ஒரே இரவில் ‘சைத்ரா’..; பேயாகி மிரட்டும் நடிகை யாஷிகா ஆனந்த்

ஒரே இரவில் ‘சைத்ரா’..; பேயாகி மிரட்டும் நடிகை யாஷிகா ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் ( MARS PRODUCTIONS) என்ற புதிய படம் நிறுவனம் சார்பில் K. மனோகரன் மற்றும் T. கண்ணன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படம் ‘சைத்ரா’.

இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், மணிகண்டன், விஜய லட்சுமி ஆகியோரது வரிகளுக்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார்.

பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்த எலிஷா இந்த படத்திற்கும் பணியாற்றியுள்ளார்.

தயாரிப்பு மேற்பார்வை – தேக்கமலை பாலாஜி.
தயாரிப்பு – K. மனோகரன்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி M. ஜெனித்குமார் இயக்கியுள்ளார். இவர் பொட்டு, கா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

24 மணிநேரத்தில் நடக்கும் கதை இது. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

⏯️ https://youtu.be/-JXTj4BcXhM

Yaashika Anand’s new horror film is titled Chaitra

‘அங்காரகன்’ அப்டேட்.. மீண்டும் வில்லன்.; கமல் – ரஜினி – விஜயை நக்கலடிக்கும் சத்யராஜ்

‘அங்காரகன்’ அப்டேட்.. மீண்டும் வில்லன்.; கமல் – ரஜினி – விஜயை நக்கலடிக்கும் சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’.

இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி.

மலையாள நடிகை நியா கதாநாயகியாக நடிக்க, ஒரு டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் புரட்சித்தமிழன் சத்யராஜ். இதில் ஹைலைட்டான அம்சம் என்னவென்றால் இந்தப்படத்தின் மூலம் சத்யராஜ் மீண்டும் தனது வில்லன் அவதாரத்திற்கு திரும்பியுள்ளார் என்பதுதான்.

மேலும் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மோகன் டச்சு என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் படத்தின் ஒளிப்பதிவையும் அவரே கவனித்துள்ளார்.

தற்போது இந்தப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதனை நடிகர்கள் ஆக்சன் கிங் அர்ஜுன், சிபிராஜ், சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

இரண்டு நிமிடம் ஓடக்கூடிய வகையில் வெளியாகியுள்ள இந்த டீசரில் முதல் ஒரு நிமிடம் முழுவதும் அமைதிப்படை சத்யராஜின் பாணியிலான நையாண்டி வசனங்களாலும் அடுத்த ஒரு நிமிடம் அவரது வில்லத்தனமான கதாபாத்திர அறிமுக காட்சியாவும் அமைந்துள்ளது.

குறிப்பாக 1980களில் நாம் பார்த்து ரசித்த சத்யராஜின் வில்லத்தனமான (100வது நாள்) நடிப்பையும் அவரது நக்கலான வசனங்களையும் இந்தப்படம் மீட்டெடுத்து கொண்டு வந்துள்ளது என்பதை இந்த உணர்த்தும் விதமாக இந்த டீசர் உருவாக்கப்பட்டுள்ளது.

“வழக்கமா நரிக்கூட்டத்தை வேட்டையாட சிங்கம் தான் வரும்.. ஆனா இப்போது இன்னொரு நரியே வந்திருக்கிறது”, “எனக்கு கட்சி ஆரம்பித்து ஜனங்களை ஏமாத்தவும் தெரியாது.. கட்சி ஆரம்பிக்க போறேன்னு சொல்லி ஜனங்களை ஏமாத்தவும் தெரியாது” என்கிற வசனங்கள் வரும் நாட்களில் பரபரப்பை கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை. (இவை விஜயகாந்த் கமல் ரஜினி ஆகிய நடிகர்களை மறைமுகமாக குறிப்பிடுவதாக உள்ளது எனலாம்)

சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் வசனங்களில் பங்களிப்பு செய்த கருந்தேள் ராஜேஷ் தான் இந்த படத்தின் வசனங்களை எழுதியுள்ளார்

125க்கும் மேற்பட்ட சூப்பர்ஹிட் பாடல்களை எழுதிய கு.கார்த்திக் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

விரைவில் ரிலீஸாகும் விதமாக இந்தப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

