தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாளை தீபாவளி தினத்தன்று விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் மெர்சல் திரைப்பட வெளியிட திட்டமிடப்பட்டது.
ஆனால், இப்படம் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது.
படத்தின் டைட்டில், கேளிக்கை வரி, விலங்குகள் நல வாரியம் என பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வந்தது.
பறக்கும் புறா மற்றும் சில விலங்குகள் பயன்படுத்தி எடுக்கப்பட்ட மெர்சல் படத்திற்கு விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்காததால் திட்டமிட்டபடி வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
விலங்குகள் கம்ப்யூட்டர் கிராப்க்ஸ் செய்யப்பட்வை என்று தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் தெரிவித்தனர்.
ஆனால் அதற்கான போதிய ஆதாரமில்லை என்பதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திருப்தி அடையவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் விலங்குகள் நல வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் வழங்கக்கோரி தயாரிப்பு நிறுவனம் மீண்டும் விளக்கமளித்தது.
நீண்ட நேரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, மெர்சல் படத்தில் விலங்குகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் சுமார் 20 நிமிடங்களை நீக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டது.
இதுபோன்ற பிரச்சனைகளை மீண்டும் ஏற்படக் கூடாது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை விலங்குகள் நல வாரியம் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து வழங்கப்பட்ட சான்றிதழ் விலங்குகள் நல வாரிய இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தணிக்கைக் குழுவும் மெர்சல் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
எனவே நாளை இப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.
Without any issues Mersal release confirmed on Diwali 2017