தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
காலம் கடந்து தன் பேரன் விதார்த்துக்கு திருமணம் நடக்கிறது.
எனவே பாட்டி, தன் பேரன் மற்றும் அவனது மனைவி ரவீனா ஆகியோருடன் புறப்பட்டு தங்கள் குலதெய்வம் கோயிலுக்கு சென்று ஒரு ஆட்டை பலி கொடுக்க புறப்படுகின்றனர்.
கோயிலை நெருங்கும் இடத்தில் ஒரு விபத்து. லாரியில் ஒருவன் விழுந்து இறந்துகிடக்கிறார்.
ஆனால் அந்த லாரியை ஓட்டியது ட்ரைவர் இல்லை. இந்த புது மாப்பிள்ளைதான் என்பது அவர்களுக்கு அப்போதுதான் தெரிகிறது.
எனவே, தங்கள் வீட்டு பையனை காப்பாற்ற அந்த குடும்பம் திட்டமிடுகிறது.
அதன்பின், அவர்கள் என்ன செய்தார்கள்? சட்டத்தில் இருந்து தப்பித்தார்களா? என்ன ஆனது என்பதை உணர்வுகளுடன் காட்சிகளாக கொடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் சுரேஷ் சங்கையா.
கேரக்டர்கள்…
விதார்த்துக்கு இது ஒரு வித்தியாசமான கேரக்டர்தான். அவரும் தன் நடிப்பை அப்படியே செய்துள்ளார்.
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா. அழகான குடும்ப பாங்கான முகம். ரசிக்க வைக்கிறார்.
படத்தில் வரும் கேரக்டர்கள் அனைத்தும் அந்த கிராமத்து மனிதர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
ஒரு வக்கீல், எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க, ஒரு வழக்கை மாற்றுவார். சின்ன பிரச்சனையை எப்படி பெரிதாக்குவார்? என்பதை ஜார்ஜ் கேரக்டர் உணர்த்தும்.
தொழில்நுட்ப கலைஞர்கள்...
இந்த உணர்புப்பூர்வமான கதைக்கு வி.குருநாதன், சுரேஷ் சங்கைய்யாவின் சுவாரஸ்யமான டயலாக்குகள் பெரும் பலம் சேர்க்கிறது.
இசையமைப்பாளர் ரகுராமின் பின்னணி இசையும், பாடலாசிரியர்கள் வேல்முருகன், குருநாதனின் “தனியாக கிடந்தேன் இதுவரை நானாக….” உள்ளிட்ட பாடல் வரிகளும் ரசிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரண் அசத்தியுள்ளார். அந்த ஆட்டின் கண் வழியே தன் கேமராவை வைத்து, அதன் வழி சொல்லும் கதை சூப்பர்.
எல்லா கேரக்டர்களையும் அறிமுகம் செய்யும் விதமும் முதல் பத்து நிமிடம் ஒளிப்பதிவும் அருமை.
மனித உயிர்கள் மட்டுமல்ல. இறைவன் படைத்த எல்லா உயிரும் ஒன்றுதான். என்பதை நமக்கு உரைக்கும்படி சொன்ன இயக்குனர் சுரேஷ் சங்கய்யாவை எவ்வளவு வேண்டுமானாலும் வாழ்த்தலாம்.
“ஒரு கிடாயின் கருணை மனு’ – மனசுக்கு பிடித்த மனு