தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, சண்முக சுந்தரம் மற்றும் பலர்.
இசை : சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு : யுவா
இயக்கம் : தரணிதரன்
பிஆர்ஓ : நிகில் முருகன்
தயாரிப்பாளர் : எம்.எஸ். சரவணன்
கதைக்களம்…
பிந்துமாதவியை மணக்க சிபிராஜ் மற்றும் கருணாகரன் போட்டி போடுகின்றனர். எனவே பிந்துவின் தந்தை சண்முக சுந்தரம் பேய் பங்களாவில் ஒரு வாரம் தங்க உத்தரவு இடுகிறார்.
அப்போதுதான் அங்குள்ள ஜாக்சன் என்ற பேய்க்கும் துரை என்ற பேய்க்கும் நடக்கும் பனிப்போர் இவர்களுக்கு தெரிய வருகிறது.
அந்த போராட்டம் இந்தியாவின் சுதந்திர காலப் போராட்டம் என்பதால் பேய்களுடன் இணைந்து இவர்கள் இருவரும் போராட இறுதியில் என்ன ஆனது என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
கதாபாத்திரங்கள்…
பின்னணி இசையோடு சத்யராஜின் அறிமுக காட்சி செம. தன் மகள் தன் நாட்டுக்காக உயிரை விடுவதும், அதன்பின் தானும் உயிரை விடுவதும் ஓகே. இரண்டு தோற்றத்திலும் மிகப் பொருத்தமாக இருக்கிறார்.
ஆனால் அதன்பின் வரும் காட்சிகள் எல்லாம் என்ன சொல்வதன்றே தெரியவில்லை. பேயாக வந்து சாவதும் பின் பேயாக வருவதும் மீண்டும் பேயாக… படிக்கிற உங்களுக்கு கடுப்பா இருக்கா? எங்களுக்கும்தான்.
இவருடன் ஜாக்சன் பேய், மனைவி பேய், குழந்தை பேய் மற்றும் மொட்டை ராஜேந்திரன் பேய் என பேய் பேய்யாக வரிசை கட்டி நிற்கும்போது சிரிக்கவும் முடியவில்லை. பயமும் வரவில்லை.
சிபிராஜின் இன்ட்ரோ ஸ்மோக் ஸ்பெக்ட் எல்லாம் ஓகேதான். ஆனால் காட்சிகளில்தான் வலுவில்லை. கூளிங் கிளாஸ் குணாவை கூட இதில் காணல. ட்ரை பன்னுங்க ப்ரோ.
கருணாகரன் சில நேரம் காமெடி செய்து மற்ற நேரங்களில் அவரே டயர்ட் ஆகிவிடுகிறார்.
பிந்து மாதவிக்கு ஏன் இந்த நிலைமை? படத்தில் சில காட்சிகளில் அவரை பார்த்த ஞாபகம் மட்டும் இருக்கிறது. மகாநதி சங்கரும் இருக்கிறார்.
யோகிபாபுக்கு நல்ல கை தட்டல் இருக்கிறது. ஆனால் அவர் வரும் காட்சிகள்தான் குறைவு.
பாடல்கள் கைகொடுக்கவில்லை. ஆனால் படத்தை பின்னணி இசை மட்டும் தாங்கி நிற்கிறது. ஆனால் பேய் பயம் நமக்கு வரவில்லை என்பதால் அதுவும் சப்பென்று ஆகிவிடுகிறது.
மற்றவர்களை விட ஒளிப்பதிவாளர் யுவாவிற்கும் ஆர்ட் டைரக்டர் டி.என். கபிலனுக்கும் நிறைய வேலை இருந்துள்ளது.
பேய் படம் என்பதால் முழுக்க இருட்டிலேயே எடுத்துள்ளனர். ஒளிப்பதிவாளருக்கு வேலை இருந்த அளவுக்கு ஒளிக்கு வேலையில்லை.
படத்தின் ப்ளஸ்…
- மோட்டார் பைக் பாடல் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.
- கலை கபிலனும் ஒளிப்பதிவாளர் யுவாவும் படத்தை தாங்கி நிறுத்துகின்றனர்.
- சுதந்திர போராட்டக் காலத்தில் உயிர் இழந்தவர்கள் தங்கள் சுதந்திர நாட்டை காண வேண்டும் என்பதற்காக பேய்யாக பங்களாவில் வாழ்வது.
படத்தின் மைனஸ்…
- ப்ளாஷ்பேக்கில் சத்யராஜ் மற்றும் அவரது மகள் இலக்கிய தமிழில் பேசுகின்றனர். பின்னர் நவீன தமிழ் மீண்டும் அடுத்த நொடியே இலக்கிய தமிழ் பேசுகின்றனர்.
- பின்னர் நவீன காலத்தில் சிபிராஜ் பேசும்போது கொச்சை தமிழ் என்பது என்ன நியாயமோ..?
- பேய்யுடன் மனிதன் போராடும் படங்களை பார்த்திருப்போம். ஆனால் இதில் ஒரு மனிதன் மற்றும் பேய்கள் சேர்ந்து வெள்ளைக்கார பேயுடன் போராடுவது எல்லாம் ரொம்பவே டூ மச்.
- உடம்பு மற்றும் முகம் முழுவதும் வெள்ளை சாயம் பூசி கண்களில் மட்டும் கறுப்பு மை பூசி பயமுறுத்துவது எல்லாம் ஓவர் பழசு.
சத்யராஜ் போன்ற அனுபவமிக்க கலைஞர்களை கொண்டு இன்னும் நன்றாக கொடுக்க முயற்சித்திருக்கலாம் இயக்குனர் தரணிதரன்.
பர்மா படத்தில் பட்டைய கிளப்பியவர். இதில் சறுக்கியிருக்கிறார்.
மொத்தத்தில் ஜாக்சன் துரை… பயமில்லாத ஜவ்வு துரை