மணியார் குடும்பம் விமர்சனம்

மணியார் குடும்பம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: தம்பி ராமையா, உமாபதி, மிருதுளா முரளி, பவன், ஜெயப்பிரகாஷ், சமுத்திரக்கனி, ரதாராவி, விஜய்டிவி புகழ் ராமர், பழனி, தங்கத்துரை, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி மற்றும் பலர்.
இயக்கம் – தம்பி ராமையா
ஒளிப்பதிவு – விகே. வர்மா
இசை – தம்பி ராமையா
தயாரிப்பு : தேன்மொழி

கதைக்களம்…

வேலைக்கு செல்லாமல் வீட்டில் அமர்ந்து அதிகாரம் செய்யும் ஒரு தந்தையின் அடாவடித்தனம்தான் இந்த மணியார் குடும்பம்.

தன் தாத்தா, அப்பா சேர்த்த சொத்துக்களை விற்று சாப்பிடும் அப்பா (தம்பி ராமையா) அவரை தாங்கும் மனைவி, அம்மா, மனைவியுடன் ஒட்டிக் கொண்ட தம்பி (மச்சான்), தம்பிராமையாவின் மகன் உமாபதி என ஒரே குடும்பமாக வாழ்கின்றனர்.

உமாபதிக்கு உறவுக்கார பெண் மிருதுளாவை கேட்கின்றனர். வேலை வெட்டியில்லாத பையனுக்கு பெண் தர மறுக்கிறார் ஜெயப்பிரகாஷ்.

எனவே காற்றாலை (வின்ட் மில்) தொழில் தொடங்க நினைக்கின்றனர். அதன்படி ஊரில் உள்ளவர்களை பங்குதாரர்களாக சேர்க்க, எல்லாரிடமும் பணம் வாங்குகின்றனர்.

ஆனால் அந்த பணம் கொள்ளை போகிறது. இதனால் ஊரே இந்த மணியார் குடும்பத்திற்கு எதிராக திரும்புகிறது.

அதன்பின்னர் என்ன ஆனது? பணத்தை யார் கொள்ளையடித்தார்? காற்றாலை நிறுவனம் என்ன ஆனது? உறவுக்கார பெண்ணை மணந்தாரா உமாபதி? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நடிப்பு, பாடல், இசை, இயக்கம் என பல பொறுப்புகளை தாங்கியிருக்கிறார் தம்பிராமையா.

அவருக்கே உரித்தான அப்பாவித்தனத்தில் கலக்கியிருக்கிறார் தம்பி ராமையா. இசையில் நம்மை அறியாமல் தாளம் போட வைக்கிறார்.

இவர் திடீரென திருந்துவதாக காட்சிகள் நம்பும் படியாக இல்லை. அதில் பல தத்துவங்களை பேசுகிறார்.

நாயகன் உமாபதி நடனத்தில் அவரது உயரத்திற்கு ஏற்ப உச்சம் தொடுகிறார். வளைந்து வளைந்து ஆடி நடன பிரியர்களை கவர்கிறார்.

பொறுப்பான மாமன் மகளாக மிருதுளா முரளி மிளிர்கிறார். காதலனுக்கான இவர் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் பாராட்ட வைக்கிறது.

அப்பாவி கணவருக்கு மனைவியாக ஸ்ரீரஞ்சனி கச்சிதம்.

நடிகர் பவன் காட்சிகளில் இன்னும் பலம் சேர்த்திருக்கலாம். மிரட்டல் வில்லனாக இவரையே கடைசி வரை காட்டியிருந்தால் பக்காவாக இருந்திருக்கும்.

படத்தில் பல கலைஞர்களின் நடிப்பு வீணடிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக ஜெயப்பிரகாஷ், சமுத்திரக்கனி, ரதாராவி, விஜய்டிவி புகழ் ராமர், பழனி, தங்கத்துரை, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி ஆகியோரின் கேரக்டர்கள்தான்.

தக்காளி பழமே பாடலில் வந்து ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார் யாஷிகா ஆனந்த்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தனது டைரக்சனை தொடங்கியுள்ளார் தம்பி ராமையா. அதில் தனது மகனை ஆடவைத்திருக்கிறார். நடிப்பில் இன்னும் முயற்சிகள் தேவை. செயற்கையாக இருக்கிறது.

பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தம்பி ராமையா கவர்கிறார். பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.

பாட்டி கதை ஞாயிறு… இந்த காட்சிகளை எல்லாம் நம்மை சோதிக்கிறது.

மணியார் குடும்பம்… இயக்குனர் தம்பி ராமையா தடுமாற்றம்

Maniyar Kudumbam review and rating

கஜினிகாந்த் விமர்சனம்

கஜினிகாந்த் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஆர்யா, சாயிஷா, சதீஷ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், சம்பத், நீலிமா ராணி மற்றும் பலர்.
இயக்கம் – சந்தோஷ் பி ஜெயக்குமார்
ஒளிப்பதிவு – பல்லு
இசை – பாலமுரளி பாலு
தயாரிப்பு : ஞானவேல்ராஜா

கதைக்களம்…

ஆர்யாவின் அப்பா ஆடுகளம் நரேன். அவர் ஒரு ரஜினி வெறியர். தனது மனைவியுடன் தர்மத்தின் தலைவன் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, தியேட்டரில் மனைவிக்கு பிரசவம் ஆகிறது.

ஆர்யா பிறக்கிறார். எனவே அவருக்கு ரஜினிகாந்த் என்று பெயர் வைக்கிறார்.

ஆர்யா வளர வளர, அவருடன் தர்மத்தின் தலைவன் ரஜினியை போல் மறதி நோயும் அவருடனே வளர்கிறது.

ஒரு வேலையில் ஆர்யா இருக்கும்போது மற்றொருவர் பேசினாலோ அல்லது மற்ற வேலையில் அவர் ஈடுப்பட்டாலோ முதலில் செய்த வேலையை மறந்துவிடுவார்.

அவருக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். பெண் பார்க்கும் வரும் நேரத்தில் ஏதாவது வேலை வந்தால் அந்த விசேஷத்தை மறந்துவிடுகிறார்.
இதனால் அவருக்கு திருமணம் நடைபெறாமல் இருக்கிறது.

இதனால் அவரை எல்லாரும் சார்ட் டேர்ம் மெமரி லாஸ் கஜினியை சேர்த்து கஜினிகாந்த் என அழைக்கின்றனர்.
ஒரு முறை சாயிஷாவின் அப்பா சம்பத்தை சந்திக்கிறார். இவரின் ஞாபக மறதியால் ஆர்யாவை வெறுக்க ஆரம்பிக்கிறார் சம்பத்.

இதனிடையில் சாயிஷாவை சந்திக்கிறார் ஆர்யா. இருவரும் காதல் கொள்கின்றனர்.

அதன் பின்னர் என்ன நடந்தது? காதல் கை கூடியதா? சம்பத் என்ன செய்தார்? ஆர்யாவின் மறதிக்கு விடை கிடைத்ததா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அலட்டிக் கொள்ளாத நடிப்பில் ஆர்யா ஸ்கோர் செய்கிறார். மறந்துவிடுவதும் அதனால் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளை நினைத்து அழுவதும் என ரசிக்க வைக்கிறார்.

சாயிஷாவுடன் காதல் கொண்டாலும் பாடல் காட்சிகளில் மட்டுமே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறது.

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த லேட்டஸ்ட் லூசுப்பெண் சாயிஷா. எதை சொன்னாலும் நம்பி விடுகிறார். கொஞ்சி பேசும் போது கொள்ளை அழகு.

வில்லனாக மிரட்டிய ஆடுகளம் நரேன் இதில் காமெடி அதகளம் செய்திருக்கிறார். இனி இவரும் மன்சூர் அலிகான் ஆனந்த்ராஜ் போல் வந்துடுவார்.

சதீஷ் மற்றும் கருணாகரன் காமெடி சில இடங்களில் மட்டுமே ஒர்க்அவுட் ஆகிறது.

உமா பத்மநாபன், சம்பத் காளி வெங்கட், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோரும் ரசிக்க வைத்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாலமுரளி பாலு இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கலாம். பல்லு ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை. ரசிக்க வைக்கிறது.

