டைரக்டருக்கு வார்னிங்… மாணிக் விமர்சனம்

டைரக்டருக்கு வார்னிங்… மாணிக் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: மா கா பா ஆனந்த், சூஷா குமார், வஸ்தவன், யோகிபாபு, ஜாங்கிரி மதுமிதா மற்றும் பலர்
இயக்குனர் – மார்ட்டின்
ஒளிப்பதிவு – எம்.ஆர்.பழனிகுமார்
இசை – சி.தரண்குமார்
பிஆர்ஓ – சுரேஷ் சுகு மற்றும் தர்மதுரை

கதைக்களம்…

மா.கா.பா. ஆனந்த் பிறக்கும்போதே அது ஒரு பிரச்சினையாகிறது.

அந்த குழந்தையை கொன்றுவிட சாமியார் ஒருவர் கூறுகிறார். ஆனால் மா.கா.பா.வின் அம்மா அந்த குழந்தையை காப்பாற்றி விடுகிறார்.

இதனையடுத்து வளர்ந்து பெரியவர் ஆகிறார் மா.கா.பா.ஆனந்த். தனது நண்பன் வஸ்தவன் இணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்க வேண்டும் எனவும் அதில் கோப்பையை வெல்ல வைக்க வேண்டும் என்ற ஒரு சபதம் போட்டு சென்னை வருகின்றன.

அப்போது ஒரு லெகின்ஸ் சாமியாரை சந்திக்கிறார்.

அவர் ஒரு மந்திரம் சொல்கிறார். நீ உடனே பணக்காரன் ஆகிவிடலாம் என்கிறார்.

அதன்படி அந்த மந்திரத்தை மா.கா.பா. உபயோகித்தாரா? பணக்காரன் ஆனாரா? என்ன மந்திரம் அது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

இந்த மாதிரி கேரக்டருக்கு தான் இவருக்கு செட்டாகும் என நினைத்தாரோ என்னவோ? அப்படி ஒரு கதையை மாகாபா ஆன்ந்துக்கு கொடுத்துள்ளார் டைரக்டர் மார்ட்டின்.

அவரும் டிவியில் செய்வது போல அதைவிட குறைவாக செய்திருக்கிறார்.

எதிர் நீச்சல் படத்தில் ரசிகர்களை கவர்ந்த சூசா குமார் இதில் அழகாக வருகிறார்.

மாகாபா நண்பர் ஒரு சில இடங்களில் கவர்கிறார். சில நேரம் ஓவர் ஆக்ட்டிங் செய்கிறார்.

மனோபாலா, மதுமிதா ஆகியோரும் படத்தில் உண்டு. யோகி பாபு ஒரு காட்சியில் வருகிறார். சிரிக்க வைக்கிறார்.

வில்லனாக அருள்தாஸ். இவரின் அலப்பரை தாங்கல. மொக்க ஜோக் மொக்க ஜோக் என சொல்லி சொல்லி நம்மை கழுத்தறுக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளரும் ஒளிப்பதிவாளரும் படத்திற்கு கொஞ்சம் ஆறுதல் தருகிறார்கள்.

அடல்டி + முழு காமெடி படத்தை கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர் மார்டின். ஆனால் நம்மை தியேட்டரில் அமர விடாமல் செய்கிறார்.

ஒரு சில இடங்களில் காமெடி பெயரில் சோதிக்கிறார். லுசுகு என்ற ஒரு கட்சி வேற இதில். (லுங்கி சுடிதார் குர்தா) இதில் அடிக்கடி டிவி செய்திகள் வேற. அதுவும் மண்டைய போட்டார் அதை போட்டார் என கிண்டல்கள் வேற.

எப்படி படம் எடுத்தாலும் மக்கள் பார்த்து விடுவார்கள் என மார்ட்டின் நினைத்துவிட்டாரோ? என்னவோ?

இதில் ஒரு பேட்டியில் அவரின் வாழ்க்கையில் நடந்த கதை என சொல்லி இருக்கிறார். இப்படியொரு கேவலமான கதையா? என எண்ணத் தோன்றுகிறது.

