தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : யுவன் (கருப்பு), அணு கிருஷ்ணா (இளமி), அகில் (சடை புலி) கிஷோர் (படை தளபதி) ரவி மரியா (வீரைய்யன்), விக்கிரமாதித்தன், தவசி, வெள்ளையாண்டி ஐயா மற்றும் பலர்.
இயக்கம் : ஜே. ஜூலியன் பிரகாஷ்
இசை : ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவாளர் : யுகா
கலை : ஜான்பிரிட்டோ
பி.ஆர்.ஓ.: மௌனம் ரவி
தயாரிப்பாளர் : ஜோ புரொடக்ஷன்ஸ்
கதைக்களம்…
1715 ஆம் ஆண்டில் இக்கதை நடக்கிறது. அதாவது 300 வருடங்களுக்கு முன்பு உள்ள கதை.
இரு ஊர்களுக்கு உள்ள இடையே கோயில் பிரச்சினை இருந்து வருகிறது.
ஒரு சூழ்நிலையில் தன்னுடைய காளையை அடக்குபவருக்கு தன் மகள் இளமியை கட்டித் தருவதாக வாக்குறுதி கொடுக்கிறார் ரவிமரியா.
ஆனால் இவரது மகளோ அடுத்த ஊர் கருப்பு யுவனை காதலிக்கிறார்.
அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதை யாருமே கற்பனை செய்யாத படி தந்திருக்கிறார் இயக்குனர்.
கதாபாத்திரங்கள்…
யுவன் (கருப்பு), அணு கிருஷ்ணா (இளமி), அகில் (சடை புலி) கிஷோர் (படை தளபதி) ரவி மரியா (வீரைய்யன்), கருப்பு நண்பர் ஆனந்த் சுந்தர்ராஜன் என ஒருவரையும் விட முடியாது.
அனைவரும் அந்தந்த பாத்திரங்களில் வாழ்ந்துள்ளனர்.
சாட்டையில் பார்த்த யுவனா இது? என வியக்க வைக்கிறார்.
நாயகி இதற்கு முன்பு கத்தி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்திருந்தாலும், இப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை கொடுக்கும்.
வில்லனாக வரும் கல்லூரி படப்புகழ் அகில், நல்ல முறுக்குடன் கம்பீரமாக இருக்கிறார்.
யுவனின் நண்பராக வரும் ஆனந்த் சுந்தர்ராஜனுக்கு வாய்ப்புகள் காத்திருக்கும்.
கிஷோர் கேரக்டர் படைப்பு நன்றாக இருந்தாலும், அதில் வலுவில்லாமல் சட்டென்று முடித்துவிட்டார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
இசையமைப்பாளர், கலை இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் என எவரையும் குறை சொல்ல முடியாதபடி வேலை வாங்கியிருக்கிறார் டைரக்டர்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில்… நான் என்ன செய்வேன், அடி ஆத்தாடி, தவில் எடுத்து அடிடா என பாடல்கள் ரசிகர்களுக்கு கிராமத்து வாசனையை கொடுக்கும்.
ஜான் பிரிட்டோ கலையில் ஒவ்வொன்றும் கக்சிதம். அவர்கள் தேர்ந்தெடுத்த லொக்கேஷன் முதல் ஆடைகள், வீடுகள், கட்டில், பாத்திரம் உடை என சொல்லிக் கொண்டே போகலாம்.
இயக்குனர் பற்றி…
இதுபோன்ற கதைக்களம் வந்திருந்தாலும், எந்தவிதமான பிரம்மாண்டமும் இல்லாமல், மக்களின் படு யதார்த்த வாழ்க்கையில் நம்மை இணைக்கிறார் இயக்குனர்.
காளை அடக்கும் காட்சிகள் மற்றும் க்ளைமாக்ஸ் கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் கவனம் தேவை.
பட க்ளைமாக்ஸில் ஹீரோ அல்லது ஹீரோயின் ஜெயிப்பார். ஆனால் இதை யூகிக்க முடியாத படி கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் இளமி.. சுவை குறையாத இனிய விருந்து