தனது முதல் இரண்டு அடல்ட் காமெடி படங்கள் மூலம் இளைஞர்களை கவர்ந்தவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.

இந்த முறை குடும்பங்களை கவர முயற்சித்துள்ளார். இது எப்படியிருந்தாலும் இந்த படம் ஓடலேன்னா மறுபடியும் அடல்ட் பக்கம் சென்றுவிடுவார். எனவே ரசிகர்கள் கையில்தான் இப்படம் உள்ளது.

நீலிமாவுக்கு பிரசவம் வேகத்தடை காட்சிகள் எல்லாம் ரொம்ப பழசு. சம்பத்திடம் வேலை தேடி செல்லும் காட்சிகள் எல்லாம் போரடிக்கிறது.

உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ஆள் மாறாட்டம் காட்சியில் கார்த்திக் கவுண்டமணி கலக்கியிருப்பார்கள்.

இதில் ஆர்யா சதீஷ்க்கு அனுபவம் போதவில்லை. ஏதோ முயற்சி செய்துள்ளனர்.

சில இடங்களில் காமெடி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

ஞாபக மறதியை வைத்து இந்த படத்தை இன்னும் நகைக்சுவையாக கொடுத்திருக்கலாம். ஒருவேளை இரட்டை அர்த்த காமெடியில்தான் டைரக்டர் கலக்குவாரோ? எனத் தெரியவில்லை.

கஜினிகாந்த்… ரஜினி-கஜினி பெயரை கெடுக்க ஒரு முயற்சி

ஜுங்கா விமர்சனம்

ஜுங்கா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விஜய்சேதுபதி, சாயிஷா, யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன், மடோனா, சுரேஷ் மேனன் மற்றும் பலர்.

இயக்கம் – கோகுல்
ஒளிப்பதிவு – டட்லி
இசை – சித்தார்த் விபின்.
தயாரிப்பு : விஜய்சேதுபதி

கதைக்களம்…

படத்தின் ஒன்லைன் சொல்ல வேண்டுமென்றால் மாணிக்கம் இதில் பாட்ஷாவாக மாறுகிறார்.

ஜுங்கா விஜய்சேதுபதியின் தன் குடும்ப வரலாறு தெரியாமல் வளர்கிறார். அவரை அப்படி வளர்க்கிறார்கள் அம்மா சரண்யா, ஜுங்கா பாட்டி.

தான் ஒரு டான் பேமிலி வம்சத்தில் இருந்து வந்தவர் என்பதால் தானும் டானாக மாற ஆசைப்படுகிறார்.

அதற்காக தன் சொத்தை அபகரித்த வில்லன் சுரேஷ் மேனனின் மகள் சாயிஷாவை கடத்த நினைக்கிறார்.

அதன்பின்னர் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

DjFJdARUcAAgaACaa

கேரக்டர்கள்…

விஜய்சேதுபதி தன் வழக்கமான பேச்சால் ரசிகர்களை ஈர்க்கிறார். ஆனால் அதுவே வினையாகிவிடுகிறது.

யோகிபாபு இல்லையென்றால் படம் மோசமான நிலையை எட்டியிருக்கும். ஜுங்காவிற்கு பலமே அவர்தான். இவருடன் டான் அம்மா மற்றும் டான் பாட்டி கவர்கிறார்கள்.

ப்ரிட்ஜில் வைத்த திராட்சையாக சாயிஷா ரசிக்க வைக்கிறார்.

படத்தின் ப்ளஸ்…

யோகிபாபு

டான் அம்மா

டான் பாட்டி

படத்தின் மைனஸ்…

விஜய்சேதுபதியின் ஓவர் பேச்சு

தேவையில்லாத பாடல்கள்

மடோனா கேரக்டர்

ராதா ரவி, சுரேஷ் மேனன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மொட்டை ராஜேந்திரனும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இல்லை. ஆனால் பின்னணி இசை ஓகே.

டுட்லியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு.

சண்டைக் காட்சிகளில் கேமரா விளையாடியிருக்கிறது.

