ரஜினி செஞ்சிட்டார்; ஆனால் விஜய்க்கு முன்பே முந்திக் கொண்ட யோகி பாபு.

ரஜினி செஞ்சிட்டார்; ஆனால் விஜய்க்கு முன்பே முந்திக் கொண்ட யோகி பாபு.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babuசர்கார் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியை (2.0 படம் 3டியில் உருவானது) போல விஜய்யும் ஒரு 3டி படத்தில் நடிக்க கேட்டுக் கொண்டார் சன் டிவி கலாநிதி மாறன்.

விஜய் எப்போ 3டியில் நடிப்பார் என தெரியல. ஆனால் காமெடி நடிகரான யோகிபாபு முந்திக் கொண்டுள்ளார்.

விஜய்யுடன் ‘சர்கார்’ மற்றும் அஜித்துடன் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் நடித்து வரும் இவர், விரைவில் கூர்கா படத்தில் ஹீரோ போன்ற முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

‘டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன், இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில், 3டி-யில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கிறாராம் யோகி பாபு. இதில், வேதாளமாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை, ‘மஞ்சப்பை’ படத்தை இயக்கிய ராகவன் இயக்குகிறார்.

நம் வீட்டு பெண்களை சிறந்த பெண்ணாக மாற்ற வரும் *பட்டறை*

நம் வீட்டு பெண்களை சிறந்த பெண்ணாக மாற்ற வரும் *பட்டறை*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pattaraiபெண்களை காப்பது என்பது இப்போதைய முக்கிய தேவையாகி விட்டது. சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகள் இந்த நெருக்கடியை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது. சமூகத்தின் மீதான அக்கறை உடைய இயக்குனர்கள் பெண்கள் மீதான தங்கள் மரியாதைகளை பதிவு செய்து வருகிறார்கள்.

பெண்களின் அதிகாரம் மற்றும் பெண்மையை மதிக்கும் திரைப்படங்கள் வந்து கொண்டே இருந்தாலும், ‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு தான். ‘

இயக்குனர் கேவி ஆனந்தின் முன்னாள் உதவியாளர், இயக்குனர் பீட்டர் ஆல்வின், ‘பட்டறை’ மூலம் இந்த கருத்துக்களை தெளிவாக பேச முன்வந்திருக்கிறார்.

“நாம் பெரும்பாலும் பெண்களின் மதிப்பைப் பற்றி பேசுகிறோம்; நாம் அவர்களை தெய்வங்களின் வடிவத்தில் வைத்து கொண்டாடுகிறோம்.

அவர்களை ஊக்கப்படுத்த நிறைய பேசுகிறோம். ஆனால் உண்மையில், நம் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு அவர்களது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி எவ்வாறு சொல்லிக் கொடுத்திருக்கிறோம்.

நிச்சயமாக, அவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஒரு சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். ஆனால், அவர்கள் இன்னும் பலவீனமானவர்களாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

வீட்டில் ஒரு பெண் எப்படி சிறந்த பெண்ணாக மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை பட்டறை சொல்லும்” என்கிறார் இயக்குனர் பீட்டர் ஆல்வின்.

அவர் மேலும் கூறும்போது, “கதை மற்றும் கதாபாத்திரங்களை எழுதி முடித்த பின்னர், அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் பொருத்தமான நடிகர்களை கண்டுபிடிப்பது தான் மிகக் கடினமான பணியாக இருந்தது. ஜே.டி. சக்ரவர்த்தி போன்ற நடிகர்களை பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த படத்தில் புதிதாக அறிமுகமாகும் அனைத்து நடிகர், நடிகையர்களுக்கும் தியேட்டர் ஒர்க்‌ஷாப் மூலம் நடிப்பு பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. நகைச்சுவை நடிகர் செந்தில் முதன்முறையாக காமெடி இல்லாத ஒரு முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்” என்றார்.