*தொழில்நுட்ப குழுவினர் விபரம்*

ஒளிப்பதிவு & இயக்கம் ; மோகன் டச்சு

திரைக்கதை ; இயக்கம் (கிரியேடிவ்) ; ஸ்ரீபதி

ஒளிப்பதிவாளர் (2வது) ; மாநில அரசு விருது பெற்ற ஆர்.கலைவாணன்

வசனம் ; கருந்தேள் நாகராஜ்

படத்தொகுப்பு ; மதுரை வளர் பாண்டியன்

சண்டை காட்சிகள் ; ஜாக்கி ஜான்சன்

நடனம் ; வாசு நவநீதன்

கலை இயக்குனர் ; கே மாதவன்

நிர்வாக தயாரிப்பாளர் ; S.கிறிஸ்டி

தயாரிப்பு வடிவமைப்பு ; விவேக் (Primerose Entertainment)

மக்கள் தொடர்பு ; A.ஜான்

#Sathyaraj – #Sreepathy starrer #Angaaragan teaser s here..

‘Angarakan’ update.. Villain again.; Satyaraj teasing Kamal – Rajini – Vijay

PS2 CHOLA TOUR UPDATE ஏப்ரல் 15 – 27 வரை.. இந்தியா முழுவதும் சோழர் பயணம்

PS2 CHOLA TOUR UPDATE ஏப்ரல் 15 – 27 வரை.. இந்தியா முழுவதும் சோழர் பயணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா தயாரிப்பில் மணிரத்னம் இணைந்து தயாரித்த ‘பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த படம் உலகளவில் ரூ 400 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இதில் விக்ரம், ஐஸ்வர்யாராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, கார்த்தி, ஜெயம் ரவி சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, ஆதேஷ் பாலா, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்த படம் இந்திய அளவில் பிரபலமாக பேசப்பட்டதற்கு முக்கிய காரணம் இந்த படக்குழுவினர் தமிழகம் கேரளா ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட இந்திய பகுதிகளுக்கு சென்று பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ PS2 படத்தின் 2ம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாக உள்ளது.

இதனையடுத்து மீண்டும் சோழர் பயணம் தொடங்கி விட்டதாக படக்குழுவினர் புதிய வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் அவர்கள் இன்று ஏப்ரல் 15 முதல் 27 ஆம் தேதி வரை எங்கெல்லாம் சுற்றுப்பயணம் செல்கிறார்கள் என்ற விவரத்தை அளித்துள்ளனர்/

இன்று ஏப்ரல் 15 – சென்னை

ஏப்ரல் 16 – கோயம்புத்தூர்

ஏப்ரல் 17 – சென்னை

ஏப்ரல் 18 – டெல்லி

ஏப்ரல் 20 – கொச்சின்

ஏப்ரல் 22 – பெங்களூரூ

ஏப்ரல் 23 – ஹைதராபாத்

ஏப்ரல் 24 & 25 – மும்பை

ஏப்ரல் 26 – திருச்சி

ஏப்ரல் 27 – சென்னை

*twitter*

#PS2CholaTour starts with the #PS2Anthem launch event today at 7 PM in the presence of @arrahman sir!

The #Cholas are coming to your city!
📍Chennai – Coimbatore – Delhi – Cochin – Bengaluru – Hyderabad – Mumbai – Trichy!

#CholasAreBack
#PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @madrastalkies_ @LycaProductions @RedGiantMovies_ @Tipsofficial @tipsmusicsouth @IMAX @primevideoIN @SunTV #PenMarudhar @SVC_official @GokulamMovies @film_dn_

@chiyaan @actor_jayamravi @Karthi_Offl #AishwaryaRaiBachchan @realsarathkumar @trishtrashers #AishwaryaLekshmi #SobhitaDhulipala | Prabhu | Jayaram | @prakashraaj | Jayachitra | @actorrahman @iamvikramprabhu @LalDirector @rparthiepan | Riyaz Khan | @dop_ravivarman | Thota Tharrani | @sreekar_prasad @jeyamohanwriter @bagapath @ekalakhani | Vikram Gaikwad | @KishanDasandCo | Kumaravel | @gopiprasannaa @mdeii @johnsoncinepro | @proyuvraaj | Suresh Permal | Karthik Sekaran |@NakulAbhyankar | Aravind Crescendo | #RiyasdeenRiyan | The Glassbox | @gobeatroute