ஜுங்கா… நீ டான் அழவே கூடாது

ஸ்கை ஸ்கிராப்பர் விமர்சனம்

ஸ்கை ஸ்கிராப்பர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: டிவைன் ஜான்சன், நீவ் காம்ப்பெல், கோரெஸ் போத்தா மற்றும் பலர்.
இயக்கம் – ராஷன் மார்சல் டர்பர்
ஒளிப்பதிவு – ராபர்ட் எல்ஸ்விட்
இசை – ஸ்டீவ் ஜப்லான்ஸ்கை

கதைக்களம்…

டிவைன் ஜான்சன் ஒரு குண்டு வெடிப்பில் தன்னுடைய ஒரு காலை இழக்கிறார். இதனால் நல்ல வேலையில் இருந்த இவர் செக்யூரிட்டியாக வேலை பார்க்க நேரிடுகிறது.

வேலை செய்யும் ஒரு அப்பார்ட்மெண்டில் அவர் குடும்பத்துடன் குடியேறுகிறார்.

செக்யூரிட்டி என்பதால் எல்லா மாடிகளுக்கும் செல்லக் கூடிய ஆக்சஸ் கார்டு அவருக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், வில்லன் கோரெஸ் போத்தா அந்த கட்டிடத்தில் புகுந்து, 96வது தளத்தில் தீ வைக்கிறான். மேலும் அந்த கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் நிறுத்திவிடுகிறான்.

அந்த கட்டிடத்தின் தீயை நம்ம ஹீரோ டிவைன் ஜான்சன் எப்படி அணைத்தார்?. தன்னுடைய குடும்பத்தையும் அங்குள்ளவர்களையும் காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

டிவைன் ஜான்சனை சோலோ ஹீரோவாக்கியுள்ளனர். அவரும் கிடைத்த கேப்பில் எல்லாம் ரசிகர்களை உற்சாகப்படுத்த அதிரடி காட்டியுள்ளார்.

ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார். தீ பிடித்த கட்டிடத்தில் டிவைன் ஜான்சன், செய்யும் சாகசங்கள் ரசிகர்களுக்கு செம விருந்து.

பல ஆடியன்ஸ் சீட்டின் நுனிக்கே வந்துவிடுவார்கள்.

தமிழ் டப்பிங்கை தமிழர்களுக்கு பிடிக்கும் வகையில் ரசிக்கும் படி கொடுத்திருப்பது கூடுதல் சுவை.

ஸ்டீவ் ஜப்லான்ஸ்கை பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ராபர்ட் எல்ஸ்விட்டின் ஒளிப்பதிவு படத்தின் மீதான பிரம்மாண்டத்தை அதிகரித்துள்ளது.

கிராபிக்ஸ் காட்சிகளா? இது என்பதை தெரியாத அளவுக்கு விருந்து படைத்துள்ளார் டைரக்டர் ராஷன் மார்சல் டர்பர்

‘ஸ்கை ஸ்கிராப்பர்’… நிச்சயம் ரசிக்கலாம்.

போத விமர்சனம்

போத விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விக்கி, மிப்பு, உதயபானு (ராகுல் தாத்தா), வினோத், ஈஸ்வர், சண்முகசுந்தரம், வீர ராஜன் மற்றும் பலர்.
இயக்கம் – சுரேஷ் ஜி
ஒளிப்பதிவு – ரத்னகுமார்
இசை – சித்தார்த் விபின்
எடிட்டர் – தியாகராஜன்

கதைக்களம்…

ஆண் விபச்சாரன் என்ற புதிய கதைக்களத்துடன் இறங்கியுள்ளார் இப்பட இயக்குனர் சுரேஷ்.

சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறார் நாயகன் விக்கி. அதற்கு முதலில் குறும்படத்தில் நடித்தால் நல்ல பெயர் கிடைக்கும் என்பதால் அதற்கான முயற்சியில் இறங்குகிறார்.

ஆனால் அதற்கே அவரிடம் பணமில்லை. எனவே ஒரு ஏஜெண்ட் மூலம் ஈஸ்வர் அறிமுகம் கிடைக்கிறது.

இந்த ஈஸ்வர் தான் சென்னை சிட்டி ஆண்களுக்கு அலையும் ஆண்டிகளுக்கு ஆண் விபச்சாரன்களை சப்ளை செய்கிறார். இதை போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோத் உதவியுடன் செய்து வருகிறார்.

