தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
உணவு பாதுகாப்பு அதிகாரி சித்தார்த். நேர்மையின் உச்சம். கலப்படம் இல்லாத உணவை தருவதையே கனவாக கொண்டிருப்பவர்.
ஸ்மெல்லிங் சென்ஸ் அதாவது முகரும் உணர்வு இல்லாதவர் கேத்ரின் தெரசா. இருவரும் காதலிக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் சித்தார்த்தின் அதிரடி நடவடிக்கையால் பல தொழிலதிபர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆயில் கலப்படம், பால் கலப்படம், டீக்கடை ஓனர், தரமற்ற குடீநீர் வழங்குபவர் என ஒவ்வொருவரையும் பிரித்து மேய்கிறார்.
பாதிக்கப்பட்ட முதலாளிகள் சித்தார்த்தை தீர்த்துக் கட்ட திட்டம் போடுகின்றனர்.
அதன்பின்னர் என்ன ஆனது? நேர்மையாக இருந்தாரா? கேத்ரீனை திருமணம் செய்தாரா?
உருவமே இல்லாமல் வந்து செல்லும் அந்த அருவம் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
நேர்மையாக இருப்பவன். எப்போதும் ஒரு கவுரத்தோடு இருப்பான். என்பதற்கேற்ப மிலிட்டரி அதிகாரி போல மிடுக்காக வருகிறார் சித்தார்த்.
உணவு பாதுகாப்புக்காக இவர் நடவடிக்கைகள் எடுக்கும்போது அதிரடி. ஆக்சனில் வெளுத்துக் கட்டியிருக்கிறார்.
நிஜமாகவே ஒரு வித்தியாசமான கேரக்டரை செலக்ட் செய்துள்ளார் கேத்ரின் தெரசா. கயிறு கட்டி இவர் போடும் பைட் செம. பின்னணி இசையும் செம.
கிளாமர் இல்லாமல் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார் நாயகி.
மொக்க காமெடி செய்து வெறுப்பேத்தியிருக்கிறார் சதீஷ். நாயகியின் அப்பாவாக ஆடுகளம் நரேன்.
மிரட்டல் வில்லன்களாக கபீர் துகான் சிங், ஸ்டண்ட் சில்வா, மதுசூதனன் ராவ், போஸ்டர் நந்தா என அனைவரும் கச்சிதம்.
தமன் இசையில் பாடல்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை. பின்னணி இசை ஓகே. சில காட்சிகளில் இரைச்சலாக உள்ளது.
மேலும் இசைக்கு ஏற்ப காட்சிகள் இல்லை. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு அனைத்தும் காட்சிகளும் கலர்புல்லாக உள்ளது.
நாம் அன்றாடும் சாப்பிடும் உணவுப் பொருட்களில் நடக்கும் ஒவ்வொரு முறைகேடுகளையும் இன்ச் பை இன்சை அலசியிருக்கிறார். அதற்காகவே இயக்குனரை சூப்பராக பாராட்டலாம்.
பால் மற்றும் பிரட் வகைகள் கெட்டுப் போகாமல் இருக்க என்ன என்ன? சேர்க்கின்றனர். இதனால் சிறுமிகள் சீக்கிரம் வயசுக்கு வருவதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
கேன் வாட்டர் சுத்தம் என நினைத்தால் அதிலும் இத்தனை அசுத்தமா? என நமக்கே பயத்தை வரவைத்துள்ளார் இயக்குனர் சாய் சேகர்.
என்னதான் ஆயிரம் விழிப்புணர்வு வாட்ஸ் அப் மேசேஜ் வந்தாலும் எல்லாரும் பார்வேட் பன்றாங்க. ஆனால் யாரும் பாலோ பண்றது இல்லை என்பதையும் நாசூக்காக சொல்லியிருக்கிறார்.
உலகத்திலேயே சுத்தமான உணவு தாய்ப்பால்தான். ஆனால் அந்த தாய் உண்னும் உணவில் இத்தனை கலப்படம் இருந்தால் அவள் கொடுக்கும் பால் எப்படி சுத்தமாக இருக்கும்? என்பதையும் ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார். இதற்காக சாய் சேகருக்கு சபாஷ் போடலாம்.
உணவு பாதுகாப்பு அதிகாரி என்ற ஒரு லைனை வைத்து அழகாக முழு படத்தையும் காட்டியிருக்கலாம். அதை விடுத்து பேய், பழிவாங்கல் என கதையை கொண்டு சென்று நம்மை நொகடித்துவிட்டார்.
Aruvam review rating