Ponniyin Selvan PS2 CHOLA TOUR UPDATE

ஜோஷி – ஜோஜு ஜார்ஜ் கூட்டணியில் இணைந்த கல்யாணி & ஆஷா சரத்

ஜோஷி – ஜோஜு ஜார்ஜ் கூட்டணியில் இணைந்த கல்யாணி & ஆஷா சரத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் கோபி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ‘பாப்பன்’ படத்திற்கு பிறகு ஜோஷி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ஆண்டனி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் ஜோஷி இயக்கிய “பொரிஞ்சு மரியம் ஜோஸ்” படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த ஜோஜு ஜார்ஜ், நைலா உஷா, செம்பன் வினோத் ஜோஸ், விஜயராகவன் போன்றோர்கள்தான் இந்த “ஆண்டனி” படத்திலும் நடிக்கவுள்ளனர். இது இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு.

இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ஆஷா சரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜோஜு ஜார்ஜ், ஜோஷி கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் தான் “பொரிஞ்சு மரியம் ஜோஸ்”. கட்டாளன் பொரிஞ்சு என்ற கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

மீண்டும், ஜோஷி மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஜோடி எதிர்பார்ப்புகளை இரட்டிப்பாக்கியது. ‘இரட்டா’ படத்திற்கு பிறகு ஜோஜு ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படத்தை ஐன்ஸ்டீன் மீடியா நிறுவனம் சார்பில் ஐன்ஸ்டீன் சேக் பால் தயாரித்துள்ளார். படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா மற்றும் பூஜை விழா கொச்சி கிரவுன் பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த படத்தின் கதையை ராஜேஷ் வர்மா எழுத, ஒளிப்பதிவு ரணதிவே செய்கிறார். படத்தொகுப்பு ஷ்யாம் சசிதரன், இசை ஜேக்ஸ் பிஜோய், கலை இயக்கம் திலீப்நாத், ஆடை வடிவமைப்பு பிரவீன் வர்மா ஆகியோர் பணியாற்ற உள்ளனர்.

Kalyani and Asha Sarath joins the Joshi-Joju George team

வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கத்தில் புகழ் உடன் இணையும் ‘அயலி’ கலைஞர்கள்

வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கத்தில் புகழ் உடன் இணையும் ‘அயலி’ கலைஞர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த வருட தொடக்கத்தில் வெளியான ‘அயலி’ வெப் தொடர் பலரது பாராட்டையும், மாபெரும் வெற்றியையும் பெற்றது.

இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்த ‘அருவி’ மதன் கதையின் நாயகனாக நடிக்க, அபி நட்சத்திரா, காயத்ரி, செல்லா ஆகியோர் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

‘குக் வித் கோமாளி’ புகழ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் சமீபத்தில் வரலாற்று கதாபாத்திரங்களை முன்னிறுத்தி புகைப்படம் எடுத்து வைரல் ஆனது மட்டுமின்றி நாட் ரீச்சபிள், மிடில்க்ளாஸ் படங்களில் நடித்த சாய் ரோஹிணி,”அருவி” பாலா, உதய்ராஜ், ஸ்ரீ பிரியா, கனிஷ், பேபி ஷிவானி, மாஸ்டர் ராஜூ மகாலிங்கம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நடிகர் சூரியின் அடுத்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ள வெற்றிவீரன் மகாலிங்கம் இந்த படத்தை மகாலிங்கம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக எழுதி, இயக்கி தயாரிக்க, இணை தயாரிப்பாளரான S.D.சுரேஷ் தயாரிப்பு மேற்பார்வை பணிகளை மேற்கொள்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்ப் புத்தாண்டு நேற்று படப்பூஜையுடன் தொடங்கியது.

மேலும் இப்படத்தை சஞ்சய் லோகநாத் ஒளிப்பதிவு செய்ய, வத்ஷன் இசையமைக்க, வடிவேல்-விமல்ராஜ் படத்தொகுப்பை மேற்கொள்கின்றனர்.

