உன் ஆளு அவன்கிட்ட சொல்லுவ. என்கிட்ட சொல்லமாட்டியா? என கேட்கும் காட்சிகளில் ரசிகைகளையும் கவர்கிறார்.

திருமணத்தை நிறுத்த கேட்பதும், இறுதியில் முடியாமல் அழுவதும் ரசிக்கும் ரகம். ஆனால் முடியல்லனா வேறு ஒரு திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்வது டேக் இட் ஈசி காதல் பாலிசிதான் போல.

 

raja manthiri still 5

 

ஹீரோக்களின் பெற்றோராக நாடோடிகள் கோபாலும் ஜெயந்தியும், கிராமத்து அம்மா அப்பாவை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.

குடிகார சித்தப்பாவாக சரவண சக்தி. சில காட்சிகளில் வந்து சிரிக்க வைக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

முத்தையாவின் ஒளிப்பதிவில் அந்த ஆரம்ப காட்சி அழகு. நீண்ட நெடுஞ்சாலை. இரண்டு பக்கமும் தென்னை மரம். அதன்பின்னர் வயல் என பசுமையாக படம் பிடித்திருக்கிறார்.

கிராமத்து வீடுகளையும் அதன் பின்னணியையும் காட்சிகளில் கொடுத்து கிராமத்து மண் வாசனையை உணர்த்தியிருக்கிறார்.

 

raja manthiri still 4

 

காலி ப்ளவர் என்ற ஒரு பாட்டிலையே நம்மை காலி செய்துவிடுகிறார் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். லெகுவா பாடலும் ரசிக்க வைக்கிறது.

தனி ஒருவன் படத்தில் கலக்கிய ரெம்போன் பால்ராஜ்தான் கலை. குறை வைக்காமல் யார் என்று கேட்க வைக்கிறார்.?

படத்தின் ப்ளஸ்…

  • உஷா கிருஷ்ணனின் திரைக்கதை.
  • ஜஸ்டின் பிரபாகரன் பாடல்கள் மற்றும் ஒளிப்பதிவு

 

Raja Manthiri still 6

 

  • இடைவேளையில் ட்விஸ்ட் கொடுத்திருப்பது அருமை.

படத்தின் மைனஸ்….

  • வைஷாலிக்கு காளி மீது காதல் எப்படி? என்ற காட்சியில் அழுத்தமில்லை.
  • க்ளைமாக்ஸ் காட்சிப்படுத்தலில் இயக்குனர் கொஞ்சம் தடுமாறிய உணர்வு.

 

raja manthiri still 7

 

அறிமுக இயக்குனர் என்பதே தெரியாமல் அசத்தல் திரைக்கதையில் உஷா கிருஷ்ணன் கைத்தட்டல் பெறுகிறார்.

குடும்பம், நட்பு, சென்டிமெண்ட், காமெடி, திரைக்கதை என அனைத்திலும் தன்னால் பளிச்சிட முடியும் என்பதை முதல் படத்திலேயே நிரூபித்துவிட்டார் உஷா . சபாஷ்.

மொத்தத்தில் ராஜா மந்திரி… ரசிகர்களுக்கு பிடிச்ச முந்திரி..!

எனக்கு இன்னொரு பேர் இருக்கு விமர்சனம்

எனக்கு இன்னொரு பேர் இருக்கு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜிவி பிரகாஷ், ஆனந்தி, விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், சரவணன், கருணாஸ், யோகி பாபு, நிரோஷா மற்றும் பலர்.
இசை : ஜிவி பிரகாஷ்
ஒளிப்பதிவு : கிருஷ்ணன் வசந்த்
படத்தொகுப்பு : ரூபன்
இயக்கம் : சாம் ஆண்டன்
பிஆர்ஓ : நிகில் முருகன்
தயாரிப்பாளர் : லைகா நிறுவனம் சுபாஷ்கரன்

கதைக்களம்…

சென்னையிலுள்ள ராயபுரம் ஏரியாவை தன் கைக்குள் வைத்திருப்பவர் நைனா.

இவருக்கு வயது ஆகிவிட்டதால், தன் மகளை கட்டிக்கப் போகும் மாப்பிள்ளையை அடுத்த நைனாவாக ஆக்கிவிடலாம் என நினைக்கிறார்.

 

enakku-innoru-peru-irukku-photos-images- 5

 

இதற்காக உங்களில் யார் அடுத்த நைனா? என்ற ரேஞ்சுக்கு போட்டி எல்லாம் நடைபெறுகிறது.

