தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
ஒரு கொலை கும்பலிடம் இருந்து தன் குடும்பத்தை காப்பாற்ற ஒரு காமன் மேன் போராடும் வாழ்க்கையே ஒன்லைன்..
கதைக்களம்…
சினிமா துறையில் பணிபுரியும் சவுண்ட் இன்ஜினியர் சசிகுமார். இவருக்கு ஒரு அழகான குடும்பம். அம்மா அப்பா தம்பி மாமா தங்கை மனைவி மகள் என குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
ஒருநாள் மிகப்பெரிய தொழில் அதிபரை கொல்ல திட்டமிடுகிறது ஒரு கும்பல். இதற்காக கோடிக்கணக்கில் அவர்களுக்கு பணம் பேரம் பேசப்படுகிறது.
அதிகாலை நேரத்தில் அந்த தொழிலதிபர் வாக்கிங் போகும் வேளையில் அவரை கொல்ல துரத்துகின்றனர். அப்போது சசிக்குமாரின் சகோதரர் அவரை காப்பாற்றி விடுகிறார். இதனால் அவரது சகோதரரை அந்த கும்பல் கொன்று விடுகிறது.
இதனால் பழிவாங்க அந்த கும்பலை கொன்றுவிடுகிறார் சசிகுமார். இதனால் கும்பலின் தலைவனுக்கு பணம் வரவில்லை.
“நாங்கள் கொல்ல திட்டமிட்டிருந்த ஒரு நபரை உங்கள் சகோதரன் காப்பாற்றி விட்டான்.. எனவே நீங்கள் தான் அவரை கொல்ல வேண்டும்.. இல்லை என்றால் உன் குடும்பத்தை கொன்று விடுவோம் என மிரட்டுகின்றனர்.
சசிகுமார் அந்த தொழில் அதிபரை கொன்றாரா.? தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றினார்? அந்த கும்பலின் தலைவன் யார்? சசிகுமார் அவர்களை கண்டுபிடித்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.
கேரக்டர்கள்…
சசிகுமார் என்றால் கிராமத்துக் கதையே பெரும்பாலும் இருக்கும். இதில் சிட்டி சப்ஜெக்ட்டை தொட்டுள்ளார். அதற்காக சசியை பாராட்டலாம்.
ஆனால் படம் முழுக்க ரத்தம் தெறிப்பதால் சசிக்குமாரின் முகத்தையும் முழுதாக காண முடியவில்லை. ஆல்ரெடி அவர் முகத்தை மறைத்து தாடி வேற இருக்குமே..
நாயகியாக ஹரிப்ரியா நடித்துள்ளார் இடைவேளைக்கு முன் அவர் படத்தில் இருப்பதே தெரியவில்லை. இடைவேளைக்குப் பிறகுதான் சில காட்சிகளில் வருகிறார். அழகு நிறைந்த இல்லத்தரசியாக வருகிறார்.
வில்லனாக விக்ராந்த் நடித்துள்ளார் அவருக்கு யார் டப்பிங் குரல் கொடுத்தார்களோ? ஆனால் அது நன்றாகவே உள்ளது.
டெக்னீஷியன்கள்…
‘கழுகு’ படத்தை இயக்கிய சத்யசிவா இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை ரத்தம் வாடையே.. ஒரு கட்டத்தில் ரத்தம் கேமராவை தாண்டியும் நம் முகத்தில் தெறிப்பது போல உள்ளது.
ஒரு சாதாரண மனிதன் திடீரென இத்தனை கொலைகளை செய்யும் கொலைகாரனாக மாறுவது சரியாக தோன்றவில்லை. அதற்கான காரணத்தை ஒரு காட்சியில் நீதிமன்றத்தில் காட்டி இருந்தாலும் அது கதைக்கு போதவில்லை.
சசிகுமாரின் குடும்பத்தின் பாசத்தை ஒரு பாடல் வைத்தாவது காட்டி இருக்கலாம். பாடலும் அதற்கான காட்சிகளும் இல்லாததால் குடும்ப செண்டிமெண்டில் நம்மால் ஒன்ற முடியவில்லை.
ஜிப்ரான் பின்னணி இசையில் தெறிக்கவிட்டுள்ளார். கொலைக் காட்சிகளில் சதக் சதக் என்ற சத்தமே நம்மை நிலைகுலையச் செய்கிறது.
படத்தின் கிளைமாக்ஸில் தான் ஹீரோவும் வில்லனும் சந்திக்கிறார்கள். அப்படியான சூழ்நிலையில் அனல் தெறிக்கும் சண்டைக் காட்சி வைத்திருக்கலாம்.? ஒருவேளை எடிட்டர் கட் செய்து விட்டாரோ.?
ஃபைட் இல்லாமல் வில்லனின் கதை முடிவது பெரும் ஏமாற்றமே..
ஆக ஒரு காமன் மேன் இந்த படத்தை பார்க்க சென்றால் ரத்தக் குளியல் தான்.
Naan Mirugamai Maara movie review and rating in tamil