தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : ஆர்யா, கேத்ரீன் தெரசா, தீப்ராஜ், சூப்பர் சுப்பராயன், ஆடுகளம் முருகதாஸ், ஒய்ஜி மகேந்திரன், மதுவந்தி அருண் மற்றும் பலர்.
இயக்கம் : ராகவா
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவாளர் : எஸ் ஆர் சதீஷ்
எடிட்டர்: தேவா
பி.ஆர்.ஓ.: மௌனம் ரவி
தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சௌத்ரி
கதைக்களம்…
கடம்பவனம் என்ற ஒரு வனப்பகுதி. அரசாங்கத்தையும நம்பாமல், அந்த வனத்தையே நம்பி வாழும் மக்கள் ஒரு பக்கம்.
வனத்தை அழித்து வளமாக வாழ நினைக்கும் கார்ப்பேரேட் நிறுவன அதிகாரிகள் ஒரு பக்கம்.
காட்டு வாழ் மக்களுக்கும் இந்த கார்ப்பரேட்டுக்கும் நடக்கும் யுத்தத்தில் வென்றது யார்? எப்படி வென்றார்கள்? என்பதே இந்த கடம்பன்.
கதாபாத்திரங்கள்…
அட சூப்பர்யா இந்த ஆர்யா.. என்று ஆண்களே ஆச்சரியப்படுமளவிற்கு கட்டுடல் காட்டி அசத்துகிறார் கடம்பன்.
உடலுக்கு ஏற்ற போல ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்தி ரசிகர்களை வியக்க வைக்கிறார். அவரின் மெனக்கெடல் நிச்சயம் வீண் போகவில்லை. சுருக்கமாக சொன்னால் ஹார்ட் ஒர்க் ஆர்யாவுக்கு ஹாட்ஸ் ஆஃப்.
செழிப்பான வனப்பகுதியில் வாழும் கேத்ரீன் தெரசாவும் செழிப்பாகவே இருக்கிறார். கதாநாயகி என்றில்லாமல் கதையின் நாயகியாக தெரிகிறார்.
இவரின் அண்ணனாக வருபவரும் தன் நடிப்பை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஆடுகளம் முருதாஸ் தன் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்.
தொழில் அதிபராக வரும் தீப் ராஜ்வும் தன் பங்கை நிறைவாக செய்துள்ளார்.
இவர்களுடன் ஒய்.ஜி.மகேந்திரன், அவரது மகள் மதுவந்தி ஆகியோர் வில்லனோடு இணைந்து தங்கள் கேரக்டர்களை வித்தியாசப்படுத்தி இருக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
இளையராஜாவுக்கு அடுத்து பின்னணி இசையில் நான்தான் என சொல்லாமல் நிரூபித்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
ஒத்த பார்வையில், உச்சிமலை அழகு ஆகிய பாடல்களும் கேட்கும் ரகமே.
நாமும் நாட்டை விட்டு காட்டில் வசிக்கலாமே என ஏங்கும் அளவுக்கு கேமரா விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்ஆர் சதீஷ்குமார்.
கிட்டத்தட்ட 70 யானைகள் வரும் காட்சி நிச்சயம் ரசிகர்களை பரவசப்படுத்தும்.
ஒரு அழகான தாத்தா பேரன் உறவை சொன்ன மஞ்சப்பை இயக்குனர் ராகவா எடுத்த படமா? இது என இரண்டாவது படைப்பை நன்றாக கொடுத்துள்ளார்.
நாட்டை நம்பி காடு இல்லை. ஆனால் காடு இல்லையேல் நாடே இல்லை. அதில் உள்ள விலங்குகளை நாம் ZOO வில் மட்டுமே பார்த்து மகிழ்கிறோம்.
அவற்றை நாம் தொந்தரவு செய்யாதவரை நமக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை.
தேன் கூடு, மூங்கில் காடு என அனைத்தையும் கண்முன் வந்து நிறுத்தியிருக்கிறார் ராகவா.
தமிழ் சினிமாவில் இதுபோன்ற கதைகள் அரிதாகவே வரும். எனவே நிச்சயம் பார்த்து ரசிக்கலாம்.
கடம்பன்… கைவிடமாட்டான்