ஒரு சூழ்நிலையில் பயந்த சுபாவம் கொண்ட ஜி.வி.பிரகாஷ் இவரது மாப்பிள்ளையாக ஆகிறார். அதன்பின்னர் என்ன நடந்தது? என்பதே கதை.

கதாபாத்திரங்கள்…

ஜி.வி. பிரகாஷ்.. இதுவரை மியூசிக் டைரக்டர், பாடகர் என வலம் வந்தவர் கூடிய விரைவில் டான்சர் ஆகிவிடுவார் என்றே தெரிகிறது. அதற்கான பிள்ளையார் சுழியை இப்படத்தில் போட்டுள்ளார்.

 

enakku-innoru-peru-irukku-photos-images- 3

 

மற்றபடி நடிப்பில் கொஞ்சம் முன்னேறியிருக்கிறார். ஆனால் டான் வேடத்திற்கு அவ்வளவாக பொருத்தமில்லை. பெட்டராக எதிர்பார்க்கிறோம்.

ஆனந்திக்கு பெரிதாக வேலையில்லை. கொடுத்த வேலையை செய்திருக்கிறார். ஆனந்தி ரசிகர்கள் படு அப்செட்.

சரவணன், கருணாஸ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் ஆகிய பலரும் உண்டு. இவர்கள் தங்கள் அனுபவ நடிப்பால் பாஸ் செய்து விடுகிறார்கள்.

 

enakku-innoru-peru-irukku-photos-images- 1

 

கருணாஸ் பேசும் பாகுபலி காளகேயன் வசனங்கள் ஆங்காங்கே கைத்தட்டல் பெறுகிறது. ஹாப்பி பர்த்டே டு மீ என அறிமுகம் ஆகிறார் விடிவி கணேஷ்.

இதில் அதிகம் ஸ்கோர் செய்பவர் யோகிபாபுதான். இவர் வரும் காட்சிகளில் சிரிப்புக்கு 100% கியாரண்டி கொடுக்கலாம்.

சரக்கு ஓவரா போட்டு இருக்கோமோ? என்று அப்பாவியாக கேட்பது முதல் நைனாவின் நற்காலியை அட்டைய போடுவது முதல் அசத்தியிருக்கிறார்.

ஜி.வி. பிரகாஷின் நண்பராக வருபவருக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரும். லொள்ளு சபா மனோகர், நிரோஷா உள்ளிட்டோரை சரியாக பயன்படுத்தவில்லை.

இவர்களுடன் பொன்னம்பலம் மற்றும் மன்சூர் அலிகானும் வந்து போகிறார்கள். எதற்காக என்பது தெரியவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜி.வி. பிரகாஷின் இசையில் எம்ஜிஆரின் ரீமிக்ஸ் பாடலும் படமாக்கப்பட்ட விதமும் கண்களுக்கு நிறைவு. கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்ற பாடலை கானா பாடலாக பாடியிருக்கிறார் கானா பாலா.

 

enakku-innoru-peru-irukku-photos-images- 4

 

மைமா பாடல் இளைஞர்களை கவரும். மற்றபடி பின்னணி இசையில் மாஸ் சேர்த்து அசத்தியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

கிருஷ்ண வசந்தின் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள், ரவுடிகள் சேசிங் ரசிக்க வைக்கிறது.

படத்தின் ப்ளஸ்…

  • நைனா வாரிசுக்கு நடத்தபடும் ஆடிசனும் யோகிபாபுவின் வர்ணனையும் செம சூப்பர். அதில் டிஆர்பி ரேட்டிங்காக அழவைப்பது அருமை.
  • மாஸ் ஹீரோவுக்கான பின்னணி இசை

படத்தின் மைனஸ்…

  • பயந்த சுபாவம் கொண்ட ஜிவி பிரகாஷ் கடைசியில் வில்லனை பன்ச் செய்வது அவர் பொருத்துக் கொண்டாலும் எங்களால் முடியல.

 

enakku-innoru-peru-irukku-photos-images- 6

 

  • கபாலி, தெறி, கத்தி, வேதாளம், 24, ஆகிய படத்தின் வசனங்களை அதிகம் பயன்படுத்தி அவர்களது ரசிகர்களை கவர்ந்தாலும், இயக்குனருக்கு அவரது ஸ்கிரிப்ட் மீது நம்பிக்கை இல்லையா? என்று கேட்கத் தோன்றுகிறது.