இணை இயக்குனர்கள் ரபீக் ராஜா மற்றும் மணிமூர்த்தி, நிர்வாக தயாரிப்பு ராபின் செல்வா, காஸ்டியூம் ரெங்கசாமி, மேக்கப் ரெங்கநாத பிரசாந்த், மக்கள் தொடர்பு V.K சுந்தர், ஸ்டில்ஸ் V.R மணிகண்டன், டிசைனர் V STUDIOS BLESSON என வலுவான தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Pugazh and ‘Ayali’ artistes join for the Vetriveeran Mahalingam’s new project

தயாரிப்பாளர்கள் தேர்தல் நடக்கும் இடத்தை மாற்றக்கோரி அதிகாரிகளுக்கு கேயார் கோரிக்கை

தயாரிப்பாளர்கள் தேர்தல் நடக்கும் இடத்தை மாற்றக்கோரி அதிகாரிகளுக்கு கேயார் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்பட தயாரிப்பாளர்கள் தேர்தல் நடக்கும் இடத்தை மாற்ற வேண்டும் என தேர்தல் அதிகாரிகளுக்கு பட அதிபர் கேயார் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு…

அனுப்புநர் :

கே.ஆர்
முன்னாள் தலைவர்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
நிறுவனர் மற்றும் அறங்காவலர்
தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளை

பெறுநர்:

தேர்தல் அதிகாரிகள்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,
பிலிம் சேம்பர் வளாகம்
605, அண்ணாசாலை
சென்னை -600006.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023 – 2026 ம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 30 ம் தேதி அடையாறில் உள்ள அன்னை சத்யா (ஸ்டுடியோ) கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அங்கு போதுமான இடவசதி இல்லை. கடந்த முறையும் அங்குதான் தேர்தல் நடைபெற்றது. வாக்களிக்க வந்தவர்களின் வாகனங்களை கூட அங்கு நிறுத்த முடியவில்லை.

எல்லோரும் நெருக்கியடித்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதில் “சின்ன தம்பி” உட்பட பல வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே பி பிலிம்ஸ் பாலு, உடல்நிலை பாதிக்கப்பட்டு மறுநாளே மருத்துவமனையில் அட்மிட் ஆகி கொரோனா தொற்று என கண்டறியப்பட்டு உயிரையே இழந்து விட்டார் என்பது வேதனையான உண்மை.

இப்போதும் அதே போல கொரோனா பரவும் காலம் ஆரம்பித்திருக்கிறது. அதைவிட கொடுமையான வெயில் காலமாக இருக்கிறது. இந்த முறை 1406 தயாரிப்பாளர்கள் வாக்காளர்களாக இருக்கின்றனர்.

குறைந்தது 1200 பேர் தேர்தலில் வாக்களிக்க வருவார்கள். அத்தனை பேரும் கார்களில் வந்து இறங்குவதற்கும், நிறுத்துவதற்குமான இட வசதி அங்கு இல்லை. அத்துடன் பிரபல நடிகர்களும் இயக்குனர்களும் வாக்களிக்க வரும்போது அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு ஏற்ற சூழலும் அங்கு இல்லை. ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வருவதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதே அடையாறு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் போதுமான இட வசதி இருக்கிறது. எவ்வளவு கார்களை வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம். சினிமாவுக்கு தொடர்புடைய ஒரு இடம் என்பதால் தொடர்ந்து எல்லாத் தேர்தல்களையும் அங்கேயே நடத்திக் கொள்ளலாம்.

தமிழக அரசும் திரைப்படத்துறைக்கு ஆதரவாக இருப்பதால் அனுமதி பெறுவதும் கஷ்டமாக இருக்காது.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், தேர்தல் அதிகாரிகள் எல்லா சூழலையும் கவனத்தில் கொண்டு தேர்தல் நடத்தும் இடத்தை திரைப்பட கல்லூரி வளாகத்திற்கு மாற்றுவதே பொருத்தமானதாக இருக்கும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வரும் வாக்காளர்களில் 45 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் 70 வயதை கடந்தவர்கள் என்பதையும், ஏராளமான பெண்களும் வாக்களிக்க வருவார்கள் என்பதையும் தேர்தலை நடத்தும் அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஏற்கனவே இந்த விஷயத்தை சங்க நிர்வாகத்திடம் தெரிவித்தும் அவர்கள் அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

ஒவ்வொரு தயாரிப்பாளரும் தனிநபர் அல்ல. அவரைச் சுற்றி 100 குடும்பங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியாத நிலையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது.?

இப்படிக்கு,

(கே.ஆர்.)
உறுப்பினர் எண் : 0006

நாள்: 15.04.2023
சென்னை

Keyar request the authorities to change the venue of the Producers election

More Articles
Follows