தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரகாஷ் சந்திரா தான் இப்பட ஹீரோ.
இவர் பூட்டு சாவி ரிப்பேர் செய்பவர். இவருக்கு நாயகி சுனுலக்ஷ்மி மீது காதல்.
ஒரு நாள் ஹீரோவின் நெருங்கிய நண்பர் தன் உறவினர் வீட்டு சாவி தொலைந்துவிட்டது என்றும் அந்த வீட்டு கதவை திறக்க அழைக்கிறார்.
அவரும் உதவுகிறார். உதவி செய்துவிட்டு வரும்போது வழியில் போலீஸ் ஒருவர் இவரை பார்த்து விடுகிறார்.
அடுத்த நாள் காலை அந்த வீட்டில் இருந்து லட்சணக்கனக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவரம் நாயகனுக்கு தெரிய வருகிறது.
இவரை பார்த்த போலீஸ் இவருக்கு வலை வீச, இவர் நிஜத் திருடனுக்கு வலை வீச பல ட்விஸ்ட்டுக்களுடன் திரைக்கதை பயணிக்கிறது.
கேரக்டர்கள்…
படத்திற்கும் கதைக்கும் எது தேவையோ அதை அத்தனை கலைஞர்களும் நிறைவாக கொடுத்துள்ளனர்.
சாவி ரிப்பேர் செய்பவர் எப்படி இருப்பாரோ? அதே போல் டிவிஎஸ் ஸ்கூட்டர், எளிமையான வாழ்க்கை என யதார்த்தமாக வருகிறார் நாயகன்.
திருடனை தேடிச் சென்று ஒவ்வொரு ட்விஸ்ட்டாக இவர் சந்திக்கும் போது நமக்கும் அதிக ஆர்வம் ஏற்படுகிறது.
அறம் படத்தில் அனைவரையும் வெகுவாக கவர்ந்த சுனுலெட்சுமி இதிலும் குறை வைக்கவில்லை. இவரின் கண்கள் இவருக்கு மிகப்பெரிய பலம்.
தன் தவிப்பை கண்களால் சொல்லிவிடுகிறார்.
இவரின் தந்தையாக வரும் அந்த குடிக்கார அப்பா சூப்பர். ஒரு நிஜ குடிக்காரனை மிஞ்சி விடுகிறார். அவர் செய்யும் அலம்பலை நிச்சயம் அனைவரும் கைத்தட்டி ரசிப்பார்கள்.
நாயகனின் அண்ணன், அவரது நண்பன், தந்தை, மங்கா என்ற அந்த பெண் என அனைவரும் சரியான தேர்வு.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
படத்தில் 2 பாடல்கள்தான். ஒரு டூயட் ஓகே. மற்ற குத்துபாடல் தேவையா? என கேட்கத் தோன்றுகிறது. பின்னணி இசை ஓகே சதீஷ்.
சேகர்ராமின் கேமரா அந்த கோவை மாவட்ட காட்சிகளை அடடா எவ்வளவு அழகு? என்று கேட்க வைக்கிறது.
இரண்டு மணி நேரம் கூட படம் இல்லை என்பதால் படத்தை நன்றாக ரசிக்க வைக்கிறது.
சிறிய கதைக்களம், சின்ன பட்ஜெட் என ஆடம்பரமில்லாமல் இயக்குனர் சுப்ரமணியன் கையாண்ட விதம் அருமை.
சாவி – சின்ன படங்களின் நம்பிக்கை சாவி