மாணிக்… டைரக்டருக்கு வார்னிங்

காதலர்களுக்கு பிடிக்கும் மலை… பிரான்மலை விமர்சனம்

காதலர்களுக்கு பிடிக்கும் மலை… பிரான்மலை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: வர்மா (ஆதவா பாண்டியன்), நேகா, வேல ராம்மூர்த்தி, ப்ளாக் பாண்டி, கஞ்சா கருப்பு மற்றும் பலர்
இயக்குனர் – அகரம் கமுரா
ஒளிப்பதிவு – எஸ். மூர்த்தி
இசை – பாரதி விஸ்கர்
எடிட்டர் – சுரேஷ் அர்ஸ்
பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து
பாடகர்கள் – உன்னி மேனன், ஹரிச்சரண், வேல்முருகன் சின்ன பெண், பிரியதர்சினி மற்றும் சிலர்
தயாரிப்பாளர் – ஆர்பி பாண்டியன் (வளரி கலைக்கூடம்)

கதைக்களம்…

பிரான்மலை என்ற அழகிய கிராமம். ஹீரோ வர்மா அங்கு ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

இவருக்கு அம்மா இல்லை. எனவே தந்தை வேல ராமமூர்த்தி கண்டிப்பான வளர்ப்பில் வளர்கிறார்.

வர்மா அடிக்கடி சில பிரச்சினைகள் செய்வதால் இவரை வெளியூருக்கு வேலைக்கு அனுப்புகிறார் தந்தை.

அங்கு தன் நண்பன் ப்ளாக் பாண்டியுடன் இணைந்து வேலை தேடுகிறார் நாயகன்.

அந்த சூழ்நிலையில் கிறிஸ்துவ பெண்மணி நாயகி நேகாவை சந்திக்கிறார். அவரோ ஆதரவற்ற ஆசிரமத்தில் வளர்ந்தவர்.

ஒரு கட்டத்தில் சர்ச்சில் வைத்து அவளை திருமணமும் செய்துவிடுகிறார்.

ஆனால் வர்மாவின் தந்தையோ தன் உறவுக்கார பெண்ணை பார்த்து வைத்திருந்தார். இதனால் கடுப்பான வேல ராம மூர்த்தி என்ன செய்தார்? மருமகளை ஏற்றுக் கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

Piranmalai movie stills

கேரக்டர்கள்…

நாயகன் வர்மாவுக்கு இதுதான் முதல் படம். இருந்த போதிலும் நிறைய மெனக்கெட்டு இருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் அசத்துகிறார்.

ரொமான்சில் இன்னும் உழைப்பு தேவை. படத்தின் இறுதி காட்சியில் காதலர்களை நிச்சயம் கவருவார்.

அழகு, திறமை கொண்ட நாயகியாக நேகா. நடிப்பில் பாஸ் மார்க் கொடுக்கலாம்.

கண்டிப்பான தந்தையாக வேல ராமமூர்த்தி. இவருக்கான காட்சிகள் குறைவு என்றாலும் கொடுத்த கேப்பில் ஸ்கோர் செய்கிறார்.

கஞ்சா கருப்பு, பிளாக் பாண்டி காமெடிகள் பெரிதாக எடுபடவில்லை. நமக்கு அறிமுகமான பெரிய நட்சத்திரங்கள் இருந்தபோதிலும் அவர்களை விட புதுமுகங்கள் அசத்துகின்றனர்.

நாயகனின் உறவுக்காரர்கள் அனைவரும் கச்சிதம். கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர்.

பாரதியின் இசையில் பாடல்கள் ரசிக்குபடி உள்ளது. வைரமுத்துவின் வரிகள் படத்திற்கும் பாடலுக்கும் சிறப்பு சேர்கின்றன.

எஸ்.மூர்த்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.

இயக்குனர் அகரம் கமுரா அவர்கள் காதல் திரைப்படத்தை காதல் படம் போல கொண்டு சென்று க்ளைமாக்ஸில் மாற்றியிருப்பது சிறப்பு. படத்தின் வேகத்தை அதிகரித்திருக்கலாம்

மொத்தத்தில் `பிரான்மலை’ … காதலர்களுக்கு பிடிக்கும் மலை

Piranmalai movie review

Kannada God of Films…. KGF கேஜிஎஃப் விமர்சனம் (4/5)

Kannada God of Films…. KGF கேஜிஎஃப் விமர்சனம் (4/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: யஷ், தமன்னா மற்றும் பலர்
இயக்கம் – பிரசாந்த் நீல்
ஒளிப்பதிவு – புவன் கவுடா
இசை – ரவி பஸ்ரூர்
பிஆர்ஓ – நிகில் முருகன் (தமிழ் பதிப்பு)

கதைக்களம்…

கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 4 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள யஷ் படத்தை தமிழில் விஷால் வெளியிட்டுள்ளார்.