விக்கிக்கு ஈஸ்வர் அறிமுகம் கிடைக்கவே, நிறைய ஆண்டிகளுடன் செக்ஸ் வைத்து கொள்கிறார். அதன் மூலம் பணம் கிடைக்கிறது.

ஒருநாள் ஒரு ஆண்டிக்கு வீட்டுக்கு போகும்போது, அந்த சமயம் பார்த்து யாரோ வீட்டிற்கு வர ஒளிந்துக் கொள்கிறார்.

அப்போது அந்த ஆண்ட்டி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். எனவே இந்த பிரச்சினையில் இருந்து தப்பித்துச் செல்ல நினைக்கும் போது, அந்த ஆண்டியின் புருசன் இவரை பார்த்து விடுகிறார்.

அவன்தான் தன் மனைவியை கொலை செய்த கொலைக்காரன் என போலீசில் புகார் கொடுக்கிறார்.

அடுத்து நாயகன் என்ன செய்தார்? தான் கொலை செய்யவில்லை என்பதை நிரூபித்தாரா? ஆண்ட்டியை கொன்றது யார்? எதற்காக கொன்றார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

மதன் என்ற கேரக்டரில் அறிமுக நாயகன் விக்கி. தன்னால் முடிந்தவரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

போலீசிடம் மாட்டிக் கொள்ளும் காட்சிகளில் இன்னும் தவிப்பை கூட்டியிருக்கலாம். மற்றபடி முதல் படம் என்பதால் பாராட்டலாம்.

ஆக்சன் ரொமான்ஸ் இல்லாத காரணத்தினால் ஏதோ ஒரு குறை தெரிகிறது.

இவரின் நண்பராக வரும் மிப்பு அண்ட் ராகுல் தாத்தா இருவரும் கச்சிதம். அதிலும் ராகுல் தாத்தா இதில் அதிகப்படியான ட்விஸ்ட் கொடுத்து கதையின் நாயகனாக மாறிவிட்டார்.

இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும் ஆண் விபச்சார புரோக்கர் சொப்பன கிருஷ்ணன் (ஈஸ்வர்) இருவரும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர்.

பிச்சைக்காரன் படத்தில் கலக்கிய ஈஸ்வரும் மற்றொருவரும் ரசிக்க வைக்கின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு கரகாட்டக்காரன் புகழ் சண்முக சுந்தரம். ஆனால் அவருக்கு வேறு யாரோ? டப்பிங் கொடுத்துவிட்டார்கள் போல. அதை பழைய வாய்ஸ் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல்கள் கை கொடுக்கவில்லை என்றாலும் போத படத்திற்கு பின்னணி இசையில் போதை ஏற்றி விடுகிறார் சித்தார்த் விபின்.

படத்தின் ஒளிப்பதிவில் குறையில்லை. ஆனால் எடிட்டர் தன் பங்கை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். முதல் பாதியில் விறுவிறுப்பு இல்லை.

யார் கொலை செய்தார்? என்ற விறுவிறுப்பான நேரத்தில் தேவையில்லாத குத்து பாடல் … அட என்னய்யா? இது என கேட்கத் தோன்றுகிறது.

கொலைக்காரன் யார்? என்றே ஆடியன்சுக்கு தெரிவிக்காமல் படத்தை முடித்துவிட்டு, பின்னர் ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பது செம.

அதுவும் இவர்தான் அந்த கொலைக்காரனா? என தெரிய வரும்போது… செம.

படம் ஆரம்பிக்கும்போது கூகுள் ஸ்டைலில்… Gigolos என போட்டுவிட்டு நாயகன், நாயகன் நண்பர் என ஒவ்வொருவராக டைட்டில் கார்டூ போடுவது புதிய முயற்சி. அந்த கற்பனையை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

தவறான வழியில் பணம் சம்பாதிக்க நினைத்தால் என்னாகும்? நம் போனில் நம் உரையாடல்களை ரெக்கார்ட் செய்து வைத்தால் என்ன பிரச்சினையாகும்? என்பதை பக்காவாக சொல்லிவிட்டார் விக்கி.

படம் ஆண் விபச்சாரனை பற்றிய படம் என்பதால் நாயகி வேண்டாம் என முடிவி செய்துவிட்டாரோ?

