தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
தீபாவளி அன்று அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு வருகிறது ஒரு குடும்பம். அப்போது அந்த குடும்பத்திற்கே விபத்து ஏற்பட குடும்பத்தலைவி மட்டும் மரணிக்கிறார்.. இதனால் உடலை விமானத்தில் கொண்டு செல்வதில் பிரச்சனை ஏற்படுகிறது.. இந்த பிரச்சனைக்கு தமிழன் உதவும் கதையே அயோத்தி.
கதைக்களம்…
தீபாவளி அன்று அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு வருகிறது ஒரு குடும்பம். மிகவும் கண்டிப்பாக குடும்பத் தலைவர் அவர்.. மனைவி மற்றும் பிள்ளைகளை கடும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்..
இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் காரில் பயணிக்கும் போது ஒரு விபத்து ஏற்பட அந்த குடும்பத் தலைவி இறந்து விடுகிறார்.
இந்த விபத்திற்கு சசிக்குமாரின் நண்பரும் ஒரு காரணமாக அமைகிறார்.. எனவே நண்பனுக்கு உதவ செல்கிறார் சசிகுமார்.
விபத்தில் இறந்ததால் உடலை போஸ்ட்மாடம் செய்ய சொல்கின்றனர் மருத்துவர்கள்.. ஆனால் தங்கள் குடும்ப முறைப்படி போஸ்ட்மாடம் செய்யக்கூடாது என்கிறார் குடும்பத் தலைவன் யஷ்பால் ஷர்மா.
ஆனால் அவரது மகளோ என் அம்மாவின் உடலை அயோத்திக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிறார்..இது ஒரு பக்கம் இருக்க ஹிந்தி தெரியாமல் உதவ முடியாமல் தவிக்கிறார் சசிகுமார்..
அந்த குடும்பத்திற்கு எப்படி உதவினார்? விடுமுறை நாளான தீபாவளி நாளில் இது எல்லாம் எப்படி சாத்தியம்.?
இறுதியில் என்ன ஆனது.? என்ன என்ன சட்ட சிக்கல்கள்.? நடைமுறை பிரச்சனைகள் என்ன.? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்….
சசிகுமார் சினிமா கேரியரில் இது முக்கியமான படம்.. ஒருவருக்கு உதவ வேண்டும் என நினைத்து விட்டால் எப்படி வேண்டுமானாலும் உதவலாம் என்பதை தன் கேரக்டர் மூலம் நிரூபித்திருக்கிறார்.
இவரின் நண்பராக வரும் புகழும் இந்த படத்தில் எங்கும் காமெடி செய்து விடாமல் கதையுடன் பயணிக்கிறார்.. விமான நிலை அதிகாரிகள்.. விமான பயணிகள்.. கல்லூரி வினோத்.. போஸ் வெங்கட் என அனைவரும் கச்சிதம்..
நாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி.. சிறப்பு.. இவரது தம்பி கேரக்டர்.. அம்மா கேரக்டர் என் அனைவருமே நிச்சயமாக நம்மை ஒரு காட்சியிலாவது அழ வைத்து விடுவார்கள்..
பாலிவுட் நடிகர் யஷ்பால் ஷர்மா தான் இந்த படத்தின் கிட்டத்தட்ட வில்லன் கேரக்டர்.. முதன்முறையாக ஒரு வில்லன் கேரக்டரே நம்மை அழ வைத்து விட்டது.. அப்படி ஒரு அருமையான நடிப்பை கொடுத்துள்ளார். மனைவி இறந்தும் அழாமல் இருப்பதும்.. இறுதியாக உடைந்து போவதும் என தன் நடிப்பில் பல பரிணாமங்களை காட்டி இருக்கிறார் யஷ்பால் சர்மா..
டெக்னீஷியன்கள்….
மகேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம்.. அயோத்தி காட்சிகளும் ராமேஸ்வரம் காட்சிகளும் அருமை..
படத்தொகுப்பில் குறை உள்ளது.. சசிகுமாருக்கு வைக்கப்பட்ட படத்தின் ஆரம்ப சண்டை காட்சி தேவை இல்லை.. அதுபோல போலீஸ் ஸ்டேஷனில் வரும் பாடல் காட்சியும் ஏதோ திணிக்கப்பட்டதாக தெரிகிறது..
ரகுநந்தன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நம்மை கலங்க வைக்கும்.. ஒரு ஹிந்தி நடிகருக்கு தமிழில் பாடல் வரிகளை கொடுத்து அவரது உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கும் விதம் அருமை..
இயக்குனர் மந்திரமூர்த்திக்கு இதுதான் முதல் படம் என்று அவரே சொன்னாலும் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.. அப்படி ஒரு நேர்த்தியான படத்தை கொடுத்திருக்கிறார். பல காட்சிகளில் நீங்கள் கண்ணீர் விட்டு அழுவது நிச்சயம்..
படத்தின் வசனங்களும் கைதட்டல்களை பெறுகின்றன.. ரேஷன் கார்டில் இன்ஷியல் மாற்றுவதற்கே ஒரு மாதம் ஆகும்.. 10 ஆதாரங்களை ஒரே நாளில் எப்படி கொடுக்க முடியும் என சசிகுமார் பேசும் வசனங்கள் சூப்பர்..
இறுதியாக சசிகுமாரின் பெயரை கேட்கும் போது அவர் சொல்லும் அந்த காட்சி அருமை.. அதுபோல மற்ற விமானி பயணிகளிடம் சசிகுமார் கெஞ்சும் காட்சிகளும்.. அந்த முதியவர்களும் மனிதநேயத்தை காட்டுகின்றனர்..
அழ வைத்த அழகோவியம்.. அயோத்தி
Ayoththi movie review and rating in tamil