கேஜிஎஃப் என்றால் கோலார் கோல்டு ஃபீல்டு. தமிழில் கோலார் தங்க வயல் என்பார்கள்.

தங்கச் சுரங்கத்தில் வேலை செய்பவர்கள் எப்படி எல்லாம் அடிமையாக நடத்தப்படுகிறார்கள்.

அவர்களை எப்படி நம் ஹீரோ மீட்டு எடுக்கிறார்? அவர் எதற்காக அங்கு சென்றார்? என்பதே படத்தின் ஒன் லைன்.

சாகும் தருவாயில் உள்ள தாய், தனது மகன் யஷ்ஷிடம் நீ சாவதற்குள் பெரிய பணக்காரனாக ஆக வேண்டும் என சத்தியம் வாங்கி இறக்கிறார்.

எனவே பணத்துக்காக எதையும் செய்யும் ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டராக உருவாகுகிறார்.

ஒரு சூழ்நிலையில் இவருக்கு அதிபயங்கரமான ப்ராஜக்ட் வருகிறார்.

கோலார் தங்க சுரங்கத்திற்கு சென்று அங்குள்ள ஒருவனை அழிக்க சொல்கிறார்கள்.

அங்கு செல்வதே மிகப்பெரிய சவாலான விஷயமாகும். அங்கு சென்றவர்கள் உயிருடன் திரும்பி வரவே முடியாது. அந்த காரியத்தை செய்தால் மிகப்பெரிய தொகை தருவதாக யஷ்ஷிடம் உறுதியளிக்கின்றனர்.

இதனையடுத்து அவர் அங்கு எப்படி சென்றார்? வில்லனை அழித்தாரா? பணக்காரன் ஆனாரா? தான் ஒரு மான்ஸ்டர் என்பதை நிரூபித்தாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஒட்டு மொத்த படத்தையும் தனி ஒருவனாக தாங்கி உயர்ந்து நிற்கிறார் யஷ். நல்ல உயரம், உடல்வாகு என அசால்லடாக அசர வைத்திருக்கிறார்.

முகம் முழுக்க தாடி, நீண்ட தலை முடி என மிரட்டல் தோற்றத்தில் அதகளம் செய்திருக்கிறார்.

கோலார் தங்க சுரங்கத்தில் ஸ்கெட்ச் போட்டு இவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் செம.

யஷ்க்கு ஜோடியாக ஸ்ரீனிதி ஷெட்டி நடித்துள்ளார்.

ஒரு பாடலுக்கு தமன்னாவும், மற்றொரு பாடலுக்கு நாகினி புகழ் மவுனி ராயும் வந்து குத்தாட்டம் போட்டுள்ளனர்.

அச்சுகுமார், அனந்த் நாக், அர்ச்சனா ஜோஸ், அய்யப்பா ஷர்மா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் கலை பணிகளில் ஷிவ குமார் மிரட்டியிருக்கிறார். கலை பணிக்காக இவருக்கு தேசிய விருதே கொடுக்கலாம்.

சண்டைக் காட்சிகளில் அன்பறிவ் மாஸ் காட்டியுள்ளனர்.

“எவன் முதல அடிக்கிறான் என்பது முக்கியமல்ல. ஆனா எவன் முன்னே கீழே விழுறான் என்பதுதான் முக்கியம்.
கில்லாடி.. கில் லேடி…” உள்ளிட்ட வசனங்கள் படத்திற்கு வரவேற்பை பெறும்.

ரவி பஸ்ரூரின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை செம. படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் மிரட்டலான இசையை கொடுத்து நம்மை சீட்டோடு கட்டிப் போட்டுள்ளார்.

புவன் கவுடாவின் ஒளிப்பதிவில் கோலார் தங்க வயல் காட்சிகள் அருமை. இப்படியும் ஒரு வாழ்க்கையா? என நம்மை வியக்க வைத்துள்ளார்.