ஆம்பள ஐட்டம் என சொன்னாலும் ஒரு காட்சியில் கூட ஆபாசம் இல்லை. மேலும் இதில் த்ரில்லர் கொடுத்திருப்பது சிறப்பு.

ஆனால் திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பை கூட்டியிருந்தால் இந்த போத இன்னும் எகிறியிருக்கும். கிக் ஏறவில்லை.

போத… ஆம்பள ஐட்டம்

Bodha aka Botha tamil movie review rating

கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்

கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: கார்த்தி, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா, சூரி, ஸ்ரீமன், சௌந்தரராஜா, இளவரசு, யுவராணி, பானுப்ரியா, விஜி சந்திரசேகர் மற்றும் பலர்.
இயக்கம் – பாண்டிராஜ்
ஒளிப்பதிவு – வேல்ராஜ்
இசை – இமான்
எடிட்டர் – ரூபன்
தயாரிப்பு – 2டி எண்டர்டெயின்மெண்ட் சூர்யா
பிஆர்ஓ. – ஜான்சன்

கதைக்களம்…

குடும்பத் தலைவர் சத்யராஜ். பெண் குழந்தைகளாகவே பிறப்பதால் ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டுக் கொண்டே இருக்கிறார். எனவே 2வது மனைவியாக பானுப்ரியா வருகிறார்.

அதற்குள் இந்த தம்பதிக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்துவிடுகிறது. இறுதியாக கடைக்குட்டி சிங்கமாக கார்த்தி பிறக்கிறார்.

இவர் படிக்கவில்லை. ஆனால் விவசாயம் மூலம் நல்ல வருமானம் பார்த்து தன் பெரிய குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்கிறார்.

சத்யராஜின் 5 மகள்களில் ஒருவரின் மகன்தான் சூரி. ஒருவருக்கு குழந்தையே இல்லை. மற்ற 3 மகள்களுக்கும் பெண் குழந்தை பிறக்கிறது.

சில வருடங்களுக்கு பிறகு இருவருக்கு வயதுக்கு வந்த மகள்கள் இருக்கிறார்கள். ஒருவர் பிரியா பவானி சங்கர். மற்றொருவர் அர்த்தா பினு.

இவர்கள் இருவரும் தாய்மாமன் கார்த்தியை மணக்க ஆசைப்படுகிறார்கள்.

ஆனால் அக்கா மகள்களை மணக்க விருப்பமில்லாமல் நாயகி சாயிஷாவை காதலிக்கிறார். அவரும் இவரை காதலிக்கிறார்.

அக்கா மகளை மணக்க கார்த்தி சம்மதிக்கவில்லை என்பதால் இந்த பெரிய குடும்பத்தில் பிரச்சினை வெடிக்கிறது.
இறுதியில் கார்த்தி என்ன முடிவு செய்தார்? குடும்ப பிரச்சினையை எப்படி முடிவுக்கு கொண்டு வந்தார்? யாரை திருமணம் செய்தார்?

கேரக்டர்கள்…

விவசாயி கேரக்டருக்கு கார்த்திக் செம கச்சிதம். முதல் காட்சியிலே ரேஸில் கலந்துக் கொண்டு தன் அண்ணன் சூர்யாவுடன் நடித்து விட்டார்.

தன் வெற்றிக்கு காரணமான இரண்டு காளைக்கும் சூர்யாவிடம் மாலை இடச் சொல்வது கைத்தட்டலை அள்ளுகிறது.

சென்டிமெண்ட் போல ஆக்க்ஷனிலும் அதிரடி காட்டியுள்ளார் கார்த்தி.

ஊருக்கே சோறு போடும் விவசாயியும் கடவுளை போல ஒரு படைப்பாளிதான் என அவர் பேசும் வசனங்களுக்கு விசில் பறக்கிறது.

தான் தோளில் வளர்த்த அக்கா மகளை எப்படி மனைவியாக்கி கட்டி அணைத்து கொள்வது? என கார்த்தி கேட்கும்போது அக்கா மகளை மணந்த பலருக்கு உறுத்தலாக அமையும்.