இளைஞர்களை கவர்வதற்காக, லாஜிக் இல்லாமல் தினிக்கப்பட்ட காட்சிகளை பார்க்கும்போது சலிப்பு தட்டுகிறது.

மொத்தத்தில் எனக்கு இன்னொரு பேர் இருக்கு… அட இருக்கட்டுமே. அதுக்கு என்ன?

முத்தின கத்திரிக்கா விமர்சனம்

முத்தின கத்திரிக்கா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சுந்தர் சி, பூனம் பாஜ்வா, கிரண், சதீஷ், சிங்கம் புலி, விடிவி கணேஷ், ரவிமரியா, யோகி பாபு, சுமித்ரா, வைபவ் மற்றும் பலர்.
இசை : சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு : பானு முருகன்
படத்தொகுப்பு : என் பி ஸ்ரீகாந்த்
இயக்கம் : வேங்கட் ராகவன்
பிஆர்ஓ : ஜான்சன்
தயாரிப்பாளர் : அவ்னி மூவிஸ் சுந்தர் சி

கதைக்களம்…

40 வயது ஆகியும் மனதுக்கு பிடித்த பெண் அமையும் வரை காத்திருக்கும் பிரம்மசாரி சுந்தர் சி. அரசியலில் ஜெயித்து காட்ட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மனிதர் இவர்.

இவரின் காதலி பூனம் பாஜ்வா. சுந்தர் சியின் தொண்டர் மற்றும் நண்பராக சதீஷ்.

சுந்தர் சியின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் அண்ணன் தம்பிகளான விடிவி கணேஷ் மற்றும் சிங்கம் புலி.

 

Muthina Kathirika 1

 

இதனிடையில் ரவிமரியாவின் மகளான பூனம் பாஜ்வாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கவும் திட்டம் தீட்டுகின்றனர்.

இந்த சதி திட்டங்களை மீறி, அரசியலிலும் காதலிலும் வென்றாரா நம்ம ஹீரோ என்பதே இந்த முத்தின கத்திரிக்கா.

கதாபாத்திரங்கள்..

இயக்குனராக இருந்த போதும் தற்போது நடிகராக இருந்தாலும் காமெடியில் கொடியை நாட்டியிருக்கிறார் சுந்தர் சி.

தன் நண்பருக்கே தெரியாமல் சதி திட்டம் தீட்டுவதில் கில்லாடி இவர். கூடவே அம்மா சென்டிமெண்ட், ஓவர் ஏஜ் லவ்ஸ் என அனைத்திலும் யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

 

Muthina Kathirika 2

 

பூனம் பாஜ்வா… நாயகன் கத்திரிக்கா என்றால் இவர் கவர்ச்சிக்கா. புடவையிலும் வந்து ரசிகர்களை கிறங்கடிக்கிறார். பாடல் காட்சியில் நனைந்து நம்மை சூடேற்றி செல்கிறார்.

இவருடன் ஜெமினி புகழ் கிரனும் மாப்பிள்ளை மீது ஜொள்ளு விட்டு ரசிக்க வைக்கிறார்.

கிராமத்து வேடம் என்றாலும் அதிலும் தன்னால் நிரூபிக்க முடியும் என புகுந்து விளையாடியிருக்கிறார் சதீஷ். படத்தை தன் காமெடியால் கலகலப்பாக்கி இருக்கிறார்.

விடிவி கணேஷின் டைமிங் சென்ஸ் செம. இவரது வாய்ஸே இவரது பலம். என்னைய பாத்து அஜித் சொன்ன முதல் ஆளு நீதான் என்று சொல்லும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை.

 

Muthina Kathirika 3

 

சிங்கம்புலியும் படம் முழுக்க வந்து ரசிகர்களை கலகலப்பாக்கியிருக்கிறார். யோகிபாபு இரண்டே காட்சிகளில் வந்தாலும் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறார்.

ரவிமரியா இதில் காமெடிக்கு குறைவைத்து, போலீசாக வருகிறார். வைபவ் கெஸ்ட் ரோலில் வந்து போகிறார்.

இவர்களுடன் சுமித்ரா மற்றும் சுந்தர் சியின் தம்பி, தங்கை, அண்ணி ஆகியோர் சிறப்பான தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சித்தார்த் விபினின் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம். பானு முருகனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. முக்கியமாக நாயகியின் அசைவுகள்.