மேலும் மும்பை காட்சிகளும் சிறப்பாய் அமைந்துள்ளன.

படத்தை ஒரு கிறிஸ்துமஸ் விருந்தாக கொடுத்துள்ள டைரக்டர் பிரசாந்த் நீல் அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

இந்த படமும் பாகுபலி போல் 2 பாகங்களாக வரும். தற்போது முதல் சாப்டர் மட்டுமே முடிந்துள்ளது.

கே ஜி எஃப் – KGF Kannada God of Films

KGF movie review rating

ரவுடி பேபி ரகளை… மாரி2 விமர்சனம்

ரவுடி பேபி ரகளை… மாரி2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: தனுஷ், கிருஷ்ணா, சாய்பல்லவி, வரலட்சுமி, ரோபோ சங்கர், வினோத், டோமினோ தாமஸ், அறந்தாங்கி நிஷா, வித்யா பிரதீப், வின்சென்ட் அசோகன், சங்கிலி முருகன் மற்றும் பலர்
இயக்கம் – பாலாஜி மோகன்
ஒளிப்பதிவு – ஓம் பிரகாஷ்
இசை – யுவன் சங்கர் ராஜா
எடிட்டர் – பிரசன்னா ஜிகே
தயாரிப்பு – தனுஷ்
பிஆர்ஓ – ரியாஸ் கே அஹ்மத்

கதைக்களம்…

மாரி முதல் பாகத்தில் ஆட்டோ ஓட்டிக் கொண்டும் அராஜகம் செய்துக் கொண்டும் புறா பந்தயத்தில் கலந்துக கொண்டும் அலப்பறை செய்தவர் மாரி.

2ஆம் பாகத்தில் புறா பந்தயம் இல்லை. மற்றபடி அதே அராஜகம், புதிய வில்லன், நியூ ப்ரெண்ட், காதலி, குடும்பம், ஜீனியர் மாரி என கலந்துக் அடித்திருக்கிறார் தனுஷ்.

முதல் பார்ட்டில் வரும் சண்முகராஜன் இறந்துவிடுவார். எனவே அவரின் மகனாக கிருஷ்ணா வருகிறார். மாரியும் கிருஷ்ணாவும் நண்பர்கள்.

மாரியையும் கலையையும் (கிருஷ்ணா) கொலை செய்துவிட்டு ஒட்டுமொத்த ஏரியாவையும் தனது கன்ட்ரோலுக்குக் கொண்டு வர நினைக்கிறது எதிர் அணி.

இதனிடையில் சிறையில் இருக்கும் பீஜா (டோவினோ தாமஸ்) முன் பகையின் காரணமாக மாரியைக் கொல்ல திட்டமிடுகிறான்.

ஒரு சூழ்நிலையில் சென்னையை விட்டு மாரி வெளியேறுகிறார்.

கிட்டதட்ட 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாரி அவதாரம் எடுத்து எதிரிகளை தீர்த்து கட்டுகிறார்.

இடையில் என்ன ஆனது? மாரி எங்கே போனார்? என்பதே கதை.

கேரக்டர்கள்…

தனுஷ் சொன்னதுபோலவே அவருக்கு ஜாலியான கேரக்டர்தான் இந்த மாரி. வழக்கமான ஸ்டைல், கெத்து டயலாக் என வலம் வருகிறார். செஞ்சிருவேன் என்ற டயலாக்கை மாற்றி இந்த படத்தில் உறிச்சிடுவேன் என்கிறார்.

கிருஷ்ணாவின் முறுக்கு மீசை, தாடி, நீண்ட தலை முடி என கெட்டப் அப் அசத்தலாக இருக்கிறது. நடிப்பிலும் குறையில்லை.

இதில் அராத்து ஆனந்தியாக வரும் சாய்பல்லவியுடன் டூயட் பாடுகிறார். ரவுடி பேபி பாடல் இளைஞர்களின் காலர் ட்யூனாக நிச்சயமாக மாறியிருக்கும்.

அராத்து ஆனந்தியாக அதிரடி காட்டியிருக்கிறார் சாய்பல்லவி. ஆட்டோவும் இவரது ஆட்டமும் செம ஸ்பீடு. ஆனால் மேக்கப் அப்பில் இன்னும் கவனம் செலுத்துவது நல்லது.