ரேணுகா, டிக்ஷானா, ஜகதேஷ், தனபால், ரஞ்சன், எலிசபெத், சதீஷ், சஞ்சீவ் மற்றும் கார்த்திக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் பல திருநங்கைகள் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பழனி பாரதி, முத்தமிழ் மற்றும் ரமேஷ் ஆகியோரின் பாடல்கள் எழுத, தேவன் ஏகாம்பரம் இசையமைத்திருக்கிறார். ராஜு கே ஆண்டனி டிசைனராகவும், எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்கள்.

முகேஷ், அருள் வின்சென்ட் மற்றும் வினோத் பாரதி என மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணி புரிய, வி.டி.விஜயன் மற்றும் டி.எஸ்.ஜெய் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள்.

மிகவும் புகழ்பெற்ற திலிப் சுப்பராயன் மற்றும் தினேஷ் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். பீட்டர் ஆல்வின் கதை, திரைக்கதை எழுதி இயக்குவதோடு படத்தை தயாரித்தும் இருக்கிறார்.

பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா நடத்திய அரசியல் பேரணி

பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா நடத்திய அரசியல் பேரணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pawan kalyanஇன்றைய சூழலில் அரசியலில் மாற்றம் வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனசேனா நடத்திய பிரம்மாண்ட அரசியல் விழிப்புணர்வு நடைபயணம், லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு வெற்றிப் பெற செய்தததாக ஜனசேனா தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக ஜனசேனாவின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது….

நடிகரும், ஜனசேனா என்ற அமைப்பின் தலைவருமான பவன் கல்யாண்,இன்றைய அரசியல் குறித்து இளைய தலைமுறையினர் உரிய விழிப்புணர்வு பெறவேண்டும் என்ற நோக்கத்தில் லட்சக்கணக்கானவர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட விழிப்புணர்வு அணிவகுப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டன் பரேஜ் என்ற சரித்திர புகழ்ப் பெற்ற பாலத்தின் வழியாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் தங்களின் கைகளை உயர்த்தியபடி, அரசியல் விழிப்புணர்விற்கான கோஷங்களை எழுப்பினர்.

அத்துடன் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜனசேனாவின் தலைவரான பவன் கல்யாணை வரவேற்றனர். பவன் கல்யாண் அவர்கள், இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் கலந்து கொண்டவர்களைப் பார்த்து கையசைத்து தன்னுடைய மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தார்.

லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட இந்த பேரணியால் பவன் கல்யாண் மேடைக்கு செல்ல மூன்று மணி நேரம் ஆனது. லட்சக்கணக்கான மக்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டு தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

அப்போது ஏராளமானவர்கள் பவன் கல்யாணைப் பார்த்து ‘வருங்கால முதல்வர் பவன் கல்யாண் வாழ்க! ’ என்ற கோஷத்தை விண்ணதிர எழுப்பினர். கூட்டத்தினர் வெளிப்படுத்திய இந்த அன்பை, காரின் மேல்பகுதிக்கு வந்து ஏற்றுக்கொண்டு, அவர்களை உற்சாகப்படுத்தினார் பவன்கல்யாண்.

அவர்களை பார்த்து கைவிரல்களை மடக்கி, உயர்த்தி ‘வெல்வோம், மாற்றத்தைக் கொண்டு வருவோம்.’ என்று சைகையும் காட்டினார் பவன்கல்யாண்.

காட்டன் பரேஜில் இருபக்கமும் ஏராளமான மக்கள் ஒன்றுதிரண்டிருந்தனர். இந்த கூட்டத்தில் ஆண் பெண் என பாலின பாகுபாடின்றி, சாதி, மத, இன, வயது வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர். இவர்களின் முழக்கம் இன்றைய அரசியல் நிலையில் மாற்றம் வேண்டும் என்பதாகயிருந்தது.

இந்த அணிவகுப்பிற்கு மீனவர்களும் தங்களது ஆதரவினை தெரிவித்தனர். பிச்சுகா லங்கா என்ற இடத்திலிருந்து தவ்லீஸ்வரம் வரை கடலில் தங்களது படகுகளில் ஜனசேனாவின் கொடிகளை கட்டி, தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

அவர்கள் தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்திய தேசிய கொடியையும், ஜனசேனாவின் கொடியுடன் கட்டியிருந்தனர்.