படத்தின் ப்ளஸ்…

சதீஷ் + விடிவி கணேஷின் டைமிங் சென்ஸ் காமெடி படத்தின் கேரக்டர்களுக்கு இன்ட்ரோ வாய்ஸ் சூப்பர் கவர்ச்சியான நாயகி கதாபாத்திரங்கள்..

 

Muthuna Kathirika 4

 

சிந்திக்கக்கூடிய எலெக்ஷன் பாட்டு

படத்தின் மைனஸ்…

இரண்டாம் பகுதியில் தேர்தலை காமெடியாக்கி சொன்னவிதம்.

யோகிபாபு காட்சியை அதிகப்படுத்தி இருக்கலாம்.

 

Muthina Kathirika 5

 

இயக்குனர் வேங்கட் ராகவன், தான் சுந்தர் சியின் சிஷ்யர் என்பதை ஆணித்தரமாக காட்சிகளில் சொல்லியிருக்கிறார்.

மலையாள படம் ரீமேக் என்பதே தெரியாத அளவிற்கு தமிழ் நாட்டுக்கு ஏற்ப சுவையாக இந்த கத்திரிக்காயை கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் முத்தின கத்திரிக்கா… சுவையில் குறையில்லை.

கபாலி இசை பாடல்கள் விமர்சனம்

கபாலி இசை பாடல்கள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி தாணு தயாரிப்பில், முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலி.

ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் முதன்முறையாக இணைந்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

இதில் நான்கு பாடல்கள் மற்றும் ஒரு தீம் பாடல் இடம்பெற்றுள்ளது. ஆக மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளது.

இப்பாடல் வெளியீட்டுக்கு விழா எதுவும் நடத்தாமல் ஆன்லைனில் வெளியிடுகின்றனர். அந்த பாடல்கள் பின்வருமாறு…

1)   உலகம் ஒருவனுக்கா…..

(தமிழ் ராப் வரிகளை விவேக் எழுதியுள்ளார்.)

பாடல் ஆசிரியர் : கபிலன்

பாடியவர்கள் : அனந்து, சந்தோஷ் நாராயணன், கானா பாலா

பாடல் நேரம் : 4 நிமிடங்கள் 02 நொடிகள்

 

ulagam song stills

வா நீ வா தோழா…
உலகம் ஒருவனுக்கா..? உழைப்பவன் யார்..?
விடை தருவான் கபாலி தான்…
கலகம் செய்து, ஆண்டையரின் கதை முடிப்பான்..!

நீ நீயாய் வந்தாய்… தீயின் கருவாய்….
கண்கள் உறங்கினாலும், கனவுகள் உறங்காதே…

பூவின் நிழலாய்… புல்லாங்குழலாய்…
உன்னை வெளியிடு, துளிர் விடு,…
பலியாடாய் எண்ணாய் விதையாக..

வாழும் நமக்கு கதைகள் இருக்கு…
நாளை நமக்கே விடியும்… விழித்து போராடு…
வானம் உனதே.. பாதி வழியில், பறவை பறக்க மறக்காதே…

ஏய் எண்ணத்தில் நூறு திட்டமிட்டு,
கபாலி வாரான் கையத்தட்டு….
பம்பரம் போல சுத்திக்கிட்டு,
பரையிசை அடித்திட்டு பாட்டு கட்டு…

ஏய் இத்தன நாளா கூட்டுக்குள்ள…
இனிமே வாரான் நாட்டுக்குள்ள…

போன்ற வரிகள் கபாலியின் ரீ என்ட்ரீயை காட்டுகிறது. இந்த வரிகளும் இந்த குரல்களும் இனி அடிக்கடி கேட்கலாம். ரஜினி ரசிகர்ளுக்கு செம விருந்தாய் இந்த பாடல் அமைந்துள்ளது.

 

2)      மாய நதி..

பாடல் ஆசிரியர் : உமா தேவி

பாடியவர்கள் : அனந்து பிரதீப் குமார், ஸ்வேதா மேனன்

பாடல் நேரம் : 4 நிமிடங்கள் 35 நொடிகள்

 

mayanadhi song lines

 

நெஞ்சமெல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே…

கண்களெல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே…

நான் உன்னை கானும் வரையில் தாபத நிலையே

தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே….