வரலட்சுமி கேரக்டரில் வலுவில்லை. பயங்கர எதிர்பார்ப்பு இருந்தாலும் டம்மியாக்கிவிட்டார் டைரக்டர்.

தனுஷுக்கு அடியாளாக ரோபோ ஷங்கர் மற்றும் கல்லூரி வினோத். அங்கங்கே சின்ன சின்ன சிரிப்பு வெடிகளை போடுகின்றனர்.

வில்லன் டோவினோ தாமஸ் மலையாள நடிகர். செம ஸ்மார்ட்டா இருக்கிறார். முதலில் கொடூர மேக்அப்பிலும் பின்னர் அரசியல்வாதியாகவும் கவர்கிறார்.

ஆனால் படத்தில் நிறைய பேசிக் கொண்டே இருப்பது போரடிக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

யுவன் இசையில் ஓரிரு பாடல்கள் மட்டுமே கவனம் ஈர்க்கிறது. பின்னணி இசை நன்றாக இருந்தாலும் மாரி பர்ஸ்ட் பார்ட் போல இல்லையே என்பதே பல திசைகளிலும் இருந்தும் குரலாக ஒலிக்கிறது.

ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் தங்களில் பணிகளில் கச்சிதம்.

டைரக்டர் பாலாஜி மோகன் வெறுமனே மாஸ் மட்டும் கொடுக்காமல் குடும்பம், சென்டிமெண்ட் என இரண்டையும் கலந்துக் கொடுத்திருக்கிறார்.

எனவே ஒரு முறை பார்க்கலாம்.

மொத்தத்தில் ரவுடி பேபியின் ரகளை தான் இந்த மாரி 2

Maari2 review rating

First on Net அடங்காத அப்பாவி… அடங்க மறு விமர்சனம்

First on Net அடங்காத அப்பாவி… அடங்க மறு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஜெயம் ரவி, ராஷிகண்ணா, பாபு ஆண்டனி, பொன் வண்ணன், முனிஷ்காந்த் (ராமதாஸ்), சம்பத்ராஜ், அழகம் பெருமாள், மைம் கோபி, பூர்ணா மற்றும் பலர்
இயக்கம் – கார்த்திக் தங்கவேல்
எடிட்டர் – ரூபன்
ஒளிப்பதிவு – சத்யன் சூர்யன்
இசை – சாம் சி.எஸ்,
தயாரிப்பு – சுஜாதா விஜயகுமார் (ஹோம் மூவி மேக்கர்ஸ்)
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

க்ரைம் ப்ரான்ச் எஸ்.ஐ. ஜெயம் ரவி. அழகான குடும்பம், அண்ணன் குழந்தைகள், காதலி, கில்மா என போலீஸாக வாழ்கிறார்.

குற்றவாளிகளை பிடித்து கொடுத்து நேர்மையான போலீஸாக இவர் வாழ விரும்பினாலும் உயர் அதிகாரிகளால் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறார்.

குற்றவாளிகளை கைது செய்ய இவர் நெருங்கும் போது வேறு வழக்கினை இவருக்கு கொடுப்பது வாடிக்கையாகிறது.

அப்படியிருந்தும் ஒரு சூழ்நிலையில் பாலியல் குற்றத்திற்காக பணக்கார முதலாளிகளின் பையன்களை அடித்து துவைத்து கைது செய்து சிறையில் அடைக்கிறார்.

சில நிமிடங்களிலேயே வெளியே வரும் அந்த குற்றவாளிகள் இவரது குடும்பத்தையே கொல்கின்றனர்.

எனவே காவல்துறைக்கும் அந்த குற்றவாளிகளுக்கும் ஒரு சவால் விடுகிறார்.

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், நான் அவர்களின் தந்தைகளை வைத்தே அந்த குற்றவாளிகளை கொல்கிறேன் என சேலஞ்ச் செய்கிறார்.

அதன் பின்னர் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஜெயம் ரவியின் போலீஸ் கேரக்டர்களில் மற்றொரு ஸ்டார் இந்த படம். இதில் போலீஸ் உடையில் வராமல் தன் பங்கை நிறுத்தி நிதானமாக செய்திருக்கிறார்.