இந்த பிரம்மாண்ட பேரணிக்கு இடதுசாரி மற்றும் தலித் அமைப்புகளும் தங்களது ஆதரவை தெரிவித்தன. அவர்கள் சிவப்பு மற்றும் நீல வண்ணக் கொடிகளை ஏந்தி தங்களது ஆதரவை வெளிப்படுத்தி, இந்த அரசியல் விழிப்புணர்வை வரவேற்றனர்.

இந்த அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக காலை ஆறு மணியிலிருந்து இளைஞர்கள் சாலையில் நீண்ட வரிசையில், சாலை விதிகளை மீறாமல் அணி வகுத்து நின்றனர்.

இந்த பிரம்மாண்ட பேரணியில் கலந்து கொண்டவர்கள் கிழக்கு கோதாவரி மாவட்டத்து பெண்கள் தங்களுக்கே உரிய பாரம்பரிய முறையில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.’ என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

திருட்டு விசிடி எடுக்கும் தியேட்டர்களுக்கு சண்டக்கோழி2 கிடையாது; விஷால் அதிரடி

திருட்டு விசிடி எடுக்கும் தியேட்டர்களுக்கு சண்டக்கோழி2 கிடையாது; விஷால் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalஅண்மையில் வெளியான சீமராஜா, இமைக்கா நொடிகள், ஒரு குப்பை கதை உள்ளிட்ட புதிய படங்களை வெளியான அன்றே திருட்டு தனமாக வீடியோ எடுப்பதற்கு உடந்தையாக இருந்த கிருஷ்ணகிரி நயன்தாரா திரையரங்கம் உள்ளிட்ட 10 திரையரங்குகளில் புதிய தமிழ் படங்களை திரையிட தடைவிதித்து என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது

பெரும்பாலான ரசிகர்கள் இணையத்தில் பார்த்ததால் இந்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

சீமராஜா படம் விருத்தாசலம் ஜெய் கிருஷ்ண திரையரங்கிலும், மங்களூர் சினிபொலீஸ் திரையரங்கிலும் திருட்டு வீடியோ எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கபட்டது.

இமைக்கா நொடிகள் படம் பெங்களூரு சத்யம் சினிமாவில் திருட்டு வீடியோ எடுப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது போலவே கோலி சோடா 2 கிருஷ்ணகிரி நயன்தாரா திரையரங்கிலும் , ஒரு குப்பை கதை என்கிற திரைப்படம் மயிலாடுதுறை கோமதி, கரூர் எல்லோரா ஆகிய திரையரங்குகளிலும், தொட்ரா, ராஜா ரங்கூஸ்கி ஆகிய இரு படங்களும் கரூர் கவிதாலயாவிலும் திருட்டு வீடியோ எடுக்கப்பட்டுள்ளன.

மனுஷனா நீ என்கிற படம் கிருஷ்ணகிரி முருகன் திரையரங்கிலும், மிஸ்டர் சந்திரமவுளி என்ற படம் ஆரணி சேத்பட் பத்மாவதியிலும் திருட்டு வீடியோ எடுக்கப்பட்டதை கியூப் நிறுவனத்தின் ரகசிய பதிவென் மூலம் ஆதாரத்துடன் கண்டுபிடித்து புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து கிருஷ்ணகிரி நயன்தாரா, மயிலாடுதுறை கோமதி உள்ளிட்ட 8 திரையரங்குகளில் இருந்து டிஜிட்டல் புரொஜெக்டர்களை திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆனால் கியூப் நிறுவனம் அந்த திரையரங்கிற்கு புதிய புரொஜெக்டர் வழங்கியுள்ளது.

இதனால் தொடர்ந்து திருட்டு வீடியோ தயாரிப்பில் ஈடுபட்ட அந்த திரையரங்குகளில் தொடர்ந்து புதிய படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

கியூப்பின் இந்த நடவடிக்கை சம்பந்தப்பட்ட பட தயாரிப்பாளர்களை கடும் மன உளைச்சளில் தள்ளியது.