 

ஆயிரம் கோடிமுறை நான் தினம் இறந்தேன்…

நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்…

 

மாய நதி இன்று மார்பில் வழியுதே…

தூய நரையிலும் காதல் மலருதே…

 

நீர் வழியிலே மீன்களை போல், என் உறவை நான் இழந்தேன்…

நீ இருந்தும் நீ இருந்தும் ஒரு துறவை நான் அடைந்தேன்…

ஒளி பூக்கும் இருளே…. வாழ்வின் பொருளாகி…

வலி தீர்க்கும் வழியாய்… வாஞ்சை தரவா…

 

நாம் நேசித்த ஒருவரை காலம் காலமாக பிரிந்து, மீண்டும் ஒன்று கூடும் நாளாக தெரிகிறது.

இந்த இரு குரல்களும் அந்த ஏக்கத்தை உணர்வுபூர்வமாக உணர்த்தியுள்ளன.

அண்ணாமலை படத்தில் ரெக்கை கட்டி பறக்குதே என்ற பாடல் போல நரைத்த பின்னும் காதல் மலரும் எனச் சொல்கிறது இப்பாடல்.

துற வாழ்க்கை அடைந்து மீண்டும் தன் காதலியை கண்டு இருக்கிறார் என்பதை இப்பாடல் வரிகள் வலிகளாய் உணர்த்துகின்றன.

 

3)      வீர துறந்துரா…

பாடல் ஆசிரியர் : உமா தேவி

பாடியவர்கள் : கானா பாலா, லாரன்ஸ் ஆர், பிரதீப் குமார்

பாடல் நேரம் : 3 நிமிடங்கள் 17 நொடிகள்

வீரத் துரந்தரா

எமை ஆளும் நிரந்தரா

பூமி அறிந்திரா

புது யுகத்தின் சமர் வீரா

உன்நிலை கண்டு

இன்புற்றார்க்கு

இரையாகாமல்

அன்புற்றார் அழ

அடிமைகள் எழ

 

உரிமை யாழ் மீட்டினான்

உணர்வால் வாள் தீட்டினான்

உலகில் யாரென காட்டினான்

 

தடைகள் அறுந்திட

தலைகள் நிமிர்ந்திட

“கடை”யன் “படை”யன் ஆகினான்…

இப்படியாக தூய தமிழ் வரிகள் இருந்தாலும், இடையே ஆங்கில ராப் வரிகளும் புகுத்தப்பட்டுள்ளது.

“EVERY MAN GOTTA RIGHT TO DECIDE HIS DESTINY” என்றும் வருகிறது.

இது கொஞ்சம் தாளம் போட வைக்கும் உள்ள பாடலே. ஆனால் இது எல்லாருக்கும் பிடித்த பாடலாய் இருக்குமா? என்பதை படம் வந்தே பிறகே காண முடியும்.

 

4)   வானம் பார்த்தேன்…

பாடல் ஆசிரியர் : கபிலன்

பாடியவர் : பிரதீப் குமார்

பாடல் நேரம் : 4 நிமிடங்கள் 52 நொடிகள்

kabali vaanam parthen video song

நதியென நான் ஓடோடி…
கடலினை தினம் தேடினேன்…

தனிமையின் வலி தீராதோ…
மூச்சு காற்று போன பின்பு நான் வாழ்வதோ…
தீராத காயம் மனதில் உன்னாலடி… ஆறாதடி…

வானம் பார்த்தேன்… பழகிய விண்மீன் எங்கோ போக…
பாறை நெஞ்சம் கரைகிறதே…

இது மிகவும் சோகப்பாடலாக உள்ளது. இது ரஜினி, ராதிகா ஆப்தேவின் இளமைக் கால பாடலாக இருக்கும் என தோன்றுகிறது. அல்லது தங்களது இளமை காலத்தை எண்ணிப் பார்க்கும் பாடலாக இருக்கும் என தோன்றுகிறது.
அதில் காதல் காயங்கள் கலந்துள்ளதாக தெரிகிறது.

 

5)   நெருப்புடா…

நடுவில் இடம் பெறும் வசனங்களை ரஜினிகாந்த் எழுதியிருக்கிறார்.

பாடல் எழுதி பாடியிருப்பவர் : அருண்ராஜா காமராஜ்

kabali fire

நெருப்புடா நெருங்குடா பாப்போம்

நெருங்குனா பொசுக்குற கூட்டம்!