கூட்டுக் குடும்பமாக வாழ நினைப்பது, குழந்தையில்லாத அக்காளுக்கு மகனாக வாழ்வது என கார்த்தி ஸ்கோர் செய்கிறார்.

சூரியும் அவ்வப்போது கலகலப்பு கொடுத்து கார்த்திக்கு ஈடு கொடுக்கிறார்.

என்ன ஆனாலும் தன் குடும்பம் பிரிந்து விடக்கூடாது என குறியாக இருக்கும் சத்யராஜ் கேரக்டர் சூப்பர். தன் மாப்பிள்ளை இவரை அவமானப்படுத்தும் போது தன் மகள்களுக்காக பொருத்துக் கொள்வதில் மாமனாரின் மனது தெரிகிறது.

பிரியா பவானி சங்கர், அர்த்தனா ஆகியோரை பார்க்கும் போது பலருக்கும் தங்கள் அத்தை மகள்கள் நினைவில் நிச்சயம் வந்து செல்வார்கள். இருவரின் நடிப்பும் அவர்களை போல செம க்யூட்.

இவர்களுடன் பானுப்ரியா, விஜி, கார்த்தியின் 5 அக்காஸ் அவர்களின் புருசர்கள் என அனைவரும் கச்சிதம். எந்த கேரக்டரையும் டம்மியாக்காமல் எல்லாருக்கும் சம பங்களிப்பு கொடுத்துள்ளார்.

வில்லனாக வரும் சந்துரு (படத்தில் கொடியரசு) செம மிரட்டல். இவருக்கு டப்பிங் கொடுத்துள்ள ஆர்.கே.சுரேஷின் வாய்ஸ் அசத்தல்.

ஜான்விஜய், பொன் வண்ணன், சௌந்தரராஜா ஆகியோரும் மனதில் நிற்கிறார்கள்.

படத்தில் எல்லா கேரக்டர்களுக்கும் அழகான தமிழ் பெயர் சூட்டியிருப்பது படக்குழுவினரின் தமிழ் பற்று தெரிகிறது. (இதன் தெலுங்கு டப்பிங்கில் எப்படி எனத் தெரியவில்லை)

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையில் பாடல்கள் படத்துடன் ஒன்றிச் செல்வது சிறப்பு. சண்டக்காரி, செங்கதிரே பாடல்கள் ரசிக்கலாம்.
வேல்ராஜின் ஒளிப்பதிவும் சூப்பர் சுப்பராயனின் சண்டையும் படத்திற்கு வலு சேர்கிறது.

பாண்டிராஜ் இயக்கம் பற்றிய அலசல்…

தங்கள் மகளுக்கு தாய் மாமனை மணக்கும் ஆசை இருக்குமா? என்பதை எண்ணி பிள்ளைகளை பெற்றோர்கள் வளர்க்க வேண்டும் எனவும் ஒரு அட்வைஸ் செய்துள்ளார் டைரக்டர்.

அக்காக்களுடன் பிறந்த எல்லா தம்பிகளுக்கும் இந்த படத்தை அர்ப்பணிக்கலாம். தினம் உணவருந்தும் நாம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்.

படத்தின் எல்லா கேரக்டர்களும் கச்சிதம் இருந்தாலும் படத்துடன் ஒன்றாத ஒரே கேரக்டர் சாயிஷா தான். இவரது முகம் இந்த கிராமத்து காவியத்திற்கு பொருந்தவேயில்லை.

புகழ்பெற்ற இளம் புது ஹீரோயின் என பார்க்காமல் படத்திற்கு இவர் பொருந்துவாரா? என்பதை டைரக்டர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இந்த பீட்சா, பர்கர் காலத்துக்கு இது செட்டாகுமா? என யோசிக்காமல், செட்டாகும் வகையில் ஒரு பக்கா கதையை கொடுத்துள்ளார் பாண்டிராஜ்.

நாம் சோறு சாப்பிடும் வரை எந்த காலத்துக்கும் விவசாய குடும்பக் கதை செட்டாகும் என உறுதியுடன் நம்பி களமிறங்கியுள்ளார் தயாரிப்பாளர் சூர்யா.

கடைக்குட்டி சிங்கம்… கர்ஜிக்கும் விவசாய கடவுள்

More Articles
Follows