அழகம் பெருமாள், முனிஷ்காந்த் ஆகியோர் பாத்திரங்கள் நிறைவை தருகின்றன.

வழக்கமாக நாயகிகள் வரும் சில காட்சிகளில் வந்து செல்கிறார் ராஷி கண்ணா. ஒரு டூயட்டும் உண்டு.

நிதானமாக ஸ்கெட்ச் போடும் வில்லன்கள் 4 பேர். அவர்களுக்கு விலை போகும் போலீஸ் அதிகாரிகள் மைம் கோபி மற்றும் சம்பத் ஆகியோரும் தங்கள் முத்திரையை பதித்து உள்ளனர்.

பொன் வண்ணன் மற்றும் சுபு பஞ்சு அருணாச்சலம் ஆகியோரும் உண்டு. ஆனால் அவர்களது கேரக்டர்களில் வலுவில்லை.

பூர்ணா வக்கீலாக வருகிறார். ஆனால் ஏன் வருகிறார்? என்ன செய்தார்? என்பதே தெரியவில்லை. 2 டயலாக்குகளை ஜெயம் ரவிக்கு ஆதரவாக பேசிவிட்டு செல்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சாயாலி மற்றும் பச்சை துரோகங்கள் பாடல் வரிகள் நிச்சயம் ரசிகர்களை கவரும். படத்தை சீரியஸாக கொண்டு சென்றதால் டூயட்டில் சரியான கெமிஸ்ட்ரி கூட ஒர்க் அவுட ஆகவில்லை.

பாடல்களை விட பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. அதுவும் டான்…டண்டன்ன… என்ற தீம் மியூசிக் படம் முழுவதும் வந்து ஹைப் ஏற்றுகிறது.

ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் மற்றும் எடிட்டர் ரூபன் இருவரும் தங்கள் பணிகளில் சிறப்பான காட்சிகளை கொடுத்துள்ளனர்.

ஆனால் பார்த்து பழகிப்போன பழிவாங்கல் கதையை நீளமாக சொல்லியிருப்பதால் 2ஆம் பாதியில் சோர்வை தருகிறது.

கார்த்திக் தங்கவேல் என்பவர் இயக்கியிருக்கிறார்.

ஒரு காட்சியில் நான் கொல்லமாட்டேன் ஆனால் குற்றவாளிகளின் தந்தையே அவர்களை கொல்வார்கள் என ஜெயம் ரவி பேசும்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறுகிறது.

க்ரைம் ப்ரான்ச் எஸ்.ஐ. என்பதால் ஜெயம் ரவியை தாடியுடன் அலைய விட்டுள்ளார்கள். அவரும் மிக சோகமாக முதல் பாதியிலும் வருவது பாவமாக இருக்கிறது.

பொதுமக்களின் வேலைக்காரன் தான் இந்த போலீஸ் என்பதை ஆணித்தரமாக சொன்ன ஜெயம் ரவிக்கும் டைரக்டர் கார்த்திக்கும் வாழ்த்துக்கள்.

ஜெயம் ரவி போலீஸ் விசாரணையில் இருக்கும்போது…

என் கையில் 2 எறும்புகள் இருக்கிறது. அது உயிரோட இருக்கா? இறந்துட்டா கேட்டா? நீ என்ன சொல்லுவ?

இறந்துட்டு சொன்னா அதை நான் உயிரோட காட்டுவேன். உயிரோடு இருக்கு சொன்னா நான் நசுக்கி சாகடிச்சிட்டு காட்டுவேன் என்ற வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

பாலியல் குற்றங்களை கண்டு அடங்கமறுக்கும் ஒருவனின் கதை தான் என்றாலும் அதை தனிப்பட்ட பழிவாங்கல் கதையாக சொல்லாமல் இருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.