அடிக்கிற அழிக்கிற எண்ணம்

முடியுமா நடக்குமா இன்னும்

அடக்குனா அடங்குற ஆளா நீ

இழுத்ததும் பிரியற நூலா நீ

தடையெல்லாம் மதிக்கிற ஆளா நீ

விடியல விரும்பற கபாலீ…

என்று உணர்ச்சிமிக்க வரிகளுடன் தொடங்குகிறது.

இந்த பாடல் உருவாகும் முன்பே பட்டைய கிளப்பியது இந்த வார்த்தை. தற்போது இன்னும் எகிற வைத்துள்ளது.

கபாலி நெருங்குகிறவன் சாவை நெருங்குகிறான் என்பது போல அனைத்து வரிகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நிச்சயம் இந்தப் பாடலை திரையரங்குகளில் கேட்க பல நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது.  விசில் சத்தம் விண்ணை பிளக்கும்.

ஒரு நாள் கூத்து விமர்சனம்

ஒரு நாள் கூத்து விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : தினேஷ், மியா ஜார்ஜ், ரித்விகா, நிவேதா பெத்துராஜ், பால சரவணன், சார்லி, கருணாகரன், ரமேஷ் திலக் மற்றும் பலர்.
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு : கோகுல்
படத்தொகுப்பு : விஜே சாபு ஜோசப்
இயக்கம் : நெல்சன் வெங்கடேசன்
பிஆர்ஓ : ஜான்சன்
தயாரிப்பாளர் : கெனன்யா பிலிம்ஸ் ஜெ செல்வகுமார்

 

கதைக்களம்…

தினேஷ் மற்றும் நிவேதா பெத்துராஜ் இருவரும் ஒரே ஐடி கம்பெனியில் பணிபுரிந்து கொண்டே காதலிக்கின்றனர். தன் குடும்பம் செட்டில் ஆனவுடன் திருமணம் என்பதில் உறுதியாக இருக்கிறார் தினேஷ். இவரது நண்பர் பால சரவணன்.

மியா ஜார்ஜ்க்கு நல்ல அந்தஸ்து உள்ள மாப்பிள்ளை வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அவரது வாத்தியார் தந்தை.

28 வயது ஆகியும் ரேடியோ ஜாக்கி என்பதால் ரித்விகாவுக்கு வரன் அமையவில்லை. இந்த தங்கை திருமணத்திற்காக காத்திருக்கிறார் அண்ணன் கருணாகரன். ரித்விகாவுடன் பணிபுரிகிறார் ரமேஷ் திலக்.

இவர்களின் வாழ்க்கையில் நடைபெறவுள்ள அந்த ஒரு நாள் கூத்து கல்யாணம் எப்படி இவர்களை இணைய வைக்கிறது என்பதே இப்படத்தின் கதை.

oru naal koothu movie stills 1

கதாபாத்திரங்கள்…

இதுநாள் வரை தாடி, கைதி, சீவாத தலை முடி என அழுக்காக வந்த, தினேஷ் இதில் படு ப்ரெஷ்ஷாக வந்திருக்கிறார். அதுவே ஒரு பெரிய சேஞ்ச்.

ஆக்ஷன் வரும் அளவுக்கு இவருக்கு காதல் வரவில்லை. படத்தில் உள்ள குடும்ப பாரம் காரணமோ?

மியா ஜார்ஜ்… லட்சுமிகரமான முகம். ஒவ்வொரு மாப்பிள்ளை முன் நிற்பதும் திருமணம் தள்ளிப்போவதும் என ஒரு பெண்ணின் நிஜமான உணர்வை பிரதிபலிக்கிறார்.

oru naal koothu mia

அப்பா என்ன சொன்னாரு? என மாப்பிள்ளை இவரிடம் கேட்கும்போது.. அப்பா எதுவும் சொல்ல மாட்டாரு… என்பதும் நான் வேனுமின்னா வந்து கூட்டிட்டு போ உள்ளிட்ட காட்சிகள் இவரது வலியை உணர்த்துவதாய் உள்ளது.

ரித்விகா.. இந்த ஆர்ஜே கேரக்டரிலும் அசத்தல். கோயிலை சுற்றும்போது மத்தவங்க என்ன நினைப்பாங்க? என்பதை விட நாம எப்படி பார்க்கிறோம் என்பது முக்கியம் என்று கூறும்போது கைதட்டலை அள்ளுகிறார்.