இதையடுத்து திருட்டு வீடியோ தயாரிப்பில் ஈடுபடும் திரையரங்குகளுக்கு புதிய படங்களை கொடுக்க கூடாது என ஒரு குப்பை கதை படத்தின் தயாரிப்பாளர் கோரிக்கை விடுத்தார்.

நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த கோரிக்கைக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது செவி சாய்த்திருக்கிறது.

நடிகர் விஷாலின் சண்ட கோழி 2 படம் வெளிவர இருக்கும் நிலையில் அந்த 10 திரையரங்கங்களுக்கும் புதிய படங்கள் ஏதும் திரையிட கொடுக்க கூடாது என்று கியூப்புக்கு தடை போட்டுள்ளனர்.

இதனால் அந்த திரையரங்குகளில் புதிய படங்கள் திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டியில் தேர்வான 66 நபர்களுடன் ஒரு கலந்துரையாடல்

காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டியில் தேர்வான 66 நபர்களுடன் ஒரு கலந்துரையாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaatrin mozhiகாற்றின் மொழி திரைப்படத்தின் படக்குழு பாடல் எழுதும் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது.

இதில் தமிழகம் முழுவதிலுமிருந்து 700 பேர் பங்கேற்று இருந்தார்கள். அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 66 பேர் காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டி சார்ந்த விழாவில் பங்கேற்றனர்.

இதில் பாடலாசிரியர் மதன் கார்க்கி, இயக்குனர் ராதாமோகன் உள்ளிட்ட ஜாம்பவான்கள் பங்கேற்று பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் படத்தின் பாடல் சிடி வழங்கப்பட்டது.

மேலும் சிறப்பாக பாடல் எழுதிய இருவருக்கு பரிசு வழங்கப்பட்டது. பாடலாசிரியர் மதன் கார்க்கி எல்லோரிடமும் தான் காற்றின் மொழி படத்துக்கு பாடல் எழுதிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

பாப்டா நிறுவனம் சார்பாக G. தனஞ்ஜெயன் தயாரித்து, ஜோதிகா நடித்து, ராதா மோகன் இயக்கியுள்ள காற்றின் மொழி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

சண்முக ராஜா மீது பாலியல் புகார்; திடீர் பல்டி அடித்த நாட்டாமை டீச்சர்

சண்முக ராஜா மீது பாலியல் புகார்; திடீர் பல்டி அடித்த நாட்டாமை டீச்சர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shanmuga rajan and raniஒரு சில படங்களில் நாயகியாக நடித்தாலும் நாட்டாமை படத்தில் இடம் பெற்ற டீச்சர் கேரக்டர் மூலம் பிரபலமானவர் ராணி.

பின்னர் விக்ரமுடன் ஓ போடு என ஆட்டமும் போட்டு இருந்தார்.

இவர் தற்போது நடிகை குஷ்புவின் கணவர் சுந்தர் சி தயாரிப்பில் நந்தினி என்ற டிவி சீரியலில் நடித்து வருகிறார்.

இதில் தனக்கு கணவனாக நடித்த சண்முகராஜா என்ற வில்லன் நடிகர் நடிப்புக்காக தொடாமல் நிஜமாகவே தன்னை தொட்டு பாலியல் தொல்லை கொடுப்பதாக செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனால் சண்முகராஜா பாலியல் வழக்கில் கைதாகும் நிலை உருவானது.

இதனையடுத்து சில மணி நேரங்களில் சண்முகராஜா காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னத்திரை நடிகர் சங்கத்தினர் பாலியல் புகார் கொடுத்த நடிகை ராணியிடம் அவசர அவசரமாக சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

சண்முகராஜா கைதானால் நந்தினி சீரியல் நின்று விடும் இந்த தொடரை நம்பி உள்ள 350 பேரின் குடும்பங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் புகாரை வாபஸ் வாங்கும் படியும் கூறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனால் பாலியல் புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை ராணி பல்டி அடித்தார்

இதன் பின்னர் நடிகை ராணியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியே வந்த, சண்முகராஜாவோ, படப்பிடிப்பில் கைகலப்பு மட்டுமே நடந்தது பாலியல் தொல்லை அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

More Articles
Follows