அடங்கமறு… அடங்காத அப்பாவி

சிரிக்க சிரிக்க சிறப்பு … சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்

சிரிக்க சிரிக்க சிறப்பு … சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விஷ்ணு விஷால், ரெஜினா, கருணாகரன், யோகி பாபு, ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான், ஓவியா, சிங்கமுத்து, சௌந்தர் ராஜா, வடிவுக்கரசி, மாரிமுத்து, லிவிங்ஸ்டன் மற்றும் பலர்
இயக்கம் – செல்ல அய்யாவு
ஒளிப்பதிவு – ஜே. லட்சுமண்
இசை – லியோன் ஜேம்ஸ்
எடிட்டர் – ரூபன்
தயாரிப்பு – விஷ்ணு விஷால்
பிஆர்ஓ – நிகில் முருகன்

கதைக்களம்…

வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற காமெடி ஹிட் படத்தை தொடர்ந்து சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தையும் தயாரித்து நடித்துள்ளார் விஷ்ணு விஷால்.

அந்த சிரிப்பு கெமிஸ்ட்ரி இதிலும் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

வடிவுக்கரசியின் பேரன் விஷ்ணு விஷால். தன் பேரன் ஒரு போலீஸ் என்றாலும் அவன் ஒரு வீரனாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்.

ஆனால் விஷ்ணுவோ சரியான பயந்தாங்கொள்ளி. ரவுடிகளை பார்த்தால் கையை கட்டிக் கொண்டு இருப்பாரே தவித கைது செய்ய மாட்டார்.

உயர் அதிகாரிகளுக்கு டிபன், சாப்பாடு வாங்கி கொடுப்பது அந்த கேப்பில் தான் விரும்பும் ஆபாயிலை ருசித்து பார்ப்பது இதுதான் இவரது வேலை.

ஒரு முறை போலீசாரால் தேடப்படும் (மாறுவேடத்தில் வந்திருக்கும்) ரவுடியை ஆபாயில் பிரச்சினைக்காக அறைந்து அவரை சிறையில் அடைத்து விடுகிறார்.

இதனால் ஹீரோ சந்திக்கும் பிரச்சினைகளை காமெடியாக சொல்லி படத்தை நிறைவு செய்திருக்கிறார் டைரக்டர் செல்லா அய்யாவு.

கேரக்டர்கள்…

ராட்சசன் படத்தில் கம்பீரமாக மிரட்டிய விஷ்ணு விஷால் இதில் காமெடியில் சிக்ஸர் அடித்திருக்கிறார்.

இவருடன் கருணாகரன், யோகிபாபு, ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், சிங்கமுத்து, சௌந்தர் ராஜா என அனைவரும் நம்மை சிரிக்க வைத்தே நம்மை ஒரு வழியாக்கிவிடுவார்கள்.

யோகிபாபு தக்காளி சாதம் வாங்கி கொடுக்கும் அந்த சீன் முதலே பட்டைய கிளப்புகிறார். இவருக்கு போட்டியாக ஆனந்த் ராஜ், சிங்க முத்து கலக்கியிருக்கிறார்கள்.

இறுதியாக பாம்பே டான் பாட்ஷா ரஜினியுடன் படத்தை முடித்து ரஜினி ரசிகர்களையும் சந்தோஷப்படுத்திவிட்டார்கள்.

காமெடிக்கு இந்த கூட்டிணி ஃபுல் கியாரண்டி என்றால் கவர்ச்சிக்கு நாங்க இருக்கோம்ல என ரெஜினா, ஓவியா இருவரும் ஸ்கோர் செய்கிறார்கள்.

நமக்கு இப்படியொரு அழகான டீச்சர் இல்லையே என ஏங்க வைக்கிறார் ரெஜினா.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். வெறும் குத்தாட்டம் என்று நினைத்தாலும் சில காட்சிகளிலும் வந்து ரசிகர்களை அதே பிக்பாஸ் மேஜிக் உடன் ஈர்க்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

லியோன் ஜேம்ஸ் இசையில் 3 பாடல்கள் நம் கவனம் ஈர்க்கின்றன. ஜே. லட்சுமண் கச்சிதமான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்.

வாழ்க்கை, வேலை ரொம்ப போரடிக்குது. ஜாலியாக ஒரு படம் பார்க்கனும் என நீங்கள் நினைத்தால் இந்த சிலுக்குவார்பட்டி சிங்கத்தை நிச்சயம் சிரித்து சிரித்து ரசிக்கலாம் என கியாரண்டி தந்திருக்கிறார் டைரக்டர் செல்ல அய்யாவு.

சிலுக்குவார்பட்டி சிங்கம் … சிரிக்க சிரிக்க சிறப்பு…

More Articles
Follows