28 வயது ஆனதால் ப்ராக்டிக்கலாய் தப்பு செய்யும் காட்சியில் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

oru naal koothu nivetha

நிவேதா பெத்துராஜ்…. இவருக்கு காதல் கல்யாணம் என இரண்டிலும் ஸ்பேஸ் கிடைத்திருப்பதால் ஸ்கோர் செய்துள்ளார்.

காதலனை விட்டு கொடுக்காமல் பேசுவதும், அப்பாவிடம் காதலனை விட சொல்லி பேசுவதும் இன்றைய பெண்களின் ஒட்டு மொத்த உருவமாய் தெரிகிறார்.

ரமேஷ் திலக்கின் கேரக்டர் நிஜ ஆர்ஜேவை காட்டுகிறது. இவரது முன் அனுபவமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் போல.

இவர்களுடன் கருணாகரன், பால சரவணன், சார்லி உள்ளிட்டோரின் டைமிங் சென்ஸ் காமெடிக்கு படத்திற்கு நிறையவே கைகொடுக்கிறது.

Oru-Naal-Koothu-Movie-Latest-Stills-18

தொழில்நுட்ப கலைஞர்கள்….

அழகே அடியே… பாடல் அருமை என்றால், எப்போ வருவாரோ… என்ற பாடல் அசத்தல். இரண்டும் மனதில் நிற்கிறது.

கோகுலின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. விஜே சாபு ஜோசப் இன்னும் கொஞ்சம் எடிட் செய்திருக்கலாம்.

படத்தின் ப்ளஸ்….

  • பாடல்கள் மிகப்பெரிய பலம். இதுபோன்ற மெலோடி பாடல்கள் கேட்டு ரொம்ப நாளாச்சு. மேள தாள பின்னணி இசையும் சில இடங்களில் ஓகே.
  • கண்களுக்கு விருந்தாகும் கலர்புல்லான ஒளிப்பதிவு.
  • மூன்று அழகான நாயகிகளின் அமைதியான நடிப்பு.

oru naal koothu dinesh bala saravanan

படத்தின் மைனஸ்…

  • ஒவ்வொரு கேரக்டரையும் அடிக்கடி காட்ட வேண்டுமென்பதால், டக் டக் என்று காட்சிகளை மாற்றும்போது கேரக்டர்கள் மனதில் ஒட்ட மறுக்கிறது.
  • சொல்லவேண்டிய விஷயத்தை கொஞ்சம் எளிதாக சொல்லியிருக்கலாம்.
  • ரித்விகாவின் கேரக்டர் மூலம் என்ன சொல்ல வருகிறார்? இயக்குனர் என்பது அவருக்கே வெளிச்சம். மாப்பிள்ளையிடம் கெஞ்சுவதும் பின்பு மறுப்பதும் ஏனோ?

Oru-Naal-Koothu-Movie-Stills-3

எந்த ஒரு கேரக்டரையும் மையப்படுத்தாமல், திருமண பந்தத்தையும் இன்றைய காதலையும் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் நெல்சன்.

எவரிடமும் இவர் உதவி இயக்குனராக பணிபுரியவில்லை என்பதுதான் ஆச்சரியம்.

லவ் மேரேஜ் என்றாலும் அரேஞ்ச் மேரேஜ் என்றாலும் எத்தனை விதமான பிரச்சினைகள் என்பதையும் அதை சொன்ன விதத்திலும் தேர்ச்சி பெறுகிறார் இயக்குனர்.

இன்றைய திருமண வரன் தேடலை யதார்த்தமாக காட்டியதற்கு பூங்கொத்து கொடுக்கலாம்.

திருமணம் என்ற இந்த ஒரு நாள் கூத்து… சிலருக்கு ஹாப்பி… சிலருக்கு ஆப்பு..!

தொடரி இசை பாடல்கள் விமர்சனம்

தொடரி இசை பாடல்கள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்துள்ள படம் தொடரி.

பிரபு சாலமன் மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளது.  இவரின் ஆஸ்தான பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் 2 பாடல்களை பாடியுள்ளார்.

அனைத்து பாடல்களையும் கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார்.

பாடல்கள் பற்றிய விவரம்…

 

1) ஊரெல்லாம் கேட்குதே…

பாடியவர்கள் : ஸ்ரேயா கோஷல் மற்றும் மரியா ரோ

ஊரெல்லாம் கேட்குதே என் பாட்டுதான்…

குயில் எல்லாம் போகுதே தலையாட்டிதான்…

தென்றல் இசை ஆகுதே… பூக்கள் ஜதி சொல்லுதே..

என இயற்கையின் ஒவ்வொரு அசைவையும் நாயகியின்  பாடலுக்கு ஆடுவதாக கவிஞர் யுகபாரதி வர்ணித்துள்ளார்.

இந்த வரிகள் இப்பாடலுக்கு அழகு சேர்த்துள்ளது.

இதில் வரும் ஸ்ரேயா கோஷலின் குரல் இன்னும் இனிமையை கூட்டுகிறது.

இப்படி மெலோடியாக செல்லும் பாடல் இறுதியில் ஆட்டம் போடும் வகையில் வளர்கிறது. இடையில் மற்ற மொழி வரிகள் மற்றும் ஹிந்தி வரிகளும் வந்து நம்மை ஆட்டுவிக்கின்றன.

இப்பாடலை கேரள செண்ட மேளம் இசை கூடுதலாய் கவனிக்க வைக்கிறது.

 

2) அடடா இது என்ன?….

பாடியவர்கள் : ஹரிசரன், வந்தனா சீனிவாசன்

அடடா இது என்ன? இது என்ன எனக்கொன்னும் புரியலையே… புரியலையே

அடியே எனக்கென்ன எனக்கென்ன… நடந்துச்சு தெரியலையே தெரியலையே…

நிழலாக கிடந்தேன் நான்.. நிசமாக நிமிந்தேன் நான்…

உன்ன பாத்து, தொடுவானாய் உசந்தேன் நான்….

என ஹரிசரணின் ஹை பீச்சில் இப்பாடல் தொடங்குகிறது.

நாயகனும் நாயகியும் காதல் வயப்படும்போது உருவாகும் வரிகளால் இப்பாடலை பின்னியுள்ளார் யுகபாரதி. காதலர்களுக்கு பிடிக்கும்.

 

3) மனுஷனும்.. மனுஷனும்…

பாடியவர் : கானா பாலா

மனுஷனும் மனுஷனும் பேசின காலம் போயே போச்சு.. ஐ…ஐ…ஐ….

அவன் முழிச்சதும் முழிக்கிற முகமோ இப்போ செல்போன் ஆச்சு…ஐ.ஐ…ஐ.ஐ…

ஊராங்கூட எப்போ பாரு சாட்டிங்கு…

பெத்து பேரு வச்சா ஆத்தா கூட பைட்டிங்கு….

போனு ஸ்மார்ட்டா ஆச்சு….

உன் வாழ்க்கை வேஸ்ட்டா போச்சு…

என்ற வரிகளோடு ஆரம்பம் ஆகிறது. நவீன ஸ்மார்ட் போன்களால் நம் வாழ்க்கை வீணா போச்சு என கருத்துள்ள பாடலாய் இது அமைந்துள்ளது.

இது கானா பாலாவின் குரல் என்றாலும், இதுவரை கேட்காத ஒரு பாணியில் இப்பாடலை பாடியுள்ளார்.  ஆனால் பழைய சுவாரஸ்யம் இல்லை.

 

4) போன உசுரு வந்துருச்சி…

பாடியவர்கள் : ஹரிசரன், ஸ்ரேயா கோஷல்

போன உசுரு வந்துருச்சி… உன்ன தேடி திருப்பி தந்திருச்சி… என்று ஸ்ரேயா குரலில் ஆரம்பிக்கிறது இந்த மெலோடி பாடல்.

காதலனை மிஸ் செய்யும் பெண்களுக்கு ஏற்ற பாடலாய் இது அமைந்துள்ளது. அவனை இனிமே மிஸ் செய்யக்கூடாது என்பதால்.. இனிமேல்  ஒரு நாளும் இதுபோல் அமைய கூடாது என்று தன் வலியை பெண் பாடுவதாக உள்ளது.

இதில் ஹரிசரண் வாய்ஸ் அவ்வளவு பொருத்தமாக இல்லை என்றே தோன்றுகிறது. இந்த மெலோடியை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்வதாய் உள்ளது.

 

5) லவ் இன் வீல்ஸ்….

பாடியவர் : சின்னப் பொண்ணு

 

மைனா, கும்கி, கயல் பட பாடல்களின் ஹிட் உயரத்தை இது தொடுமா? என்பதை படம் வரும்வரை பொறுத்துத்தான் பார்க்கனும்.

More Articles
Follows